search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "madurai high court bench"

    பாலியல் புகாரில் சிக்கிய பெரியகுளம் சட்டசபை தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் கதிர்காமுவுக்கு மதுரை ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. #KathirKamu #MaduraiHCBench
    மதுரை:

    தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் டாக்டர் கதிர்காமு. பெரியகுளம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடுகிறார்.

    இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2015-ம் ஆண்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வந்த பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி, கடந்த 8-ந்தேதி தேனி அனைத்து மகளிர் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அ.ம.மு.க. சார்பில் போட்டியிடுகிறேன். எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.



    மனுதாரர் வக்கீல் ஆஜராகி, “மனுதாரர் முக்கியமான அரசியல் கட்சி வேட்பாளராக உள்ளார். அவர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அந்த சமயத்தில் அவரை போலீசார் திடீரென கைது செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.

    அதற்கு அரசு வக்கீல், இன்று (வெள்ளிக்கிழமை) வரை மனுதாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று உறுதியளித்தார். இதையடுத்து முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை 12-ந்தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    அதன்படி இந்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மனுதாரரை தேர்தல் முடியும் வரை கைது செய்யக்கூடாது. தேர்தல் முடிந்த பின்பு மனுதாரருக்கு நோட்டீசு அனுப்பி விசாரணைக்கு அழைக்கலாம். சம்பந்தப்பட்ட போலீசாரின் விசாரணைக்கு மனுதாரர் ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார். #KathirKamu #MaduraiHCBench
    குட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #GutkhaScam #MaduraiHCBench
    மதுரை:

    மதுரையைச் சேர்ந்த கதிரேசன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், குட்கா முறைகேடு தொடர்பாக சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    அப்போது காவல் துறையினர், உயர் அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியினருக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கின. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பலரின் விவரங்கள் இருந்தன.

    இதுகுறித்து அப்போதைய தலைமை செயலர் ராமமோகனராவ், அப்போதைய டிஜிபி அசோக் குமார் ஆகியோரிடம் வருமானவரித்துறை முதன்மை ஆணையர் ஒரு கடிதம் அளித்தார். அதில், குட்கா முறைகேட்டில் தொடர்புள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்திருந்தார்.

    இந்த கடிதத்தை டிஜிபி, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

    இந்நிலையில் குட்கா முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி நான் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தேன். அந்த விசாரணையின் போது, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் தரப்பில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், குட்கா முறைகேட்டில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான எந்த ஆவணமும் அரசு அலுவலகங்களில் இல்லை என கூறியிருந்தார். இதனை ஏற்று எனது வழக்கை லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


    இந்த நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அப்போது குட்கா முறைகேட்டில் டி.ஜி.பி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வருமான வரித்துறையினர் அளித்த சில ஆவணங்கள் சசிகலா அறையில் கைப்பற்றப்பட்டன. இதனை வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

    தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தான் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் அளித்துள்ளார். எனவே அவர் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை தரப்பில் சீலிட்ட உறையில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கு 22-ந் தேதிக்கு (இன்று) நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

    அதன்படி இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    இந்த நிலையில் குட்கா முறைகேடு குறித்து தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பிய ஆதாரத்தை சீலிட்ட கவரில் வருகிற 28-ந் தேதி வருமான வரித்துறையினர் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர். #Gutkha #GutkhaScam #MaduraiHCBench
    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு செய்தார். #SterlitePlant #HCMaduraiBench
    மதுரை:

    தூத்துக்குடியில் இயங்கிய ஸ்டெர்லைட் ஆலையால் மாசு கழிவு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் ஊர்வலம், மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    இந்த சம்பவத்தின் போது போலீஸ் தடியடி, துப்பாக்கிச்சூடு போன்றவை நடந்தது. இதில் 13 பேர் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

    அரசின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டது.

    இதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க வேண்டும், ஆலைக்கு தேவையான மின்சார வசதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை கடந்த வாரம் பிறப்பித்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தபோது தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா சார்பில் வக்கீல் ஹென்றி டிபேன் ஆஜரானார்.

    ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இந்த ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முறையிட்டார்.

    இதனை வழக்காக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். #SterlitePlant #HCMaduraiBench
    ×