search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gary Kirsten"

    • ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார்
    • பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஜேசன் கில்லஸ்பை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

    அண்மையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியை ஷாஹீன் அப்ரிடி ராஜினாமா செய்தார். அதன்பின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார்.

    2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டி வரை சென்றது. ஆதலால் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், 2011ல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி க்ரிஸ்டன் தற்போது பாகிஸ்தான் அணியின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஜேசன் கில்லஸ்பை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அசார் மஹ்மூத், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மே 22 முதல் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு மேற்கொள்ளும் டி20 சுற்றுப்பயணத்தில் இருந்து கிர்ஸ்டன் பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனையடுத்து நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் இந்தியா, அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.

    ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல்-லின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர் என குஜராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கூறியுள்ளார்.

    அகமதாபாத், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக களமிறங்கி சிறப்பாக விளையாடியது. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததுடன், இறுதிப்போட்டிக்குள் நுழைந்து கோப்பையையும் தனதாக்கியது. இந்த சாதனைக்கு அந்த அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதை கூறினாலும், பயிற்சியாளர்களின் பங்களிப்பும் அளப்பரியது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ரா உள்ளார்.

    அவரை அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளரும் ஆலோசகருமான கேரி கிர்ஸ்டன் புகழ்ந்துள்ளார். நெஹ்ரா குறித்து அவர் கூறும்போது, ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல்-லின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவராக விளங்குகிறார்.

    அவர் எனது நெருங்கிய நண்பர். நாங்கள் இருவரும் ஒன்றாக நீண்ட பயணம் செய்துள்ளோம்" என்று கிர்ஸ்டன் கூறினார். "அவர் தனது வீரர்களைப் பற்றி எப்போதும் சிந்தித்து அவர்களுக்கு எப்படி உதவ முடியும் எனது மனதுடன் பயிற்சியளிக்கிறார். மேலும் சிறப்பாக விளையாடுவது எப்படி என்பது பற்றி எப்போதும் தனது வீரர்களுடன் பேசிக் கொண்டிருப்பார்" என்று கிர்ஸ்டன் கூறினார்.

    இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன் விண்ணப்பம் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #GaryKirsten #Coach #IndianWomenCricket
    மும்பை:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவாரின் பதவி காலம் நீட்டிக்கப்படவில்லை. இதனால் புதிய பயிற்சியாளரை நியமிக்கும் முடிவுக்கு வந்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் விருப்பம் உள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது.

    கிப்ஸ், மனோஜ் பிரபாகர், ஓவைஸ் ஷா, மாஸ்கரனாஸ், ரமேஷ் பவார் உள்ளிட்டோர் பதவிக்கு விருப்பம் தெரிவித்த நிலையில், தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டனும் பயிற்சியாளர் போட்டியில் இணைந்துள்ளார். அவரும் விண்ணப்பம் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 51 வயதான கிர்ஸ்டன், இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு 3 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்ததோடு 2011-ம் ஆண்டு உலக கோப்பையை வென்றதிலும் முக்கிய பங்கு வகித்தார்.

    கபில்தேவ் தலைமையிலான இடைக்கால கமிட்டி விண்ணப்பித்தவர்களிடம் வருகிற 20-ந்தேதி நேர்காணல் நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும். #GaryKirsten #Coach #IndianWomenCricket 
    ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் தலைமை பயிற்சியாளராக பணிபுரிய உள்ளேன் என்று ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஆஷிஷ் நெஹ்ரா. இவர் கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகள் உள்பட அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

    அதன்பின் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக செயல்பட்டார். 2018 சீசனில் ஆர்சிபி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி உள்பட அனைவரும் அதிரடியாக நீக்கப்பட்டனர்.



    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் ஆன கேரி கிர்ஸ்டனை தலைமை பயிற்சியாளராக நியமித்தது. இந்நிலையில் ஆர்சிபி அணியில் தான் பந்து வீச்சு பயிற்சியாளராகவும், கேரி கிர்ஸ்டனுடன் இணைந்து தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட போவதாக ஆஷிஷ் நெஹ்ரா  தெரிவித்துள்ளார்.

    ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், புனே வாரியர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
    ×