search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐகோர்ட்டு நீதிபதிகள்"

    • 23 ஐகோர்ட்டு நீதிபதிகளை வேறு மாநில உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரையை வழங்கி உள்ளது.
    • பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டு நீதிபதி ராஜ் மோகன் சிங்கை மத்திய பிரதேச ஐகோர்ட்டுக்கு மாற்றவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான கொலீஜியம் கடந்த 3-ந்தேதி கூடி, 23 ஐகோர்ட்டு நீதிபதிகளை வேறு மாநில உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரையை வழங்கி உள்ளது.

    அதன்படி, அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி விவேக்குமார் சிங், குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி குமாரி கீதாகோபி ஆகிய இருவரையும் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றவும், அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைக்க மறுத்த குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி ஹேமந்த் பிரச்சக்கை, பாட்னா ஐகோர்ட்டுக்கு மாற்றவும், குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி அல்பேஷ் ஒய். கோக்ஜேவையும், பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டு நீதிபதி அரவிந்த் சிங் சங்வானை அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றவும், குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி சமீர் ஜே.தவே, பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டு நீதிபதி அருண் மோங்காவை ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றவும், பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டு நீதிபதி ராஜ் மோகன் சிங்கை மத்திய பிரதேச ஐகோர்ட்டுக்கு மாற்றவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

    இதுபோல, 14 ஐகோர்ட்டு நீதிபதிகளை வேறு உயர்நீதிமன்றங்களுக்கு மாற்ற மீண்டும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

    • வைப்புநிதி பெற தகுதி இருப்பதாக 7 நீதிபதிகளும் உரிமை கோரினர்.
    • 7 நீதிபதிகளும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    புதுடெல்லி:

    பாட்னா ஐகோர்ட்டு நீதிபதிகள் சைலேந்திர சிங், அருண்குமார் ஜா, ஜிதேந்திர குமார், அலோக்குமார், சுனில் தத்தா மிஸ்ரா, சந்திரபிரகாஷ் ஜெயின், சந்திரசேகர் ஜா ஆகியோர் மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றி ஐகோர்ட்டு நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றவர்கள் ஆவர்.

    அவர்கள் ஐகோர்ட்டு நீதிபதிகளாக ஆனவுடன், அவர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதி பெற தகுதியில்லை என்று அவர்களது பொது வருங்கால வைப்புநிதி கணக்குகள் முடித்துக் கொள்ளப்பட்டன.

    ஆனால், தங்களுக்கு வைப்புநிதி பெற தகுதி இருப்பதாக 7 நீதிபதிகளும் உரிமை கோரினர். கடந்த டிசம்பர் 13-ந் தேதி அவர்களது கோரிக்கையை மத்திய சட்ட அமைச்சகம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது.

    7 நீதிபதிகளின் சம்பளம் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டது.

    இதை எதிர்த்து 7 நீதிபதிகளும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த மாதம் 24-ந் தேதி மனுக்கள் விசாரணைக்கு வந்தன. கோரிக்கையை பரிசீலிக்குமாறு மத்திய அரசை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

    இந்தநிலையில், நேற்று இம்மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. இடைக்கால நடவடிக்கையாக, 7 நீதிபதிகளின் சம்பளத்தையும் அவர்களுக்கு விடுவிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    மத்திய சட்ட அமைச்சகம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட டிசம்பர் 13-ந் தேதிக்கு முந்தைய நிலை அடிப்படையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்தது. அடுத்தகட்ட விசாரணை 27-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

    ×