search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special article"

    • உலகமே சொல்லும் கால்பந்து மன்னன் பீலே, பீலே என்று.
    • பீலே இளம் வயதில் ஷூ பாலிஷ் போட்டும், வேர்க்கடலையை விற்றும் பணம் சம்பாதித்தார்.

    மிகுந்த ஏழ்மையில் பிறந்து தன் முயற்சியால் முன்னேறி ஒரு நாட்டில் நடந்த போரையே தற்காலிகமாக நிறுத்தி தன்னைக் காணச் செய்த ஒரு பெரும் வீரர் யார்?

    உலகமே சொல்லும் கால்பந்து மன்னன் பீலே, பீலே என்று!

    பிறப்பும் இளமையும்: பீலே என்று உலகத்தினரால் அறியப்படும் எட்ஸன் அராண்டெஸ் டொ நாசிமெண்டோ 1940-ல் அக்டோபர் 23-ம் தேதி டொண்டின்ஹோ என்பவருக்கும் செலஸ்டி அராண்டெஸ் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார்.

    சகோதரர்கள் இருவரில் இவரே மூத்தவர். தந்தை ஒரு கால்பந்து விளையாட்டுக்காரர். பிரேசில் நாட்டில் ட்ரெஸ் கொராகஸ் என்ற இடத்தில் அவர் பிறந்தார். மிக ஏழ்மையான குடும்பம். தனது 6-ம் வயதில் பீலே ஷூக்களுக்கு பாலிஷ் போட்டும், வறுத்த வேர்க்கடலையை விற்றும் பணம் சம்பாதித்தார்.

    தந்தையின் நண்பர் ஒருவரின் பெயரை தவறாக பீலே என்று உச்சரிக்க அவரை நண்பர்கள் செல்லமாக அவரை பீலே என்றனர். அதுவே நிலைத்து விட்டது.

    ஆனால் அமெரிக்க கண்டுபிடிப்பாளரான எடிஸன் பெயர் தான் அவருக்கு சூட்டப்பட்டிருந்தது. தனது பெயருக்கு என்ன அர்த்தம் என்று தனக்குத் தெரியாது என்றும் போர்த்துக்கீசிய மொழியில் அந்த வார்த்தைக்கு ஒரு அர்த்தமும் இல்லை என்றும் அவர் தனது சுயசரிதத்தில் பின்னால் எழுதியுள்ள்ளார். ஆனால் எது எப்படியானாலும் உலகத்தினருக்கு அவர் பீலே தான்!

    கால்பந்து விளையாட்டு: தந்தை கால்பந்தில் பயிற்சி தர, அந்த விளையாட்டு அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆனால் கால்பந்து வாங்கக் காசில்லாமல் சாக்கில் கந்தல்துணிகளை அடைத்து கால்பந்து போலச் செய்து தனது பயிற்சியை அவர் தொடங்கினார்.

    ஷூ போட வழியின்றி ஷு இல்லாமல் வெறும் காலோடு ஆங்காங்கே இருந்த விளையாட்டு மைதானங்களில் விளையாடி தனது விளையாட்டை அவர் செம்மைப் படுத்திக் கொண்டே இருந்தார்.

    உலகக் கோப்பை வெற்றி: தனது 15-ம் வயதில் பிரேசிலின் தேசிய விளையாட்டுக் குழுவில் சாண்டாஸ் நகரக் குழுவிற்காக அவர் விளையாட ஆரம்பித்தார்.

    17-ம் வயதிலேயே உலகக் கோப்பையை வென்றார். 1958, 1962, 1970 ஆகிய மூன்று போட்டிகளில் உலகக் கோப்பையை வென்ற அவரது சாதனையைப் பார்த்து உலகமே பிரமித்தது. பிரேசிலுக்காக அவர் 92 விளையாட்டுக்களில் 77 கோல்களைப் போட்டார். பிரேசில் நாட்டின் கதாநாயகனாக ஆனார்.

    இவர் விளையாடிய விளையாட்டுக்களில் ஒரு கோலாவது போட்டு விடுவார். 1956-ல் விளையாடியதற்காக அவருக்குக் கிடைத்த தொகை வெறும் பத்து அமெரிக்க டாலர்களே! தனது வருமானத்தை வைத்துத் தான் குடும்பத்திற்காக கேஸ் ஸ்டவ்வையே முதலில் வாங்க வைத்தார்.

    ஆனால் பெரும் விளையாட்டு வீரராக உலகை அவர் வலம் வந்த போது அவர் அமெரிக்காவில் தனது வருமானத்திற்கான வரியாக மட்டும் 20 லட்சம் டாலர்களைத் தர வேண்டி இருந்தது. சந்தோஷமாக அவ்வளவு பெரும் தொகையை அவர் வரியாகக் கட்டினார்.

    பீலே போட்ட கோல்கள் எத்தனை?

    பீலே கால்பந்து விளையாட்டில் போட்ட மொத்த கோல்கள் எத்தனை என்பது பற்றி வேறுபட்ட கருத்துக்கள் தொடர்ந்து நிலவுகின்றன. கின்னஸ் வோர்ல்ட் ரிகார்ட் அவரது சாதனையை அங்கீகரித்து அவர் போட்ட கோல்கள் 1279 என்று அறிவித்திருக்கிறது. ஆனால் 2015-ல் பீலே தன்னைப் பற்றிக் கூறுகையில் தான் போட்ட மொத்த கோல்கள் 1283 என்று குறிப்பிட்டுள்ளார்.

    பிரேசிலுக்கு அவர் தந்த உலகக் கோப்பை 1958-ல் பீலே உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு பிரேசிலை முன் நிறுத்தினார். பின்னர் மூன்று உலகக் கோப்பைகளை வென்றார்.

    இளம் வயதில் உலகக் கோப்பையை வென்றவரும் இவரே தான், மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற ஒரே வீரரும் இவரே தான்!

    92 முறை ஹாட் ட்ரிக் கோல் அடித்த இவரது சாதனை என்றும் பேசும் பொருளாக ஆகி விட்டது! (ஒரு விளையாட்டில் மூன்று கோல்களைப் போடுவது ஹாட் ட்ரிக் சாதனையாகும்) 31 விளையாட்டுக்களில் இவர் நான்கு கோல்களைப் போட்டு சாதனை நிகழ்த்தியுள்ளார்.

    1958-ல் இவர் நிகழ்த்திய சாதனையைப் பார்த்த மக்கள் இவருக்கு 'ஓ ரெ' என்ற பட்டப்பெயரைச் சூட்டினர். இதற்கான அர்த்தம் "மன்னன்" என்பதாகும்.

    போரை நிறுத்திய பீலே: மின்னல் போல அங்குமிங்கும் களத்தில் அவர் விளையாடு வதையும் பந்து நகர்த்துவதையும் மடக்குவதையும் முன்னேறிச் சென்று அனாயாசமாக கோல் போடுவதையும் பார்க்க ஆயிரக்கணக்கானோர் முதலிலேயே வந்து நின்று விடுவர். அவரது தோற்றம் அனைவரையும் ஈர்த்தது.

    1967-ல் நைஜீரியாவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. இரண்டு குழுக்களுக்குமிடையே நடந்த அந்த உக்கிரமான போர் பீலே அங்கு விளையாட வருகிறார் என்பது தெரிந்ததுமே தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    தற்காலிகமாக இரு நாட்கள் இப்படி ஒரு போரை தன் விளையாட்டால் நிறுத்திய ஒரே வீரர் அவரே. அவரது பெயர் பொறித்த டி ஷர்ட்டுகளை அணிவது ஒரு கௌரவமாகவே கருதப்பட்டது. ஒவ்வொரு விளையாட்டு வீரரும் முப்பது சட்டைகள் வரை வைத்திருப்பர். இல்லாவிடில் அவர்களால் மைதானத்தை விட்டு வெளியேற முடியாது. அவ்வளவு டிமாண்ட் அந்த சட்டைகளுக்கு!

    விளையாட்டுத் துறை அமைச்சர்: பிரேசில் நாடு வளர்ந்து வரும் உலக கதாநாயகனைப் போற்றியதோடு ஒரு சமயம் பயப்படவும் செய்தது - எங்கேயாவது அவர் இன்னொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்று விடுவாரோ என்று!

    1995-ல் அவர் பிரேசிலின் விளையாட்டுத் துறை அமைச்சராக்கப்பட்டார். மூன்று ஆண்டுகால பதவி காலத்தில் பிரேசில் நாட்டில் இருந்த லஞ்சம் உள்ளிட்ட களைகளை எல்லாம் அறவே ஒழித்த அவர் நாட்டின் விளையாட்டுத் துறையையே நவீன மயமாக்கினார்.

    பீலே தினம்: அவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ஆம் நாள், பீலே தினமாக பிரேசில் கொண்டாடி வருகிறது. 1969-ல், நவம்பர் 19-ம் நாளன்று சாண்டோஸ் நகரில் அவர் தனது ஆயிரமாவது கோலைப் போட்டு சாதனை நிகழ்த்தினார்.

    இந்த கோலைப் போட்டவுடன் ரசிகர்கள் உற்சாகம் மீறி மகிழ்ச்சி பொங்க மைதானத்தில் நுழைந்து விடவே அரை மணி நேரம் விளையாட்டு நிறுத்தப்பட்டது.

    இந்த ஆயிரமாவது கோல் நினைவாக பிரேசில் ஒரு விசேஷ தபால் தலையை வெளியிட்டு இவரை கௌரவித்தது. நூற்றாண்டின் இணையற்ற வீரர்: சென்ற நூற்றாண்டில் இணையற்ற வீரராகத் திகழ்ந்த இவர் "நூற்றாண்டின் வீரர்" என்று கொண்டாடப்படுகிறார்.

    வெண்கலத்தினாலான இவரது சிலை ஒன்று ரியோ டி ஜெனிரோவில் திறந்து வைக்கப்பட்டது. ரொனால்ட் ரீகன், எலிசபத் மகாராணி உள்ளிட்ட ஏராளமானோர் அவரைச் சந்தித்து புகழ்ந்து மகிழ்ந்துள்ளனர். இவரை அனைவரும் ப்ளாக் பெர்ல் - கறுப்பு முத்து என்றே அழைப்பது வழக்கமானது.

    இருபதாம் நூற்றாண்டில் செல்வாக்கு மிக்க நூறு பேர்களைத் தேர்ந்தெடுத்த டைம் பத்திரிகை பீலேயையும் ஒருவராக அறிவித்தது.

     குடும்பம்: பீலே மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். ஏழு குழந்தைகள் அவருக்கு உண்டு.

    அதிர்ஷ்ட சட்டை எங்கே?

    எல்லோரையும் போல பீலேக்கும் அதிர்ஷ்டம் போன்றவற்றில் நம்பிக்கை உண்டு. ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் அவர் மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். நண்பர்களும் கால்பந்து ஆர்வலர்களும் மிகவும் கவலையுற்றனர். பீலே தனக்கு ஏன் இப்படிஒரு சோர்வு ஏற்பட்டது என்று யோசிக்கலானார். விடை அவரது மனதில் பளிச்சென உதயமானது.

    வழக்கமாக அவர் அணியும் சட்டையை ஒரு கால்பந்து ரசிகர் விரும்பிக் கேட்கவே பீலே அவருக்கு அதைக் கொடுத்துவிட்டார். தனது சட்டை போன அன்றிலிருந்து தான் இந்த மனச்சோர்வு தனக்கு வந்தது என்று அவர் எண்ணினார்.

    உடனே ஒரு துப்பறியும் நிபுணரை நியமித்தார். யாருக்கு தான் தனது சட்டையைத் தந்தாரோ அவரைக் கண்டு பிடித்து அதைப் பெற்றுத் தரவேண்டும் என்பதே துப்பறிவாளருக்கு அவர் இட்ட கட்டளை.

    பெரும் தேடலை மேற்கொண்ட துப்பறிவாளரும் ஒரு வழியாக அந்த ரசிகரைக் கண்டுபிடித்து சட்டையைத் திருப்பி வாங்கி வந்து அதை பீலேயிடம் தரவே அவருக்கு அடங்காத மகிழ்ச்சி ஏற்பட்டது. அன்றிலிருந்து அவர் பழைய பீலே ஆனார். உற்சாகம் அவருக்குக் கரை புரண்டோடியது.

    சரி, உண்மையில் நடந்தது என்ன? துப்பறிவாளர் பீலேயைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார். ஆகவே பீலே விளையாடிய முந்தைய விளையாட்டின் சட்டையையே செட் - அப் செய்து அவரிடம் தந்து விட்டார் - உண்மையைச் சொல்லாமலேயே! எல்லாம் மனதில் தான் இருக்கிறது என்பதையே இந்தச் சம்பவம் சுட்டிக் காட்டுகிறது!

    பீலே அறக்கட்டளை: 1977-ல் அவர் தீவிர விளையாட்டிலிருந்து ஒய்வு பெற்றார். கால்பந்தாட்டத்திற்கான உலக தூதுவராக ஆனார். மிக்க ஏழ்மையில் வாழ்ந்த அவருக்கு வறுமை என்றால் என்ன என்பது நன்கு தெரியும். ஆகவே உலகின் ஆகப் பெரும் செல்வந்தராக அவர் ஆன போது ஒரு அறக்கட்டளையை நிறுவினார். அதில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் உதவலானார்.

    மரணம்: 2019-ல் சிறுநீரகக் கற்களை அகற்ற ஒரு அறுவை சிகிச்சையை அவர் மேற்கொண்டார். தொடர்ந்து பெருங்குடலில் புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. கொரானா காலத்தில் அவர் புற்று நோய் முற்றவே 2022, டிசம்பர் மாதம் 29-,ம் நாள் உயிரிழந்தார்.

    சாண்டோஸ் நகரில் பெல்மிரா ஸ்டேடியத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக அவர் உடல் வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கில் கூடிய ரசிகர்கள் வரிசையாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பிரேசில் நாடு 3 நாள் துக்கம் அனுஷ்டித்தது.

    சுயசரிதமும் டாகுமெண்டரி படமும்: பீலே திரைப்படங்களில் தோன்றிய காட்சிகளும் உண்டு. இவரைப் பற்றிய டாகுமெண்டரி படமும் எடுக்கப்பட்டது. தனது சுயசரிதத்தையும் பீலே எழுதியுள்ளார். 'மை லைஃப் அண்ட் தி பியூட்டிஃபுல் கேம்' என்பதே அந்த புத்தகத்தின் பெயர். அழகிய விளையாட்டு - பியூட்டிபுல் கேம் - என்பதே இவர் கால்பந்துக்கு சூட்டிய அழகிய பெயராகும். இவருக்கு அளிக்கப்பட்ட விருதுகள், மெடல்கள் கணக்கிலடங்கா.

    பயிற்சி, பயிற்சி, பயிற்சி: பீலே தனது வாழ்க்கைச் செய்தியாக அறிவித்திருப்பது ஒரே ஒரு வார்த்தை தான் : அது தான் பயிற்சி! பயிற்சி!

    பயிற்சி!! பயிற்சி!!! இதுவே வெற்றிக்கான வழி என்பது அவரது கொள்கையாகும்.

    அவரது புகழ் பெற்ற பொன்மொழிகளில் சில:

    வெற்றி என்பது ஒரு தற்செயலான விஷயம் அல்ல. கடும் உழைப்பு, விடாமுயற்சி, நன்கு கற்பது, தியாகம், எல்லாவற்றிற்கும் மேலாக செய்யும் வேலையில் அளவற்ற ஈடுபாடு - இதுவே வெற்றிக்கு வழி! ஒரு தனிப்பட்ட நபர் ஒரு போதும் ஒரு விளையாட்டை அவரால் மட்டுமே வெல்ல முடியாது.

    நான் கால்பந்து விளையாடுவதற்காகவே பிறந்துள்ளேன் - எப்படி பீத்தோவன் இசைக்காகப் பிறந்தாரோ, எப்படி மைக்கெல் ஏஞ்சலோ ஓவியம் படைக்கப் பிறந்தாரோ அது போலத் தான் நான் கால்பந்து விளையாடப் பிறந்துள்ளேன். கால்பந்து பற்றி அவர் கூறியது:

    தலை இதயத்துடன் பேசுகிறது; இதயம் கால்களுடன் பேசுகிறது. கால்பந்து எனக்கு ஒரு மதம் போல! நான் பந்தையே வழிபடுகிறேன். அதையே கடவுளாகக் கருதுகிறேன்.

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    • பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தான் அவரது ஆத்மாவின் பயணங்கள் இருக்கும்.
    • கர்ம தோஷம் அடுத்தடுத்த பிறவியிலும் கடல் அலைபோல வந்து கொண்டே இருக்கும்.

    ஒருவர் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தான் அவரது ஆத்மாவின் அடுத்தடுத்த பயணங்கள் இருக்கும். ஒருவர் அதிக புண்ணியங்கள் செய்தால் அடுத்த பிறவிகளில் அவரது பிறப்பு மிகவும் சிறப்புகள் கொண்டதாக இருக்கும். அதேசமயத்தில் ஒருவர் அதிக பாவங்கள் செய்தால் அது அவரது அடுத்த பிறவிகளிலும் தொடரும்.

    ஒருவர் செய்யும் மிகவும் கொடூரமான பாவ செயல்களுக்கு நிவாரணம் தேடிக் கொள்ளாவிட்டால் அது கர்ம தோஷமாக மாறி விடும்.

    அந்த கர்ம தோஷம் அடுத்தடுத்த பிறவிகளிலும் கடல் அலைபோல வந்து கொண்டே இருக்கும். நிறைய பேர், வாழ்க்கையில் கஷ்டப்படும் போது அவர்களுக்கு தங்களது கர்ம தோஷத்தின் பாதிப்புகள் பின்தொடர்கின்றன என்பது தெரியாமலேயே இருக்கும்.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒருவர் முன் ஜென்மத்தில் தேவையில்லாத பாவங்கள், சாபங்களை சம்பாதித்து இருந்தால் அவை அடுத்த பிறவிகளில் நிச்சயம பாடாய்ப்படுத்தி விடும். குறிப்பாக 12 வகை சாபங்கள் அடுத்தடுத்த பிறவிகளில் தோஷங்களாக மாறி தொடரும் என்று ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    பெண் சாபம், பிரேத சாபம், பிரம்ம சாபம், சப்த சாபம், பித்ரு சாபம், பசு சாபம், பூமி சாபம், நதி சாபம், விருட்சம் சாபம், குலதெய்வ சாபம், ரிஷி சாபம், தேவ சாபம் ஆகிய 12 சாபங்களும் அடுத்த பிறவிகளில் தோஷமாக மாறும் என்று நமது முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

    பொதுவாக பாவங்கள் செய்யக்கூடாது. மற்றவர்களிடம் சாபங்கள் வாங்கக் கூடாது என்பார்கள். சாபங்கள் வாங்கியிருந்தால் அது கர்ம தோஷமாக மாறுவதை தடுக்கவே இயலாது. அதனால்தான் நன்கு பக்குவம் அடைந்தவர்கள் ஏதாவது துன்பம் நேரிடும்போது, `அனைத்துக்கும் காரணம் நம் கர்மா' என்று சொல்வதை கேட்டு இருப்பீர்கள்.

     முக்கிய விஷயங்களில் ஒருவருக்கு தொடர்ந்து தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் அதை கர்ம தோஷம் என்று மிக உறுதியாக சொல்லிவிட முடியும்.

    சில கர்ம தோஷங்களை ஒருவரது பிறந்த நேரத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்ட ஜாதகத்தை வைத்துதான் கண்டறிய முடியும். அந்த வகையில் ஒருவர் முன்ஜென்மத்தில் என்ன பாவம் செய்தார் என்பதை அவரது ஜாதகம் துல்லியமாக காட்டிக்கொடுத்து விடும்.

    அந்த கர்ம தோஷங்களை உங்கள் ஜாதகத்தை பார்த்து நீங்களே தெரிந்து கொள்ள முடியும். ஒருவர் முன் ஜென்மத்தில் ஏதாவது பாவங்கள் செய்து கர்மாவை சேர்த்து வைத்திருந்தால் அது இந்த ஜென்மத்தில் 5-ம் இடத்தில் வந்து நமக்கு நடத்தி காட்டி கொடுத்து விடும். எனவேதான் 5-ம் இடத்தை பாவ பூர்வ புண்ணிய இடம் என்று சொல்கிறார்கள்.

    5-ம் இடத்தை வைத்து ஒருவரது ஜாதகத்தின் முன் ஜென்ம நிலையை கண்டுபிடித்து விடமுடியும். சூரியன், சந்திரனுடன் ராகு-கேது இருந்தால் அதை முன்ஜென்ம பித்ரு தோஷம் என்று சொல்வார்கள். அதுபோல 9-ம் இடத்தை வைத்தும் கர்ம தோஷங்களை ஜோதிடர்கள் கணிப்பது உண்டு.

    ஒருவருக்கு மிக மிக கடுமையான தோஷங்கள் இருந்தால் அவரது 5-ம் வீடு, 5-ம் அதிபதி, 9-ம் வீடு, 9-ம் அதிபதி ஆகியவற்றை சரியானபடி ஆய்வு செய்தால் அவரது கர்ம தோஷங்களை கண்டுபிடித்து விட முடியும்.

    கர்ம தோஷங்களை அடுத்தடுத்த பிறவிகளுக்கு கொண்டு செல்வது சனி கிரகம்தான். மற்ற கிரகங்களுக்கும் இதில் பங்களிப்பு உண்டு.

    என்ன கர்ம தோஷம் ஏற்பட்டு இருக்கிறது? அதன் பாதிப்பு எப்படி இருக்கிறது? என்ன பரிகாரம் செய்தால் அந்த கர்ம தோஷங்களில் இருந்து விடு படலாம் என்பதை தெரிந்து கொண்டால்தான் முன் ஜென்ம தோஷங்களுக்கு பரிகாரம் தேடிக் கொள்ள முடியும்.

     முன் ஜென்ம பாவங்கள் கர்ம தோஷமாக மாறி ஆட்டிப் படைப்பதாக நினைத்தால் நிச்சயமாக வழிபாடுகளை அதிகரிக்க வேண்டும்.

    ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று நமது இஷ்ட தெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு ஒருமனதுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    பின்னர் வீட்டுக்கு வந்து குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். குலதெய்வம் படத்தின் முன்பு அரசமர இலைகளை மூன்று மூன்றாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றில் சிறிது உப்பு வைத்து உதிரி பூக்களையும் சுற்றி போட்டு அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.

    அந்த 9 இலைகள் மீதும் 9 அகல் விளக்குகளை வைத்து தீபம் ஏற்றி மனதார குல தெய்வத்தை அழைத்து வழிபட வேண்டும். இந்த தீப வழிபாட்டை ஒரு தடவை செய்தால் மட்டும் போதாது. 9 அமாவாசை நாட்களில் தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த வழிபாடு மூலம் நம்மை பிடித்து இருக்கும் முன் ஜென்ம கர்ம தோஷ வினைகளில் இருந்து விடுபட முடியும்.

    ஆலயங்களுக்கு வழிபாடு செய்ய செல்லும்போது கர்ம தோஷங்களுக்காக நீங்கள் என்ன பரிகார பூஜைகள் செய்தாலும் சண்டிகேஸ்வரரை மறக்காமல் வணங்க வேண்டும். சண்டிகேஸ்வரரை வணங்காமல் கர்ம தோஷ பரிகார பூஜைகள் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்காது.

    ஏனெனில் முன் ஜென்ம பாவங்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட கர்ம தோஷத்தை விரட்டியடிக்கும் ஆற்றல் கொண்டவராக சண்டிகேஸ்வரர் கருதப்படுகிறார்.

    கர்ம தோஷத்துக்காக சண்டிகேஸ்வரரை வழிபடும் போது அவருக்கு வஸ்திரம் சாத்தி வழிபடுவது மிகவும் நல்லது. அன்றைய தினம் அவரை வேண்டிக் கொண்டு அன்னதானம் செய்யலாம். இந்த பூஜை முன் ஜென்ம கர்ம தோஷங்களை உடனடியாக நீங்க செய்யும் ஆற்றல் கொண்டது.

     தமிழகத்தில் முன் ஜென்ம கர்ம தோஷங்களை போக்கும் ஆற்றல் கொண்டதாக 6 ஆலயங்கள் கருதப்படுகின்றன. அந்த 6 ஆலயங்கள் பற்றிய விவரம் வருமாறு:-

    1. திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோவில்-கடன், சத்ரு, நோய் போன்றவற்றைத் தீர்க்கும் சக்தி வாய்ந்தது இந்த ஆலயம்.

    2. கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகில் உள்ள ராமநாத சுவாமி பர்வதவர்த்தினி அம்மன் ஆலயம். இது மாந்தி பகவான் பரிகாரத்தலம் ஆகும்.

    3. திருப்பாம்புரம் சேஷ புரீஸ்வரர் கோவில்- ராகு-கேது பரிகாரத் தலம்.

    4. வைத்தீஸ்வரன் கோவில்- இது செவ்வாய் பரிகார தலமாகும்.

    5. திருத்தேவன்குடியில் உள்ள கற்கடகேஸ்வரர் கோவில். இது அனைத்து முன் ஜென்ம பாவங்களை யும் போக்கும் ஆலய மாகும்.

    6. திருவிடைமருதூர் மகாலிங்கம் கோவில். இது பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் ஆலயமாகும்.

    இவை அனைத்துக்கும் மேலாக குல தெய்வ ஆலயத்துக்கு சென்று நைவேத்தியங்கள் படைத்து பூஜைகள் செய்தால் கர்ம வினைகள் பாதிப்பை ஏற்படுத்துவதை கட்டுப்படுத்த முடியும். எனவே குல தெய்வ வழிபாட்டை மறக்காதீர்கள்.

    சிலருக்கு தங்களது ஜாதக அடிப்படையில் சில குறிப்பிட்ட ஆலயங்களில் சில குறிப்பிட்ட பரிகாரங்களை செய்தால் பலன் கிடைக்கும் நிலை இருக்கும். அதை தெரிந்து கொண்டு செய்தால் பூர்வஜென்ம பாவங்கள் கர்மாவாகி மாறியிருப்பதை கட்டுப்படுத்தலாம் அல்லது பாதிப்பை குறைத்துக் கொள்ளலாம்.

    • அஸ்வமேதம் தான் நடிகர் பாலகிருஷ்ணாவுடன் நான் முதல் முதலில் நடித்த படம்.
    • கிளைமாக்ஸ் காட்சி ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனத்தில் நடந்தது.

    அஸ்வமேதம் இதுதான் நடிகர் பாலகிருஷ்ணாவுடன் நான் முதல் முதலில் நடித்த படம். மிகப்பெரிய நடிகர். எனவே எதிர்பார்ப்புடன் இருந்தேன்.

    படத்தில் பாலகிருஷ்ணா மருத்துவர் வேடம் எனக்கு. அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனத்தில் நடந்தது. அதுவரை பாலைவனம் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அது எப்படி இருக்கும் என்று நேரில் பார்த்தது கிடையாது.

    எனவே முதல் முறையாக பாலைவனத்தை பார்க்கப் போகிறோம் என்று ஆசையும் இருந்தது. அதேநேரம் இன்னொரு மலையாள படத்தில் நடித்து கொண்டிருந்தேன். அந்த படத்தின் காட்சிகள் கேரளாவில் மிகவும் உள்புற பகுதி களில் நடந்து கொண்டிருந்தது.

    படப்பிடிப்பு முடிந்து மறுநாள் நான் ஜெய்ப்பூர் செல்ல வேண்டும். ஜெய்ப்பூர் செல்வதும் எளிதல்ல. கொச்சியில் இருந்து விமானத்தை பிடித்து ஜெய்சல்மீர் செல்ல வேண்டும். அங்கிருந்து காரில் ஜெய்ப்பூர் பயணிக்க வேண்டும்.

    இந்த காலத்தை போல் அப்போதெல்லாம் தகவல் தொடர்பு சாதனங்கள் கிடையாது. ஒருவருக்கொருவர் தகவல்கள் பரிமாறி கொள்வது கஷ்டம்.

    இந்த நாளில் இந்த இடத்துக்கு வருவேன் என்றால் அந்த இடத்துக்கு சென்று விட வேண்டும். மற்ற வர்களும் அதேபோல் அந்த இடத்துக்கு வந்து விட வேண்டும் என்பதுதான் ஏற்பாடு.

    அதேபோல்தான் படக்கு ழுவினர் அனைவரும் ஜெய்ப்பூர் சென்று சேர்ந்து விட்டார்கள். எல்லோரும் எனது வரு கைக்காக காத்திருந்தார்கள்.

    நேரம் செல்ல செல்ல அவர்களுக்கும் சந்தேகம். மீனா வருவாளா... மாட்டாளா... என்று ஒருவருக்கொருவர் பேசி இருக்கிறார்கள்.

    இன்று வருவதாகத்தானே சொல்லி இருந்தார். ஏன் வரவில்லை என்று குழப்பத்தி லேயே இருந்திருக்கிறார்கள்.

    ஒரு நாள் போகாமல் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும்.

    இதெல்லாம் என்க்கும் தெரியும். எனவே அடித்து பிடித்து கேரளாவில் இருந்து ஜோத்பூர் சென்று அங்கிருந்து ஜெய்சல்மீர் போய் சேர்ந்து விட்டோம்.

    ஆனால் நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம்... இந்த இடத்துக்கு வந்து விட்டோம்... என்று இந்த காலத்தை போல் 'ரன்னிங் கமென்ட்ரி' எல்லாம் கொடுக்க முடியாது.

    ஒரு வழியாக ஜெய்சல்மீரில் இருந்து காரில் புறப்பட்டு இரவு 8 மணியளவில் ஜெய்ப்பூர் போய் சேர்ந்தோம்.

     ஓட்டலில் எங்களை எதிர்பார்த்து காத்திருந்த படக்குழுவினருக்கு என்னை பார்த்த பிறகுதான் நிம்மதி.

    வந்திட்டீங்களா மேடம். வாங்க... வாங்க... என்று உற்சாகமாக வரவேற்று அழைத்து சென்றார்கள். அதன் பிறகுதான் எல்லோரும் இரவு சாப்பாடே சாப்பிட்டோம்.

    மறுநாள் அதிகாலையிலேயே படப்பிடிப்புக்கு தயாரானோம். காரில் படப்பிடிப்பு நடக்கப்போகும் இடத்தை சென்றடைந்தோம்.

    நாங்கள் சென்ற நேரம் பகல் 12.30 மணி போன இடம் பாலைவனம் ஆயிற்றே? மரங்களை எங்கே காண்பது? நிழலை எங்கு தேடுவது?

    கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பொன்னிற போர்வை விரித்தது போல் மணல் மட்டுமே பரந்து விரிந்து கிடந்தது. ஆங்காங்கே ஒட்டகங்களில் ஒரு சிலர் பயணித்து கொண்டிருந்தார்கள்.

    காரைவிட்டு இறங்கியதும் உச்சி வெயில் மண்டையை பிளந்தது. அனலை அள்ளி கொட்டுவது போல் காற்று வீசியது. பாலைவனம் எப்படி இருக்கும் என்று தெரியாததால் புடவை, உயரமான ஹீல்ஸ் வைத்த செருப்பும் வாங்கி சென்றிருந்தேன்.

    காட்சியை பற்றி விளக்கும் போது முதல் முறையாக ஸ்லோமோஷனில் ஹை ஸ்பீடில் படமாக்க இருந்தார்கள். அந்த மாதிரி காட்சியில் நடிப்பது வழக்கமாக நடிப்பதை விட டபுள் ஸ்பீடில் நடிக்க வேண்டும்.

     எனவே சேலை கட்டிக் கொண்டு உயரமான ஹீல்ஸ் போட்டு நடிப்பது ஆபத்து. வழுக்கி விழ நேரிடலாம் என்று சாதாரண சப்பல் அணிந்து கொண்டேன்.

    பாலைவன மணலில் இறங்கி நடந்தோம். சற்று தூரத்தில் ஒரு சிறிய கொட்டகை மட்டும் போட்டு இருந்தார். அந்த கொட்டகைக்குள் தான் சாப்பிடுவது, ஓய்வு எடுப்பது எல்லாம்.

    நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். உண்மையான வெயில் அனுபவத்தை பாலைவனத்தில் பெற முடியும். இப்படியும் ஒரு பிரதேசம் இருக்கத்தானே செய்கிறது என்று எனக்குள் நானே நினைத்துக் கொண்டேன்.

    நம்ம ஊரில் கோடை காலம் தொடங்கியதும் 100 டிகிரி வெயில் அடித்தாலே வெளியே நடமாட முடிவதில்லை. எப்போது முடியும் இந்த வாட்டி வதைக்கும் வெயில் என்று தவிப்போம்.

    ஆனால் பாலைவனம் எல்லா காலமும் இப்படித்தான் இருக்கு மாம் சிறிது தூரம் வெயிலில் நடந்தாலே எங்காவது சற்று நேரம் ஒதுங்கி நிற்க நிழல் இருக்காதா என்று தேடி ஓடுவோம்.

    எப்படியும் சற்று தூரத்தில் நிழல் கிடைக்கும். ஆனால் பாலைவனத்தில் எங்கும் ஓடி தேடினாலும் நிழலை பார்ப்பது அரிது தாகம் வந்தால் தண்ணீர் கிடைக்காது. இப்படியும் ஒரு பிரதேசம்... இங்கும் உயிர்கள் வாழ்கிறது கண்முன்னால் ஒட்டகம் செல்கிறது. இவை தண்ணீருக்கு என்ன செய்யும்? எப்படித்தான் இந்த வெயிலை தாங்குகின்றதோ என்றெல்லாம் என் மனதுக்குள் ஓடியது.

    உறைய வைக்கும் பனி பிரதேசத்தில் பனிக்கரடிகள் வாழவில்லையா அதேபோலத்தான் இந்த வெயிலையும் தாக்குப் பிடிக்கும் வகையில் இந்தப் பிரதேசத்தில் உயிர்கள் வாழ்கின்றன இறைவன் படைப்பில் எத்தனை அதிசயங்கள்...? நினைத்தாலே ரொம்ப ஆச்சரியமாக இருக்கி றதல்லவா?

    வாழ்க்கையில் நாம் சாதிக்கும் எத்தனையோ சம்பவங்கள் நமக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கும். ஷூட்டிங் நடந்த இடம் ரொம்ப தூரத்தில் இருந்தது. அதுவரை பாலைவன மணலில் நடந்தே செல்ல வேண்டும்.

    அந்த மணலில் நடந்து செல்ல ஏது வான செருப்பு அணியாததால் நடக்கும் போது கால் மணலில் புதைந்ததால் நெருப்பில் கால் வைத்தது போல் இருந்தது. சூடு தாங்க முடியவில்லை. கால்களில் கொப்புளமே வந்துவிட்டது.

    தொடர்ந்து இந்த மாதிரி சாதாரண சப்பல் போட்டு நடிக்க முடியாது என்பதை உணர்ந்து இரவோடு இரவாக சென்று ஷூ வாங்கி போட்டேன்.

    ஷூ போட்டு நடக்கும் போதும் கால் மணலில் புதையும் போது மணல் சிறிதளவு உள்ளே சென்று விடும். இருந்தாலும் பரவாயில்லை.

    அந்த படத்தில் இடம் பெற்றுள்ள `ஓ பிரேமா...' என்ற பாடல் பாலைவனத்தில் பட மாக்கப்பட்டது. எப்படியோ அந்த படக்காட்சி முடிந்து விட்டது.

    அந்த படத்தில் இடம் பெற்ற 'கும்தலகிடி கும்மா குமதம்...' என்ற மற்றொரு டூயட் பாடல் சூப்பர் ஹிட்டானது. அந்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது ரொம்ப சுவாரஸ்யமானது.

    எதிர்பாராத காரணங்களால் டைரக்டருக்கு வர முடியாமல் போனது. மறுநாள் ஷூட்டிங்குக்கு எனக்கு என்ன காஸ்ட்யூம் சொல்லி இருக்கிறார் என்று கேட்டேன். எதுவும் சொல்லவில்லை என்றார்கள். அப்போ நான் எப்படி நடிப்பது?

    வேறு வழியில்லை. காட்சிக்கு ஏற்ற காஸ்ட்யூமை நானே முடிவு செய்தேன். இந்த கலர் சேலை, இந்த கலர் ஜாக்கெட், அது இந்த மாடலில் இருக்க வேண்டும். பாவாடை இந்த கலரில் வேண்டும் என்று போன் மூலம் ஐதராபாத்தில் இருந்த டிசைனரிடம் கூறுவேன்.

     இந்த காலத்தில் என்றால் வாட்ஸ் ஆப்பில் தெளிவாக டைப் செய்தும், மாடல்களை அனுப்பியும் சொல்ல முடியும். அது டிசைனருக்கும் புரியும்.

    நான் போனில் சொன்னது அவருக்கு எந்த மாதிரி புரிந்தது என்று தெரியாது. அவர் இரவோடு இரவாக தயார் செய்து விமானத்தில் அனுப்புவார். காலை 6 மணிக்கு முதல் விமானம் வரும்.

    ஒருவர் விமான நிலையத்துக்கு சென்று அதை வாங்கி வருவார். இப்படியே நான்கைந்து நாட்கள் விமானத்திலேயே வரவழைத்து சமாளித்தேன். 8 காஸ்ட்யூம்களில் ஆடினேன். 'கும்தலகிடி கும குமதா...' பாடலும் சூப்பராக அமைந்தது. ரசிகர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் அந்த பாடல் மனசுக்கு பிடித்த பாடல். இப்போதும் விரும்பி கேட்பதுண்டு.

    இன்னொரு சுவாரஸ்யமான தகவலுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

    (தொடரும்...)

    • நாம் நம்மை மதிக்கத் தொடங்கினால் வாழ்க்கையின் மதிப்பீடு பெருகிக்கொண்டே போகும்.
    • இயற்கையின் படைப்பில் எல்லாருமே அழகானவர்கள்

    இயற்கையின் படைப்பில் எல்லாருமே அழகானவர்கள்; மனிதர்கள் அழகானவர்கள்; அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற வாழ்க்கையும் அழகானதுதான். யார் யார் தனது மதிப்பை உணர்ந்து தன்னை ஆராதிக்கக் கற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் இந்த உலகில் மதிப்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்குத் தகுதி பெற்றவர்கள் ஆகின்றனர்.

    சிலர் வாழ்க்கையில், நொடிக்கு நொடி தாம் சல்லிக்காசுக்குப் பிரயோஜனமில்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாகச் சலித்துக்கொண்டே இருப்பார்கள். உண்மையில் அவர்களெல்லாம் பெரும் புதையல் மேட்டுக்கு மேல் தாம் அமர்ந்திருப்பது தெரியாமல் பிச்சையெடுத்துக் கொண்டிருப்பவர்கள். நொந்தவர்கள் வெந்துதான் போகவேண்டுமேயொழிய எந்த காலத்திலும் சிறந்தவர்கள் ஆகமுடியாது.

    சம்பாதித்துக்கொண்டே இருப்பதுதான் மதிப்புமிக்க வாழ்க்கை என்று சிலர் கூறுகிறார்கள்; அவர்கள் `சம்பாதிப்பது' என்று அர்த்தப்படுத்திக் கொள்வதெல்லாம் `பணம் சம்பாதிப்பது' பற்றியதே ஆகும். பொருளை ஈட்டுவதும், வீடு,நிலம், கார் முதலிய வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வதும் ஒருவகைச் சம்பாத்தியம்தான் என்றாலும் அதையும் தாண்டிப் பலவகைச் சம்பாத்தியங்கள் உலகில் உள்ளன.

    அறிவைச் சம்பாதிப்பது, திறமையைச் சம்பாதிப்பது, நற்குணங்களைச் சம்பாதிப்பது,புகழைச் சம்பாதிப்பது, நல்ல நண்பர்களையும் நல்ல உறவுகளையும், நல்ல மனிதர்களையும் சம்பாதிப்பது, நல்ல பெயரைச் சம்பாதிப்பது, நல்ல அனுபவங்களைச் சம்பாதிப்பது என்று மதிப்புமிக்க சம்பாத்தியங்கள் நாட்டில் எவ்வளவோ இருக்கின்றன.

    இவற்றையெல்லாம் சம்பாதிப்பதற்குப் பணம் தேவைப்படுவதே இல்லை; ஏன்? பணத்தைச் சம்பாதிப்பதற்குக் கூட அடிப்படையில் பணம் தேவைப்படுவதே இல்லை; அடிப்படையில் உழைப்பும் தளராத முயற்சியும் இருந்தால் போதும்.

    இந்த உலகில் உயிர்வாழும் காலம் வரைக்கும் தேவையான பணத்தோடு வாழ்வது மதிப்பான வாழ்க்கை என்பர் சிலர். தன் காலத்திற்குப் பிறகும், வருகிற சந்ததிகளுக்கும் சொத்துச் சேர்த்து வைப்பதே சிறந்த மதிப்பான வாழ்க்கை எனச் சிலர் முதுமையிலும் ஓய்விலாது பணம் தேடிக்கொண்டே இருப்பார்கள். உண்மையில் இதுவெல்லாம் பொருளாதாரம் சார்ந்த கோட்பாடே ஆகும்.

    உண்மையில் வாழ்க்கையின் மதிப்பு எவ்வளவு? அதன் விலைமதிப்பு என்ன?. இந்தக் கேள்வி களுக்குப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் கூறினாலும், தத்துவ, வாழ்வியல் அடிப்படை களில் கூறினாலும் பதில் ஒன்றுதான். ஆம்! வாழ்க்கை விலை மதிப்பற்றது.

    வாழ்க்கையின் மதிப்பை மற்றவர்களிடம் கேட்பதைவிட நமக்கு வாழ்க்கையைத் தந்த கடவுளிடமே கேட்டுவிடுவோமே என்று முடிவு செய்து கடவுளிடம் கேள்வியோடு போய் நின்றான் ஒரு மனிதன். அவனது கையில் ஒருகல்லைத் தந்த கடவுள், "இதை எடுத்துக்கொண்டு கடைவீதிக்குச் செல்!. அங்கே வணிகம் செய்யும் பலவித வணிகர்களிடம் இதற்கு என்ன விலை தருவீர்கள்? என்று கேட்டு வா! விற்றுவிடாதே! விலையை மட்டும் கேட்டு வா!" என்று கூறி அனுப்பி வைத்தார்.

    கடைவீதிக்கு வந்த மனிதன் முதலில் ஒரு தள்ளுவண்டியில் ஆரஞ்சுப் பழங்கள் விற்றுக் கொண்டிருந்த வியாபாரியிடம் கடவுள் தந்த கல்லைக் காண்பித்து இதற்கு என்ன விலை தருவாய்? என்று கேட்டான். கல்லை வாங்கிப் பார்த்த பழ வியாபாரி, ஒரு டஜன் ஆரஞ்சுப்ப ழங்கள் தரலாம்! என்று பதிலளித்துவிட்டு, அடுத்த வாடிக்கையாளரைக் கவனிக்கத் தொடங்கிவிட்டார்.

    அடுத்து ஒரு காய்கறிக் கடைக்குச் சென்ற மனிதன், அங்கிருந்த வியாபாரியிடம் கல்லைக் காண்பித்து, இதற்கு என்ன விலை தருவாய்? என்று கேட்டான். கல்லைக் கொஞ்சம் ஆர்வத்தோடு பார்த்த காய்கறி வியாபாரி, இந்தக் கல்லுக்கு விலையாக ஒருமூட்டை உருளைக் கிழங்கைத் தரவா? என்று கேட்டார். மறுத்த மனிதன் அடுத்து ஒரு நகைக் கடைக்குள் நுழைந்தான்.

    அலங்காரமாகவும் வெகுநேர்த்தியாகவும் இருந்த நகைக்கடைக்குள் நுழைந்ததும் அங்கிருந்தவர்கள் மனிதனை அன்போடு வரவேற்றனர்.

    முதலாளியை விசாரித்துக் கொண்டு, அவரிடம், தான் கொண்டு வந்திருந்த கல்லைக் காண்பித்து இதற்கு என்ன விலையை நீங்கள் நிர்ணயித்துத் தருவீர்கள்? என்று கேட்டான்.

    கல்லை வெறுமனே பார்க்காமல் உரிய கருவிகள்கொண்டு ஆராய்ந்து பார்த்த நகை வியாபாரி, 10 லட்சம் ரூபாய் தரலாம் என்று கூறினார். இருந்தாலும் இது விற்பனைக்கல்ல என்று மனிதன் கல்லைத் தர மறுக்கவே, மேலும் ஐந்து லட்சம் போட்டு 15 லட்சமாகத் தருகிறேன் என்று விலையை உயர்த்திக் கூறினார் நகை வியாபாரி. கல்லை விற்காமல் விலைமட்டும் கேட்டு வா! என்று கடவுள் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு கடையைவிட்டுக் கல்லோடு வெளியேறினான் மனிதன்.

    அந்தக் கடைவீதியில் விலையுயர்ந்த கற்கள் நவரத்தினங்கள் விற்கும் கடைக்குள் அடுத்து நுழைந்தான் மனிதன். கையில் பளபளவென்று ஒளிவீசும் ஒரு கல்லோடு ஒரு மனிதன் நுழைவதைக் கண்ட கடையின் ரத்தின வியாபாரி அவனை ஆவலோடு வரவேற்றார்.

    கல்லின் மதிப்பை அறிந்து செல்ல வந்திருப்பதை மனிதன் வியாபாரியிடம் தெரிவித்தான். கல்லை வாங்கிப் பார்த்தவுடன், ஐயா விலைமதிப்பற்ற மாணிக்கக் கல் ஐயா தங்கள் கையில் ஜொலிப்பது; இதனைத் தொட்டுப் பார்ப்பதே பெரும் பாக்கியம்! என்று தனது கையில் கல்லை வாங்கினார் ரத்தின வியாபாரி.

    நவீன இயந்திரங்கள் கருவிகள் கொண்டு பலநிமிடங்கள் ஆராய்ந்து பார்த்தார். பார்த்து முடித்தவுடன் மிகுந்த மரியாதையுடன், மனிதனின் கைகளை நீட்டச் சொல்லி அந்த மாணிக்கக் கல்லைக் கைகளில் வைத்தார். ஐயா இந்த மாணிக்கக் கல்லுக்கு விலைகூற என்னால் மட்டுமல்ல, இந்த உலகில் உள்ள ரத்தினக் கற்கள் வியாபாரிகள் எத்தனைபேர் சேர்ந்தாலும் முடியாது!. இந்த உலகையே விலைபேசினாலும் இந்தக் கல்லின் மதிப்பிற்கு இணையாகாது! என்று வியாபாரி சொல்லிமுடித்தார்.

    கல்லோடு மீண்டும் கடவுளிடம் வந்த மனிதன், கடைவீதியில் நடந்த சம்பவங்களை விரித்துரைத்தான். சிரித்துகொண்டே கடவுள் சொன்னார்," மானுடா உன் வாழ்க்கையும் இந்த மாணிக்கக் கல்லைப்போல விலைமதிப்பற்றதுதான். ஆரஞ்சுப்பழ வியாபாரி, காய்கறி வியாபாரி, நகைக்கடை வியாபாரி ஆகியோர் அவரவர் அறிவிற்கு எட்டிய வரையில் கல்லுக்குள்ள மதிப்பைக் கூறினர். ஆனால் கல்லின் உண்மையான மதிப்பை அறியத் தெரிந்த ரத்தின வியாபாரியே அதன் உண்மை மதிப்பை, விலைமதிப்பற்ற சிறப்பை உனக்கு விளங்க வைத்தார்".

    "மனித வாழ்க்கை ஒவ்வொன்றும் இந்த மாணிக்கக் கல் போன்று விலை மதிப்பற்றதுதான். புரியாதவர்கள் மதிப்பிழந்து போகிறார்கள்.

    மதிப்பை உணர்ந்து கொண்டவர்கள் சாதித்துச் சாதித்து மதிப்பைப் பெருக்கிகொண்டே போகிறார்கள்" என்று சொல்லி முடித்தார் கடவுள்.

    படைத்தவன் பெருமைக்குரியவனாக இருக்கும்போது படைப்புமட்டும் எப்படிப் பெருமை குறைந்ததாக இருக்கும்?.

    நாம்தாம் தேவையில்லாமல் பலவேளைகளில் நம்மை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொள்கிறோம். நம்மைப்பற்றி அடுத்தவர் கொண்டுள்ள கருத்துதான் மதிப்பீடு என்றாலும், சாதாரண அறிவுகொண்டவர்கள் நம்மைக் குறைத்துக் கூறுவதை வைத்து நம்மை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொண்டால் எப்படி?.

    இந்த உலகில் எல்லாரும் ஒரேவிதமான கண்ணோட்டம் கொண்டவர்கள் இல்லை; அவரவர் பார்வைக்கு ஏற்ற வகையில் மனித வாழ்க்கையின் மதிப்பீடுகள் மாறுபடலாம். அவர்கள் ஆளுக்கொருவகையில் மதிப்பிடுவதை வைத்து நம்முடைய மதிப்பும் அவ்வளவுதான் என்று மனம் தாழ்ந்து விடக்கூடாது.

    விலைமதிப்பற்ற வாழ்க்கை நமக்கு வாய்த்திருக்கிறது. அந்த வாழ்க்கையை வாழும் வகையில் வாழ்ந்து மதிப்பை உயர்த்திக்கொண்டே போக வேண்டும்.

    ஒவ்வொரு மனிதனின் வாழ்வியல் மதிப்பையும் உயர்த்திக்காட்டுவதில் முன்னிற்பது அவனது குடும்ப வாழ்வே ஆகும். குடும்ப உறுப்பினர்களான கணவன், மனைவி, பிள்ளைகள், பெரியவர்கள் என அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பும் மதிப்பும் மரியாதையும் கொண்டு வாழும் நெறியறிந்து வாழவேண்டும். அதுவே மதிப்பைத் தரும் குடும்ப வாழ்வு.

     `அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவரா? சிறப்பாகத்தான் இருப்பர்!' என்று பெருமைப் படும் அளவுக்குக் குடும்ப வாழ்வை மதிப்புடன் நடத்த வேண்டும். கணவர் ஒருபக்கம், மனைவி ஒருபக்கம், குழந்தைகள் ஒருபக்கம், மூத்தோர்கள் ஒருபக்கம் என ஆளுக்கொரு பக்கமாகக் கருத்தொற்றுமை சிதையுமளவுக்குக் குடும்பம் போனால் வாழ்க்கை மதிப்பற்றுப் போய்விடும்.

    குடும்பத்திற்கு அடுத்து வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரும் கவனம் செலுத்த வேண்டியது அவரது உழைப்பில் அல்லது தொழிலில் மதிப்போடு செயல்படுவது ஆகும். ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் மதிப்பிழந்து போவதற்கு முக்கியமான காரணம் தாம் செய்யும் தொழிலை அவர்கள் மதிப்பதே கிடையாது. என்னுடைய தகுதிக்கும் திறமைக்கும் நான் பார்க்கவேண்டிய தொழிலே இதுவல்ல! என்று மாதம் பத்து லட்சம் சம்பாதிப்பவர் கூட வேண்டா வெறுப்புடன் கூறுவதைப் பார்க்கலாம்.

    இப்படி வேண்டா வெறுப்புடன் தொழில் செய்பவர்கள் அந்த தொழிலால் எந்தக் காலத்திலும் மதிப்புடன் வாழப்போவதேயில்லை. பலர் கூறுவதைப்போல தெருக்கூட்டும் தொழில் செய்பவர்கூட அதைத் தொழில்பக்தியோடு செய்தால், அந்த தொழில் மூலமாகவும்கூட உலகம்போற்றும் மதிப்பையும் மரியாதையையும் பெறலாம்.

    உழைப்பதற்கு கைகால்கள் கொண்ட உடம்பையும், சிந்திக்க, கற்க, அன்பு செலுத்த, அடுத்தவர்க்கு உதவ எண்ணற்ற உடல் உறுப்புகளையும் உணர்வுகளையும் விலை மதிப்பற்ற வகையில் நாம் ஒவ்வொருவரும் பெற்றிருக்கிறோம். நம்முடைய மதிப்பை நாம் முதலில் உணர்ந்துகொள்வதே நம்முடைய வாழ்க்கையின் மதிப்பை அறிந்துகொள்ளத் தொடங்கும் அரிச்சுவடி.

    மதிப்புமிக்க உடம்பை வைத்துக்கொண்டு மதிப்பிற்குரிய செயல்களை மட்டுமே செய்வது; வாழ்க்கையில் துன்பமோ இன்பமோ எது நேர்ந்தாலும் அவற்றின்மூலம் கற்றுக்கொண்டே இருப்பது; நேர்மையில் இருந்து விலகாமல், நேர்த்தியான செயல்களை மட்டுமே செய்து மதிப்புடனும் மரியாதையுடனும் இயங்கிக் கொண்டே இருப்பது; அன்பையும் சேவையையும் அறவழியில் செய்வதொன்றே மதிப்பான வாழ்க்கை என்பதை மதிப்புடன் வாழ்ந்த மாமனிதர்கள் வழியாக அறிந்து கொள்வது... இவையே வாழ்க்கையின் மதிப்பு.

    வானுறையும் தெய்வத்தின் வழி படைப்பு நிகழ்வது உண்மையென்றால், படைப்பாய் பிறந்துள்ள மனிதர் அனைவரும் தனது மதிப்பை உணர்ந்த செயல்களினால் வாழ்வாங்கு வாழ்ந்தால் அந்த தெய்வீக வாழ்க்கையை மண்ணுலகிலேயே அடைந்து விடுவர். இது வள்ளுவர் வாக்கு.

    மதிப்பிற்குரியவர்களே! நாம் மதிப்புமிக்கவர்கள் என்பதை நமது மதிப்புமிக்க செயல்களால் வாழ்ந்து காட்டுவோம்; நாம் நம்மை மதிக்கத் தொடங்கினால் நமது வாழ்க்கையின் மதிப்பீடு பெருகிக் கொண்டே போகும்; நாம் நம்மைத் தாழ்த்திக்கொண்டே போனால் நமது வாழ்க்கையின் மதிப்பும் தாழ்ந்துகொண்டே போகும்.

    மதிப்போம்! மதிப்பீடுகள் பெருக்குவோம்!

    தொடர்புக்கு 9443190098

    முனைவர்

    சுந்தர ஆவுடையப்பன்

    • மலத்துவாரத்திற்கு மேல் 5 அங்குலத்திற்குள் மூன்று முடிப்புகள் உள்ளன.
    • 3-வது மடிப்பில்தான் மூல நோய் உண்டாகிறது.

    வயிற்றின் அடியில் கவிழ்த்து வைத்தாற்போல் மேலே ஏறிய பின் கீழே இறங்கும் வடிவ பெருங்குடலின் முடிவு மலத்து வாரமாகும். மலத்துவாரத்திற்கு மேல் ஏறத்தாழ 5 அங்குலத்திற்குள் மூன்று முடிப்புகள் உள்ளன.

    முதல் மடிப்பு மலத்தை வெளித்தள்ள சுருங்கி கீழ்வதாகும். இரண்டாவது மடிப்பு மலத்தை வெளித்தள்ளுவதாகும். மூன்றாவது மடிப்பு மலங்கழித்தவுடன் மூடிக்கொள்வது. இந்த 3-வது மடிப்பில்தான் மூல நோய் உண்டாகிறது. மூலம் 21 வகைப்படும் என்று யூகி முனிவரால் அருளப்பட்ட வைத்திய சிந்தாமணி எண்ணாறு என்னும் நூல் கூறுகிறது. அவை வருமாறு:-

    நீர்மூலம்:

    வயிறு வலித்து சுருண்டு மேலும் கீழும் பொருமிக் கொள்ளும். வாயில் நீர் ஊறும். மலம் வறண்டு போகும். அடிக்கடி மலம் வருவது போன்ற உணர்ச்சி ஏற்படும்.

    செண்டுமூலம்:

    ஆசன வாயில் வலிக்கும். காரம் உட்கொண்ட வுடன் மலம் வெளிவரும். ரத்தமும் நீரும் கலந்து வெளிவரும். ஆசன வாயில் அரிப்பு ஏற்படும். சுருங்கும்.

    தொந்தி மூலம்:

    மலங்கட்டிக் கொண்டு இருக்கும். வயிறு பொருமல் ஏற்படும். நடக்க முடியாது. வியர்க்கும். தாகம் ஏற்படும். ஆசனவாய் அட்டைபோல் சுறுங்கும்.

    வினைமூலம்:

    பசி ஏற் படாது. உண்ட உணவு செரிக்காது. அடிவயிறு குத்தும். கை, கால் உளைச்சல் ஏற்படும். வயிறு இரைத்து சூடு ஏற்படும். மலங்கட்டும். நரம்புகளை இழுக்கும். ஆசன வாயில் கருப்பு அதிகரிக்கும். தினமும் எரிச்சல் உண்டாகும்.

    மேக மூலம்:

    உடம்பில் திமிர் ஏற்படும். சிறுநீர் எரியும். தலையும், காலும் வலிக்கும். திடீரென்று கழிச்சல் ஏற்படும். ரத்தம் பீறிடும்.

    பவித்திர மூலம்:

    கை, கால் கனக்கும். மலவாயில் கனல் ஏற்படும். ஆசன வாயில் கட்டி ஏற்படும். ஆசன வாயில் மாம்பூ போல முளைகள் ஏற்படும். பின் கோவை பழம் போல சிவப்பு நிறமாகும்.

    கிரந்தி மூலம்:

    ஆண்குறியில் புண் ஏற்படும். கை, கால்களில் கருப்பு ஏற்படும். ஆசன வாயில் புண்ணாகி கொடி கொடியாய் முளை உண்டாகி சீழும், ரத்தமும் வெளிப்படும். மலம் கட்டிக்கொண்டு கீற்று போல வெடித்து இறங்கும்.

    குத மூலம்:

    மூக்கில் குறுத்து போல வெளிப்பட்டு உள்ளே இழுத்துக்கொள்ளும். ரத்தமும், சீழும் வெளிப்படும். அடிக்கடி நாவறட்சி ஏற்படும். கை, காலில் மதப்பு ஏற்படும். கோபம் ஏற்படும். புற மூலம்: எண்ணெய் போலும், நீர் போலும் மலவாயில் கசிந்து சீழ் கொட்டும். அரிப்பு ஏற்படும். உடம்பு முழுவதும் சிறு சிறு சிரங்குகள் ஏற்பட்டு சொறி ஏற்படும். பிணம் போல முக வாட்டம் ஏற்படும்.

    சுருக்கு மூலம்:

    வாயில் தடிப்பு ஏற்பட்டு ஆசன வாய் சுருங்கிக்கொள்ளும். பெருங்குடலில் வலி ஏற்படும். வயிறு பொருமும். நீரும், ரத்தமும் வெளியாகும். உடல் வெளுக்கும். உடம்பில் அசதி ஏற்பட்டு தளரும்.

    சவ்வு மூலம்:

    தொப்புளை சுற்றி தாமரை பூ போல தடிப்பு ஏற்படும். ஆசன வாயில் சவ்வு போல ஏற்படும். சீழும், நீரும் அடிக்கடி கசியும்.

    மூளை மூலம்:

    ஆசன வாயில் கடுக்கும். எரியும், மிக சுருங்கும். அரிப்பு காணும். அடிவயிறு கல் போலாகும். மலம் கழிக்கும்போது ரத்தம் பீறிடும்.

    வரண மூலம்:

    மலங்கட்டிக் கொண்டு துண்டாக வரும். அடிக்கடி கோபம் ஏற்படும். நாளடைவில் உடல் பலம் குறையும்.

    ரத்த மூலம்:

    தொப்புளில் வலி ஏற்படும். மலங்கழிக்கும் முன் ரத்தம் பீறிட்டு வெளிவரும். உடலில் வறட்சி ஏற்படும். நாளடைவில் மூட்டுகளில் வலி ஏற்படும். காய்ச்சல் ஏற்படும். மயக்கம் உண்டாகும். கண்களில் நிறமுண்டாகும்.

    சீழ் மூலம்:

    மலவாய் கடுத்து எரிவு ஏற்படும். மலவாய் தளர்ந்து போகும். சிறுநீர் மஞ்சள் நிறமாக வெளிப்படும்.

    ஆழி மூலம்:

    வள்ளி கிழங்கு போல முளை காணும். சீழும் ரத்தமும் ஏற்படும். காரம் உண்ண முடியாது. உடல் பலம் குறையும்.

    தாமர மூலம்:

    ஆசன வாயை சுற்றி புண் ஏற்படும். வயிறு கொள்ளும் பசி இருக்காது. மூச்சுத் திணறல் ஏற்படும்.

    விதமூலம்:

    கோவைப்பழம் போல் முளை தள்ளி இருக்கும். நாளடைவில் கறுப்பாக மாறும். மிருதுவதுவாகும். கடுப்பு அரிப்பு குத்தல் வலி ஏற்படும். மலவாயின் உள்ளும் வெளியும் வலி ஏற்படும்.

    பித்தமூலம்:

    அடிக்கடி தலைவலி ஏற்படும். பருத்திக் கொட்டை போலும் நெல் போலும் முளை உண்டாகும். மாவு உருண்டைப் போல் ரத்தமும், சீழும் கலந்து மலம் வெளியாகும். அடிக்கடி தாகம் ஏற்படும். வியர்க்கும்.வயிறு வலிக்கும்.

    சிலேட்டுமா மூலம்:

    எண்ணை நிறமுளை ஏற்படும். எப்பொழுதும் எரிவு இருக்கும். கருப்பு ஏற்பட்டு நீர் சீழ் இவைகளோடு மலம் வெளிவரும். சிறுநீர் சீழ் இவைகளோடு மலம் வெளிவரும். சிறு நீர் சுடும். விந்து நஷ்டம் ஏற்படும் . உடல் வெளுக்கும் வாய் சுவையற்றுப் போகும்.

     இதற்கு எளிய சித்த வைத்திய முறைகள் உள்ளன. பிரண்டையை உலர்த்தி சூரணித்து அதற்கு நிகராக சர்க்கரை கலந்து சிறிது பசு நெய்யில் குழைத்து 40 நாட்கள் உண்ண தீரும்.

    சதுரக்கள்ளியை நறுக்கி பானையில் போட்டு 4 படி தண்ணீர் விட்டு வேடு கட்டி, அதன்மேல் 1/2 கப் கருங்குறுவை மாவை வைத்து பிட்டவித்து 3 நாட்கள் மூன்று வேளை கொடுக்க மூலம் தீரும்.

    கொட்டைப்பாசி 50 கிராம், கடுக்காய் 50 கிராம் இவைகளை நிழலில் உலர்த்தி வடிகட்டிக் கொள்ளவும். 5 கிராம் மிளகு தூளை மேஜைக் கரண்டி அளவு தேனில் குழைத்து காலை மாலை இரண்டு வேளையாக 5 நாட்கள் உண்டு வர சகல மூல நோய்கள் குணமாகும்.

    நாயுருவி இலை 50 கிராம், கறிவேப்பிலை 50 கிராம், கருணைக் கிழங்கு 150 கிராம், பசுவெண்ணெய் 250 கிராம் இவற்றை லேகியம் போலக் கிண்டி ஒரு வேளைக்கு 10 கிராம் அளவு வீதம் 5 நாட்கள் உண்டு வர நோய் குணமாகும். 1 நாளைக்கு 1 வேளை சாப்பிடவும்.

    காட்டு கருணை, காராக் கருணை, பிரண்டை, கொடி வேலி, அறுகு, புளியமடல், மகுளி ஆகியவற்றை நிழலில் உலர்த்தி இடித்து வடிகட்டி வைத்துக் கொண்டு காலை மாலை இரு வேளைகளிலும் 5 கிராம் தூளை 1 மேஜைக் கரண்டி தேனில் குழைத்து அருந்தலாம்.

    கைக்குத்தல் கருங்குருவை அரிசியை 200 கிராம் அளவு எடுத்து மண் சட்டியில் போட்டு 100 மில்லி லிட்டர் முப்பிரண்டை சாற்றையும் 100 மிலி கடல் நீரையும் விட்டு 3 மணி நேரம் ஊற வைத்து அரிசியை மட்டும் எடுத்து அரைத்து அடை போல தட்டி இரும்பு தோசைக் கல்லில் போட்டு 50 கிராம் பசு நெய் விட்டு வேக வைத்து காலை உணவாக 6 நாட்கள் தொடர்ந்து உண்டு வர வெளி மூலம் குணமாகும்.

    50 கிராம் உரித்த வெள்ளைப் பூண்டை பசும் பாலில் வேக வைத்து 50 கிராம் தேனில் உட்கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் சாப்பிட்ட பின் 1 மணி நேரம் கழித்து மருந்தை ஒரு வாரம் சாப்பிடவும், உரித்த வெள்ளைப்பூண்டை நெய்யில் வதக்கி பின் தேனிட்டு அரைத்து காலை மாலை இருவேளை சாப்பாட்டுக்கு முன் சாப்பிடவும்.

    புளிக்கருணைக் கிழங்கு தோல் நீக்கி 100 கிராம் எடுத்து சில துண்டு துளாக்கிக் கொள்ளவும். ஒரு மண் சட்டியில் கிழங்கைப் போட்டு 5  கிராம் மிளகு தூளைப் போடவும். பின் 200 மி.லி. நெய் விட்டு வறுத்து எடுத்து மரக்கறியுடன் சேர்த்து சாப்பிட குத்துமூலம் குணமாகும்.

    விளாமிச்சை வேரை சிறிது வாழைப் பூவின் சாறு விட்டு அரைத்து வாழைப் பூவின் சற்றில் கலந்து உணவுக்கு முன் அருந்து ரத்தக்கடுப்பு நீங்கும்.

    சித்த மருத்துவர்

    கே.எஸ்.சுப்பையாபாண்டியன்

    9994932121

    • ஆடை என்பது மனித நாகரிகத்தின் வளர்ச்சி நிலையாகும்.
    • நாம் அணியும் ஆடைகள் இழைகளால் ஆனது.

    ஆடை என்பது மனித நாகரிகத்தின் வளர்ச்சி நிலையாகும். நாம் அணியும் ஆடைகள் இழைகளால் ஆனது. இழைகள் என்பது மெல்லிய நூல் போன்ற அமைப்பாகும். இழைகளின் தோற்றம் மற்றும் தன்மையின் அடிப்படையில் ஆடைகள் தயாரிக்க பயன்படும் துணி இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. ஒன்று இயற்கை துணி மற்றொன்று செயற்கை துணி.

    இயற்கை துணி வகைகள்:

    இயற்கையான மூலப்பொருட்களான பருத்தி, சணல், வாழை நார், கற்றாழை நார், பட்டுப்புழு போன்ற பொருட்களில் இருந்து இவ்வகை துணிகள் தயாரிக்கப்படுகிறது.

    பருத்தி:

    இயற்கையான முறையில் கிடைக்கும் இவ்விழைகளில் ஈரப்பதத் தன்மை உள்ளது. எனவே வெயிலில் உடலை குளுமையாக உணரச்செய்யும். மேலும் காட்டன் நூலிழைகளில் காற்று புகும் தன்மை உள்ளது. எனவே எவ்வளவு வெயிலாக இருந்தாலும் காற்றோட்டமாக இருக்கும். வியர்வையை நன்றாக உறிஞ்சும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து நம்மை பருத்தி ஆடை பாதுகாக்கும்.

    ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே தோல் நோய் உள்ளவர்கள் பருத்தி ஆடை அணிவது நன்று. சித்த மருத்துவ நூல்கள் பருத்திக்கு உள்ளழலாற்றி செய்கை இருப்பதாக கூறுகிறது. எனவே இதை அணியும்போது உடல் வெப்பம் தணியும்.

    சணல்:

    சணல் இழைகளினால் உருவாக்கப்படும் ஆடைகள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். கோடை காலங்களில் அணிவதற்கு இது ஏற்ற துணியாகும். ஏனெனில் செயற்கை துணியை போன்று வியர்வையை ஏற்படுத்தாது. வியர்வையை உறிஞ்சும் தன்மையும் இதற்கு அதிகம். மேலும் புற ஊதா கதிர்களை உறிஞ்சாது. இதிலுள்ள பைட்டோகெமிக்கல்ஸ் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடும் தன்மை பெற்றுள்ளது.

    வாழை நார்:

    மற்ற இயற்கை துணி வகைகளை போலவே இது ஈரப்பதத்தை நன்றாக உறிஞ்சும் தன்மை கொண்டுள்ளது. நுண்ணுயிர்களை எதிர்த்து போராடுவதோடு, சூரியனின் தீங்கான கதிர்களில் இருந்தும் நம்மை பாதுகாத்து உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. தோல் நோய்கள் உள்ளவர்களும், இதை பயன்படுத்தலாம்.

    வாழை நாரினால் ஆன ஆடைகளை தொடர்ந்து உடுத்தி வரும்போது மகப்பேற்றிற்கு பிறகு பெண்களுக்கு வயிற்றில் ஏற்படும் அறுவை சிகிச்சை தழும்புகள் விரைவில் மறையும்.

    கற்றாழை நார்:

    கற்றாழையில் 96 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. எனவே இவற்றின் நாரை கொண்டு உருவாக்கப்படும் ஆடைகள் சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து, சரும செல்கள் புத்துயிர் பெற உதவுகிறது. ஆண்டிபேக்சரியல், ஆன்டிவைரஸ், ஆன்டிப்ருரிடிக் போன்ற பண்புகள் உள்ளதால் நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. குழந்தைகளின் ஆடைகளை தயாரிக்க இந்த வகை நார்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    மூங்கில் நார்:

    மூங்கிலின் இலை மற்றும் தண்டு பகுதியில் இருந்து நார்கள் பிரிக்கப்பட்டு ஆடைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. இதில் நுண்ணிய இடைவெளிகள் நிறைய உள்ளதால் வியர்வையை நன்கு உறிஞ்சி காற்றோட்டத்துடன் இருக்க செய்யும். பருத்தியை விட மென்மையான இதன் இழைகள் ஆடைகள், துண்டுகள், முக மூடிகள், சானிட்டரி நாப்கின்கள் போன்றவை தயாரிக்க பயன்படுகிறது.

    மூங்கில் இழைகளில் ஆன்டிபங்கள், ஆன்டிபேக்ட்ரியல், பேக்டீரியாஸ்டிக் போன்ற பண்புகள் உள்ளதால் பாக்டீரியா, பூஞ்சைகள் போன்றவற்றால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைவு. மேலும் இவ்வகை ஆடை உடல் துர்நாற்றத்தையும் கட்டுப்படுத்துகிறது.

    தாமரை நார்:

    தாமரை நார்களை கொண்டு தயாரிக்கப்படும் ஆடைகளை அணியும்பொழுது மன அமைதியும் நல்ல ஆரோக்கியமும் கிடைப்பதாக நம்பப்படுகிறது. இதை தொடர்ந்து அணியும்போது தலைவலி, இருதய கோளாறுகள், நுரையீரல் பிரச்சினை குணமாவதாக கூறப்படுகிறது.

    மேலும் மற்ற இயற்கை துணி வகைகளை போன்று இதுவும் ஈரத்தை நன்றாக உறிஞ்சும். காற்றோட்டத்துடன் இருக்க செய்யும். அணிவதற்கு மிருதுவாகவும், சவுகரி யமாகவும் இருக்கும். தாமரை இழைகளினால் ஆன ஆடைகளில் கறை படியும் வாய்ப்பு மிகவும் குறைவு.

    பட்டு:

    பட்டு ஆடைகள் உடலுக்கு பலவித நன்மைகளை கொடுக்கும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை பட்டாடை தடுக்கும். தோலில் உள்ள ஈரபதத்தை தக்க வைக்கும். இதில் உள்ள ஆல்புமென் என்ற வேதிப்பொருள் சருமத்தின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது.

    இதனால் இறந்த சரும செல்கள் நீங்கி புதிய செல்கள் நிறைய உற்பத்தியாகிறது. இதனால் சருமம் பொலிவு பெறுகிறது. இதனையே சித்த மருத்துவ நூல்களில் உடலுக்கு ஒளியை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

    பட்டில் இயற்கையாக உள்ள ஒருவகை புரதம் (ஹைபோ அலர்ஜெனிக்) ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. எனவே இது கரப்பான் (எஜிமா), ஆஸ்துமா போன்ற நோயுள்ளவர்களுக்கு ஏற்ற உடையாகிறது.

    பட்டுத்துணியில் ஆன்டிபங்கள் பண்புள்ளதால் பூஞ்சைகளினால் ஏற்படும் நோய்தொற்றை சரி செய்ய உதவுகிறது. மேலும் சுத்தமான பட்டாடை அணியும் போது வெயில் காலத்தில் குளிர்ச்சியும், குளிர் காலத்தில் வெப்பமும் கிடைக்கும். பட்டாடைகளை தொடர்ந்து அணிந்து வரும் போது நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்தி நல்ல உறக்கத்தை கொடுக்கிறது.

    சித்த மருத்துவ நூல்கள் பட்டாடை அணியும் போது மனம் தெளிவு பெறும் என்றும், கபம் நீங்கும் என்றும் கூறுகிறது. வெண் பட்டினால் ஆன ஆடையை அணியும் போது குளிர் மற்றும் காய்ச்சல் குணமாகும், வாத நோய்கள் நீங்கும்.

    கம்பளி:

    கம்பளி துணிகள் குளிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்சுலேட்டர் போன்று செயல்பட்டு உடலுக்கு வெப்பத்தை கொடுக்கும். கம்பளி ஆடையினை அணியும் போது நீரேற்றம், தலைவலி, வாத நோய்கள் நீங்கும் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.

     செயற்கை துணி வகைகள்:

    செயற்கை துணிகள் என்பது வேதியியல் செயல்முறைகள் மூலம் உருவாகும் துணியாகும். ரேயான், நைலான், வெல்வெட், பாலியெஸ்டர் போன்றவை செயற்கை துணி வகைகளாகும்.

    ரேயான்:

    ரேயான் துணிகளை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது இதிலுள்ள வேதிப்பொருட்கள் தோலின் மூலம் கிரகிக்கப்பட்டு நோய் நிலையை ஏற்படுத்தும். ரேயான் துணி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சல்பியூரிக் மற்றும்நிட்ரிக் ஆசிட் தோலில் அரிப்பு ஏற்படுத்தும். குமட்டல், வாந்தி, நெஞ்சு வலி மற்றும் தூக்கமின்மை போன்ற குறிகுணங்களும் ஏற்படும்.

    பாலியஸ்டர்:

    பாலியஸ்டர் துணியில் இருந்து வெளிவரும் பைடோஸ்ட்ரோஜன் உடலில் ஹார்மோன் கோளாறுகளை ஏற்படுத்தும். இதனால் குழந்தையின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை அணியும் போது ஏற்படும் அதிக உடல்சூடு மற்றும் வியர்வையால் தோலில் அரிப்பு மற்றும் படைகள் ஏற்படும். வெகு நாட்கள் இவ்வகை ஆடைகளை அணியும் போது சுவாச பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    நைலான்:

    நைலான் ஆடை அணியும்போது உடல் வெப்பம் வெளியேறாது. உடல் வெப்பத்தால் ஆடையில் இருந்து வெளியேறும் பார்மல்டெக்ஸ் தோலில் அரிப்பு, கண்ணில் நீர்வடிதல் போன்ற குறிகுணங்களை ஏற்படுத்தும்.

    நைலான் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பாரியம் சல்பேட் மற்றும் டைட்டானியம் ஆக்சைடு தோலை கருமை நிறமடையச் செய்யும். மேலும் இது நரம்பு மண்டலத்தை தாக்கி தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும்.

    ஜீன்ஸ்:

    ஜீன்ஸ் உடை ஆரம்பத்தில் குளிர்பிரதேசங்களில் மட்டுமே இருந்துள்ளது. ஆனால் தற்போது அனைத்து இடங்களிலும் பெரும்பான்மையினரால் அணியப்படுகிறது. ஜீன்ஸ் பேண்ட் இறுக்கமாக அணிவதால் காற்று உள்புகாமல் உடம்பு சூடாகும். இதனால் ஆண்களுக்கு விந்து உற்பத்தி குறைவதற்கு வாய்ப்புள்ளது. பெண்களுக்கும் கருப்பை கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    நம் உடலில் இருந்து அதிக அளவில் வியர்வை வெளியாகும். எனவே நாம் உடுத்தும் உடை வியர்வையை உறிஞ்சக்கூடிய தன்மை உடையதாக இருக்க வேண்டும். ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை அணியும்போது சுரக்கின்ற வியர்வை வெளியேறாமல் அதிலிருந்து நுண்கிருமிகள் உற்பத்தியாகி படர்தாமரை போன்ற சரும பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    அதுமட்டுமல்லாமல் ஜீன்ஸ் அணிவதால் சிறுநீர்பாதை தொற்று, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

    மேலும் இது அடிவயிற்றில் இருந்து தொடைப்பகுதி வழியாக செல்லும் மெல்லிய நரம்புகளை அழுத்துவதால் கடுமையான கால் வலி ஏற்படும் வாய்ப்புள்ளது.

    இயற்கை மருத்துவர்

    நந்தினி

    9500676684

    • தொள்ளாயிரத்து எண்பதுகளுக்குப் பின்னர் தொடங்கின.
    • பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்த தொழில் நுட்பம் ஒரு பெரிய வரப்பிரசாதம்.

    "எனக்கு ஒரு கார் வேணுங்க!"

    "சரி, குறிச்சிக்கிட்டேன், சொல்லுங்க எப்படியாப்பட்ட கார்?"

    " நீலக்கலர், 1.8 cc என்ஜின், நாலு கதவு, ரேடியல் டயர், பவர் ஸ்டீயரிங்….."

    "ஓ சரி சரி! பெட்ரோலா இல்ல டீசலா?"

    "பெட்ரோலா? எந்த உலகத்துல இருக்கீங்க! எலக்ட்ரிக் காருதாங்க!"

    "ஓ சரிங்க!"

    "எப்பங்க டெலிவரி ஆகும்?"

    "நாளைக்காலையில பத்து மணிக்கு போன் பண்ணிட்டு டெலிவரி பண்ணிடலாங்க!"

    " சரி, நா அப்பவே செக் குடுத்தனுபிடறேங்க!"

    "ரொம்ப தாங்க்ஸ்!"

    மேலே சொன்னது உண்மையாகிக்கொண்டிருக்கிறது!

    3டி பிரிண்டிங் தொழில் நுட்பம் என்னும் சமாச்சாரம் உற்பத்தி என்னும் சப்ஜெக்டையே புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் சிக்காகோவில் நடந்த சர்வதேச உற்பத்தித்தொழில்நுட்ப மாநாட்டில் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள ஒரு கம்பெனி 44 மணி நேரத்தில் அந்த மாநாட்டிலேயே நிஜ கார் ஒன்றை 3டி தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி தயாரித்துக் காண்பித்திருக்கிறது.

    அதை அசெம்பிள் பண்ண 2 நாட்கள்தான் பிடித்ததாம்! Acrylonitrile Butadiene Styrene (A.B.S.) என்னும் சிக்கலான ஒரு பொருளையும் வலுப்படுத்திய கார்பனையும் கொண்டு தயாரிக்கப்பட்டதாம் இந்தக்கார்.

    ஒரு சாதாரண காரில் 20,000 உதிரி பாகங்கள் இருக்குமாம். ஆனால் இந்த ஜீபூம்பா காரில் நாற்பதே உதிரி பாகங்கள் தானாம்!

    "பொருள் அறிவியலும் தொழில்நுட்பமும் பல படிகள் முன்னேறிவிட்டபடியால் எவ்வித நுட்பமான பொருளையும் பிளாஸ்டிக், உலோகம் அல்லது கலப்புப்பொருட்களால் இந்த 3டி நுட்பத்தைப்பயன் படுத்தி தயாரித்து விடமுடியும்" என்கிறார் வாகன ஆராய்ச்சி மையத்தின் இன் தலைவர் ஜே பாரன்.

    தொள்ளாயிரத்து எண்பதுகளுக்குப்பின்னர் தொடங்கின இந்த 3டி பிரிண்டிங் என்பது இப்போது பன்மடங்குப்பெருகி ஏரோப்ளேன் உதிரி பாகங்கள் தயாரிக்கப்படும் அளவுக்கு முன்னேறிக்கொண்டிருக்கிறது.

    கூட்டு உற்பத்தியின் ஆரம்பமான இந்த 3டி பிரிண்டிங் நுட்பம் முதல் முதலில் இணைக் கப்பட்ட படிம மாடலிங் என்ற சிக்கலான பெயர் கொண்ட நுட்பத்தைப்பயன்படுத்தியதாம். இன்றளவும் இதே நுட்பம்தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறதாம்.


    ஸ்ட்ராடி என்றுபெயர் கொண்ட மேலே சொன்ன சிக்காகோ கார் லோகல் மோட்டார்ஸ் கம்பெனியால் 2014இல் தயாரிக்கப்பட்டது.

    அதே வருடத்தில் உர்பீ என்னும் 3டி பிரிண்ட் உதிரிகள் கொண்ட காரை ஸ்வீடன் தேசத்து Koenigsegg என்னும் கம்பெனி தயாரித்தது.

    2015-ல் ஏர்பஸ் கம்பெனி தங்களுடைய ஏ 350 பிளேனில் கிட்டதட்ட 1000 உதிரி பாகங்கள் 3டி பிரிண்டிங்கில் உருவாக்கப்பட்டதாகச்சொல்லிற்று.

    2015-ல் ராயல் ஏர்போர்ஸ் யுரோனபட்டர் டைபூன் என்னும் போர் விமானம் 3டி பிரிண்டிங்கில் தயாரித்த உதிரிகளுடன் பறந்தது.

    இப்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் 3டி பிரிண்டிங்கில் போர் விமான உதிரிகள் தயாரிக்கும் வழக்கத்தை தொடங்கிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இன்றும் உலோகப்பொருள் கொண்ட தயாரிப்பில் கேஸ்டிங், பே்பரிகேஷன், ஸ்டாம்பிங், மேஷினிங் போன்ற தயாரிப்பு முறைகளே அதிகமிருந்தாலும் கூடிய சீக்கிரம் இவை குறைந்து 3டி பிரிண்டிங் தயாரிப்பு மேலோங்கும் என்பது விற்பனர்களின் கணிப்பு.

    இன்று இந்த 3டி பிரிண்டிங் இயல் மிக அதிகமாகப்பயன்படுத்தப்படுவது தொல் பொருள் ஆராய்ச்சி மற்றும் மியூசியம்களின் பராமரிப்பில் என்றே சொல்லலாம். புராதன சிற்பங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் உடைந்திருக்குமானால் இந்த 3டி பிரிண்டிங்கினால் சரியான அளவுக்கேற்ப அந்த உடைசல்களைச்செய்து ஒட்ட வைத்து தொல் பொருட்களின் பழமை அழியாதவாறு காப்பதோடு அவற்றை இன்னும் சுலபமாகப்பராமரிக்க முடியும்.

    நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்,இந்த 3டி பிரிண்டிங் நுட்பத்தால் துப்பாக்கிகளும் தயாரிக்க முடியும்!

    பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்த தொழில் நுட்பம் ஒரு பெரிய வரப்பிரசாதம். ஆகவே அமெரிக்கா முதற்கொண்டு இந்த 3டி பிரிண்டிங் தொழில் நுட்பத்தை முறையாக க்கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்கள். இண்டர்நெட் மூலமாக பல துப்பாக்கி தயாரிக்கும் பிளான்கள் நடமாடி வருவதைக்கண்டு அமெரிக்கா அவற்றைத்தடுத்திருக்கிறது.

    3டி பிரிண்டிங் தொழில் நுட்பத்தையே கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று ஒரு சாரார் வாதடி வர, மற்றொரு சாரார், அது தனிப்பட்ட உரிமையைப்பறிப்பதாய் முடியும் என்பதோடு இந்த அபார 3டி பிரிண்டிங் தொழில் நுட்பத்தையே முடக்கிப்போட்டுவிடும் என்கிறார்கள். அதற்கு பதிலாக துப்பாக்கிக்குண்டுகளைக்கட்டுபடுத்துங்கள் என்று கேலி பேசுகிறார்கள்!

    இந்த 3டி பிரிண்டிங் மருத்துவ உலகிலும் புரட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது. முக்கியமாக செயற்கை உடலுறுப்புக்கள் தயாரிப்பில் 3டி பிரிண்டிங் நுட்பம் மிக அதிகமாக பயன்பட ஆரம்பித்துவிட்டதைக்காண்கிறோம். உறுப்புகள் மட்டுமின்றி பேஷண்ட்டின் உடல் கூறுக்கேற்ப ஆபரேஷன் செய்யத்தேவையான உபகரணங்களையும் தயாரித்து அந்த பேஷண்ட்டுக்கே உரித்தான தனிப்பட்ட கூறுகளின் அளவுக்கேற்ப மிகத்துல்லியமாக ஆபரேஷன் செய்ய முடிவதை இந்த 3டி பிரிண்டிங் நுட்பம் சாத்தியமாக்கி இருக்கிறது.

    "டாக்டர்! வலிக்கிறதுரொம்ப!"

    "எது இந்த ஸ்கால்பெல் படும்போதா?"

    "ஆமாம் டாக்டர்!"

    "சரி ரெண்டு நிமிஷம் பொறுங்கள்! சிஸ்டர்! 4.3 ஸ்கால்பெல் ஒண்ணு 3டி பிரிண்ட் பண்ணிண்டு வாங்க!"

    ஆம்! ரெண்டே நிமிஷத்தில் பேஷண்ட்டுக்குத்தோதான கருவிகள் தயாரித்து ஆபரேஷனைத்தொடர முடியுமாம்!

    "ஏம்மா! ஒவ்வொரு நாளும் நீ மாஞ்சு மாஞ்சு மசாலா அரைக்கிறியே நா வேணா இந்த தீபாவளிக்கு கிரைண்டிங் மெஷீன் வாங்கித்தரட்டுமா?"

    "ஒண்ணும் வேணாம்! நீங்க பேசாம 3டி பிரிண்டிங் மெஷீன் ஒண்ணு வாங்கியாங்க! கிரைண்டரோ மிக்ஸியோ நானே தயாரிச்சுக்கறேன்!"

    நடக்கப்போகிறது!

    உங்களூக்கு ஒன்று தெரியுமா? எனது நண்பர் பிரசன்னா 3டி பிரிண்டிங்கில் செய்த அயோத்தி ராமர் கோவிலை தான் படத்தில் பார்க்கிறீர்கள்.

    • ஒரு வீட்டின் தெற்கு பகுதியில் அதிக காலியிடம் அல்லது பள்ளம் இருந்தால் அது அந்த வீட்டில் உள்ள பெண்களுக்கு ஆகாது.
    • கடையில் வியாபாரம் குறைந்து லாபம் இல்லாவிட்டால் வாஸ்து காரணம் என்று வியாபாரிகளையே ஜோதிடர்கள் நினைக்க வைத்து விடுகிறார்கள்.

    வீடு கட்டுவது என்பது எல்லோராலும் இயலாது. வீடு கட்டும் அனைவரும் வாஸ்து பார்ப்பது இல்லை. ஆனால் வாஸ்து பார்க்க வேண்டியது அவசியம்தான். ஏனெனில் ஒரு வீட்டுக்கு உயிரோட்டமாக இருப்பது வாஸ்துவின் அம்சங்கள்தான்.

    வாஸ்து என்பது நெருப்பு, நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் சரிசமமான சேர்க்கையை குறிப்பதாகும். இந்த ஐந்தும் சரியான விகிதத்தில் இருந்தால் அந்த வீட்டில் வாஸ்துவும் சரியாக இருக்கும். பஞ்ச பூதங்களில் ஏதாவது ஒன்று அதிகமாகி ஏதாவது ஒன்று குறைந்தாலோ அல்லது இல்லாமல் போனாலோ அதுதான் வாஸ்து குறைபாடுகளாக பிரதி பலிக்கும்.

    இதில் அறிவியல் ரீதியான தொடர்பும் இருக்கிறது. அதாவது ஒரு வீடு கட்டும்போது அந்த இடத்தில் மின்காந்த அலைகளின் ஓட்டம் சீராக இருக்க வேண்டும். அந்த ஓட்டம் சரியாக இருந்தால் நல்ல அதிர்வலைகளை வீடு கட்டும் போதே உணர முடியும். கட்டுமானப் பணிகள் நடக்கும் போதே உள்ளே செல்லும்போது மன நிலைகள் அதற்கேற்ப அமையும். இப்படி இருந்தால் வாஸ்து குறைபாடு இல்லை என்று அர்த்தம்.

    புதிதாக வீடு கட்டும் இடத்தில் மின் காந்த அலைகளின் ஓட்டத்தை நாமே கூட உருவாக்க முடியும். வீடு கட்டும் இடத்தில் வடகிழக்கு மூலை தாழ்ந்தும், தென்மேற்கு மூலை மேடாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் வாஸ்துவுக்கான மின் காந்த ஓட்டம் சீராக அமையும். இதையும் மீறி வாஸ்து குறை பாடு இருப்பதாக இருந்தால் அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம்.



    இத்தகைய குறைகள் வராமல் இருக்க வேண்டுமானால் வாஸ்து பகவான் கண்விழிக்கும் நாளில் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும். பொதுவாக ஒரு ஆண்டில் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி ஆகிய 8 மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்ய லாம். இந்த 8 நாட்களிலும் வாஸ்து பகவான் 1½ மணி நேரம்தான் கண்விழித்து இருப்பார். அந்த நேரத்துக்குள் பூமி பூஜை செய்து விட வேண்டும்.

    வாஸ்து பூஜை செய்வதற்கு திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 4 கிழமைகளும் மிக மிக சிறப்பானவை. வாஸ்து பூஜை நாட்களில் ரிஷபம், மிதுனம், விருச்சிகம் மற்றும் கும்பம் லக்னம் அமைந்தால் மேலும் சிறப்பானதாக கருதப்படும். அதுபோல ஒவ்வொரு திசைக்கும் ஒரு பலன் உண்டு. அவற்றையும் கருத்தில் கொண்டுதான் பூமி பூஜைகளை செய்ய வேண்டும்.

    மேலும் வீடு கட்டும்போது அறைகளின் அமைப்பு, அவற்றின் அளவு, உயரம் ஆகியவையும் வாஸ்துவை நிர்ணயிக்கும். வீட்டை சுற்றி இருக்கும் காலி இடங்கள் கூட வாஸ்து பலன்களில் பார்க்கப்படும். அதாவது ஒரு வீட்டின் தெற்கு பகுதியில் அதிக காலியிடம் அல்லது பள்ளம் இருந்தால் அது அந்த வீட்டில் உள்ள பெண்களுக்கு ஆகாது. மேற்கு பகுதியில் காலி இடம் அமைந்தால் அது ஆண்களுக்கு உகந்த தாக இருக்காது.

    இப்படி வாஸ்து குறைபாடுகளுக்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. சமீப காலமாக இதில் பல புதிய தகவல்களை இணைத்து புதிதாக வீடு கட்டுபவர்களை ஜோதிடர்கள் கடுமையாக குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள். வீடு கட்டும் ஒருவர் யாராவது ஒரு ஜோதிடரிடம் வாஸ்து தொடர்பாக கருத்துக்கள் கேட்டுவிட்டால் நிம்மதி இல்லாத நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலைதான் தற்போது காணப்படுகிறது.

    எனவே வீடு கட்டும்போது தொட்டதற்கு எல்லாம் வாஸ்து பார்க்கக் கூடாது. பார்த்தால் குழப்பம்தான் மிஞ்சும். பல வீடுகள் ஜோதிடர்களின் வாஸ்து கணிப்புகளால் மீண்டும் மீண்டும் இடித்து கட்டப்படும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறது. எனவே வாஸ்துகளை குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு பார்ப்பது நல்லது.

    வசித்து கொண்டிருக்கும் வீட்டில் வாஸ்து பார்க்கும் நடைமுறை சமீப காலமாக அதிகமாகி இருக்கிறது. ஏதாவது குடும்ப பிரச்சினை, கடன் பிரச்சினை, வியாபார பிரச்சினை, திருமண தாமதம், கணவன்-மனைவி தகராறு என்று வந்து விட்டால் உடனே ஜோதிடர்கள் வாஸ்து குறைபாடுதான் காரணமாக இருக்கும் என்று கண்மூடிக் கொண்டு சொல்லி விடுகிறார்கள்.

    கடையில் வியாபாரம் குறைந்து லாபம் இல்லாவிட்டால் வாஸ்து காரணம் என்று வியாபாரிகளையே ஜோதிடர்கள் நினைக்க வைத்து விடுகிறார்கள். இவ்வளவு நாள் நன்றாக நடந்த கடை இப்போது ஏன் நிலைதடுமாறுகிறது என்பதை வியாபாரிகள் நன்கு அலசி ஆராய்ந்து பார்த்தாலே குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். அதற்கும் வாஸ்துக்கும் நிச்சயம் எந்த தொடர்பும் இல்லை.

    சில வீடுகளில் வாஸ்து குறைபாடு காரணமாக நீண்ட நாள் ஏதாவது ஒரு பிரச்சினை தொடர்கதை போல இருந்து கொண்டே இருக்கும். அத்தகைய வீடுகளில் பரிகாரங்கள் செய்வது நல்லது. குறிப்பிட்ட பரிகாரங்களை செய்தாலே வாஸ்துகள் சரியாகி விடும். வாஸ்துவை சரி செய்வதற்காக பல்லாயிரக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய அவசியமே கிடையாது.

    சில ஜோதிடர்கள் தங்களது சுய லாபத்துக்காக ஒன்று வீட்டை இடிக்க வைப்பார்கள் அல்லது நிறைய பூஜை செய்ய சொல்வார்கள். இவை யெல்லாம் கண்டிப்பாக அவசியமே இல்லை. மிக மிக சாதாரண எளிய பூஜைகள் மூலம் வாஸ்து குறைபாடுகளை சரி செய்து விட முடியும். வாஸ்துதான் பிரச்சினையாக இருக்கும் என்று நினைப்பவர்கள் தினமும் வீட்டு வாசலில் நிலைப்படிக்கு அருகே தீபம் ஏற்றி வந்தாலே போதும். குடும்பத்தில் மாற்றங்கள் நிகழ்வதை பார்க்க முடியும்.

    பொதுவாக வீடுகளில் காலை-மாலை இருவேளையும் விளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது. வாஸ்து பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வாஸ்து தீபம் ஒன்று இருக்கிறது. அதை தெரிந்து கொண்டு ஏற்றினால் கைமேல் பலன் கிடைக்கும். வாஸ்து தீபங்களை எப்போதும் வீட்டின் வாசலில் வலது பக்கத்தில் ஏற்றுவது நல்லது. முடிந்தால் காலை-மாலை இருவேளையும் ஏற்றலாம்.

    வாஸ்து தீபம் ஏற்றும்போது, "ஓம் வாஸ்து தேவதாய நமக.... ஓம் வாஸ்து புருஷாய நமக..." என்ற வாஸ்து மந்திரத்தை 3 தடவை சொல்ல வேண்டும். இது மிக மிக எளிதான உடனடியாக வாஸ்து குறைபாட்டை விரட்டும் பரிகாரம் ஆகும். அது மட்டுமின்றி வீட்டில் செல்வத்தையும், மகிழ்ச்சியையும் அதிகரிக்க செய்யும் ஆற்றல் இந்த தீபத்துக்கு உண்டு.

    வாஸ்து தீப பூஜைகளை செய்ய இயலாதவர்கள் வீட்டு வாசலில் உட்புறத்தில் கோலம் போட்டு அதில் அகல் தீபம் ஏற்றலாம். அந்த அகல் தீபம் வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி இருக்கும் வகையில் அமைப்பது நல்லது.

    சிலருக்கு தோஷங்கள் காரணமாக வாஸ்து பிரச்சினை ஏற்படலாம். அத்தகைய நிலை இருப்பது தெரிய வந்தால் வீட்டின் 4 மூலைகளிலும் தலா ஒரு விளக்கு ஏற்றி பைரவர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். 3 மாதங்கள் இந்த வழிபாட்டை செய்தால் பிரச்சினைகள் தீரும். இந்த தீபம் ஏற்றும்போது பைரவர் கவசம் அல்லது பைரவருக்கு உரிய போற்றிகளை சொல்லிக் கொண்டே தீபம் ஏற்றி வழிபடுவது கூடுதல் பலன்களை தரும்.

    பூமிகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் பகவானை நினைத்து வாஸ்து நாட்களில் 5 திரி போட்டு 5 அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டால் வாஸ்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். இந்த 5 அகல் விளக்கு பூஜை என்பது வாஸ்து பகவானை திருப்தி செய்யும் வழிபாடு ஆகும். வீட்டில் தன்வந்திரி படம் வைத்து பூஜைகள் செய்வதும் நல்ல வாஸ்து பரிகாரம் ஆகும்.

    சிலருக்கு ேஹாமங்கள் வளர்த்து பூஜை செய்தால் வாஸ்து பிரச்சினைகளை சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை இருப்பது உண்டு. அப்படிப்பட்டவர்கள் நவ கலசங்கள், நவ தானியங்கள், நவ சமித்துகள், நவ மூலிகைகள் ஆகியவற்றை பயன்படுத்தி ஹோமம் செய்வது நல்லது. இந்த ஹோமம் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை விரட்டி வெற்றிகளை தேடி தரும் ஆற்றல் கொண்டது.

    அடிக்கடி ஹோமம் செய்ய இயலாது என்று நினைத்தால் ஆண்டுக்கு ஒரு தடவை வீட்டில் கணபதி ஹோமம் நடத்துங்கள் போதும். வெள்ளிக்கிழமைகளில் ஆலயத்துக்கு துர்க்கைக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கு ஏற்றுங்கள். சரியாகி விடும்.

    இத்தகைய பூஜைகள் எதையும் செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களா? கவலையே வேண்டாம். வீட்டில் குல தெய்வத்திற்கு பூஜைகள் செய்யும் போது ஊதுபத்தி காட்டி மனமுருக வேண்டிக் கொள்ளுங்கள் போதும். வாஸ்து பிரச்சினைகளை குல தெய்வம் பார்த்துக் கொள்ளும். முடிந்தால் செவ்வாய், வெள்ளிக்கிழ மைகளில் வீட்டில் சாம்பிராணி புகை போட்டு கந்தசஷ்டி கவசத்தை ஒலிக்க செய்யுங்கள். நல்ல அதிர்வுகள் உண்டாகும்.


    தினமும் அதிகாலையில் விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், பிரணவ மந்திரம், கந்தசஷ்டி கவசம், சிவ புராணம் மற்றும் காயத்ரி மந்திரம் போன்றவற்றை ஒலிக்க செய்தால் நல்ல அதிர்வுகள் ஏற்பட்டு வீட்டில் எந்த குறைபாடுகள் இருந்தாலும் விரட்டி அடிக்க செய்து விடும்.

    சில பெண்களுக்கு காலையில் சமையல் செய்வதற்கு முன்பு பூஜை அறைக்கு சென்று தீபம் ஏற்றுவது வழக்கத்தில் இருக்கும். அதே போன்று மாலை நேரத்தில் வீட்டில் தண்ணீர் தொட்டிக்கு அருகே விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் அதுவும் புதுமையான பலன்களை தரும். அதாவது இந்த தீப வழிபாடு வீட்டில் யாருக்கு எந்த தோஷம் இருந்தாலும் நிவர்த்தி செய்து விடும்.

    வைணவத்தில் அதிக ஈடுபாடு இருப்பவர்கள் பெருமாளின் அணுகிரகம் பெற சங்கு பயன் படுத்துவார்கள். அத்தகைய சங்கை வீட்டின் நிலைவாசலுக்கு அடுத்து வெளியே புதைத்து வைத்தால் வாஸ்து தோஷங்கள் விலகும். வாஸ்துவை வாசலின் முன்பு புதைக்கும்போது சங்கின் நுனி பகுதி கிழக்கு அல்லது வடக்கு நோக்கி பார்த்தவாறு இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புக ளில் இருப்பவர்கள் பூஜை அறையில் சங்கு வைத்து வழிபட்டால் இறைவன் அருளை பெற முடியும். அது தோஷங்களை விலக்குவதோடு புது தோஷங்கள் நம் அருகில் வராமலும் பார்த்துக் கொள்ளும்.

    எனவே வீட்டில் வாஸ்து குறைபாடு வராமல் இருக்க புது வீடு கட்டும் போதே கவனமாக இருங்கள். இல்லையெனில் எளிய பரிகாரங்கள் செய்யுங்கள். போதுமானது.

    • நேரம் கிடைக்கும் போது வந்தால் போதும் என்று ‘அட்ஜஸ்ட்’ செய்து கொண்டார்கள்.
    • பொதுவாக கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடித்த படங்கள் என்றாலே பாடல்கள் சூப்பர் ஹிட்டாக இருக்கும்.

    குறும்புத்தனம்...

    என்னுடன் பிறந்தது என்று தான் சொல்ல வேண்டும். கதாநாயகி ஆன பிறகும் என்னிடம் குறும்புத் தனம் இருக்கத்தான் செய்தது.

    கன்னடத்தில் எனது முதல் படம் 'புட்ட நஞ்சா' ஹீரோ ரவிச்சந்திரன். கன்னடத்தில் அவர் பெரிய ஸ்டார்.

    எனவே அழைப்பு வந்ததும் ஒப்புக் கொள்ள ஆசை தான். ஆனால் தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் மிகவும் பிசியாக இருந்ததால் கால்ஷுட் கொடுப்பத்தில் சிக்கல் இருந்தது.

    ஆனாலும் அவர்கள் விடவில்லை. நேரம் கிடைக்கும் போது வந்தால் போதும் என்று 'அட்ஜஸ்ட்' செய்து கொண்டார்கள். எனவே நானும் ஒத்துக்கொண்டேன்.

    அந்த காலத்தில் சிவாஜி சாரும், ஜெயலலிதாம்மாவும் நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' படத்தின் தழுவல்தான் அந்த படம்.

    ஹீரோவாக வரும் ரவிச்சந்திரன் கிராமத்து இளைஞன். நான் பட்டணத்தில் வளர்ந்த பெண். காதல், மோதல் என்று காட்சிகள் விறு விறுப்பாக இருந்தது.

    பொதுவாக கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடித்த படங்கள் என்றாலே பாடல்கள் சூப்பர் ஹிட்டாக இருக்கும். ஹீரோயின்களை கிளாமராக காட்டுவார். முக்கியத்துவமும் இருக்கும்.

    அதைப்போலவே இந்த படமும் ஹிட்டாச்சு. பாடல்களும் சூப்பர் ஹிட்டாச்சு. கன்னடத்தில் முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் கன்னட பட உலகிலும் புகழ் பெற தொடங்கினேன்.

    முதல் நாள் பட பூஜை பெங்களூரில் நடந்தது. பூஜை முடிந்ததும் ஷுட்டிங்கையும் தொடங்கிவிட்டார்கள். பெங்களூர் எனக்கு பிடித்தமான நகரம். பகலில் வெயில் அடிக்கும். ஆனாலும் ஜில்லென்று இருக்கும். நகரை சுற்றி வந்தாலும் தூசு நம்மை சுற்றாது. அப்படி ஒரு அழகான ஊர் பெங்களூர்.

    அங்கு என்னென்ன பொருட்கள் எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஆனால் சாம்பார் வடை சூப்பர் டேஸ்டாக இருக்கும்.

    அது எப்படி கண்டு பிடித்தீர்கள் என்கிறீர்களா?

    அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சார் சிங்கப்பூரில் எந்தெந்த கடைகளில் என்ன உணவுகள் பிரபலம் என்று சொல்லி தந்ததை ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கிறேன்.

    அதேபோல் பெங்களூரில் எந்த கடையில் என்ன பிரபலம் என்று ரவிச்சந்திரன் தான் சொல்லி கொடுத்தார். அப்போது தான் சாம்பார் வடையை ருசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் பிறகு பெங்களூர் சென்றால் சாம்பார் வடையை மிஸ் பண்ணுவதே கிடையாது.


    அதேபோல் எனது நெருங்கிய தோழி நடிகை சவுந்தர்யாவும் பெங்களூரில் தான் இருக்கிறார். அப்போது தான் அவருக்கு திருமணம் நடந்தது. திருமணத்தில் கலந்து கொள்ள முடியாததால் மாலையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றேன். எல்லோரும் ஒன்றாக இரவு விருந்தில் கலந்து கொண்டோம்.

    அப்போது தான் உலகிலேயே மிகப்பெரிய ஷாப்பிங்மால் என்று வர்ணிக்கப்பட்ட மால் ஒன்று பெங்களூரில் திறந்திருந்தார்கள்.

    ஒரு நாள் இரவு 8 மணிக்கு அங்கு சென்றேன். ஏழெட்டு புதிய ஆடைகளையும் வாங்கினேன். சிப்பியில் செய்திருந்த அலங்கார பொருட்கள் பிரமாதமாக இருந்தது. அவைகளையும் வாங்கினேன்.

    யாருக்குமே ஷுட்டிங் நடத்த அனுமதிக்காத பங்களா வீடு ஒன்றை எங்களுக்கு தந்திருந்தார்கள். சுற்றிலும் வயல் வெளிகள்.. ஓங்கி வளர்ந்த மரங்கள். கண்ணுக்கு விருந்தளித்த இயற்கை சூழல்.

    அங்கு வைத்து தான் ஷுட்டிங் நடந்தது. நாங்கள் அங்கு தான் தங்கி இருந்தோம். எனக்கு பிறந்தநாள் நடப்பது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அதற்காக நிறைய பலூன்கள் வாங்கி கட்டியிருந்தார்கள். எனக்கு பலூன்களை பார்த்ததும் ஷுட்டிங் முடிந்து விளையாட ஆசை. ஆனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று ஆசையை அடக்கி கொண்டிருந்தேன்.

    ஆனால் ரவிச்சந்திரன் என்னைவிட பெரிய விளையாட்டு பிள்ளை என்பதை தெரிந்து கொண்டேன்.

    ஷுட்டிங் முடிந்த பிறகு வீட்டில் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அவர் என்ன செய்தார் தெரியுமா?

    சில பலூன்களை அவிழ்த்து எடுத்து வருவார். அதற்குள் தண்ணீரை நிரப்பி வைத்து கொள்வார். சுற்றும் முற்றும் பார்ப்பார். யாராவது தூங்கி வழிந்தால் அவரை அழைத்து வர சொல்லி அவர் அருகே வந்ததும் அவர் முகத்துக்கு அருகில் பலூன் மீது குண்டூசியால் குத்தி விடுவார். அது வெடித்து முகத்தில் தண்ணீரை விசுறும்.

    உடனே என்ன... தூக்கம் போச்சா...? என்று கேட்டபடி சிரிப்பார். உடனே நானும் கை கொட்டி சிறுபிள்ளை போல் சிரிப்பேன்.

    அப்புறமென்ன? அவரைப் போலவே நானும் சேட்டை பண்ணுவேன். ஒரே ஜாலியாக இருக்கும். ஷுட்டிங்கில் இருப்பது போலவே இருக்காது. நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவது போல் இருக்கும்.

    அந்த படத்தில் தான் முகமெல்லாம் ஹோலி வண்ணம் பூசினார்கள். அதுவரை அந்த அனுபவம் கிடையாது. உடல் முழுவதும் வண்ண பொடியுடன் தான் ஷுட்டிங் முடிந்து வீட்டுக்கு செல்வேன்.

    குளித்து அந்த சாயத்தை அகற்றுவதே பெரும் பாடாக இருக்கும். தற்காலிக நீச்சல் குளம் ஒன்று தயார் செய்யப்பட்டிருந்தது. பெங்களூர் குளிரில் காலை 6 மணிக்கு அந்த தண்ணீரில் இறங்கி நடிக்க சொன்னால் எப்படி இருக்கும்?

    ஐஸ் கட்டிக்குள் நிற்பது போல் இருக்கும். குளிரில் உடலெல்லாம் நடுங்கும். அதையெல்லாம் தாங்கி கொண்டு நடிப்போம். லைட்மேன், கேமரா மேன் என எல்லோரும் கரையில் நின்றபடி படமாக்கி கொண்டிருப்பார்கள்.

    இன்னும் கொஞ்சம் அப்படி நில்லுங்கள்... இப்படி நில்லுங்கள்.. என்று சொல்லி சொல்லியே படமாக்குவதற்கு நேரமாகும்.

    எங்களுக்கோ... டேய் நீங்களும் உள்ளே இறங்கி பார்த்தால் தெரியும். சீக்கிரம் ஷுட்டிங்கை முடிங்கப்பா.. என்று சொல்ல வேண்டும்போல் இருக்கும்.

    ஷுட்டிங் முடிந்து குளத்தில் இருந்து கரையேறியதும் ரவிச்சந்திரன் வெளியே நிற்கும் படக்குழுவினர் யாரையாவது பிடித்து குளத்தில் தள்ளி விடுவார். அவர்கள் குளிரில் நடுங்குவதை பார்த்து சிரிப்பார்.

    நானும் சிலரை பிடித்து தள்ளி விடுவேன்... அவர்கள்.. மேடம்.. மேடம்... என்றபடி உள்ளே விழுவார்கள். அதை பார்த்ததும் நாங்கள் கைகொட்டி சிரிப்போம்.

    எப்படியெல்லாம் விளையாடி இருக்கிறேன். பாருங்கள். அடுத்த வாரம் மேலும் சில தகவல்களுடன் சந்திக்கிறேன்.

    (தொடரும்...)

    • “யோவ்! ஜொள்ளு விடாத! நான் அமெரிக்கப்புயல் கத்ரினாவைச்சொல்றேன்!”
    • “என்ன வாட்சன்! இவனைப்போய் செலக்ட் பண்ணியிருக்கே! இவனோட முகமே சரி இல்லியே, எப்பப்பாரு கடுகடுன்னு..?”

    "ரெண்டு நாளா தல வலிங்க!"

    "சரி வேறென்ன ..?"

    "சாப்பாடே வேண்டியதில்லீங்க!"

    "ம்..?"

    "எப்பப்பாரு கோவம் வருதுங்க!"

    "வீட்ல சாமானெல்லாம் போட்டு ஒடைக்கணும்னு தோணுதா?"

    " கரெக்டுங்க! இட்சிணி மாதிரி சொல்றீங்க!"

    "ஒண்ணும் பிராப்ளம் இல்ல. நீங்க உங்க தங்கைய ஊருக்கு அனுப்பிட்டு, உங்க புருஷன ஆஃபீஸ் லீவ கான்சல் பண்ணச்சொல்லுங்க! சரியாயிடும்!"

    ஒரு டாக்டர் இப்படி சொன்னா அவர் மேல கம்ப்ளெயிளைண்ட் பண்ணத்தோணுமா இல்லியா?

    ஆனால் இப்படிச்சொல்வது ஒரு கம்ப்யுட்டராக இருந்தால்…?

    "என்னது..? கம்ப்யூட்டரா..டாக்டருக்குப்பதிலாகவா..?"

    " பதிலாக இல்லை, டாக்டருக்குத்துணையாக!"

    ஆம், செயற்கை புத்திசாலித்தனம் (Artificial Intelligence) என்னும் இயல், படு வேகமாக முன்னேறி, இன்று மனிதர்கள் போலவே யோசித்துச்செயல்படும் திறமைகளைக்கொண்ட கம்ப்யூட்டரை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. ஐ பி எம் மின் "வாட்ஸன்" என்று பெயர் சூட்டப்பட்ட இந்த புத்திசாலிக்கம்ப்யூட்டர்கள் பல துறைகளில் நுழைய ஆரம்பித்துவிட்டன.

    இந்த செயற்கை புத்திசாலித்தனம் முதன் முதலில் சாதாரண, யோசனை இன்றிச்செய்யும் வேலைகளுக்காக உருவாக்கப்பட்டன. இந்த சாதாரண, தினப்படி அல்லது ரொட்டீன் வேலைகளை ரோபோக்களை வைத்துச்செய்வது பற்றி அறிந்துள்ளோம். ஆனால் யோசித்து அறிவாற்றல் கலந்த வேலைகளை (Cognitive Intelligence) செய்ய மனிதர்களால் மட்டுமே முடியும் என்னும் சித்தாந்தத்தை ஓரளவு இந்த வாட்சன் உடைத்துவிட்டது. ஆம், வாட்சனால் மனிதர்களைப்போல சிந்தித்து செயல்படவும் அனுபவங்களின் மூலம் கற்றுக்கொள்ளவும் முடியுமாம்!

    சமீபத்தில் ஜப்பானில் ஒரு பெண்ணுக்கு ரத்தப்புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு கீமோதெரபி வைத்தியம் செய்தார்கள். ஆனால் அவர் எப்படி குணமாக வேண்டுமோ அப்படி குணமாகிக்கொண்டு வரவில்லை. டாக்டர்கள் குழம்பித்தான் போனார்கள். வாட்சனிடம் தஞ்சம் அடைய, நம் வாட்சன் அந்தப்பெண்ணின் லட்சக்கணக்கான ஜீன் தகவல்களை அலசி ஆராய்ந்து அந்தப்பெண்ணுக்கு மரபணு சடுதி, அதாவது Genetic mutation ஏற்படுவதைக்கண்டுபிடித்தது. கிட்டத்தட்ட ஆயிரம் மரபணுக்களில் இந்த சடுதி ஏற்படுவதை அறிந்து, அவற்றில் பல இந்த புற்று நோய்க்கு சம்மந்தமில்லை என்பதையும் பத்தே நிமிடங்களில் வாட்சன் கண்டுபிடித்து விட்டது. இதைக்கண்டு பிடிக்க டாக்டர்களுக்கு இரண்டு வாரம் ஆகியிருக்கும்! இந்தக்கண்டுபிடிப்பை வைத்து மருந்து மாற்றப்பட்டபோது அந்தப்பெண் சீக்கிரம் குணமடைந்தாள்.

    வாட்சன் போன்ற கண்டு பிடிப்பு மிகப்புரட்சிகரமானதாகும். ஏனென்றால், சாதாரண கம்ப்யூட்டரால் சீராக கட்டமைக்கப்பட்ட (Structured) தகவல்களை மட்டுமே புரிந்துகொள்ள முடியும். ஆனால் வாட்ஸனால் கட்டமைக்கப்படாத (Unstructured) தகவல்களையும் புரிந்துகொண்டு செயலாற்ற முடியும். வாட்சன் ஆன்காலஜி அட்வைசர் (Watson Oncology Advisor) என்னும் கம்ப்யூட்டர் கான்சர் பற்றிய ஏராளமான கட்டமைப்பற்ற தகவல்களை ஆராய்ந்து முடிவுகள் சொல்லக்கூடிய சக்தி படைத்ததாம்.


    கல்வித்துறையில் வாட்சன் சாதிக்கப்போகும் புரட்சி இன்னும் பிரமிக்க வைக்கிறது.

    "டீச்சர்! என்னோட மார்க் தப்பு!"

    "எப்படிடா சொல்றே?"

    "நான் அப்படியே ரமேஷ் பாத்து வரிக்கு வரி கப்பி அடிச்சேன்! அவனுக்கு எண்பது! எனக்கு பெயில் மார்க்கு! எப்படி டீச்சர்!"

    "அது அப்படித்தான்! நீ உன் லெவலுக்கு எழுதணும்! ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி லெவல்ல பரிட்சை, தெரியுமா!"

    ஆம், இனி பள்ளிக்கூடங்களில் ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் அவரவரின் தனித்தன்மைக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் வகுத்து சொல்லித்தர முடியும்! ஆக ஒரு வகுப்பில் நாற்பது மாணவர்கள் இருந்தாலும் ஒவ்வொருவரின் திறமை விகிதங்களுக்கு ஏற்றபடி பாடங்களின் ஆழமும் விஸ்தாரமும் வடிவமைக்கப்பட்டு சொல்லித்தரலாம். இதனால் மாணவர்களில் ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு, பேசுதல், திட்டுதல் போன்ற வகுப்பறைக்கலவரங்களை ஒருமிக்க தடுக்க முடியும். வாட்சன் என்லைட் (Watson Enlight) இப்போது இங்கிலாந்தில் பல கல்வி நிலையங்களில் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது.

    "டீச்சர்! என் கொஸ்டின் பேப்பர் ரொம்ப கஷ்டமா இருந்தது!"

    "என்னைக்கேக்காதப்பா! ஹெட்மாஸ்டர் ரூமுல வாட்சன் இருக்கு பாரு, அதக்கேளு!!"

    அமெரிக்காவில் வேலைக்கு ஆள் எடுப்பதைக்கூட வாட்சன் செய்து விடுகிறதாம்!

    "என்ன வாட்சன்! இவனைப்போய் செலக்ட் பண்ணியிருக்கே! இவனோட முகமே சரி இல்லியே, எப்பப்பாரு கடுகடுன்னு..?"

    "அவனோட ஐக்யூ உன்னோடத விட ஜாஸ்தி! அவனுக்கு இருக்கும் அனுபவங்களப்பார்த்தா நீதான் அவனுக்கு அசிஸ்டண்டா இருக்கணும்! அடுத்த வருஷம் அதையும் ரெகமண்ட் பண்ணிடறேன்!"

    "அய்யய்யோ வாட்சன்! அப்படி எல்லாம் பண்ணிடாதப்பா! உனக்குன்னு நான் இனிமே தனியா ஸ்பெஷல் கரண்ட் வரவெச்சு தரேன்! நா புள்ள குட்டிக்காரன், என்னை போட்டுக்குடுத்துடாத! என் கண்ணில்லியா!"

    ஆனால் இந்த வேலை செலக்ஷன் விஷயத்தில் வாட்சன் இப்பொதைக்கு ஓரளவுக்குதான் செய்கிறது. முழு ரெக்ரூட்மெண்டுமே வாட்சனிடம் விட முடியாது.

    ஐ.பி.எம்.மில் இந்தியா ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஸ்ரீராம் ராகவன் வாட்சனுக்கு இருக்கும் பிரகாசமான எதிர்காலம் பற்றிச்சொல்லுகிறார். "கூடவே அதில் இருக்கும் கஷ்டங்களும் மிகச்சிக்கலானவை. சூழலுக்கேற்றார்போல் புரிந்துகொள்ளும் அறிவை கம்ப்யூட்டருக்குப்புகட்டுவது மிகப்பெரிய சவால்" என்கிறார் ஸ்ரீராம் ராகவன்

    "கத்ரினாவினால் அமெரிக்காவில் அதிக சேதம்!"

    "என்னப்பா இப்படி சொல்றே! கத்ரினாவா? ஷீலா கி ஜவானி……அவங்க அமெரிக்காவுல போய் என்ன பண்ணினாங்க?"

    உடனே கேள்வி கேட்ட ஆசாமியை வாட்சன் இப்படி சவட்டக்கூடும்.

    "யோவ்! ஜொள்ளு விடாத! நான் அமெரிக்கப்புயல் கத்ரினாவைச்சொல்றேன்!"

    இனிமேல் வர்தா என்றால் "டாய்லெட் அந்தப்பக்கம்" என்றோ, மிக்ஜாம் என்றால் "அது கிசானா இல்லை வேறு ஏதாவது ஜாமா என்று கேட்டு அசடு வழியாதீர்கள்.

    வாட்சனின் பதில் மரங்களைப்போல உங்களையும் சென்னையின் புயல் சாய்த்துவிடக்கூடும்!

    • ஆண்மையும் பெண்மையுமாக இயங்கும் இருவேறு மனித அமைப்பை இயற்கையிலும் நாம் காணலாம்.
    • மனத்தின் நிறை குறைகளைப் பொறுத்து, குடும்பம், நண்பர்கள், வேலைபார்க்கும் இடம் போன்றவை உருவாகின்றன.

    உலக வாழ்வியலில் உண்மையின் தரிசனம் காணத் துடிக்கும் வாசகர்களே!

    வணக்கம்.

    செல்லிடப்பேசியில் நவீன சமூக ஊடகங்களைக் கொஞ்சம் கூர்ந்து கவனிக்கத் தொடங்கில் இருந்தால் ஓர் உண்மை உங்களுக்கு நிச்சயம் விளங்கி இருக்கும். முகநூல், மற்றும் யூடியூப் வரிசைகளில் நாம் எந்த மாதிரி வீடியோக்களையும் செய்திகளையும் தொடர்ந்து பார்க்கத் தொடங்குகிறோமோ, அந்த ஊடகங்களும் அதேமாதிரி வீடியோக்களையும் செய்திகளையும் தொடர்ந்து முன்னுரிமை கொடுத்துக் காட்டிக்கொண்டே இருக்கும்.

    வீடுகள் மனைகள் வாங்குவது குறித்த செய்திகளைத் தொடர்ந்து பார்த்தால், அடுத்து எப்போது செல்பேசி வலையொளியைத் திறந்தாலும் வீட்டுமனை விற்பனை வீடியோக்களும் செய்திகளுமே முந்தி முந்தி வந்து நிற்கும். ஒரு குறிப்பிட்ட பேச்சாளரின் சொற்பொழிவுகளில் ஈடுபாடு காட்டினால், அவர் தொடர்பான ஒளிக்காட்சிகளே எப்போதும் வந்து காட்சியை ஆக்கிரமிக்கும்.

    உடையவரின் ரசனைகளுக்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் தொழில் நுட்பத்தைச் செல்பேசிகள் பெற்றிருக்கின்றன.

    இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. மனித மூளையால் திட்டமிடப்பட்ட செயற்கை அறிவு இத்தகு நுட்பங்களை உருவாக்குகின்றது. ஏனெனில் இன்று நாம் காணும் இயற்கை உலகமும், வாழும் மனிதர்களின் பிரதிபலிப்பாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. ஆண்மையும் பெண்மையுமாக இயங்கும் இருவேறு மனித அமைப்பை இயற்கையிலும் நாம் காணலாம்.

    காணும் பொருள்களிலெல்லாம் பக்தன் கடவுளைக் காண்பதைப் போல, மனிதன் தன்னையும் காண்பதுதான் உண்மை வாழ்வியல்.

    ஒரு கிராமத்தின் நுழைவுப் பகுதியில் உள்ள ஒரு பாலத்தில், ஒரு தாத்தாவும் அவரது பத்து வயதுப் பேரனும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் பெரியவரைப் பார்த்து வணக்கம் சொன்னார். பெரியவர், ஞயாருங்க? ஊருக்குப் புதியவர் போல இருக்கிறீர்கள்? எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டார்.

    தன்னுடைய ஊரின் பெயரைச் சொன்ன புதியவர், ''ஐயா! நான் இந்த ஊருக்குப் புதியவன்தான். ஒரு வேலையாக இந்த ஊருக்கு வந்திருக்கிறேன். தாங்கள் இந்த ஊர் தானா?" என்று கேட்டார்.

    பெரியவர், "நாங்கள் இந்த ஊர் தான். இவன் என்னுடைய பேரன்" என்று பேரனை அறிமுகப்படுத்தி வைத்தார்.''ஐயா, இந்த ஊரைப்பற்றி நான் அதிகம் கேள்விப்பட்டதில்லை!. இந்த ஊர் எப்படி? ஊர்மக்கள் எப்படி?" என்று விசாரித்தார் புதியவர்.

    பெரியவர்,''எங்கள் ஊரைப்பற்றி அப்புறம் சொல்கிறேன்! முதலில், உங்கள் ஊர் எப்படி? அங்குள்ள மக்கள் எப்படி?" என்று எதிர்க்கேள்வி கேட்டார்.

    "ஆஹா! அற்புதமாய்ச் சொல்கிறேன்!. எங்கள் ஊர் வளமான ஊர். மாதம் மும்மாரி மழை! முப்போக விளைச்சல்! எல்லாம் அமோகம்!.

    எங்கள் ஊரிலுள்ள மக்களோ தங்கமோ தங்கம் சொக்கத் தங்கம்! அனைவரும் அவ்வளவு நல்லவர்கள்!" ஊர்ப் பெருமையைப் புகழ்ந்து தள்ளிவிட்டார் புதியவர்.

    ''அருமையாகச் சொன்னீர்கள்!. நீங்கள் சொன்னதற்கு இம்மியளவும் குறைவில்லாதது எங்கள் ஊர். உங்கள் ஊரைப் போலவே வளம் நிறைந்த ஊர்; மக்களும் உத்தம புத்திரர்கள்!" என்று தன் ஊரைப்பற்றிச் சொன்னார் பெரியவர்.

    "மகிழ்ச்சி ஐயா! நான் ஊருக்குள் சென்று வந்த வேலையைப் பார்த்துத் திரும்புகிறேன்" என்று ஊருக்குள் சென்றார் புதியவர்.

    அவர் சென்றதும், பேரனுடன் பேச்சைத் தொடர்ந்தார் தாத்தா. சிறிது நேரத்தில் மற்றுமொரு புதியவர் அங்கு வந்து பெரியவருக்கு வணக்கம் வைத்தார்.

    பெரியவரும் வழக்கம்போல, ஊருக்குப் புதிதா? எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்? என்ன வேலை? என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார். வந்த புதியவரும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டு, "இந்த ஊர் எப்படி? இந்த ஊர் மக்கள் எப்படி?" என்று முந்தைய புதியவர் கேட்டது போலவே கேட்டார். பெரியவரும் வழக்கம் போல உங்கள் ஊரும் மக்களும் எப்படி? என்கிற கேள்வியை இரண்டாம் புதியவரிடம் வைத்தார்.


    "ஊராங்க அது? ஊர்ல மழை பேஞ்சாலும் விவசாயம் கிடையாது. காரணம் ஊர்ல இருக்கிறவன்லாம் காலிப் பசங்க சார். பொய், பித்தலாட்டம், வஞ்சகம், சூது, யாருமே நல்லாருக்கக் கூடாதுங்கிற கெட்ட எண்ணம் அநியாயத்தின் மொத்த உருவமே எங்க ஊர் மக்கள்தான்!" மூச்சுவிடாமல் பேசி முடித்தவர், ''இப்பச் சொல்லுங்க உங்க ஊர் எப்படி?" என்று கேட்டார்.

    ''ரொம்பச் சரியாச் சொன்னீங்க! நீங்க சொன்னதுக்கு இம்மியளவும் குறைவில்லாதது இந்த ஊர். ஒரு வளமும் கிடையாது; ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் கடைஞ்செடுத்த அயோக்கியனுங்க! போய் ஊருக்குள்ள பாருங்க! நீங்களே தெரிஞ்சுக்குவீங்க'' என்றார் பெரியவர்.

    அவ்வளவு தான். அந்தப் புதியவர் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தவுடன் தாத்தாவிடம் பளிச்சென்று ஒரு கேள்வியைக் கேட்டான் பேரன்; ''அது எப்படி தாத்தா ஒரே ஊர் ஒருத்தருக்கு மிக நல்ல ஊராகவும் இன்னொருத்தருக்கு மிக மோசமான ஊராகவும் இருக்கும்?.நம்ம ஊரைப் பத்தியே இப்படி ரெண்டுவிதமாச் சொல்லலாமா?"

    "அழகான கேள்விடா பேராண்டி. நல்லவங்க கண்ணுக்கு இந்த உலகம் நல்லதாவே தெரியும்! கெட்டவங்க கண்ணுக்கு உலகம் கெட்டதாவே தெரியும். உலகம் அப்படியே தான் இருக்குது. அது சிலருக்கு நல்லதாவும், சிலருக்குக் கெட்டதாவும் தெரியக் காரணம் பார்க்கிறவங்க மனோநிலையைப் பொறுத்ததேயொழிய வேறு ஒன்றுமில்லை. முதல்ல போனவன் நல்லவன்: அவனுக்கு நம்ம ஊர் நல்ல ஊராவே தெரியும்! இரண்டாவதாப் போனவன் கெட்டவன்; அவனுக்கு நம்ம ஊர் கெட்டதாத்தான் தெரியப் போகுது!. உலகம் என்பது நமது பிதிபலிப்பே தவிர வேறு ஒன்றுமில்லை" தாத்தாவின் பேச்சை கவனமாகக் கேட்டான் பேரன்.

    ஆம்! உலகம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது ஆழ்மனத்தின் பிரதிபலிப்பாகவே அமைகிறது. மனத்தின் நிறை குறைகளைப் பொறுத்து, குடும்பம், நண்பர்கள், வேலைபார்க்கும் இடம் போன்றவை உருவாகின்றன.

    "எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே!" என்று குறிப்பிடும் அவ்வையார், மனிதர்கள் எங்கெல்லாம் நல்லவர்களாக இருக்கிறார்களோ, அங்கெல்லாம் நாட்டுப் பகுதிகளும் நல்லனவாகவே அமையும் என்று தீர்க்கமாகக் கூறுகிறார்.

    ஒரு சாலையில் ஒரு மனிதர் நடந்து சென்றுகொண்டிருக்கிறார். வழிநெடுக இருபுறமும் கொடிக்கம்பங்கள் நடப்பட்டு வண்ண வண்ணக் கொடிகள் பறக்க விடப்பட்டிருக்கின்றன. அந்த மனிதர் மகிழ்ச்சியான மனநிலையில் நடந்து சென்று கொண்டிருந்தால், அந்த வண்ணக் கொடிகளின் அசைவு அவருக்கு, வருக! வருக! என வரவேற்புக் கூறுவது போலத் தோன்றும். மாறாக அவர் பெருஞ்சோகத்தோடு நடந்து சென்று கொண்டிருந்தால், அக்கொடிகள் வராதே! வராதே! என்று மறித்து அசைவதுபோலத் தோன்றும். மனிதர் ஒருவர்தான்!

    கொடியசைவும் ஒன்றுதான்! ஆனால் ஆழ்மனச் சிந்தைக்கு ஏற்ப அர்த்தப்பாடு மாறி விடுகிறது.

    எப்படி முயன்றாலும், முயற்சி தோல்வியிலேயே முடிந்து விடுகிறதே! என வருத்தப்படுபவரா நீங்கள்? முதலில் உங்களின் சூழலை மாற்றுவதற்குமுன் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். ஈரமும் இளக்கமும் உடைய மண்ணில் விழும் விதையே செழித்து வளரும்.

    மகிழ்ச்சியும் நம்பிக்கையும் உடைய மனத்தில் எழும் முயற்சிகளே வெற்றியை அடையும்.

    யாரைப் பார்த்தாலும் முதல் புன்னகை நம்முடையதாக இருக்கட்டும்!.எதிரில் வருபவர் எதிரியாக இருந்தாலும் அவரையும் புன்னகைக்க வைத்து அவரையும் நம் பக்கம் மாற்றிவிடும் நமது புன்னகை. நமது வாழ்க்கையின் நோக்கத்தில் நன்மையும் செயல் ஊக்கமும் கலந்திருந்தால் மகிழ்ச்சி தாமாகவே நம்மிடம் ஒட்டிக்கொள்ளும்.அந்த மகிழ்ச்சி, காணும் மனிதர்கள் மற்றும் செயல்களில் எல்லாம் பற்றிக் கொள்ளும்!.

    நகரத்தில் இருக்கும் ஒரு முதியோர் காப்பகத்திற்கு ஒரு நாள் இரண்டாயிரம் ரூபாய் மணி ஆர்டர் வந்தது. அடுத்து ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் இரண்டாயிரம் வீதம் பணம் வரத் தொடங்கியது; ஆறு மாதங்கள் கழிந்தவுடன், காப்பக நிர்வாகி, மணி ஆர்டரில் இருந்த முகவரியை வைத்து அனுப்பியவரைத் தேடிச் சென்றார் நகரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு கிராமத்தில், பணம் அனுப்பிய நபர் ஒரு சிறிய இட்லிக்கடை நடத்தி வந்தார்.

    காணச் சென்றது காலை நேரமாகையால் வியாபாரம் அமோகமாக நடந்து கொண்டிருந்தது. காப்பக நிர்வாகி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

    அவரைத் தனியாக அழைத்துச் சென்ற இட்லிக் கடைக்காரர், " ஐயா! என் பெயர் சங்குவேல். எனக்கு 73 வயதாகிறது.அதோ அங்கே இட்லி அவித்துக் கொண்டிருக்கிறாளே அவள் என் மனைவி. அவளுக்கு வயது 62. நாங்கள் இட்லிக்கடை வைத்து சொற்ப லாபத்தில் சேவை மனப்பான்மையோடு வியாபாரம் நடத்தி வருகிறோம். காலம் இப்படியே போகாது.எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என் மனைவி தனியே கஷ்டப்பட நேரிடும்.

    உங்கள் முதியோர் இல்லம் பற்றிக் கேள்விப்பட்டேன். மாதம் இரண்டாயிரம் என் மனைவிக்குத் தெரியாமல் அனுப்புகிறேன்.ஆயிரத்தை என் மனைவி பெயரில் வரவு வைத்துக் கொள்ளுங்கள்; மீதம் ஆயிரத்தை நன்கொடையாக ஏற்றுக்கொள்ளுங்கள். ஏதாவதொரு மாதத்தில் பணம் வரவில்லையென்றால் நான் இறந்து விட்டேன் என்று அர்த்தம். அப்போது இங்கே வந்து என் மனைவியை உங்கள் காப்பகத்திற்கு அழைத்துச் சென்றுவிடுங்கள்" என்று கண்கலங்கச் சொன்னார்.

    காலம் நகர்ந்தது.இரண்டாண்டுகள் கழித்து ஒரு மாதத்தில் மணிஆர்டர் வரவில்லை. காப்பக நிர்வாகி ஒருநாள் காலை நேரத்தில் அந்த கிராமத்திற்குச் சென்றுவிட்டார். அந்த இட்லிக்கடை அதே பரபரப்போடு நடந்து கொண்டிருந்தது. முதியவரைத் தேடினார் காப்பக நிர்வாகி. காணவில்லை; கடைக்காரரின் மனைவி இவரைப் பார்த்துவிட்டார்.

    "ஐயா என்கணவர் இருபது நாள்களுக்கு முன் இறந்துவிட்டார். உங்களைப் பற்றியும் காப்பகம் பற்றியும் ஏற்கனவே என்னிடம் சொல்லி இருக்கிறார். நானும் அங்கு வந்து விடலாம் என்றுதான் முடிவெடுத்தேன். ஆனால் ஊர்க்காரர்கள் பாசம் என்னைத் தடுத்துவிட்டது.

    'ஆத்தா இங்கேயே இருந்து இட்லிக்கடை நடத்து ஆத்தா! உன்னைய நாங்க பார்த்துகிறோம்'னு சொல்லி மறிச்சுட்டாங்க. என் காலம் வரைக்கும் இங்கேயே இருந்து இவங்களுக்கு சேவை செய்யுறதுன்னு முடிவெடுத்துட்டேன். என் வீட்டுக்காரர் அனுப்பின மாதிரியே அடுத்த மாசத்திலர்ந்து உங்களுக்குப் பணம் அனுப்பி வைக்கிறேன்" என்றார். நாம் நல்ல மனத்தோடு சமூகத்திற்குச் சேவை செய்தால், அதன் பிரதிபலிப்பாய் சமூகமும் நமக்குச் சேவைசெய்யக் காத்திருக்கிறது'

    தொடர்புக்கு 9443190098

    • இயற்கைச் சூழலுக்குக் கீழ்ப்படிந்து வாழக் கற்றுக் கொள்வதில் தான் மனித இனம் வெற்றியடைந்ததாகப் போற்றப்படுகிறது.
    • சமூக நடைமுறைகளுக்கு ஏற்ப மக்கள் நடந்துகொள்ள வேண்டிய விதிமுறைகளை அவ்வப்போது பெரியவர்கள் தீர்மானித்துச் சட்டம் ஆக்குகின்றனர்.

    கீழ்ப்படிதல் என்னும் பண்புக்குணம் நிறைந்த அன்பின் வாசகர்களே!

    வணக்கம்.

    குடும்பத்தில், வளரும் பிள்ளைகளிடத்திலும், கல்விக்கூடங்களில், பயிலும் மாணவர்களிடத்திலும், அலுவலகங்களில், பணிபுரியும் பணியாளர்களிடத்திலும் நாம் அதிகம் எதிர்பார்க்கக் கூடிய அருங்குணம் 'கீழ்ப்படிதல்' ஆகும். நாட்டில் ஆட்சியாளர்களால் வகுக்கப்பட்டுள்ள சட்ட நடைமுறைகளுக்குக் கட்டுப்பட்டுக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியது ஒவ்வொரு சமூக மனிதனின் கடமையுமாகும்.

    கீழ்ப்படிதல் என்பதே மரபைப் பேணுகிற, மரபைக் கடைப்பிடிக்கிற, மரபுவழி நடக்கின்ற நேர்மையான வழியாகும். "மரபு நிலை திரியின் பிறிது பிறிது ஆகும்!" என்கிற தொல்காப்பிய நூற்பா, மனிதன் மரபைப் பின்பற்றி வாழவில்லையென்றால், வாழ்க்கைமுறையே கந்தர கோலம் ஆகிப்போகும் என எச்சரிக்கிறது; மரபைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

    காட்டுமிராண்டி வாழ்வில் இருந்து மனிதன் படிப்படியாக மீளத்தொடங்கி, நாகரிக வாழ்வியலுக்குள் புகுந்து சிறப்படைந்ததற்குக் கீழ்ப்படிதலே முக்கியக் காரணம். இயற்கைக்குக் கட்டுப்பட்டு உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. உலகச் சுழற்சிக்கேற்பக் காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. பருவநிலைக்கு ஏற்றவாறு மனித வாழ்க்கைச் சூழ்நிலைகள் மாற்றம் பெறுகின்றன.

    இரவு, பகல், மழை, வெய்யில், காற்று, புயல், மேடு, பள்ளம், மலை, கடல், வயல், பாலைவனம், ஆறு-வெள்ளம் என நடைமுறை வாழ்வியலில் தாம் காணும் முரண்பட்ட தன்மைகளுக்கு ஏற்ப, இயற்கைச் சூழலுக்குக் கீழ்ப்படிந்து வாழக் கற்றுக் கொள்வதில் தான் மனித இனம் வெற்றியடைந்ததாகப் போற்றப்படுகிறது.

    காலை எழுவதில் தொடங்கி இரவு துயில்வது வரை, நேரத்திற்குக் கீழ்ப்படியக் கற்றுக் கொள்பவர்களே உழைப்பில் சிறந்த வெற்றியாளர்கள். சாலையில் வாகனம் ஓட்டிச் செல்லும்போது, போக்குவரத்து விதிகளுக்குக் கீழ்ப்படிந்து செல்பவர்களால் மட்டுமே சரியான இலக்கைச் சரியான நேரத்தில் சென்று அடைய முடியும். அலுவலகத்திலும் அவ்வப்போது மேலதிகாரிகளும் முதலாளிகளும் விதிக்கும் விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் மட்டுமே உற்பத்தியும் பணியும் எதிர்பார்த்த சிறந்த நிலையை எட்டும்.

    கீழ்ப்படிதல் என்பது ஒருவகை ஒழுக்கம். ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு செயலின் வெற்றிக்கு நிர்வாகம் விதிக்கிற விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். ஆனாலும் அதனைக் கடைப்பிடிப்பதில் ஓர் இலகுத் தன்மை இருக்க வேண்டும்.

    ஒரு தனியார் தொழிற்சாலை. உள்ளே வாசலைத் தாண்டிக் கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு மரத்தடியில் ஓர் இளைஞர் நின்று தம் அடித்துக்கொண்டிருந்தார். அப்போது தொழிற்சாலைக்குள் காரில் நுழைந்த ஆலையின் முதலாளி, இளைஞர் தம் அடித்துக் கொண்டிருப்பதைக் காரின் கண்ணாடிக் கதவை இறக்கிப் பார்த்தார். இளைஞர் இவரைக் கண்டுகொண்டதாய்த் தெரியவில்லை. கடும்கோபத்தோடு தொழிற்சாலையின் தன் அறைக்குள் நுழைந்து, உள் தொலைபேசி மூலமாக மேனேஜரை அழைத்தார்.


    "கேட்டைத் தாண்டி உள்ளே வரும் வழியில் உள்ள வேப்ப மரத்தடியில் ஒருவன் தம் அடித்துக் கொண்டிருக்கிறான்.

    தொழிற்சாலை வளாகத்திற்குள் புகைபிடிக்கக் கூடாது என்று எத்தனைமுறை சொல்வது?.நம் தொழிற்சாலையில் விதியும் இருக்கிறது!. நீங்கள் நேராகச் சென்று, அவனிடம் எந்த அறிவுரையும் கூறாமல், அவனது பேரை மட்டும் கேட்டு, உடனடியாக அவனது கணக்கை முடித்து, வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு என்னை வந்து பாருங்கள்!" என்றார்.

    சரி எனச் சொல்லிவிட்டு வெளியே சென்ற மேனேஜர் அடுத்த பதினைந்து நிமிட நேரத்தில், முதலாளி அறைக்குள் வந்து, "நீங்கள் சொன்னதைச் செய்துவிட்டேன் முதலாளி!" என்று பணிவாகச் சொன்னார். "ரொம்பச் சரி!. கீழ்ப்படிதல் இல்லையென்றால் இதுதான் நடக்கும் என்று மற்ற தொழிலாளர்களுக்கு இது படிப்பினையாக இருக்க வேண்டும்!" என்றார் முதலாளி.

    ஆரம்பத்தில் நாம் பார்த்த அந்த மரத்தடி இளைஞர், இப்போது கேட்டில் இருந்த செக்யூரிட்டியிடம் பேசிக்கொண்டிருந்தார், " என்னங்க தொழிற்சாலை இது?; நான் என்னோட நண்பர் இங்க வேலை பார்க்கிறவரைப் பார்த்திட்டுப் போகலாம்னு வந்து ஒரு ஓரமா நின்னு தம் அடிச்சுட்டு இருந்தேன்.

    அப்ப, யாரோ ஒருத்தர் வந்து என்னோட பேரு என்ன?ன்னு கேட்டார். கூட வா!ன்னு கூட்டிட்டுப் போயி! ஏதோ ஒரு பெரிய நோட்டுல கணக்குப் போட்டு, அதில ஒரு கையெழுத்தையும் வாங்கிட்டுக், கையில் ஒரு கவரையும் குடுத்து அனுப்பிச்சு விட்டுட்டாரு. வெளியில் வந்து பார்த்தா கவர்ல 52 ஆயிரம் ரூபாய் பணம் இருக்குது!. எனக்கு ஒன்னும் புரியலிங்களே?" என்றார். செக்யூரிட்டியோ அவரை விடப் புரியாமல் குழம்பிப்போய் நின்றார்.

    இப்போது உங்களுக்குக் கொஞ்சம் புரிந்திருக்கும். தொழிற்சாலைக்குள் வந்து விதிமீறல் செய்திருப்பது வெளிஆள் என்பது தெரியாமல் முதலாளிக்குக் கோபம் வந்திருக்கிறது. ஆனாலும் ஆலை மேலாளரின் கண்மண்தெரியாத கீழ்ப்படிதல் தன்மை, இளைஞர் ஆலைத் தொழிலாளிதானா? என்பதைப் பரிசீலிக்காமலேயே, அந்தப்பெயரில் உள்ள யாரோ ஒருவரின் கணக்கை முடிக்க வைத்திருக்கிறது. பணத்தைப் பெற்றுக்கொண்டவர் காரணம் தெரியாமல் விழிப்பதற்கு இதுதான் காரணம்.

    கீழ்ப்படிதல் என்றால், விதி என்று இருந்தால் எந்தக்கேள்வியும் கேட்காமல் அதிகாரத்திற்குக் கட்டுப்படுவதுதான். ஆனால் அதிகாரத்தை உரிய முறையில் பயன்படுத்த முடியாமல் போகும்போது ஏற்படும் இயலாமை, சர்வாதிகார மனப்பான்மையை உருவாக்கி விடுகிறது. அதனால்தான் அந்த ஆலை முதலாளிக்குத் தொடர்பில்லாத நபர் மீது கோபம் வந்துவிட்டது. ஆனாலும், பொறுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டிய மேலாளர், இங்கு அவசரகதியான கீழ்ப்படிதலோடு நடவடிக்கை எடுத்ததற்கு முதலாளியின் கோபம் காரணமாகிவிட்டது.

    வீட்டிலோ, வெளியிலோ விதிக்கப்பட்டுள்ள விதிகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டியது அனைவருக்குமே பொருந்தும். இதில் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு விதிவிலக்கு என்பது கிடையவே கிடையாது. கீழ்ப்படிதலே அனைத்தையும் சுமூகமாக்கிவிடும் தாரக மந்திரம்.

    சமூக நடைமுறைகளுக்கு ஏற்ப மக்கள் நடந்துகொள்ள வேண்டிய விதிமுறைகளை அவ்வப்போது பெரியவர்கள் தீர்மானித்துச் சட்டம் ஆக்குகின்றனர். இச்சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையுமாகும். அப்போதுதான் குடியாட்சித் தத்துவம் சிறப்பாகக் கோலோச்ச முடியும்.

    அலுவலகங்களில், ஒவ்வொருவருக்கும் அவரவரின் பணியளவைப் பொறுத்து அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. பணிபுரியும் தருணங்களில் தத்தமது கடமைத் தகுதிக்கு ஏற்றவாறு விதிகளுக்குக் கட்டுப்பட்டுக் கீழ்ப்படிதலோடு நடந்துகொள்வதே பணியாளருக்கு உரிய நடத்தை விதிகளாகும்.

    நாம் ஓட்டும் வாகனங்களில், கியர், கிளட்ச், ஆக்சிலேட்டர், பிரேக், ஸ்டீயரிங் என ஐந்து வகையான அமைப்புகள் இருக்கின்றன. வண்டியை முன்னே நகர்த்தி ஓட்டுவதற்கும், பின்னே நகர்த்திச் செலுத்துவதற்கும் இந்த ஐந்தையும் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்கிற விதிமுறை இருக்கிறது. கீழ்ப்படிதல் உணர்வோடு, கைகளையும் கால்களையும் கொண்டு இந்த ஐந்தையும் அவ்வவற்றிற்குரிய விதிமுறைகளோடு பயன்படுத்தினால், வாகனத்தை விரும்பிய இடத்திற்கு, விரும்பிய வேகத்தில், விபத்துகள் ஏதுமின்றி கொண்டு செலுத்தலாம். இல்லையென்றால் விளைவுகள் எதிர்மறையானவையாகவே அமையும்.

    சாலைகள் குறுக்கும் நெடுக்குமாகச் செல்லுகின்ற சந்திப்புகளில், சிவப்பு, மஞ்சள், பச்சை எனும் குறியீடுகள் மாற்றி மாற்றி ஒளிர்கின்றன. இவற்றின் தன்மைகளுக்கேற்ப நாம் சாலைகளைக் கடந்தால் விபத்துகள் ஏற்படாது; போக்குவரத்து நெருக்கடிகளும் உண்டாகாது. எல்லாவற்றிற்கும் அடிப்படைத் தேவை கீழ்ப்படிதல்.

    வீட்டில் கணவன் மனைவி இருவரில் யார் பெரியவர்? என்கிற ஆணவம் தலைதூக்கத் தொடங்கினால் கீழ்ப்படிதல் தொலைந்துபோகும்; இல்லற நெறிமுறைகளும் காணாமல் போகும். பெற்றோர்கள் கூறுவதைப் பிள்ளைகள் கேட்க வேண்டும்; பிள்ளைகள் வளர்ந்துவிட்டால் முக்கியமான தருணங்களில் பிள்ளைகளின் ஆலோசனைகளைப் பெற்றோர்களும் கேட்க வேண்டும். இங்கே கீழ்ப்படிதல் என்பது, அனுபவத்திற்கும் அறிவுக்கும் ஏற்ப நடந்துகொள்வது. அதிகார மமதையோடு நடந்துகொள்ள எண்ணினால் தவறுகளே தாராளமாகிவிடும்.

    வெளிநாட்டில், ஒரு வீட்டில்,சாப்பாட்டு மேசையில் இரவு உணவு பரப்பப் பட்டிருந்தது. வீட்டில் இருந்த தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சிறுவர்களான மகன், மகள் ஆகியோர் ஆளுக்கொரு தட்டோடு மேசை அருகில் வந்தனர். உணவுக்கு முன் சூப் சாப்பிடுவதற்காக ஆளுக்கொரு கப்பை எடுத்து சூப்பை ஊற்றி நிரப்பிக்கொண்டு கரண்டி மூலம் அருந்தத் தொடங்கினர்.

    அப்பாவுக்கு 'ஹாய்!' சொல்லிக்கொண்டே அருகில் வந்த சிறுவனான மகன், "டாடி! இந்தக் கரப்பான் பூச்சிகளைப் பற்றி உங்களது கருத்து என்ன?" என்று கேட்டான். அப்பாவுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்து விட்டது." வாயை மூடிக்கொள்! சாப்பிட வந்தால் சாப்பிடும் வேலையை மட்டும் பார்! தேவையற்ற பேச்சுக்களைப் பேசாதே!" எச்சரித்தார் அப்பா. நமக்கேன் வம்பு எனக் கீழ்ப்படிதலோடு வாயை மூடிக்கொண்டான் மகன்.

    டின்னர் முடிந்தது. எல்லாரும் மகிழ்ச்சியாக வரவேற்பறைக்கு வந்து ஐஸ் கிரீம் சுவைத்துக் கொண்டிருந்தனர். இப்போது மகனை அன்போடு அருகில் அழைத்தார் அப்பா. " சாப்பிடும்போது அருவருப்பான கரப்பான் பூச்சி போன்ற விசயங்களைப் பேசக்கூடாது! அதனால் தான் திட்டினேன்!. சரியா?. இப்போது கேள்! கரப்பான் பூச்சி குறித்த உனது கேள்வி என்ன?".

    "அதை விடுங்கள் அப்பா! அது முடிந்துபோய் விட்டது. இப்போது வேண்டாம்!" என்றான் மகன். " சும்மா சொல்! என்ன சொல்ல வந்தாயோ சொல்!" என்று வற்புறுத்தினார் அப்பா!. " அது வேறு ஒன்றுமில்லை அப்பா! நீங்கள் சூப்பைச் சுவைத்துக் கொண்டிருந்த கப்பில் ஒரு இறந்த கரப்பான் பூச்சி மிதந்து கொண்டிருந்தது! அதைச் சாப்பிடுவதால் உடம்புக்கு நல்லதா? என்பதைத்தான் கேட்க முயற்சித்தேன்! வேறு ஒன்றுமில்லை!".

    அவ்வளவுதான் பையன் சொல்லி முடிப்பதற்குள் பாத்ரூமுக்குள் ஓடிய தந்தை சாப்பிட்ட உணவு அனைத்தையும் வாஷ்பேசினில் வாந்தியெடுத்துவிட்டார். அளவுக்கதிகமான அதிகாரத் தன்மையும், நிலைமைக்கு ஒத்துப் போகாத கீழ்ப்படிதலும் எந்த நிலைமைக்குக் கொண்டுபோய் விடும் என்பதற்கு இந்த நிகழ்வே சிறந்த உதாரணம்.

    ஒவ்வொரு கீழ்ப்படிதலிலும் ஓர் அதிகாரம் ஒளிந்திருக்கிறது. அந்த அதிகாரத்தின் நியாயத் தன்மையைப் பொறுத்தே கீழ்ப்படிதலுக்கான பலன் நமக்கு வந்து சேர்கிறது. ஆண்டவனை முழுமையாக நம்புகிறவர்கள் அவனுக்கு எதிர்ப்பில்லாத கீழ்ப்படிதலைச் செய்கிறார்கள்.

    அரசனை மக்கள் நம்புவதும், ஆசிரியரை மாணவர் நம்புவதும், நிர்வாகத்தினரைப் பணியாளர் நம்புவதும், பெற்றோரைப் பிள்ளைகள் நம்புவதும் முழுமையான கீழ்ப்படிதலுக்கு வழி வகுக்கும்.

    ஆம்!

    நாம் யாரை நம்பிக் கீழ்ப்படிகிறோமோ இல்லையோ…

    முதலில் நம்மை நம்பி நமக்கு நாமே கீழ்ப்படியக் கற்றுக் கொள்வோம்!

    தொடர்புக்கு: 9443190098.

    ×