search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gujarat high court"

    • 23 ஐகோர்ட்டு நீதிபதிகளை வேறு மாநில உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரையை வழங்கி உள்ளது.
    • பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டு நீதிபதி ராஜ் மோகன் சிங்கை மத்திய பிரதேச ஐகோர்ட்டுக்கு மாற்றவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான கொலீஜியம் கடந்த 3-ந்தேதி கூடி, 23 ஐகோர்ட்டு நீதிபதிகளை வேறு மாநில உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரையை வழங்கி உள்ளது.

    அதன்படி, அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி விவேக்குமார் சிங், குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி குமாரி கீதாகோபி ஆகிய இருவரையும் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றவும், அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைக்க மறுத்த குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி ஹேமந்த் பிரச்சக்கை, பாட்னா ஐகோர்ட்டுக்கு மாற்றவும், குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி அல்பேஷ் ஒய். கோக்ஜேவையும், பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டு நீதிபதி அரவிந்த் சிங் சங்வானை அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றவும், குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி சமீர் ஜே.தவே, பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டு நீதிபதி அருண் மோங்காவை ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றவும், பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டு நீதிபதி ராஜ் மோகன் சிங்கை மத்திய பிரதேச ஐகோர்ட்டுக்கு மாற்றவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

    இதுபோல, 14 ஐகோர்ட்டு நீதிபதிகளை வேறு உயர்நீதிமன்றங்களுக்கு மாற்ற மீண்டும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

    தேர்தல் வெற்றி செல்லாது என குஜராத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து பாஜக எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை விசாரிக்க உள்ளது. #GujratBJPMLA #CourtTerminatesMLA
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலம் துவாரகா சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாபுபா மானக். இவரது வெற்றியை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளர் மீராமன் ஆகிர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், பாஜக வேட்பாளர் மானக், குறைபாடுள்ள வேட்பு மனுவை தாக்கல் செய்ததாகவும், அதனால் அவரது  வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், துவாரகா எம்எல்ஏ பாபுபா மானக்கின் வெற்றி செல்லாது என 12ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக, இந்த தீர்ப்பிற்கு 4 வாரங்கள் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மானக்கின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஆனால், அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.


    இந்நிலையில், தீர்ப்பை எதிர்த்து பாபுபா மானக், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அடுத்த திங்கட்கிழமை விசாரணையை தொடங்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர். #GujratBJPMLA #CourtTerminatesMLA 
    குஜராத் மாநிலம் துவாரகா தொகுதி பாஜக எம்எல்ஏ பாபுபா மானக்கின் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. #GujratBJPMLA #CourtTerminatesMLA
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் துவாரகா சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாபுபா மானக். இவரது வெற்றியை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளர் மீராமன் ஆகிர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், பாஜக வேட்பாளர் மானக், குறைபாடுள்ள வேட்பு மனுவை தாக்கல் செய்ததாகவும், அதனால் அவரது  வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    இவ்வழக்கு விசாரணையின்போது, மானக்கின் வேட்பு மனுவில் தொகுதியின் பெயரை குறிப்பிடவில்லை என்று கூறி மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மக்கள் அளித்த தீர்ப்பின்படி மானக்கை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.



    இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, துவாரகா எம்எல்ஏ பபுபா மானக்கின் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக, இந்த தீர்ப்பிற்கு 4 வாரங்கள் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மானக்கின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஆனால், அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. #GujratBJPMLA #CourtTerminatesMLA 
    ×