search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Opposite parties"

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்காக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வருகிற 28-ந்தேதி டெல்லி வரவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #MamataBanerjee
    புதுடெல்லி:

    மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் மேற்குவங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தீவிரமாக இருக்கிறார்.

    எனவே நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை பாரதிய ஜனதாவுக்கு ஒருங்கிணைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

    இதற்காக ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். சமீபத்தில் டெல்லி வந்த அவர், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது இதுபற்றி விரிவாக ஆலோசனை நடத்தினார்.

    காங்கிரசை பொறுத்த வரை ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறது.

    ஆனால் பாரதிய ஜனதாவுக்கு எதிராக உள்ள சில கட்சிகளுக்கு ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த விருப்பம் இல்லை.

    குறிப்பாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் போன்றவர்கள் இதை விரும்பவில்லை. மம்தாவும் கூட காங்கிரசை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பதில் தயக்கம் காட்டி வருகிறார்.

    இதனால் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இருந்தாலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு ஒருமித்த முடிவுக்கு வர மம்தா பானர்ஜி விரும்புகிறார்.

    இதற்காக அவர் மீண்டும் டெல்லி வர உள்ளார். இந்த மாதம் இறுதியில் டெல்லி வர உள்ள அவர் சில நாட்கள் டெல்லியிலேயே தங்கி இருந்து எதிர்க்கட்சி ஒருங்கிணைப்பு பணிகளை தீவிரமாக்க முடிவு செய்துள்ளார்.

    வருகிற 28-ந்தேதி அவர் டெல்லி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 30-ந்தேதி அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை அவர் கூட்ட உள்ளார். இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேபோல சந்திரபாபு நாயுடுவும் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். 17 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    அப்போது எதிர்க்கட்சிகள் எழுப்பும் சந்தேகங்களுக்கு தீர்வு காணப்படும் என்றும், எதிர்க்கட்சிகள் மத்தியில் இருக்கும் கருத்து வேறுபாடுகள் களையப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    குறைந்தபட்ச கொள்கை திட்டத்தின் அடிப்படையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவது என்று அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

    மேலும் 28-ந்தேதி காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து குழுவாக சென்று தேர்தல் கமி‌ஷன் தலைவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளனர். ஓட்டு எந்திர முறையை மாற்றிவிட்டு பழைய மாதிரி ஓட்டு சீட்டு முறையில் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர்கள் தேர்தல் கமி‌ஷனிடம் வற்புறுத்த உள்ளனர். ஓட்டு எந்திரத்தில் முறைகேடு நடப்பதாக சமீப காலமாக எதிர்க்கட்சிகள் சந்தேகப்படுகின்றன. ஓட்டு சீட்டு முறைதான் இந்த சந்தேகத்தை போக்கும் ஒரே வழி என்பதால் ஓட்டு சீட்டு முறையை வற்புறுத்த இருக்கிறார்கள்.

    இதுமட்டுமல்லாமல் ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல், அசாம் தேசிய குடியுரிமை பட்டியல் பிரச்சினை, கேரள வெள்ளத்திற்கு மத்திய அரசு சரியாக உதவி செய்யாததாக எழுந்துள்ள பிரச்சினை போன்றவை சம்பந்தமாகவும் எதிர்க்கட்சிகள் ஓட்டுமொத்தமாக குரல் எழுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

    கேரள முதல்-மந்திரி பிரனாயி விஜயன் ஏற்கனவே நிதி அயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்திருந்த போது மம்தா பானர்ஜி, சந்திர பாபுநாயுடு, குமாரசாமி ஆகியோரை சந்தித்து பேசினார்.

    தற்போது கேரள வெள்ளத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக சந்திரபாபு நாயுடு, பிரனாயி விஜயனிடம் கூறியுள்ளார். மம்தா பானர்ஜி ரூ.10 கோடி நிதி உதவி அளித்துள்ளார்.

    ரபேல் விமான ஊழல் பிரச்சினையில் பல்வேறு ஆதாரங்கள் இருப்பதாக ராகுல்காந்தி அனைத்து கட்சி தலைவர்களிடம் ஏற்கனவே விளக்கி கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MamataBanerjee
    மத்திய அரசு 14-வது நிதி ஆணைய பரிந்துரைகளையே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் 5 மாநில நிதிமந்திரிகள் மனு அளித்துள்ளனர். #15thFinanceCommision #RamnathKovind
    புதுடெல்லி:

    மத்திய அரசின் சார்பில் நியமனம் செய்யப்பட்ட 14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் 2020ம் ஆண்டோடு முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசு 15-வது நிதி ஆணையக் குழுவை சில மாதங்களுக்கு முன் அமைத்தது. இந்த ஆணையத்தின் தலைவராக வி.கே.சிங் நியமனம் செய்யப்பட்டார்.

    அதன்படி, அந்தக் குழு கொடுத்துள்ள பரிந்துரைகள் 2020ல் இருந்து 2025ம் ஆண்டுவரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, 15-வது நிதி ஆணையத்தின் புதிய பரிந்துரையில், 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கீட்டை வைத்து நிதி ஒதுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு தென்மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. தற்போதைய மக்கள் தொகையை கொண்டு நிதி ஒதுக்கினால், குறைந்த அளவே நிதி கிடைக்கும் என கூறிய தென்மாநில நிதி மந்திரிகள் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் சந்தித்து ஆலோசித்தனர். இந்த கூட்டத்தில் தமிழக நிதிமந்திரி கலந்து கொள்ளவில்லை.

    இந்நிலையில், 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தாமல், நிதி ஒதுக்குவதில் பழைய முறையை பின்பற்ற வேண்டும் என புதுவை முதல்வர் நாராயணசாமி, ஆந்திரப்பிரதேச நிதி மந்திரி யனமலா ராமா கிருஷ்ணுடு மற்றும் கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் நிதி மந்திரிகள் உள்ளிட்டோர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். #15thFinanceCommision #RamnathKovind 
    ×