search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HomeMade Sweets"

    மில்க் அல்வாவை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் மில்க் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 1 லிட்டர்,
    சர்க்கரை - 200 கிராம்,
    ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
    எலுமிச்சைச்சாறு - 1/2 டேபிள்ஸ்பூன்,
    பாதாம், பிஸ்தா - தேவையான அளவு
    குங்குமப்பூ - 1 சிட்டிகை,
    மைதா மாவு - 30 கிராம்,
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்.


     
    செய்முறை :

    பாதாமை ஊறவைத்து தோல் நீக்கி நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    பாலை நன்கு கொதித்த வைத்து இறக்கவும்.

    அதிலிருந்து 750 மி.லி. பாலைத் தனியே எடுத்து எலுமிச்சைச்சாற்றைச் சேர்த்து பாலைத் திரிய வைத்து, ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் திரிந்த பாலை ஊற்றி நன்றாக வடிக்கவும். தண்ணீர் முற்றிலும் வடிந்த பின்பு, லேசாகத் தண்ணீர் சேர்த்து பன்னீரை வீணாக்காமல் துணியிலே எலுமிச்சை வாடை போகும் வரை அலசவும். பின்பு இறுக்கப் பிழிந்து தனியே எடுத்து வைக்கவும்.

    அடிகனமான பாத்திரத்தில் மீதியுள்ள பால், மைதா சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அடுப்பில் வைத்து அடிப்பிடிக்காமல் கிளறவும்.

    இத்துடன் சர்க்கரை சேர்த்து கிளறி, சர்க்கரை கரைந்ததும் அதில் நெய், பன்னீரை சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும்.

    கலவைத் திரண்டு வந்ததும் ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ, பாதாம், பிஸ்தாவை சேர்த்து கலந்து இறக்கவும்.

    அகலமானத் தட்டில் நெய்யைத் தடவி, கிளறிய கலவையை கொட்டி பரப்பி விட்டு, சூடு ஆறியதும் விருப்பமான வடிவில் வெட்டி அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான மில்க் அல்வா ரெடி.

    குறிப்பு: 1 டேபிள்ஸ்பூன் சூடானப் பாலில் குங்குமப்பூவைச் சேர்த்து கரைத்து பயன்படுத்தலாம்.

     இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    நாளை கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பிஸ்தா பருப்பை வைத்து சூப்பரான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த பாயாசம் செய்வது மிகவும் எளிமையானது.
    தேவையான பொருட்கள் :

    பிஸ்தா - கால் கிலோ
    ரவை - 50 கிராம்
    சர்க்கரை - தேவைக்கு
    பால் - 1 லிட்டர்
    கன்டென்ஸ்ட் மில்க் - 2 டேபிள்ஸ்பூன்
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
    பிஸ்தா எசன்ஸ் - சிறிதளவு
    நெய் - தேவைக்கு



    செய்முறை:

    பாதி அளவு பிஸ்தாவை பிரித்தெடுத்து அதில் பால் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    மீதமுள்ள பிஸ்தாவை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் நறுக்கிய பிஸ்தாவை கொட்டி வறுத்தெடுக்கவும்.

    பின்பு அதனுடன் ரவையை சேர்த்து கிளறவும்.

    பின்னர் பாலில் அரைத்துள்ள பிஸ்தா விழுதை கொட்டி கிளறவும்.

    அதனுடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்றாக வெந்ததும் கண்டென்ஸ்ட் மில்க், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான பிஸ்தா பாயசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    திரட்டு பால் என்பது பால்கோவா போலதான் இருக்கும். வீட்டிலேயே எளிய முறையில் திரட்டு பால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    பால் - 4 கப்
    சர்க்கரை - கால் கப்,
    பாதாம் - சிறிதளவு,
    ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.



    செய்முறை :

    பாதாமை ஊறவைத்து தோல் நீக்கி மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கனமான அடிப்பாகம் கொண்ட பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் கிளறி விடவும். பால் நன்றாக கொதித்து திரண்டு வரும்போது ஏலக்காய்த்தூள் மற்றும் சர்க்கரை போட்டு நன்றாக கிளறவும்.

    பாலுடன் சர்க்கரை கலந்து கிளற கிளற உதிரி உதிரியாக கட்டியாக வரும். அந்த நேரம் அடுப்பை அணைத்து விட்டு நறுக்கிய பாதாமை சேர்த்து இறக்கி சூடாகவே சாப்பிடலாம்.

    சூப்பரான திரட்டு பால் ரெடி.

    குறிப்பு :

    திரட்டி பால் பாத்திரத்தில் கொதிக்க விடும்போது கிளறி கொண்டே இருப்பது நல்லது. இல்லையெனில் அடிபிடித்து கருகிய வாசனை வந்து விடும். சிலர் பாலை பாத்திரத்தில் காய்ச்ச விடும் முன்னரே 2 டீஸ்பூன் நெய் விட்டு பின் பாலை ஊற்றி காய்ச்சுவர். இதன் மூலம் பாத்திரத்தில் பால் ஒட்டாது கிளற வரும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொட்டுக்கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பொட்டுக்கடலையில் இனிப்பு உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பொட்டுக்கடலை - ஒரு கப்,
    பாகு வெல்லம் - முக்கால் கப்,
    ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை,
    நெய் - சிறிதளவு.



    செய்முறை :  

    வெல்லத்தில் நீர் விட்டு கரைத்து, அடுப்பில் ஏற்றி, கொதிவந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு தயாரிக்கவும்.

    பாகுடன் பொட்டுக்கடலை, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்துக் கலந்து இளம் சூடாக இருக்கும் போதே உருண்டைகளாக பிடிக்கவும்.

    சூப்பரான இரும்பு சத்து நிறைந்த பொட்டுக்கடலை உருண்டை ரெடி.

    இதை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து அதிக நாட்கள் உபயோகிக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து சுவையான பல்வேறு உணவுகளை தயாரிக்கலாம். இன்று மாம்பழத்தை வைத்து பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நன்கு பழுத்த மாம்பழம் - ஒன்று,
    பால் - ஒரு லிட்டர்,
    சர்க்கரை - தேவையான அளவு,
    பாதாம், முந்திரி, பிஸ்தா துருவல் - தலா 3 டீஸ்பூன்,
    ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.



    செய்முறை :

    மாம்பழத்தின் தோல், கொட்டைகளை நீக்கி விட்டு துண்டுகளாக்கி மிக்சியில் கூழாக அரைத்தெடுக்கவும்.

    அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி சிறு தீயில் வைத்து காய்ச்சவும்.

    பால் பாதியாக சுண்டிய பிறகு ஏலக்காய்த்தூள், சர்க்கரை, பாதாம், முந்திரி, பிஸ்தா துருவல் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

    பாலை நன்கு ஆற விடவும்.

    கடைசியாக அதனுடன் அரைத்த மாம்பழ கூழ் சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் குளிரவைத்து பரிமாறலாம்.

    சூப்பரான மாம்பழ பாயாசம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×