என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "soundararaja"
- தேசிய விருது வெற்றியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
- விவசாயம் இல்லை என்றால் நாம் இல்லை.
பிரஜின், காயத்ரி ரெமா மற்றும் வெங்கடேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அக்கு". இந்த படத்தை ஸ்டாலின் வி இயக்கி இருக்கிறார். பொன் செல்வராஜ் தயாரித்து பிரஜின் நாயகனாக நடித்து இருக்கும் "அக்கு" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
இதில் படக்குழுவுடன் நடிகர் சவுந்தரராஜா கலந்து கொண்டார். அப்போது நடிகர் சவுந்தரராஜா பேசியதாவது..,
"இந்த படத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, ஆனால் பிரஜின் நண்பராக மட்டும் தான் இங்கு வந்து இருக்கிறேன். 2002-ம் ஆண்டு சின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டவர் பிரஜின். அப்போதில் இருந்தே அவர் சினிமாவில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். எங்களுக்குள் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகால நட்பு இருக்கிறது.
"சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 69-வது தேசிய விருது வெற்றியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். மேலும் மணிகண்டன் இயக்கிய "கடைசி விவசாயி" படத்திற்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் தமிழக அரசு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும் ஒரு கோரிக்கை விடுக்கிறேன்."
"கடைசி விவசாயி" படத்தில் விவசாயி-இன் முக்கியத்துவத்தை உணர்த்தி இருந்தனர். மேலும் விவசாயம் இல்லை என்றால் நாம் இல்லை. இந்த கருத்து மாணவர்களிடையே சென்று சேர வேண்டும். இதனால், பள்ளி மாணவர்களுக்கு இந்த படத்தை திரையிட்டு காண்பிக்க வேண்டும். வியாபார ரீதியில் இந்த படம் வெற்றி பெறவில்லை என்ற போதிலும், உலக அளவில் இந்த படம் அங்கீகாரம் பெற்று இருக்கிறது. இதனால், இந்த படத்தை மாணவர்களுக்காக திரையிட்டு காண்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்," என்று தெரிவித்தார்.
- சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் சௌந்தரராஜா நடித்திருந்தார்.
- தற்போது அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் "கட்டிஸ் கேங்" என்ற மலையாள படத்தில் சௌந்தரராஜா வில்லனாக நடித்து வருகிறார்.
சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், பிகில், சங்கத் தமிழன், ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சௌந்தரராஜா. இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் நடித்திருந்தார்.
தற்போது அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் "கட்டிஸ் கேங்" என்ற மலையாள படத்தில் சௌந்தரராஜா வில்லனாக நடித்து வருகிறார். ஓசியானிக் மூவிஸ் சார்பில் சுபாஸ் ரகுராம் தயாரிக்கும் இப்படத்தின் கதாநாயகனாக உன்னி லால் மற்றும் கதாநாயகியாக விஷ்மயா நடிக்கின்றனர். ராஜ் கார்த்திக் எழுத்தில், நிகில் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று "கட்டிஸ் கேங்" படக்குழுவினரோடு சேர்ந்து மரக்கன்றுகள் நட்டு இயற்கை மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை சௌந்தரராஜா வலியுறுத்தி உள்ளார்.
- நடிகர் சௌந்தரராஜா பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- இவருக்கு சிறந்த மனிதநேய விருது வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் சௌந்தரராஜா 2012-ஆம் ஆண்டு மாதவன், ஆர்யா நடிப்பில் வெளியான 'வேட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் சுந்தரபாண்டியன், தெறி, பிகில் போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
சௌந்தரராஜா
இதையடுத்து நடிகர் சௌந்தரராஜாவிற்கு இந்த ஆண்டிற்கான சிறந்த மனிதநேய விருது வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரசெடிகளை நட்டு, இயற்கை மற்றும் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துக்கூறி பொது வாழ்க்கையிலும் ஈடுப்படுத்தி கொண்டதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் என்ற விருது மலேஷியா கோலாலம்பூரில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மலேஷியா செலங்கூர் மன்னர் சலாகுத்தீன் அப்துல் அஜிஸ் ஷா, டத்தோ சசிகலா சுப்ரமணியம் (துணை போலீஸ் இயக்குனர் - மலேசியா ராயல் போலீஸ்) மற்றும் கலாம் பவுண்டேஷன் சலீம், ஸ்ரீமதி கேசவன், டேக்கேர் இன்டர்நேஷனல் நிறுவனர் முகமது இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.
சௌந்தரராஜா
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சௌந்தரராஜா, "நான் செய்வது சேவை அல்ல கடமை. மாதம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இந்த மண்ணுக்காகவும் இந்த மண்ணில் பிறந்த மக்களுக்காவும் உழைப்போம் என்று கேட்டுக்கொண்டு இந்த விருதை விவசாயிகளுக்கும் இயற்கையை நேசிக்கும் அனைவருக்கும் அர்ப்பணிப்பு செய்கிறேன்" என்று பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்