search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "healthcare"

    • ஏர்வாடியில் சுகாதாரமின்றி செயல்படும் ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இங்கு செயல்படும் ஒரு சில ஒட்டல்கள் தவிர பல ஒட்டல்களில் உள்ளே நுழையவே அருவருப்பாகஉள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள பாதுஷா நாயகம் தர்காவிற்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள்வே ண்டுதலுக்காக வருகின்றனர்.

    இங்கு சிறிய ஓட்டல்கள், ரோட்டோர கடைகள் அதிகளவில் செயல்படுகின்றன. அவற்றில் பிரியாணி, சாப்பாடு, இட்லி, தோசை, புரோட்டா ஆகியவை காலை, மாலை, இரவு நேரங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    இங்கு செயல்படும் ஒரு சில ஒட்டல்கள் தவிர பல ஒட்டல்களில் உள்ளே நுழையவே அருவருப்பாகஉள்ளது. சில ஓட்டல்களில் சுத்தம் செய்யப்படாத மேஜை, கழுவப்படாத கிளாஸ், தூசுகளுடன் குடிநீர் தொட்டி, வாழை இலை இல்லாமல் பிளாஸ்டிக் பேப்பரில் உணவு வழங்கப்படுகிறது.

    ஏர்வாடி ஓட்டல்கள், சாலையோர கடைகளில் ஏற்கனவே பலகாரங்கள் தயாரிக்க பயன்படுத்திய எண்ணைகளைமீண்டும் மீண்டும் பயன்படுத்துகி ன்றனர். இதனால் சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடும் பொதுமக்கள் உடல்நலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    இது போன்ற உணவுகளி னால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்தாலும் வேறு வழியில்லாமல் வெளி மாவட்ட பக்தர்கள் இந்த ஓட்டல்களில் உணவு சாப்பிடுகின்றனர்.

    இங்குள்ள சுகாதாரமற்ற ஒட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நெஞ்செரிச்சலுக்கு சில பொதுவான அறிகுறிகள் உள்ளன. ஆனால் சில சமயங்களில் வேறு சில அறிகுறிகள் கூட இருக்கலாம். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    நெஞ்செரிச்சல்: இதனை கூறுபவர் அநேகர். வயிறு, நெஞ்சு, தொண்டை இவற்றில் சங்கடமான உணர்வு இருக்கும். வயிற்றுப் பிரட்டல், வாந்தி கூட இருக்கும். இது பொதுவான அறிகுறிகள். ஆனால் சில சமயங்களில் வேறு சில அறிகுறிகள் கூட இருக்கலாம். அவை

    அடிக்கடி சிலர் தொண்டையில் சற்று கனைத்துக்கொண்டே இருப்பர். சிலர் எச்சிலை வெளியில் துப்புவர். வயிற்றில் ஏற்படும் ஆசிட் தொண்டையில் கிசுகிசுப்பு உணர்வினை ஏற்படுத்தும். இது நெஞ்செரிச்சலின் அமைதி வெளிப்பாடு.

    * இருமல் ஏற்பட்டால் அது மூன்று வாரங்களுக்கு மேல் தொடர்ந்தால் உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதில் நெஞ்செரிச்சலும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    * விழுங்குவதில் சிரமம் இருந்தாலும் அது உடனடியாக  கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

    * தொண்டைவலி தொடர்ந்து இருந்தால் வயிற்றில் ஆசிட் அதிகம் சுரக்கின்றதா என கவனிக்க வேண்டும்.

    * வாயில் அதிக எச்சில் சுரப்பது ஆசிட் தொந்தரவு காரணமாக இருக்கலாம்.

    * புளித்த, கசப்பு உணர்வுகள் வாயில் ஏற்பட்டால் ஆசிட் தொந்தரவு காரணமாக இருக்கலாம்.

    பொதுவான காரணங்கள்:

    * இரவு படுக்கப்போகும் முன் உண்ணக்கூடாது.

    * அதிக பால் சார்ந்த உணவு கூடாது.

    * ஒரே நேரத்தில் அதிக அளவு உண்ணக் கூடாது.

    * புகை பிடித்தல்

    * அதிக மது

    * இவை நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள் ஆகும்.
    எந்நேரமும் ஏசியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சூரிய ஒளியானது போதுமான அளவு கிடைக்காது. தொடர்ந்து ஏசி அறையில் அதிக நேரம் இருந்தால் உடலில் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
    ஏசியின் பயன்பாடு சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். அது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். இதனால் சருமம் வறட்சி அடையும். உதடுகளும் உலர்ந்து போய் விடும். எந்நேரமும் ஏசியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சூரிய ஒளியானது போதுமான அளவு கிடைக்காது. இதனால் வைட்டமின் டி குறைபாடு உருவாகும். ஏசிக்கு நேராக முகத்தை வைத்து உட்காரக் கூடாது. அப்படி உட்கார்ந்தால் சைனஸ் தூண்டப்படும். மூக்கடைப்பு, தலைவலி, காது அடைத்தாற் போல இருப்பது ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஏற்கனவே சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும நோய்கள் உள்ளவர்கள் ஏசியில் அதிக நேரம் அமர்ந்தால் நோய் இன்னும் தீவிரமாகும்.

    இந்த வைட்டமின், கருவுறுதலில் ஆரம்பித்து இதயம், நுரையீரல் சீராக இயங்குவது வரை தேவையான ஒன்றாகும். இது கிடைக்காமல் போனால் எலும்புகள் பலவீனமடையும். மூட்டுவலி, முதுகுவலி போன்றவை எளிதாக வரும். ஒரு சிலருக்கு ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் கூட ஏற்படலாம். தலைவலி, நுரையீரல் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படவும் வழிவகுத்துவிடும். நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் சரும வறட்சி பிரச்சினையை அதிகம் எதிர்கொள்ள நேரிடும். ஏசியில் அதிகநேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு தலைமுடியும் உடைய ஆரம்பிக்கும்.

    கூந்தலின் வலுவும் குறையும். சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும். ஏசியை முறையாக சுத்தம் செய்யாமல் பயன்படுத்துபவர்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு சருமம் பாதிக்கும். அலுவலகத்தில் ஒருவருக்கு காய்ச்சல், அம்மை அல்லது மெட்ராஸ் ஐ போன்ற நோய்கள் இருந்தால், அது மற்றவர்களுக்கும் எளிதில் பரவிவிடும். சிலருக்கு கண்களில் கண்ணீர் சுரக்காமல் உலர்ந்துவிடும். இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்வதன் மூலம் ஏசியால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம்.

    ஒரு நபரின் உடல் வலிமையை மேம்படுத்தவும், அதிகரிக்கவும், பிசியோதெரபி உதவும். காயத்துக்கு பின் ஒருவர் சரியாக எழுந்து நடமாட பிசியோதெரபி உதவுகிறது.
    சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதே பிசியோதெரபி நிபுணரின் வேலை. இது வலி நிவாரணம் மூலமாகவும், உடற்பயிற்சி மூலமாகவும் நடக்கும். காயத்துக்கு பின் ஒருவர் சரியாக எழுந்து நடமாட பிசியோதெரபி உதவுகிறது.

    மூட்டுகளில் இருக்கும் மெல்லிய திசுக்களை அசைத்தல், உடலில் இருக்கும் நச்சை நீக்குதல், தசைகளை தளர்த்து ஓய்வெடுத்தல் என இந்த சிகிச்சை நடக்கும். ஒரு நபரின் உடல் வலிமையை மேம்படுத்தவும், அதிகரிக்கவும், பிசியோதெரபி உதவும். அதே நேரத்தில் இருக்கும் உபாதைகளையும் சரி செய்யும்.

    காயத்தின் தன்மை அல்லது உபாதையின் தன்மையை பொருத்து பிசியோதெரபி நிபுணர் பல்வேறு சிகிச்சை முறைகளைக் கையாளுவார். ஒரு அறுவை சிகிச்சை அல்லது காயத்துக்கு பின், ஒருவரின் உடல் முழுமையாக மீள பிசியோதெரபி மிக முக்கியமானது.

    சிகிச்சை காலம் முழுவதும் தவறாமல் எல்லா பயிற்சிகளையும் அக்கறையுடன் செய்வீர்களென்றால், பிசியோதெரபி உங்களை பரிபூரணமாகக் குணப்படுத்தி, ஆரோக்கியமான, சுதந்திரமான வாழ்க்கை வாழ உதவும்.

    குளிர்காலத்தில் இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சில வகை உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
    குளிர்காலத்தில் இருமல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் சில வகை உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நிலையில் அத்தகைய உணவுகள் உடலை மேலும் பலவீனப்படுத்தும். உடல் உபாதைகள் ஏற்படவும் வழி வகுத்துவிடும். துரித உணவுகள் உடலுக்கு கேடு விளைவிப்பவை. அவை நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் குறைத்துவிடும்.

    தொண்டை எரிச்சல் பிரச்சினையும் அதிகமாகிவிடும். தயிர் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் என்றாலும் குளிர்காலத்துக்கு உகந்ததல்ல. மார்புச்சளி இருக்கும் போது உணவில் தயிர் சேர்த்துக்கொண்டால் அது சளியை இறுக வைத்துவிடும். குளிர் பானங்கள் பருகுவதும் தொண்டை வலியை அதிகப்படுத்திவிடும்.

    வறுத்த உணவு வகைகளையும் சாப்பிடக்கூடாது. அவையும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்திவிடும். காபின் கலந்த பானங்கள், மது பானங்கள் பருகுவதையும் தவிர்க்க வேண்டும். வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த திராட்சை பழம், மிளகுத்தூள், ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, அன்னாசிபழம், கொய்யா போன்றவற்றையும், வைட்டமின் இ சத்துக்களை கொண்ட கீரை வகைகள், பாதாம் மற்றும் சூரியகாந்தி விதைகள், ப்ரோக்கோலி, நெல்லிக்காய், முழு தானியங்கள் போன்றவற்றை சாப்பிடலாம்.

    அதுபோல் செலினியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்திருக்கிறது. அந்த சத்து நிறைந்த இறால், முட்டை, இறைச்சி வகைகளை சாப்பிடலாம். சிக்கன் சூப் பருகுவதும் சளிக்கு இதமாக இருக்கும். கிரீன் டீ பருகுவதும் சளித்தொல்லைக்கு நிவாரணம் தரும். அதில் சளி பிரச்சினைக்கு காரணமான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழிக்கும் ஆற்றல் இருக்கிறது. குறைந்தபட்சம் தினமும் 8 டம்ளர் தண்ணீர் பருகுவதும் அவசியமானது.
    ‘பயம் என்பது குடி, மது, புகையினை விட மிக மோசமானது.’ தொடர்ந்து பயத்திலேயே இருப்பவன் செயற்திறன் அற்றவனாகி விடுகிறான். ‘
    மனிதன் நிலவில் கால் வைத்தான். மற்ற கிரகங்களை தனியே பயணித்து காண துணிகிறான். பல சிலிர்க்க வைக்கும் சாகசங்களை செய்கின்றான். ஆனால் ஒரு தலைவலிக்கும், பல் வலிக்கும் மிகுந்த சங்கடங்கள் கொள்கின்றான். பலருக்கு ஒரு பழக்கம் உள்ளது. விழிப்புணர்விற்காக எழுதப்படும் கட்டுரைகள் டி.வி. நிகழ்ச்சிகளைப் படித்தவுடன், பார்த்தவுடன் எனக்கு அதே போல் தான் இருக்கின்றது. எனக்கு இந்த நோய் பாதிப்பு இருக்கின்றது என்று பயந்து அதிலேயே மூழ்கி விடுவர். பயம் மனிதனின் உணர்ச்சிகளின் வெளிப்பாடு. பலர் எப்பொழுதுமே பயத்திலேயே வாழ்கின்றனர். ஏதோ ஒரு காரணம், நிகழ்வு, கற்பனை, முன் நிகழ்ந்த நிகழ்வின் ஆழ்ந்த பதிவு போன்ற ஏதோ ஒரு காரணத்தினால் எப்பொழுதும் பயத்திலேயே இருக்கின்றனர்.

    ‘பயம் என்பது குடி, மது, புகையினை விட மிக மோசமானது.’  தொடர்ந்து பயத்திலேயே இருப்பவன் செயற்திறன் அற்றவனாகி விடுகிறான். ‘அஞ்சுவதற்கு அஞ்ச வேண்டும்’.

    * பயம் என்ற உணர்வு மனிதனுக்கு கட்டுப்பாட்டினைத் தரும். கடமையை ஒழுங்காய் செய்யும். நல்ல ஒழுக்கத்தினைத் தரும். ஆனால் எல்லைகளைத் தாண்டிய பயம் மனித வாழ்வினை அழித்து விடும்.

    தொடர் பயம் என்பதே ஒரு நோய். இந்த தொடர் பயத்தால்

    * நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
    * இருதய பாதிப்பு ஏற்படும்.
    * ஜீரண உறுப்புகளில் பிரச்சினை ஏற்படும்.
    * குடல் பாதிப்பு அதிகமாய் இருக்கும்.

    * பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு பாதிக்கப்படும்.
    * வயதுக்கு மீறிய மூப்பு தோற்றம் ஏற்படும்.
    * இளவயதிலேயே இறப்பு ஏற்படும்.
    * மறதி அதிகமாகும்.

    * சோர்வு ஏற்படும்.
    * மனஉளைச்சல் அதிகமாகும்.
    * உலகமே பயமானதாகத் தோன்றும்.
    * உடல், நோய் பற்றிய பயம் எப்போதும் இருக்கும்.

    * வெளி உலகத்தோடு பழக முடியாது.
    * தோற்றமே மாறி விடும்.
    * அன்றாட பணிகளை செய்ய இயலாது.
    * இருதய துடிப்பு மிக அதிகமாக இருக்கும்.

    * தசைகள் வலுவிழந்து இருக்கும்.
    * மிக அதிக வியர்வை இருக்கும்.
    * வாய் வறண்டு இருக்கும்.
    * அதிக மூச்சு வாங்கும்.

    இத்தனை பாதிப்புகள் தரும் பயத்தினை தூக்கி எறியுங்கள்.

    தேவையற்ற பயங்களில் இருந்து வெளிவர:

    * பயம் உங்கள் வாழ்வினை உடல் நலத்தினை அழிக்கின்றது என்பதனை நன்கு உணர வேண்டும்.
    * எதனைப் பற்றி நீங்கள் பயப்படுகின்றீர்கள் என ஆழ்ந்து சிந்தியுங்கள். உங்கள் உள் மனமே இதிலிருந்து வெளி வர வழி கூறும்.
    * எதனையும் முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும் என டென்ஷன் பட்டு குறுக்கு வழிகளில் செல்லாதீர்கள்.
    * நிகழ் நொடியில் கவனம் செலுத்துங்கள்.
    நிகழ்நொடியில்தான் பல செயல்களை சாதிக்க முடியும்.

    • வேலை செய்யுங்கள். முழு கவனத்துடன் வேலை செய்யுங்கள்.
    • ‘நான் நன்றாக இருக்கிறேன்’ என உங்களுக்கு நீங்களே அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள்.
    • நீங்கள் தேவை என நினைத்தால் சற்றும் தயங்காது மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெறுங்கள்.
    • நல்ல ஆக்கப்பூர்வமான புத்தகங்களைப் படியுங்கள்.

    • முறையான உணவு மிக முக்கியம்.
    • யோகா, தியானம், உடற்பயிற்சி இவை பெரிதும் உதவும்.
    • கடவுள் நம்பிக்கை உடையவர் என்றால் பிரார்த்தனை செய்யுங்கள்.
    • ஆழ்ந்த மூச்சு பயிற்சி செய்யுங்கள்.
    • வாழ்வில் வெற்றி பெறுவதே உங்கள் கண்களில் தெரிய வேண்டும்.

    ஒவ்வொருவருக்கும் தன்தோற்றத்தினைப் பற்றியும், அவரது நல்ல பண்பு, குண நலன்களை பற்றியும் ஒரு ஆக்கப்பூர்வமான கருத்து இருக்கும். புற்று நோய் போன்ற கடும் நோய்கள் தாக்குதல் ஏற்படும் பொழுதும், சிகிச்சை பெறும் பொழுதும் அவர்கள் தோற்றத்தில், மனதில் சில மாறுதல்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இது அவர்களுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.



    • முடி கொட்டுதல், •எடை கூடுதல் (அ) குறைதல்
    • அறுவை சிகிச்சை தழும்புகள் • மருந்தினால் சில சரும பாதிப்புகள் அவசியம் காரணமாக உறுப்புகளை இழக்க வேண்டி இருத்தல் •சோர்வு போன்றவை ஏற்படலாம்.
    இவை தானே சிறிது காலத்தில் முன்னேற்றம் பெறும் என்றாலும் இவர்களது மன உளைச்சல் இவர்களுக்கு கீழ்கண்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
    • அதிக சோகம் • படபடப்பு •தனிமையிலேயே இருத்தல்

    • பயம் •கோபம் • வெறுப்பு • குற்ற உணர்வு
    • எதிர்காலத்தினைப் பற்றிய கவலை என இருக்கும். ஆனால் சிலர்
    • நவீன மருத்துவ முன்னேற்ற உதவியினைப் ப்றறிய நிம்மதி
    • உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துதல் போன்ற நல்ல பாதிப்புகளையும் வெளிப்படுத்து கின்றனர்.
    இது போன்ற மனதினை குலைக்கும் பாதிப்புகளி லிருந்து வெளிவர கீழ் கூறப்பட்டுள்ள குறிப்புகள் நன்கு உதவும்.

    • எதற்கும் சிறிது காலம் தேவை என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள். இன்று மருத்துவ உலகில் புற்று நோய்க்கு
    மிகசிறந்த மருத்துவ சிகிச்சைகள் உள்ளன.
    * உங்களைப் போன்று பாதிப்பில் இருந்து சிகிச்சையின் மூலம் முன்னேற்றம் பெற்றவர்களுடன் பேசுங்கள். பயம் விலகும்.
    * உங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்களுடன் இருங்கள்.

    * உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள்.
    * எப்பொழுதும் சுறுசுறுப்பாய் இருங்கள்.
    * கண்டிப்பாய் ‘கவுன்சிலிங்’ எடுத்துக்கொள்ளுங்கள்.
    * உங்களது கோபம் உணர்ச்சி பூர்வமானதாக இருக்கும் பொழுது உண்மை களையும், சிகிச்சை முறைகளையும் அறிய தவறிவிடுவோம். எனவே கோபத்தினை கைவிடுங்கள்.
    * சுய பரிதாபம் வேண்டாம்.

    * மருத்துவரிடம் அனைத்து சந்தேகங் களையும் எழுதி வைத்து கேட்டு தெளிவு பெறுங்கள்.
    * தொடர் பயம் என்பது
    நோய் எதிர்ப்பு சக்தியினை வெகுவாய் குறைத்து விடும்.
    * தூக்கமின்மை ஏற்படும்.
    * ஹார்மோன் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்
    * முறையான உணவு எடுத்துக்கொள்ளமை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் உடல் நலம் வெகுவாய் பின்னடையும்.
    ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் உடல் நலம், மன நலம் இரண்டினையும் மேம்படுத்தும் அழிவுப் பூர்வமான சிந்தனைகள் உடல் நலம், மனநலம் இரண்டினையும் அழித்துவிடும் என்பதனை அனைவரும் உணர வேண்டும்.

    உடனடி கவனம் செலுத்த வேண்டிய சில அறிகுறிகள்

    • திடீரென சிறிய விஷயங்களுக்கு அதிக கோபம் வருகின்றதா? மேஜையை தட்டுவது, பல்லைக்கடிப்பது போன்றெல்லாம் இருக்கின்றதா?
    • தூக்கம் மிகக் குறைவாக உள்ளதா?
    • அவசியமில்லாமல் அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் செலவழிக்கின்றீர்களா?
    • வீட்டில் நிகழ்ந்த ஏதோ ஒரு இழப்பு, சோகம் தொடர்ந்து உங்களை பாதிக்கின்றதா?
    உடனடி மருத்துவ உதவி பெறுங்கள்.
    அரிப்பு ஏற்படுவதற்குக் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அரிப்பு ஏற்படுவதற்கான காரணத்தையும் அதனால் ஏற்படக்கூடிய நோய்களை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
    அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம்தான். இதை ‘இம்யூனோகுளோபுலின் – ஈ’ (IgE) என்பார்கள். இந்தப் புரதத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடம்புக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும்.

    மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, ‘லுயூக்கோட்ரின்’ (Leukotriene) எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றன.

    என்ன காரணம்?


    அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.

    குழந்தைகளுக்கு டயாபர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பிட்டத்தில் அரிக்கும். ரப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருள்கள் போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் சிலருக்கு பிளாஸ்டிக் வளையல், தங்க நகை, கவரிங் நகைகளால் அரிப்பு உண்டாகும். குறிப்பாக, ‘நிக்கல்’ வகை நகைகளால் ஏற்படும் அரிப்பு, நம் நாட்டுப் பெண்களுக்கு அதிகம். துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு சில பெண்களுக்கு அலர்ஜியாகி, அரிப்பை ஏற்படுத்துகிறது.

    அப்படி ஆகும்போது தோல் தடிமனாவதுடன், சொரசொரப்பாகிக் கறுத்துப்போகிறது. இந்த இடங்களைச் சொறியச் சொறிய நீர்க் கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கி, தடித்து, நீர் வடிகிறது. இதற்குக் ‘கரப்பான் நோய்’ (Eczema) என்று பெயர். இது வந்துவிட்டால் நாள் முழுவதும் அரிப்பை ஏற்படுத்தும்.

    சிலருக்கு வெயிலும் குளிரும்கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் அலர்ஜியாகி அரிப்பு வரும்; கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும். குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டுத் தோல் வறண்டு அரிப்பு உண்டாகும். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு. இதில் பிரதானமானது பூனை. பூனையின் முடி பட்டால் சிலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்து தடிப்புகள் உண்டாகும்.



    காளான் கிருமிகள் தொடை இடுக்குகளில் புகுந்து அரிப்பை ஏற்படுத்தும். இந்த அரிப்பு இரவு நேரத்தில்தான் மிகத் தீவிரமாகும். அரிப்பு அதிகரிக்க அதிகரிக்க அந்த இடத்தில் அகலமாகப் படை போலத் தோன்றும். கால் விரல் இடுக்குகளில் வருகிற சேற்றுப் புண்ணும் அரிப்பை ஏற்படுத்துகிற ஒரு காரணிதான். தண்ணீரில் அதிகம் புழங்கும் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இந்தத் தொல்லை இருக்கும்.

    அடுத்து, உடல் பருமன் உள்ளவர்களுக்கு அக்குள், இடுப்பின் சுற்றுப்புறம், தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி... இப்படிப் பல இடங்களில் காளான் பாதிப்பு ஏற்பட்டு அரிப்பு தொல்லை கொடுக்கும். இந்த இடங்களில் பாக்டீரியாவும் சேர்ந்துகொண்டால், ‘தோல் மடிப்பு நோய்’ (Intertrigo) தோன்றும். இதுவும் அரிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு நோய்தான். இவை தவிர பேன், பொடுகு, தேமல், சிரங்கு, சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களும் அரிப்பை ஏற்படுத்தும். எறும்பு, கொசு, தேனீ, குளவி, வண்டு, சிலந்தி போன்ற பூச்சிகள் கடித்தாலும், கொட்டினாலும் தோலில் தடிப்பு, அரிப்பு, தோல் சிவந்துபோவது போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

    எச்சரிக்கும் நோய்கள்

    உடலில் இருக்கும் எந்தவொரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. உதாரணம்: சொத்தைப் பல், சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப் பாதை அழற்சி போன்றவை. ஆசன வாயில் அரிப்பு உண்டாவதற்கு ‘நூல் புழு’ காரணமாக இருக்கலாம். குடலில் எந்தப் புழு இருந்தாலும் உடம்பில் அரிப்பு ஏற்படலாம். உடம்பெல்லாம் அரித்தால், உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாகவும் அது இருக்கலாம்.

    தவிர, நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சினை, பித்தப்பைப் பிரச்சினை, ‘மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்’எனும் மூளை நரம்புப் பிரச்சினை, பரம்பரை போன்றவையும் அரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

    உணவும் மருந்தும்

    நாம் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும். முக்கியமாகப் பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்றவற்றைச் சொல்லலாம். வெளிநாட்டுப் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில், அரிப்பை ஏற்படுத்தும் உட்பொருட்கள் குறித்த எச்சரிக்கை இருக்கும். உணவைப் போலவே நாம் சாப்பிடும் மருந்துகளும் அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம். குறிப்பாக, ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, நிமிசுலைட், மலேரியா மருந்துகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதன் காரணமாகத்தான் முதன்முதலில் ஆன்ட்டிபயாட்டிக்ஸ் ஊசி போடுவதற்கு முன் சிறியதாக மருந்தைச் செலுத்தி மருத்துவர்கள் பரிசோதிப்பது வழக்கம்.
    ×