search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Urundai"

    காலையில் டிபனாகவும், மாலையில் ஸ்நாக்ஸாகவும் சாப்பிட சத்தான உணவு இந்த அரிசி கடலைப்பருப்பு உருண்டை. இன்று இந்த உருண்டை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - ஒரு கப்,
    துருவிய இஞ்சி, மாங்காய் - சிறிதளவு,
    ஊற வைத்த கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    பச்சை மிளகாய், கொத்தமல்லி விழுது - சிறிதளவு,
    நெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    பச்சரிசியை வெறும் கடாயில் போட்டு வறுத்து ரவை போல் உடைத்து கொள்ளவும்.

    இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவிட்டு, ஒரு டீஸ்பூன் நெய், ஊற வைத்த கடலைப்பருப்பு, உப்பு, துருவிய இஞ்சி, மாங்காய், பச்சை மிளகாய் - கொத்தமல்லி விழுது, பச்சரிசி ரவை சேர்த்துக் கைவிடாமல் கிளறி தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.

    பின்னர் இந்த மாவை உருண்டைகளாகப் பிடித்து, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

    இதை சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொட்டுக்கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பொட்டுக்கடலையில் இனிப்பு உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பொட்டுக்கடலை - ஒரு கப்,
    பாகு வெல்லம் - முக்கால் கப்,
    ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை,
    நெய் - சிறிதளவு.



    செய்முறை :  

    வெல்லத்தில் நீர் விட்டு கரைத்து, அடுப்பில் ஏற்றி, கொதிவந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு தயாரிக்கவும்.

    பாகுடன் பொட்டுக்கடலை, ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்துக் கலந்து இளம் சூடாக இருக்கும் போதே உருண்டைகளாக பிடிக்கவும்.

    சூப்பரான இரும்பு சத்து நிறைந்த பொட்டுக்கடலை உருண்டை ரெடி.

    இதை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து அதிக நாட்கள் உபயோகிக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×