search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jactogeo"

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. #Jactogeo
    சென்னை:

    அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ கடந்த மாதம் 22-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவை தொகையினை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மறியலில் பங்கேற்று கைதானார்கள். இதனால் அரசு துறை பணிகள் மட்டுமின்றி மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டது.

    பெரும்பாலான தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டன. ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்களின் கற்பித்தல் பாதிக்கப்பட்டதால் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்கவும் முடிவு செய்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்த 1529 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதோடு அந்த இடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களையும் பள்ளிக் கல்வித்துறை நியமித்தது.

    போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் மற்றும் 17-பி விதியின்படி மெமோ வழங்கப்பட்டன.

    இதற்கிடையில் அரசு ஊழியர்- ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து 8 நாட்கள் வரை போராட்டத்தை நீட்டித்து கொண்டு சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மாணவர்கள் நலன்கருதி போராட்டத்தை கைவிட்டனர்.

    போராட்டத்தை கைவிட்டாலும் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என அரசு அறிவித்தது. ஸ்டிரைக்கில் ஈடுபட்ட நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு கடந்த மாத சம்பளம் இதுவரையில் வழங்கப்படவில்லை.

    வேலை நிறுத்த காலத்தில் எத்தனை நாட்கள் பணிக்கு வரவில்லை என்ற விவரங்களை சேகரிக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

    தொடக்க கல்வி துறையில் 95 ஆயிரம் பேரும், பள்ளி கல்வி துறையில் 80 ஆயிரம் பேரும் போராட்டத்தில் கலந்து கொண்ட புள்ளி விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு 17-பி ‘மெமோ’ வழங்கப்பட்டன. பலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசும் கொடுக்கப்பட்டுள்ளது. 1529 பேர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. 3 வகையான நடவடிக்கைகள் ஆசிரியர்கள் மீது எடுக்கப்படுகின்றன.

    சுமார் 4 ஆயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சஸ்பெண்டு செய்யப்பட்ட ஆசிரியர்கள் தவிர மீதம் உள்ளவர்களுக்கு தாங்கள் இதுவரையில் பணி செய்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். மேலும் 17-பி ‘மெமோ’ -வின்படி 2 வருடத்திற்கு ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படாது. இதுதவிர 3 வருடத்திற்கு பதவி உயர்வு பட்டியலில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பெயர்கள் பரிந்துரைக்கப்படாது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

    ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள், அமைச்சர்கள், துணை முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். முதல்வரிடம் கலந்து பேசி இதுபற்றி ஆலோசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நடவடிக்கையை கைவிட வேண்டும் என அனைத்து சங்கங்களும் வலியுறுத்தி வரும் நிலையில் கல்வித்துறை நடவடிக்கைக்கான அனைத்து முழு விவரங்களையும் சேகரித்துள்ளது. அரசு நடவடிக்கை எடுக்குமா? கைவிடுமா? என்பது ஒருசில நாட்களில் தெரிய வரும். #Jactogeo
    ஜாக்டோ- ஜியோ போராட்டத்தை சில அன்னிய சக்திகள் தூண்டி விடுகின்றனர். இந்த போராட்டத்தினை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார். #arjunsampath #jactogeo #teachersprotest

    சீர்காழி:

    இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் , சீர்காழியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தருமை ஆதீனத்தின் ஆளுகைக்குட்பட்ட செயல் படக்கூடிய திருக்கடையூர், வைத்தீஸ்வரன்கோயில், சீர்காழி சட்டநாதர் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தாமல் கால தாமதித்து வருவது என்பது பக்தர்களுக்கு வேதனையை ஏற்படுத்தி வருகிறது.

    ஜேக்டோ-ஜியோ அமைப்பு எதிர்க் கட்சிகளால் தூண்டி விடப்பட்டு வருகிறது. ஜேக்டோ ஜியோ அமைப்பு மத்திய, மாநில அரசுகளின் நிர்வாகத்தினை சீர்குலைக்க வேண்டும், மக்களுக்கு அரசாங்கத்தின் எந்த நல்ல திட்டங்களும் சென்றடைய கூடாது என உள்நோக்கத்துடன் ஒரு சில நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர். ஜேக்டோ- ஜியோ அமைப்பை தடை செய்ய வேண்டும்.

    தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக் கூடிய வகையிலும் தேர்தல் வரக்கூடிய இந்த சூழ்நிலையில், கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளக் கூடிய அவசர கால சூழ்நிலையில் அரசு எந்திரத்தை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் இந்த போராட்டம் நடத்திக் கொண்டுள்ளனர். இந்த போராட்டத்தினை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தூண்டி விடுகிறார்.


    ஜேக்டோ- ஜியோ போராட்டத்தினை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அரசாங்கம் தற்காலிக ஆசிரியர் பணிகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்து வருகின்றனர். பொதுமக்கள் மத்தியில் ஜேக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு இல்லை. அரசால் நிறைவேற்றவே முடியாத கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தினை தொடர்கிறார்கள். தலைமை செயலக ஊழியர்களையும், போக்குவரத்து ஊழியர்களையும் இந்த போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு எதிர்கட்சிகள், சில அன்னிய சக்திகள் தூண்டி விடுகின்றனர். இந்த போராட்டத்தினை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.

    தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாவட்டந் தோறும் நவோதயா பள்ளிகளை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்களை பாதிக்காத வகையில் கேபிள் டிவி கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #arjunsampath  #jactogeo #teachersprotest

    ஆசிரியர்கள் பணியில் சேர நாளை காலை 9 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். #JactoGeo #TeachersProtest
    சென்னை:

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று 7வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு காலக்கெடு நிர்ணயித்தது. இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பயிற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு எச்சரித்தது.

    இந்நிலையில், இன்றோடு அவகாசம் முடிந்த நிலையில், நாளை காலை 9 மணி வரை அவகாசம் நீடித்து செய்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தியில்,

    ஆசிரியர்கள் பணியில் சேர நாளை காலை 9 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இன்று பணியில் சேராவிட்டால், பணியாற்றிய இடம் காலிப்பணியிடமாக அறிவிக்கப்படுமெனக் கூறப்பட்டிருந்தது.

    அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவர்கள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களை தற்காலிகமாக ஆசிரியர்கள் மூலமாக நியமனம் செய்ய துறையின் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    எம்.எம்.எஸ். வாட்ஸ் அப், தொலைபேசி அல்லது நேரிலோ தெரிவித்து விட்டு பணியில் சேரலாம். தங்கள் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் தகவல் தெரிவித்துவிட்டு உடனடியாக பணியில் சேரலாம். நாளை பணியில் சேர விரும்பும் ஆசிரியர்கள் தங்கள் அலுவலர்களிடம் தகவல் தெரிவித்து விட்டு சேரலாம்.

    என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #JactoGeo #TeachersProtest
    திருவண்ணாமலை கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பேராட்டத்துக்கு ஆதரவாக வகுப்புகளை புறக்கணித்தனர். கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். #JactoGeo

    திருவண்ணாமலை:

    ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பேராட்டத்துக்கு ஆதரவாக வகுப்புகளை புறக்கணித்தனர். கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளை நிறைவேற்றகோரியும், அரசை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினர்.இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு ஆதரவாக கல்லூரி பேராசிரியர்களும் பணியை புறக்கணித்து புறப்பட்டு சென்றனர்.

    ×