search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai bus"

    • காயம் அடைந்தவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • விபத்து காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதி 29 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி அரசு பஸ்பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. கடலூர் அருகே உள்ள ரெட்டிச்சாவடி கரிக்கன் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அரசு பஸ் திடீரென்று சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் பயங்கர சத்தத்துடன் மோதி ஏறி நின்றது.

    அந்த சமயம் அரசு பஸ்சுக்கு பின்னால் வந்த தனியார் ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ்சின் பின்புறம் மோதியது. அப்போது பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறினார்கள். இத்தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அரசு மற்றும் ஆம்னி பஸ்சில் பயணம் செய்து காயம் அடைந்தவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


    இந்த விபத்தில் 29பேர்கள் காயம் அடைந்து உள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். விபத்தில் அரசு பஸ் முன்புறம் சிதைந்தது. ரெட்டிச்சாவடி போலீசார் உடனடியாக ஜே.சி.பி. மற்றும் கிரேன் போன்ற வாகனங்கள் மூலம் இடிப்பாட்டில் சிக்கிக் கொண்டிருந்த அரசு மற்றும் ஆம்னி பஸ்சை மீட்டு சாலையின் ஓரமாக நிறுத்தினார்கள். இந்த விபத்து காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    சேலத்தில் இருந்து வந்த சென்னை பஸ்சில் வியாபாரியிடம் ரூ.25 லட்சம் வைர நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    திருச்சியைச் சேர்ந்தவர் தாராசந்த். தங்கம் மற்றும் வைர நகை வியாபாரி. இவர் ஆர்டரின் பேரில் சென்னையில் உள்ள சிறிய நகை கடைகளுக்கு நகைகள் சப்ளை செய்து வருகிறார்.

    இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி சென்னையில் உள்ள கடைகளுக்கு நகைகள் கொண்டு செல்வதற்காக சேலத்தில் இருந்து அரசு பஸ் மூலம் கோயம்பேடுக்கு வந்தார்.

    மதியம் 2மணி அளவில் தாராசந்த் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறங்கிய போது தான் கொண்டு வந்த பையில் வைர நகைகள் அடங்கிய பெட்டி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அதில் 23 வைர வளையல்கள் இருந்தன. பஸ்சில் உடன் பயணம் செய்த மர்ம நபர்கள் வைர நகைகள் இருந்த பெட்டியை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    இதன் மதிப்பு சுமார் ரூ.25லட்சம் ஆகும். தாராசந்த் நகையுடன் பஸ்சில் ஏறுவதை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் அவருடன் வந்துள்ளனர். பின்னர் அவர் அசந்த நேரத்தில் நகையை கொள்ளையடித்து தப்பி சென்று இருப்பது தெரிய வந்துள்ளது.

    இது குறித்து தாராசந்த் கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் இருந்து செல்லும் வெளியூர் பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்து வருவதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். #Diwali

    சென்னை:

    அரசு பஸ்களில் பல்வேறு வகையான கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கப்படுகிறது. சாதாரண பஸ், எக்ஸ்பிரஸ், சூப்பர் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ் என வகைப்படுத்தப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

    பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூருக்கு எக்ஸ்பிரஸ் பஸ் கட்டணம் ரூ.31 ஆகும். ஆனால் ரூ.35 வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு பயணியிடமும் ரூ.4 கூடுதலாக பெறப்படுகிறது. சில்லறை தட்டுப்பாட்டை காரணம் காட்டி முழு தொகையாக வசூலிக்கப்படுகிறது.

    மேலும் சூப்பர் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ் என்ற பெயரில் அதிக கட்டணம் சாதாரண பேருந்துகளுக்கு வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் இருக்க வேண்டிய எந்த வசதியும் இல்லாமல் சாதாரண இருக்கைகள் உள்ள பஸ்களுக்கு அதிக கட்டணம் பெறப்படுகிறது. மேலும் பெரும்பாலான பஸ் நிறுத்தங்களிலும் இந்த பஸ் பயணிகளை இறக்கி, ஏற்றி செல்கின்றனர். அல்ட்ரா டீலக்ஸ் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலித்து வருவதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    சென்னையில் இருந்து திருண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, ஆரணி, வேலூர், வந்தவாசி, காஞ்சீபுரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதற்கு பயணிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    கட்டண விரங்களில் அடங்கிய பட்டியலை பொது மக்களிடம் வினியோகித்து அரசு பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தினர்.

    இதுகுறித்து விழுப்புரம் போக்குவரத்து கழக அதிகாரி கூறுகையில், கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை என்று மறுத்துள்ளார். #Diwali

    ×