search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ugadi festival"

    • உற்சவர் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.
    • பக்தர்களுக்கு உகாதி பச்சடி பிரசாதமாக வழங்கப்பட்டது.

    ஸ்ரீ காளஹஸ்தி:

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தெலுங்கு வருடப் பிறப்பு உகாதியை முன்னிட்டு பல வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அலங்கார மண்டபத்தில் உற்சவர் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.

     முன்னதாக வேதப்பண்டிதர்கள் கலச ஸ்தாபனம் செய்து, சிறப்பு பூஜைகள் மற்றும் பால், தயிர். பஞ்சாமிர்தம், தேன், நெய், வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தூப தீபங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு உகாதி பச்சடி பிரசாதமாக வழங்கப்பட்டது.

    தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி கோவில் சார்பில், பக்த கண்ணப்பர் கோவிலுக்கு சீர்வரிசை பொருட்கள் தேவஸ்தானம் சார்பில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு, தாரக சீனிவாசுலு மற்றும் செயல் அலுவலர் நாகேஸ்வரராவ், கோவில் அதிகாரிகள், ஊழியர்கள், வேத பண்டிதர்கள் ஆகியோர் தலைமீது சுமந்து கொண்டு கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று தேர் வீதியில் உள்ள பக்தக் கண்ணப்பர் கோவில் அர்ச்சகரிடம் வழங்கப்பட்டது.

    இதில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுனிதா, ரமாபிரபா, சீனிவாசலு, சிறப்பு அழைப்பாளர்கள் சிந்தாமணி பாண்டு, உதய்குமார், சுரேஷ், தேவஸ்தான தலைமை அர்ச்சகர்கள், தேவஸ்தான உதவி ஆணையர் மல்லிகார்ஜுன பிரசாத், கோவில் கண்காணிப்பாளர் நாகபூஷணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    யுகாதி திருநாளையொட்டி திருப்பதி கோவிலுக்கு கோயம்பேடு பூ மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் 2 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டது. #Ugadi #Tirupati
    சென்னை:

    யுகாதி திருநாளான தெலுங்கு வருடப்பிறப்பு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 2 டன் பூக்கள் மற்றும் மலர் மாலைகள் லாரி மூலம் அனுப்பப் பட்டது.

    கோயம்பேடு மலர் அங்காடி வியாபாரிகள் சார்பில் தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி திருநாளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 4 டன் பூக்கள், மாலைகள் லாரி மூலம் ஒவ்வொரு ஆண்டும் அனுப்பப்படுகிறது.

    இந்த ஆண்டும் கோயம்பேடு மொத்த பூ வியாபாரிகள் 20 பேர் மார்க்கெட்டில் பணம் வசூல் செய்து அதன் மூலம் 2 டன் பூக்கள் மற்றும் மலர் மாலைகள் திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலுக்கு லாரி மூலம் அனுப்பி உள்ளனர்.

    அதில் 8 வகையான பூக்கள் அனுப்பப்பட்டுள்ளது. ரோஜா, லில்லி உள்ளிட்ட பூக்களாலும், பழங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மாலைகள் கண்ணை கவரும் வகை யில் அமைந்து இருந்தன.

    இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் மொத்த வியாபாரி ஏ.எஸ்.மணி கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஓசூர், கடப்பா, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக வருகின்றன.

    இந்த ஆண்டு கடும் வறட்சி மற்றும் வட கிழக்கு பருவ மழை பொய்த்ததால் பூக்கள் உற்பத்தியும், வரத்தும் குறைந்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி கோவிலுக்கு யுகாதி திருநாளையொட்டி கோயம்பேட்டில் இருந்து 4 டன் பூக்கள் அனுப்பப்படுவது வழக்கமாகும்.

    இந்த ஆண்டு வறட்சி காரணமாக 2 டன் பூக்கள் லாரி மூலம் அனுப்பப்பட்டுள்ளது. எந்தவித தடையும் இல்லாமல் திருப்பதி கோவிலுக்கு பூக்கள் அனுப்புவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×