search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swathi"

    • ஆடி சுவாதியை முன்னிட்டு சுந்தரர் குருபூஜை விழா நடந்தது.
    • கோவில் உட்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி சுவாதி நட்சத்திரத்தன்று சுந்தரர் குரு பூஜை சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    அதன்படி நேற்று ஆடி சுவாதியை முன்னிட்டு இரவு சுந்தரர் குரு பூஜை விழா நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து சுந்தர சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

    பின்னர் கோவில் உட்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுந்தரரை வழிப்பட்டனர்.

    • தமிழில் பல படங்களில் நடித்தவர் சுவாதி.
    • இவர் 2018-ல் திருமணம் செய்து கொண்டார்.

    தமிழில் சுப்பிரமணியபுரம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி. இந்த படத்தில் இடம்பெற்ற கண்கள் இரண்டால் பாடலில் சுவாதியின் நடிப்பு பேசப்பட்டது. தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, எட்சன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.


    இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்தார். 2018-ல் சுவாதிக்கும், கேரளாவை சேர்ந்த விமானி விகாஸ் என்பவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி கணவருடன் வாழ்ந்து வந்தார்.


    திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் நடிகை சுவாதி தனது சமூக வலைதளத்தில் இருந்து கணவர் விகாஸுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கினார். இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகை சுவாதி கணவர் விகாஸுடன் இருந்து விரைவில் விவாகரத்து பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகை சுவாதி கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
    • தவறான சிகிச்சை காரணமாக கன்னட நடிகையின் முகம் பரிதாப நிலையில் உள்ளது.

    பெங்களூர் ஜே.பி.நகரில் வசித்து வருபவர் நடிகை சுவாதி சதீஷ். இவர் கன்னடத்தில் ஒருசில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு பல் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர் சிகிச்சைக்காக ஹெண்ணூரில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

    அங்கு சுவாதிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மருந்துக்கு பதிலாக ஒரு ஊசியை கொடுத்து சுவாதியை அதை செலுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மருத்துவரின் அறிவுறுத்தலின்படி நடிகை சுவாதி அந்த ஊசியை செலுத்தி உள்ளார். இதன்பின்னர், சுவாதிக்கு தாடை உள்பட முகத்தில் வலி ஏற்பட்டதுடன் முகம் நன்றாக வீங்கி முகத்தின் அமைப்பு மாறி உள்ளது.




    இதையடுத்து அவர் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை தொடர்பு கொண்டு கேட்டபோது முக வீக்கம் விரைவில் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார். ஆனால் தற்போது வரை சுவாதிக்கு முகவீக்கம் சரியாகவில்லை. மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டாலும் யாரும் சரியாக பதில் அளிக்கவில்லை என்று நடிகை சுவாதி குற்றம்சாட்டியுள்ளார். இதனால் அவர் கடந்த 20 நாட்களாக வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    விஜய்யுடனும், அஜித்துடனும் ஜோடி போட்டு நடித்த நடிகை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார். #Vijay #Ajith
    ‘தேவா’வில் விஜய்யுடனும், ‘வான்மதி’யில் அஜித்துடன் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி. இரண்டு படங்களும் வெற்றியடைந்ததை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், அதையெல்லாம் நிராகரித்து விட்டு படிப்புதான் முக்கியம் என்று ஐதராபாத்திற்கு பறந்தார் ஸ்வாதி. தற்போது, தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

    அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் ‘நான் நடித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது திரையில் தோன்றுவீர்கள்? என்று ஆவலுடன் கேட்கிறார்கள். ‘மேக்கப்’ இல்லாமல் சென்றாலும் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.



    இத்தனை வருடம் கழித்தும் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள் என்று பாராட்டுகிறார்கள். அப்படி ஒரு பயணத்தின் போது ஒரு தம்பதியரை சந்திக்க நேர்ந்தது. அந்த சந்திப்பிலிருந்து தான் எனக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். என் குடும்பத்தாரும் எனக்கு முழு ஆதரவோடு இருக்கிறார்கள்.

    நான் அவ்வப்பொழுது படங்களைப் பார்த்து வருகிறேன். சினிமாவை மிகவும் நேசிக்கிறேன். என் ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்’. இவ்வாறு ஸ்வாதி கூறினார்.
    ×