search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crane"

    • வெள்ளகோவில் -மூலனூர் ரோட்டில் இருந்து சைக்கிளில் வெள்ளகோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
    • கிரேன் வாகனம் சைக்கிள் மீது மோதியதில் முத்துசாமி பலத்த காயம் அடைந்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள நாச்சிபாளையம், பச்சப்பாளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி (வயது 65) . இவர் நேற்று மாலை வெள்ளகோவில் -மூலனூர் ரோட்டில் இருந்து சைக்கிளில் வெள்ளகோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    பின்னால் வந்த கிரேன் வாகனம் சைக்கிள் மீது மோதியது. இதில் முத்துசாமி பலத்த காயம் அடைந்தார். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் முத்துசாமியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முத்துசாமி இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    • கிரேனை நாமக்கல், கருமானூரை சேர்ந்த பொன்னாமலை(45) என்பவர் ஓட்டினார்.
    • அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று கிரேன் மீது மோதியது. இதில் கிரேன் வாகனம் கவிழ்ந்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடா சலம்(வயது45). பவானி அருகே வரதநல்லூரை சேர்ந்தவர் சுந்தரம்(52). கூலி தொழிலாளி. இருவ ரும் நேற்று மதியம் கிரேன் வண்டியில் சேலம்- கோவை நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

    கிரேனை நாமக்கல், கருமானூரை சேர்ந்த பொன்னாமலை(45) என்பவர் ஓட்டினார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று கிரேன் மீது மோதியது. இதில் கிரேன் வாகனம் கவிழ்ந்தது.

    வாகனத்தில் இருந்த டிரைவர் உள்பட 3பேரும் படுகாயமடைந்தனர். குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரையும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    அமெரிக்காவின் சியாட்டில் நகரில் கட்டுமானத்துக்கு பயன்படும் பளுதூக்கி கிரேன் சாலையில் சென்ற வாகனங்களின் மீது அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். #Cranecollapse #CranecollapseinSeattle
    நியூயார்க்:

    அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் மாநிலத்தின் புறநகர் பகுதியான டவுண்ட்டவுன்  சியாட்டில் நகரில் 5-வது நெடுஞ்சாலை வழியாக நேற்று வழக்கம்போல் வாகனங்கள் விரைவாக சென்று கொண்டிருந்தன.

    பிற்பகல் சுமார் 3 மணியளவில் மெர்கெர் தெரு மற்றும் பேர்வியூ அவென்யூ ஆகிய பகுதிகளுக்கு இடையில் ஒரு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட கட்டுமானத்துக்கு பயன்படும் பளுதூக்கி கிரேன் திடீரென்று பயங்கர சப்தத்துடன் அறுந்து அவ்வழியாக சென்ற கார்களின்மீது வேகமாக விழுந்தது.



    இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, உயிரிழந்தனர். மொத்தம் 6 கார்கள் நசுங்கியதில் காயமடைந்த 8 பேர் மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். #Cranecollapse #CranecollapseinSeattle 
    ×