தேனி மாவட்டத்தில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் 20-ந்தேதி ஏலம்

போலீசாரால் கைப்பற்ற ப்பட்டு உரிமைகோரப்படாத வாகனங்களை அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு பொது ஏலம்விட்டு விற்பனை செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.தேனி காவல்துறை மைதானத்தில வருகிற 20-ந்தேதி காலை 11 மணிக்கு பகிரங்க ஏலம் விடப்படும்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி மாவட்டம் பெரிய குளம், உத்தமபாளையம் வருவாய் கோட்டங்களுக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுவரை போலீசாரால் கைப்பற்ற ப்பட்டு உரிமைகோரப்படாத வாகனங்களை அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு பொது ஏலம்விட்டு விற்பனை செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.,

இதற்காக சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவல கங்களில் ஒப்படைக்கப்பட்ட வாகனங்கள் தேனி காவல்துறை மைதானத்தில வருகிற 20-ந்தேதி காலை 11 மணிக்கு பகிரங்க ஏலம் விடப்படும். ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பு வோர் ரூ.1000 முன்பணம் செலுத்தி ஏலத்தேதிக்கு முன்பு ரசீது பெற்றுகொள்ள வேண்டும். அதிக தொகைக்கு ஏலம் கேட்ப வருக்கே வாகனங்கள் வழங்கப்படும்.

ஏலம் கேட்பவர் ஏலத்தொகையுடன் 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி சேர்த்து செலுத்த வேண்டும். வாகன ஏலம் மற்றும் உறுதிபடுத்தும் குழுவினரால் உறுதிசெய்யப்பட்ட பின்னரே பொருட்கள் ஏலதாரரரிடம் ஒப்படை க்கப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com