search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Priest arrest"

    • செல்வியிடம் பறித்த நகையில் தாலிக்கொடியை எனது விவசாய தோட்டத்தில் புதைத்து வைத்தேன்.
    • கொலையான செல்விக்கு 2 குழந்தைகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிறந்து உடல்நலக்குறைவால் இறந்து விட்டன.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள சேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பசவராஜ் (வயது 38). இவருடைய மனைவி செல்வி (28).

    இவர் நேற்று முன்தினம் இளம்பிள்ளை அருகில் உள்ள திருமலைகிரி பாறைக்காட்டூர் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்தார். இது குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு சென்ற செல்வியை குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்த திருமலைகிரி பெருமாம்பட்டியை சேர்ந்த கோவில் பூசாரி குமார் (42) என்பவரை அதிரடியாக கைது செய்தனர்.

    செல்வியை கொலை செய்தது குறித்து பூசாரி குமார் போலீசாரிடம் வாக்குமுலம் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் எனது மனைவியை விவாகரத்து செய்து விட்டேன். எனக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கட்டி அதில் பூசாரியாக இருந்தேன். கடன் பிரச்சனை மற்றும் குழந்தையின்மைக்கு தீர்வு என பல்வேறு பிரச்சனைகளுக்கு அருள்வாக்கு பெற எனது கோவிலுக்கு பலர் வந்தனர். அவ்வாறு கோவிலுக்கு வரும் பல பெண்களுடன் சகஜமாக பேசி எனது வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்து வந்தேன். குறிப்பாக 20 பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளேன்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு வந்த செல்வியை எனது வலையில் வீழ்த்த நினைத்து நைசாக பேசி வந்தேன். பூசாரி என்பதால் என்னிடம் செல்வி சகஜமாக பேசினார். அவரிடம் உல்லாசம் அனுபவிக்க நான் நினைத்தேன். அதே நேரத்தில் அவர் தங்க நாணயம் குறைவான விலைக்கு தனக்கு கிடைப்பதாகவும் தான் வாங்கி தருவதாகவும் கூறினார். அதை நம்பி நானும் ரூ.20 ஆயிரம் கொடுத்தேன்.

    ஆனால் செல்வி தங்க நாணயம் வாங்கி தரவில்லை. இருந்தாலும் அவரை எனது வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவிக்க மீண்டும் திட்டம் போட்டேன். அவர் அதற்கு உடன்படாமல் மறுத்து விட்டார். இது எனக்கு மிகுந்த ஏமாற்றம் அடைந்தது. உல்லாசத்துக்கும் மறுத்து விட்டார். தங்க நாணயமும் வாங்கி தரவில்லை. எனவே எனக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி செல்போனில் அவரை கோவிலுக்கு வருமாறு அழைத்தேன். அவரும் காலை 11 மணியளவில் கோவிலுக்கு வந்தார். அங்கிருந்து எனது வீட்டுக்கு அவரை அழைத்து சென்றேன். அங்கு ஆசைக்கு இணங்க செய்யலாம் என திட்டமிட்டேன். அதற்கு செல்விக்கு விருப்பம் இல்லாததை உணர்ந்தேன். ஆசைக்கு இணங்க மறுத்த நிலையில் அவரிடம் கொடுத்த பணமும் வீணாக போச்சே என்று நினைத்த போது அவர் அணிந்திருந்த நகைகள் என் கண்களை உறுத்தின.

    ஏற்கனவே காட்டு பகுதியையொட்டி எனது வீட்டின் அருகே நாய் தொல்லை இருப்பதால் அவற்றுக்கு விஷம் வைக்க, வெள்ளிப்பட்டறையில் பயன்படுத்தும் சயனைடு வாங்கி வீட்டில் வைத்திருந்தது ஞாபகம் வந்தது. அந்த விஷத்தை 10 ரூபாய் குளிர்பானத்தில் கலந்து கொடுத்து செல்வியை கொலை செய்ய திட்டமிட்டேன்.

    அவரிடம் நைசாக பேசி சயனைடு கலந்த குளிர்பானத்தை கொடுத்தேன். குளிர்பானத்தை குடித்த செல்வி சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்து விட்டார். அதன்பிறகு நான் அவரது உடலை தூக்கிச்சென்று சுமாா் 200 மீட்டர் தொலைவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத புதர்பகுதியில் வீசினேன். இதற்கு முன்னதாக செல்வி கழுத்தில் இருந்த தாலி மற்றும் நகை என 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்.

    பின்னர் செல்வியிடம் பறித்த நகையில் தாலிக்கொடியை எனது விவசாய தோட்டத்தில் புதைத்து வைத்தேன். மீதமுள்ள 5 பவுன் நகையை எனக்கு பழக்கமான சேலம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த இன்னொரு செல்வியிடம் கொடுத்து அம்மாபேட்டை நகர கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் நகைக்கடனாக பெற்றேன்.

    அதில் 80 ஆயிரம் ரூபாயை எனது நண்பரிடம் வாங்கிய கடனை அடைத்து விட்டு மீதமுள்ள பணத்துடன், எனது கள்ளக்காதலியை அழைத்துக்கொண்டு ஏற்காட்டுக்கு சென்று அன்று இரவே விடுதியில் அறை எடுத்து தங்கி உல்லாசம் அனுபவித்து வந்தேன். இந்த நிலையில் செல்வியின் செல்போனை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் நான் போலீசிடம் சிக்கி கொண்டேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    போலீசார் பூசாரி குமாரை அழைத்துச் சென்று அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சேலம் சிறையில் அடைத்தனர்.

    கொலையான செல்விக்கு 2 குழந்தைகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிறந்து உடல்நலக்குறைவால் இறந்து விட்டன. இதனால் குழந்தை வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்த செல்வி அந்த கவலையை மறக்க இன்ஸ்டாகிராமில் 200-க்கும் மேற்பட்ட பதிவுகளை இட்டு பிரபலம் அடைந்தார். அவரை 1,200-க்கும் மேற்பட்டோர் பின்பற்றி வந்துள்ள நிலையில், குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் மேலோங்கியது. இந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு திருமலைகிரி பெருமாம்பட்டியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்கு சென்று குழந்தை வரம் வேண்டி வழிபட்ட செல்விக்கும், பூசாரி குமாருக்கும் அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆசைக்கு இணங்க மறுத்த நிலையில் குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து இன்ஸ்டாகிராம் பெண்ணை பூசாரி கொன்ற பயங்கர சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 15-ந்தேதி காலை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற செல்வி மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • போலீசார் பூசாரி குமார், அவரது கூட்டாளி மோகன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர் பட்டி கிராமம் சேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பசவராஜ் (38). இவர் பெங்களூரில் கல் உடைக்கும் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வி (28). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. கடந்த ஓராண்டாக செல்வி குழந்தை பேறுக்காக மருத்துவம் பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி காலை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற செல்வி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது கணவர் பசவராஜ் அக்கம், பக்கத்தில் விசாரித்து பார்த்தார். ஆனாலும் அவரை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இதையடுத்து அவர் தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே சேலம் சிவதாபுரம் அடுத்த திருமலைகிரி அருகே உள்ள பெருமாம்பட்டி பாறைக்காட்டூர் என்ற பகுதியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகில் முட்புதரில் ஒரு பெண் பிணமாக கிடந்தார். இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்த பெண் மாயமான செல்வி என்று தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து தெரியவந்ததும் தாரமங்கலம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது திருமலைகிரி பெருமாம்பட்டியை சேர்ந்த குமார் (42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடந்த 25 ஆண்டுகளாக தனது தோட்டத்தில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் வைத்து வழிபட்டு வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக செல்வி குழந்தை வரம் வேண்டி இந்த கோவிலுக்கு வந்து உள்ளார். அப்போது செல்வி பூசாரி என்ற முறையில் குமாரிடம் பேசி பழகி உள்ளார்.

    அதே போல் சம்பவத்தன்றும் செல்வி வழக்கம் போல் கோவிலுக்கு வந்து உள்ளார். அப்போது பூசாரி குமார், செல்வியை உல்லாசத்துக்கு அழைத்து உள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்து செல்வி மறுத்து விட்டார். இதுப்பற்றி வெளியே சொன்னால் அவமானப்பட்டு விடுவோம் என்று கருதி செல்வியை கொலைசெய்ய முடிவு செய்தார். அதன்படி குளிர்பானத்தில் சயனைடு கலந்து செல்விக்கு கொடுத்து உள்ளார். இதை வாங்கி குடித்த செல்வி சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து இறந்து விட்டார். பின்னர் அவரது உடலை அருகில் உள்ள முட்புதரில் தூக்கி வீசியுள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பூசாரி குமார், அவரது கூட்டாளி மோகன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கோவில் பூசாரியை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவையை அடுத்த கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 61).

    மளிகை கடை நடத்தி வரும் இவர் அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பூசாரியாகவும் உள்ளார்.

    சம்பவத்தன்று அதேபகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் தண்டபாணியின் கடைக்கு சாக்லெட் வாங்க சென்றார். அப்போது தண்டபாணி சிறுமியிடம் நைசாக பேசி வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி வலியால் துடித்து அலறியபடி வெளியே ஓடினார்.

    மறுநாள் பள்ளியில் வைத்து சிறுமி வலியால் துடித்ததை பார்த்த ஆசிரியை அவரிடம் விசாரித்த போது நடந்த சம்பவங்களை சிறுமி கூறினார். அதிர்ச்சியடைந்த ஆசிரியை, சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொண்டு விவரங்களை கூறினர். பின்னர் சிறுமியை சிகிச்சைக்காக கேரளாவுக்கு அழைத்து சென்றனர்.

    இந்நிலையில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவரது உறவினர் ஒருவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தொடர்பு கொண்டு புகார் செய்தார். இதுகுறித்து அவர்கள் கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து சிறுமியின் தாயாரிடம் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் விசாரணை நடத்தினார். மேலும், அவர் அளித்த புகாரின்பேரில் தண்டபாணியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு சட்டத்தின் (போக்கோ) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
    கேரளா மாநிலம் கண்ணூரில் சிறுமியை கற்பழித்த வழக்கில் பாதிரியார் ராபின் வடக்கும்சேரி என்பவருக்கு இன்று 60 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. #Keralapriest #RobinVadakkumchery
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூரில் உள்ள ஒரு  கத்தோலிக்க தேவாலயத்தில் ராபின் வடக்கும்சேரி (51)  என்பவர் பாதிரியாராக இருந்து வந்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 16 வயது சிறுமியை பாதிரியார் கொடூரமாக கற்பழித்துள்ளார். சில மாதங்களில் சிறுமி தனியார் மருத்துவமனை ஒன்றில் குழந்தை பெற்றார்.

    பின்னர்  போலீசாருக்கு அந்த சிறுமி கடிதம் ஒன்றை எழுதி தனது நிலையை விளக்கியுள்ளார்.  இதை தொடர்ந்தே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பின்னர், சிறுமி கற்பழிப்பு தொடர்பாக ராபின் வடக்கும்சேரியை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதாக 5 பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் மீது புகார் கூறப்பட்ட  நிலையில் சில பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும்  தாமாக முன்வந்து கண்ணூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.



    சிறார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளில் தலச்சேரி ‘போஸ்கோ’ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் ராபின் வடக்கும்சேரிக்கு 60 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

    கற்பழிப்பு குற்றச்சாட்டுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் உள்பட மொத்தம் மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து 60 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்த நீதிபதி இந்த தண்டனைகளை குற்றவாளி ஏககாலத்தில் (ஒரே நேரத்தில்) அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். #Keralapriest #RobinVadakkumchery #60yearsimprisonment  
    கோபி அருகே பணியில் இருந்து நிறுத்தப்பட்ட ஆத்திரத்தில் விவசாயியை இரும்பு கம்பியால் தாக்கிய பூசாரியை போலீசார் கைது செய்தனர்.
    கோபி:

    கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்தார்.

    திடீரென அவர் பணியில் இருந்து நிறுத்தப்பட்டார். இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி லோகநாதனின் வீட்டருகே வசிக்கும் விவசாயியான ஈஸ்வரமூர்த்தி (வயது 57) என்பவர் அந்த பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது லோகநாதன் அங்கு வந்தார். அவர் ஈஸ்வரமூர்த்தியிடம் தகராறில் ஈடுபட்டார். ‘‘உன்னால்தான் எனது வேலை போனது. இப்போது வருமானம் இல்லாமல் இருக்கிறேன்’’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.

    பின்னர் ஈஸ்வரமூர்த்தியை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ. 500 பணத்தை பறித்தார். மேலும் அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து ஈஸ்வரமூர்த்தியை தாக்கினார்.

    இது குறித்து கோபி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதனை கைது செய்தனர்.

    பின்னர் அவர் கோபி முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி பாரதி பிரபா உத்தரவிட்டார். இதையடுத்து லோகநாதன் கோபி ஜெயிலில் அடைக்கப்பட்டார். #tamilnews
    அசாம் மாநிலத்தில் தீராத பிரச்சனைகளை தீர்ப்பதாக கூறி பெண்களை கட்டி அணைத்து முத்தம் கொடுத்த சாமியாரை போலீசார் கைது செய்தனர். #AssamPriest
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் மக்களிடத்தில் இன்னும் போதிய கல்வி அறிவு ஏற்படவில்லை. பல மாவட்டங்களில் சாமியார்களை மக்கள் அதிகம் நம்புபவர்களாக உள்ளனர்.

    இதனால் போலி சாமியார்களும் அங்கு தாராளமாக வலம் வருகிறார்கள்.

    தற்போது ஒரு சாமியார் பெண்களை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து தில்லாலங்கடி வேலை செய்து கைதாகி இருக்கிறார்.

    இந்த சாமியார் பெயர் ராமு பிரகாஷ் சவுகான். அங்குள்ள மோரிகான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அவர் வசித்து வந்தார்.

    தனது வீட்டு முன்பு சிறு கோவிலை கட்டி இருந்த அவர், பக்தர்களுக்கு அருளாசி வழங்க தொடங்கினார்.

    தன் மீது கடவுள் விஷ்ணு புகுந்து இருப்பதாகவும் அதன் மூலம் ஆசி வழங்கி தீராத பிரச்சனைகளை தீர்ப்பதாகவும் பிரசாரங்களை மேற்கொண்டார்.

    இதனை நம்பி ஏராளமானோர் அவரிடம் வந்தனர். பக்தர்களை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து அருளாசி வழங்குவது அவரது வழக்கம்.

    பெண் பக்தர்களுக்கும் இவ்வாறு தான் அவர் ஆசி வழங்குவார். ஆனாலும், அதை பொருட்படுத்தாத ஏராளமான பெண்கள் அவரிடம் வந்து ஆசி பெற்றனர்.


    அவர்கள் ஒவ்வொருவரையும் கட்டி அணைத்து முத்தம் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டு இருந்தார்.

    இதன் மூலம் நோய்கள் தீருவதாகவும், வீட்டில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதாகவும், மனதளவில் பாதிப்புகள் குறைவதாகவும் பக்தர்கள் நம்பினார்கள்.

    நாளுக்கு நாள் பெண் பக்தர்கள் வருகை அதிகரித்தது. இதை உள்ளூர் டி.வி. சேனல் ஒன்று படம் பிடித்து ஒளிபரப்பியது.

    இதுபற்றிய தகவல் போலீசுக்கு வந்தது. இதையடுத்து போலீசார் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். சாமியார் மக்களை ஏமாற்றி இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனால் அவரை கைது செய்தனர்.

    சாமியாருக்கு தெய்வீக சக்தி வந்திருப்பதாக அவரது தாயார் தான் மக்களிடம் செய்திகளை பரப்பி வந்தார்.

    இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். #AssamPriest
    அரியானா மாநிலம், பதேஹாபாத் மாவட்டத்தில் தன்னை நாடி வந்த பக்தைகளை கற்பழித்து, சீரழித்ததுடன் வீடியோவாக படம்பிடித்த சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
    சண்டிகர்:

    அரியானா மாநிலம், பதேஹாபாத் மாவட்டம், சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அமர் பூரி. பலக்நாத் கோவிலில் பூசாரியாக உள்ளார். சக்திமிக்க சாமியார் என்று இவரை நாடி வந்த பல பெண்களை இவர் கெடுத்து, சீரழித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைதொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை இரவு சாமியார் அமர் பூரி வீட்டை முற்றுகையிட்ட போலீசார் நடத்திய சோதனையில் பல பெண்களுடன் இவர் இணைந்திருக்கும் ஆபாச சி.டி.க்கள் பிடிபட்டன.


    உடனடியாக அவரை கைது செய்த போலீசார், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அமர் பூரியை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்ததையடுத்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். #haryanagodmanheld #femaledisciples
    கடலூரில் தந்தையின் சதாபிஷேக விழாவில் நாகபாம்பை வைத்து பூஜை செய்த புரோகிதரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான பாம்பாட்டியை தேடிவருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 45). இவர் கடலூரில் உள்ள ஒரு கோவிலில் புரோகிதராக உள்ளார்.

    இவரது தந்தைக்கு 80 வயது பூர்த்தியானதை தொடர்ந்து அவருக்கு சிறப்பாக சதாபிஷேக விழா நடத்த முடிவு செய்தார்.

    நாகபாம்பை வைத்து பூஜை செய்தால் பெற்றோரின் ஆயுள் கூடும் என கருதி அதை வைத்து பூஜை நடத்த திட்டமிட்டார்.

    தந்தையின் சதாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும்படி உறவினர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் விழா நடந்தது. பாம்பாட்டி பழனி ஒரு நாக பாம்பை கொண்டு வந்தார். சுந்தரேசனின் பெற்றோர் முன்பு நாகபாம்பை வைத்து பூஜை செய்யப்பட்டது.

    விழாவுக்கு வந்திருந்த உறவினர்கள் இந்த பூஜையை செல்போன் மூலம் படம் எடுத்தனர். மேலும் செல்பியும் எடுத்துக் கொண்டனர். சதாபிஷேகத்தில் எடுக்கப்பட்ட படங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவியது.

    இது கடலூர் மாவட்ட வனத்துறையினர் பார்வைக்கும் சென்றது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    அதன்பேரில் வனவர் அப்துல் மற்றும் வனத்துறையினர் நாகபாம்பை வைத்து பூஜை செய்தது தொடர்பாக புரோகிதர் சுந்தரேசனிடம் விசாரணை நடத்தினர்.

    வன விலங்கை துன்புறுத்தும் வகையில் அதை பயன்படுத்தியதாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து புரோகிதர் சுந்தரேசனை கைது செய்தனர்.

    பின்னர் அவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நாகபாம்பை பூஜைக்கு கொடுத்த பாம்பாட்டி பழனி தலைமறைவாகி விட்டார். அவரை வனத்துறையினர் தேடிவருகின்றனர்.

    மேலும் சதாபிஷேக விழாவில் கலந்து கொண்டவர்களிடமும் விசாரணை நடத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    ×