search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Josh Hazlewood"

    • இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.
    • ஹேசில்வுட் காயம் காரணமாக முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மும்பை:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கு பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.

    முதலில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அவருக்கு ஏற்பட்ட காயம் குணமாக இன்னும் சிறிது காலம் எடுக்கும் என்பதால் எஞ்சிய போட்டிகளில் இருந்து அவர் விலக உள்ளதாக தகவல் வெளியாகியது.

    இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த ஹேசில்வுட் காயம் காரணமாக முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ், நாதன் லயன் ஃபிட் ஆக இருந்தால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலானதாக இருக்கும் என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். #AUSvIND
    விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் டெஸ்ட் தரவரிசையில் யாரும் தொட முடியாத அளவிற்கு அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் இடத்தை பிடித்தது.

    உள்ளூர் தொடர் முடிந்து தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சென்று விளையாட இருந்தது. அப்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த மூன்று நாடுகளுக்கு எதிராக தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

    ஆனால் தென்ஆப்பிரிக்காவில் 1-2 எனவும், இங்கிலாந்தில் 1-4 எனவும் தொடரை இழந்தது. இன்னும் ஆஸ்திரேலியா தொடர் மட்டுமே பாக்கி உள்ளது. இழந்த பெருமையை ஆஸ்திரேலியா தொடரின்போது மீட்டெடுக்க இந்தியா விரும்புகிறது. இரண்டு தொடர்களை இழந்தாலும் ஐசிசி தரவரிசையில் முதல் இடத்திலேயே நீடிக்கிறது.

    ஆனால், இந்திய பேட்ஸ்மேன்களில் குறைபாடுகளை நீக்காவிடில் அது சாத்தியமற்றது என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில் ‘‘இந்திய அணி இழந்த பெருமையை ஆஸ்திரேலியா தொடரின்போது மீட்டெடுக்க விரும்புகிறது. ஆனால், இந்தியா பேட்டிங் குறைபாடுகளை முதலில் கழைய வேண்டும்.



    தலைசிறந்த வீரர்களான ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாததால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் கேள்விக்குறியே. ஆனால், பந்து வீச்சில் இன்னும் அதிக வலுவாகவே உள்ளது.

    மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் நன்றாக உடற்தகுதியுடன் இருந்தால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலான நேரமாக இருக்கும். இங்கிலாந்தில் காற்றில் பந்து மூவ் மற்றும் சீம் அவர்களுக்கு வழக்கமான பிரச்சனையை உண்டு பண்ணியது. ஆனால் ஆஸ்திரேலியாவில் எக்ஸ்ட்ரா பவுன்ட்ஸ் முக்கிய பிரச்சினையாக இருக்கும்’’ என்றார்.
    நான்கு போட்டிகள் கொண்ட இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கடுமையானதாக இருக்கும் என ஹசில்வுட் தெரிவித்துள்ளார். #AUSvIND
    இந்திய டெஸ்ட் அணி இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியா இதுவரை ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வென்றது கிடையாது. வார்னர், ஸமித், பான்கிராப்ட் இல்லாத அந்த அணியை இந்தியா இந்த முறை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான தொடர் மிகவும் கடுமையானதாக இருக்கும் என ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹசில்வுட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹசில்வுட் கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிராக வருகிற தொடர் மிகவும் கடுமையானதாக இருக்கப்போகிறது. எப்போதுமே கடுமையானதாகத்தான் இருக்கும். நாங்கள் எப்போதும் எங்கள் மண்ணில் அவர்களை துவம்சம் செய்திருக்கிறோம். ஆனால், இந்த முறை அவர்கள் எங்களுக்கு அதிர்ச்சி கொடுக்க அதிக வாய்ப்புள்ளதாக நினைக்கிறார்கள்.



    எங்களது அணியில் ஸ்மித், வார்னர் மற்றும் பான்கிராப்ட் இல்லாததால் வீக்கான அணி என்று நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள் சிறந்த அணியாக உருவெடுக்க முயற்சி செய்வோம். எங்களுடைய மண்ணில் விளையாடும்போது எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் நடைபெற்ற தொடரிலேயே நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம்.

    தொடரை வெல்ல அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால், இறுதியில் 1-2 என தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எங்கள் மண்ணில் அவர்களை ஒருவழி செய்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
    ×