search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "debt issue"

    • சமீபத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
    • நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே காமராஜர் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 35). இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. சமீபத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் முருகன் சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அவருக்கு கடன் பிரச்சனை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து வந்து முருகன் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெனசியை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவருடைய மனைவி அருணா (25). இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகள் கனிஷ்கா (1 1/2). சரவணன் மெனசியில் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வந்தார். 

    இந்த நிலையில் கனிஷ்காவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு குழந்தையை கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பினர். நேற்று ஏ.பள்ளிப்பட்டியில் சரவணனின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். 

    இதற்காக ஏ.பள்ளிப்பட்டிக்கு சரவணனின் உறவினர்கள் சென்று விட்டனர். நேற்று மாலை அவர்கள் ஊருக்கு திரும்பி வந்தனர். அப்போது உறவினர் ஒருவர் சரவணன் வீட்டுக்கு வந்தார். அங்கு அவர் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய வைத்தது. சரவணன், அருணா, கனிஷ்கா ஆகிய 3 பேரும் விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தனர். உடனே அவர்களை மீட்டு அங்கிருந்து பாப்பிரெட்டிப்பபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சரவணனும், அருணாவும் பரிதாபமாக இறந்தனர். 

    கவலைக்கிடமான நிலையில் இருந்த குழந்தை கனிஷ்காவை அங்கிருந்து சேலம் அரசு ஆஸ்பத்திக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் திருமணம் செய்த கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

    அதுமட்டும் இல்லாமல் சரவணன் சிலரிடம் கடன் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரும் விஷம் குடித்து இறந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்த தற்கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பாவூர்சத்திரம் அருகே கடன் பிரச்சினையில் ஓட்டல் அதிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நெல்லை:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலடியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். (வயது 37). இவர் பாவூர்சத்திரம் பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். சமீபத்தில் இவர் புதுவீடு கட்டி குடியேறினார். இதில் அவருக்கு கடன் ஏற்பட்டது. இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் மனம் உடைந்த ரஞ்சித்குமார் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தொங்கினார். சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது உறவினர்கள், அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த ஆசிரியர் லாட்ஜில் வைத்து வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டம் தூணேரியை சேர்ந்தவர் சந்திரசேகர் (45). இவர் கூக்கல் துறை அரசு உயர் நிலைப் பள்ளியில் இடை நிலை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரோஜினி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    அவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் பே‌ஷன் டெக்னாலஜி இறுதியாண்டு படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு செல்வதாக சந்திர சேகர் தனது மனைவியிடம் கூறி சென்றுள்ளார். இரவு வீடு திரும்பவில்லை. அவர் பள்ளியில் தங்கி இருக்கலாம் என மனைவி நினைத்து கொண்டார்.நேற்று காலையும் அவர் வீடு திரும்பவில்லை. செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட் ஆப் என வந்தது.

    இந்த நிலையில் மேட்டுப் பாளையம் வந்த சந்திர சேகர் அங்குள்ள ஒரு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளார். தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என லாட்ஜ் ஊழியர்களிடம் தெரிவித்து விட்டு அறை கதவை பூட்டி கொண்டார். நீண்ட நேரம் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் மேலாளர் சதிஷ் குமார் மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், ஏட்டு பாலு மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சந்திரசேகர் படுக்கையில் பிணமாக கிடந்தார்.

    படுக்கையில் சாணி பவுடர் சிதறி கிடந்தது. எனவே சந்திரசேகர் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    தற்கொலை செய்து கொண்ட சந்திர சேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அவரது மனைவி சரோஜினிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் உறவினர்களுடன் மேட்டுப்பாளையம் வந்தார்.

    கடன் பிரச்சினை காரணமாக சந்திர சேகர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இவர் கோத்தகிரியில் சொந்தமாக வீடு கட்டி உள்ளார். இதற்காக அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    அதனை கட்ட முடியாததால் மனம் உடைந்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. சந்திரசேகர் மனைவியும் தனது கணவர் தற்கொலைக்கு கடன் பிரச்சினை தான் காரணம் என தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாராபுரம் அருகே தாய்- 2 குழந்தைகளை கொன்று விவசாயி தற்கொலை செய்து கொண்டார். #dharapuramfarmersuicide

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கெத்தல்ரேவ் நடுப்பாளையம் செட்டி தோட்டத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி (38). விவசாயி. இவரது மனைவி செல்வி (33). திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு ராஜலட்சுமி (11) என்ற மகளும், மாணிக்க சத்திய மூர்த்தி (4) என்ற மகனும் இருந்தனர். ராஜலட்சுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

    முத்துச்சாமியுடன் அவரது தாய் மயிலாத்தாள் (70) என்பவரும் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு முத்துச்சாமி தனது தாய் மயிலாத்தாளை வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்தில் தூக்கில் தொங்க விட்டார்.

    பின்னர் தனது 2 குழந்தைகளையும் வீட்டில் விட்டத்தில் தொங்க விட்டு கயிற்றால் இறுக்கினார். இதில் 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். அதன் பின்னர் முத்துச்சாமி வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள வேப்ப மரத்தில் தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    முத்துச்சாமியின் தந்தை வேலுச்சாமி அப் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவர் இன்று காலை மகன் வீட்டிற்கு வந்தார். அப்போது தனது மனைவி, மகன், பேரக் குழந்தைகள் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவர் கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் குண்டடம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தாராபுரம் டி.எஸ்.பி. வேலுமணி, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் திருமலை ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.


    பிணமாக கிடந்த 4 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    4 பேர் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது கடன் பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. முத்துச்சாமி விவசாயத்திற்காக வங்கியிலும், மேலும் பலரிடமும் கடன் வாங்கி உள்ளார்.

    எதிர்பார்த்த அளவு விவசாயம் அமையாததால் கடன் தொல்லையில் தவித்து வந்துள்ளார். இது பற்றி தனது மனைவி செல்வியிடம் கூறி இருக்கிறார். அவர் விவசாய நிலத்தை விற்று கடனை அடைக்கும் படி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக நேற்று கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் கோபித்து கொண்டு செல்வி தனது தாய் வீடான ரங்கபாளையத்திற்கு சென்று விட்டார்.

    கடன் பிரச்சினை , மனைவி கோபித்து சென்றதால் வேதனை அடைந்த முத்துச்சாமி தனது தாய், 2 குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்தது தெரியவந்தது.

    ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சம்பவம் தாராபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #dharapuramfarmersuicide

    ×