search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 people arrest"

    அண்ணாசாலையில் ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 6 பேரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை அண்ணா சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி அப்பகுதியில் நள்ளிரவில் திறந்திருந்த ஓட்டலை மூடுமாறு கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அவரை தாக்கினர். இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து ராசுக்குட்டி, சசிகுமார், திருநாவுக்கரசு, சுனில், அப்துல் ரகுமான், கிருஷ்ண மூர்த்தி ஆகிய 6 பேரை கைது செய்தனர். #tamilnews
    தொண்டி அருகே மணல் திருடியது தொடர்பாக 6 பேரை கைது செய்த போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    தொண்டி:

    தொண்டி அருகே செக்காந்திடல் பகுதியில் சிலர் மணல் அள்ளுவதாக வி.ஏ.ஓ. பழனிச்சாமி தகவல் கொடுத்தார். இதன் அடிப்படையில் ராமநாதபுரம் அதிவிரைவுப்படை போலீசார், தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்சாமி மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    செக்காந்திடல் பகுதியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த சிறுநல்லூரைச் சேர்ந்த செந்தில் முருகன்(வயது30) டிப்பர் லாரி டிரைவர்கள், கருங்காவயலைச் சேர்ந்த முனியராஜ்(32), தெற்கு ஊரணிங்குடியைச் சேர்ந்த நவீன்குமார் (18), மாதவனூர் ராஜமருது(19),சிறுவாளுர் அன்புகமல்(30), உசிலனக் கோட்டை ஆனந்த் (28), கோவிந்தமங்களம் நாகேந்திரன், கீழ்குடியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மணல் அள்ள பயன்படுத்திய 2 டிப்பர் லாரி, 2 டிராக்டர், 2 ஜே.சி.பி. எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
    ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்புரவு தொழிலாளி கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் பகுதியை சேர்ந்த தேவசுந்தரமூர்த்தி (31). இவர் ஊராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    கடந்த 19-ம் தேதி கீவளூர் குளத்தங்கரை அருகே நின்றிருந்த தேவசுந்தர மூர்த்தியை 13 பேர் கொண்ட கும்பல் பைக்கில் வந்த சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

    இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை செய்தார்.

    விசாரணையில் பெண்ணை கிண்டல் செய்ததில் ஏற்பட்ட தகராறில் கச்சிபட்டு பகுதியை சேர்ந்த 13 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த ராஜேஷ், சூரியா, மனோஜ், கணேஷ், கோலி, விக்னேஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக தலைமறைவான மேலும் 7 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    ×