search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீக்கல்"

    • திருவாரூரில் நாளை பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடை பெற உள்ளது.
    • இதில் பொது மக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள் மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்ய மனு அளித்து பயன்பெறலாம்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தினை மேம்படுத்திடும் வகையில் பொது வினியோகத் திட்ட பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.

    திருவாரூர் தாலுகா தீபங்குடி கிராமத்தில் திருவாரூர் வருவாய்கோட்ட அலுவலர் தலைமையிலும், நன்னிலம் தாலுகா வேலங்குடி கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், குடவாசல் தாலுகா கூந்தலூர் கிராமத்தில் திருவாரூர் சரக துணைப்பதிவாளர் தலைமையிலும், வலங்கைமான் தாலுகா புலவர் நத்தம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் தலைமையில் நடக்கிறது.

    மேலும் நீடாமங்கலம் தாலுகா பத்தூர் கிராமத்தில் மன்னார்குடி சரக துணைபதிவாளர் தலைமையிலும், மன்னார்குடி நல்லூர் கிராமத்தில் மன்னார்குடி வருவாய்கோட்ட அலுவலர் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி தாலுகா பழையங்குடி கிராமத்தில் திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையிலும், கூத்தாநல்லூர் தாலுகா பாலகுறிச்சி கிராமத்தில் திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குனர் தலைமையிலும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் நடக்கிறது.

    எனவே, அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள் மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்ய மனு அளித்து பயன்பெறலாம்.

    அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள் போன்றவை குறித்த கோரிக்கை மனுக்களை அலுவலர்களிடம் மனு அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×