search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "name add"

    வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதோர், நீக்கல், திருத்தம் விண்ணப்பங்கள் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் வரை பெறப்பட்டு அறிவிப்புக்கு பிறகு 11-வது நாளில் துணை வாக்காளர் பட்டியலாக வெளியிடப்படும்.
    புதுச்சேரி:

    புதுவை துணை தலைமை தேர்தல் அதிகாரி தில்லைவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 31-ந்தேதி வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் யாரேனும் இருப்பின் அவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.

    இதற்கு ஏதுவாக வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த பணி மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பட்டியலில் சேர 1.1.2019 அன்று 18 வயது நிறைவடைந்தவர்களாக இருக்க வேண்டும்.

    மேலும் பொதுமக்கள் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் தொகுதிக்குள் இடமாற்றம் ஆகியவற்றுக்கும் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் வரை பெறப்பட்டு அறிவிப்புக்கு பிறகு 11-வது நாளில் துணை வாக்காளர் பட்டியலாக வெளியிடப்படும்.

    அதன்பிறகு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மனு செய்வதற்கான இறுதிநாள் வரை வாக்காளர் திருத்த பணி நடைபெறும். மறுநாள் துணை வாக்காளர் பட்டியல் 2 மட்டும் வெளியிடப்படும்.

    பொதுமக்கள் தங்கள் வாக்குரிமையை நிலைநாட்டிட தங்கள் வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது உதவி வாக்காளர் பதிவு அதிகாரி, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விபரம் பெற விரும்புவோர் 1950 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக தமிழகத்தில் 20 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. #VoterList #TN
    சென்னை:

    தமிழகத்தில் 2019-ம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்காக கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப்பணிகள் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்று வந்தன.

    பெயர், முகவரி போன்றவற்றை திருத்துவதற்காக வாக்காளர்களுக்காக தமிழகம் முழுவதும் 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 1.1.2019 அன்று 18 வயதை பூர்த்தி செய்யக்கூடிய நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இந்த முகாமில் விண்ணப்பித்தனர். இந்த பணிகள் கடந்த அக்டோபர் மாத இறுதியில் முடிவடைந்தன.

    அந்த வகையில், தமிழகம் முழுவதும் 1.9.2108 முதல் 31.10.2018 வரை பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேற்று வெளியிட்டார்.



    அதன்படி தமிழகம் முழுவதும் இவற்றுக்காக அலுவலகங்களில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் மொத்தம் 20 லட்சத்து 7 ஆயிரத்து 412 பேர் விண்ணப்பித்துள்ளனர். அலுவலகங்கள் மூலமாக 18 லட்சத்து 87 ஆயிரத்து 283 பேரும், ஆன்லைன் மூலமாக ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 129 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 97 ஆயிரத்து 996 விண்ணப்பங்கள், சென்னையில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 434 விண்ணப்பங்கள், காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 984 விண்ணப்பங்களும் தாக்கல் ஆகியுள்ளன.

    பெயர் சேர்ப்புக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் 74 ஆயிரத்து 984 விண்ணப்பங்களும், சென்னை மாவட்டத்தில் 92 ஆயிரத்து 863 விண்ணப்பங்களும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 84 ஆயிரத்து 286 விண்ணப்பங்களும் தாக்கல் ஆகியுள்ளன. தமிழகம் முழுவதும் பெயர் சேர்ப்புக்காக மட்டும் 13 லட்சத்து 11 ஆயிரத்து 861 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன.

    அதிகபட்சமாக சென்னையில் 92 ஆயிரத்து 863 விண்ணப்பங்களும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 8,631 விண்ணப்பங்கள் தாக்கல் ஆகியுள்ளன.

    அனைத்து வகை விண்ணப்பங்களையும் சேர்த்தால், அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 956 விண்ணப்பங்களும், அரியலூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 297 விண்ணப்பங்களும் அளிக்கப்பட்டுள்ளன.

    இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் முறையே பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, தகுதி இருக்கும் விண்ணப்பங்கள் ஏற்கப்படும். வீடுகளுக்கு தேர்தல் அலுவலர்கள் நேரடியாக வந்து சரிபார்ப்பு பணியை மேற்கொள்வார்கள்.

    பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு இனிமேலும் விண்ணப்பங்களை நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். ஆனால் அந்த விண்ணப்பங்கள் வருகிற ஜனவரி 4-ந் தேதி வெளியிடப்படவுள்ள புதிய வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கு பரிசீலிக்கப்படாது. #VoterList #TN

    ‘இதுவரை நடந்த 3 சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க மற்றும் நீக்கம், திருத்தம் செய்ய என தமிழகம் முழுவதும் 11¼ லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்’ என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார். #VoterList
    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கு 3 சிறப்பு முகாம்கள் இதுவரை நடந்து உள்ளன.

    இந்த முகாம்களில் விண்ணப்பம் செய்தவர்கள் பற்றிய விவரம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 1-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து வரும் 31-ந் தேதி தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது.

    இதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த மாதம் 9-ந் தேதி மற்றும் 23-ந் தேதி, கடந்த 7-ந் தேதி ஆகிய நாட்களில் 3 சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடத்தப்பட்டன.

    4-வது இறுதி சிறப்பு முகாம் வரும் 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட உள்ளது. இது தவிர ஆன்லைன் மூலமும் திருத்தம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 3 சிறப்பு முகாம்கள் மூலம் வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொண்டவர்களின் விவரங்கள் தெரியவந்துள்ளது.

    அதன்படி தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க (விண்ணப்பம்-6) 8 லட்சத்து 62 ஆயிரத்து 373 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 57 ஆயிரத்து 972 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 400 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

    பெயர் நீக்கம் செய்ய (விண்ணப்பம்-7) 77 ஆயிரத்து 879 பேரும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள (விண்ணப்பம்-8) 1 லட்சத்து 7 ஆயிரத்து 4 ஆயிரத்து 418 பேரும், முகவரி மாற்றம் செய்ய (விண்ணப்பம்-8) 77 ஆயிரத்து 40 பேர் என மொத்தம் 11 லட்சத்து 24 ஆயிரத்து 710 பேர் நேற்று வரை விண்ணப்பித்துள்ளனர்.

    வெளிநாடுகளில் வசிப்பவர்கள் எவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கவில்லை.

    தொடர்ந்து வரும் 31-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் உள்ளது. மீண்டும் வரும் 14-ந் தேதி அன்று இறுதி சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதனை, பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.



    திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தல் தற்போது நடத்த வேண்டாம் என்று தலைமைச்செயலாளர், தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதி உள்ளார். இதனை தொடர்ந்து இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. மழை மற்றும் வழக்கு விவரங்கள் மாநில அரசுக்கு தான் தெரியும். இருந்தாலும் மாநில அரசு கூறியப்படி இந்த தொகுதிகளில் அதற்கான நிலவரம் இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #VoterList
    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தத்துக்காக இதுவரை 8.25 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். #SatyabrataSahoo #VoterList
    சென்னை:

    தமிழகத்தில் தற்போது வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அக்டோபர் இறுதி வரை நடைபெறும்.

    இதற்காக கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி போன்றவற்றை திருத்துவதற்காக வாக்காளர்களுக்காக தமிழகம் முழுவதும் 23-ந் தேதியன்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 1.1.2019 அன்று 18 வயதை பூர்த்தி செய்யக்கூடிய நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இந்த முகாமில் விண்ணப்பித்தனர்.



    அந்த வகையில் தமிழகம் முழுவதும் நேற்று நடந்த இந்த முகாம்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 937 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 9-ந் தேதி நடந்த சிறப்பு முகாமில் 3 லட்சத்து 83 ஆயிரத்து 233 விண்ணப்பங்கள் வந்தன. அந்த வகையில் சிறப்பு முகாம்கள் மூலம் மொத்தம் 7 லட்சத்து 59 ஆயிரத்து 970 விண்ணப்பங்கள் தாக்கல் ஆகியுள்ளன.

    கடந்த 9 மற்றும் 23-ந் தேதிகளில் நடந்த முகாம்கள் மற்றும் கடந்த 1-ந் தேதி முதல் 22-ந் தேதிவரை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை மொத்தம் 8 லட்சத்து 25 ஆயிரத்து 260 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    அவற்றில் பெயர் சேர்ப்பதற்கு மட்டும் 6 லட்சத்து 31 ஆயிரத்து 127 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 59,882 விண்ணப்பங்கள், நீலகிரி மாவட்டத்தில் குறைந்தபட்சம் 4,278 விண்ணப்பங்கள் தாக்கல் ஆகியுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் 41,363, காஞ்சீபுரம் மாவட்டத்தில் 54,322 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    இந்தத் தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.  #SatyabrataSahoo #VoterList
    ×