search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6000 ரூபாய் திட்டம்"

    தேர்தல் நேரத்தில் மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரமும், தமிழக அரசு ரூ.2 ஆயிரமும் வழங்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். #thirumavalavan #tngovt #centralgovernment #modi

    நெல்லை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது: -

    பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை முதலில் தொடங்கியது தி.மு.க. கூட்டணி தான். ஒவ்வொரு கட்டமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் மொத்தம் 7 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது 1 கட்சிக்கு தொகுதி உடன்பாடு முடிந்தது.

    விரைவில் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன. கூட்டணி தொகுதி பங்கீட்டுக்காக அமைக்கப்பட்ட குழுவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. இதில் எந்தவித தொய்வும் இல்லை. எங்களுக்கு விரைவில் தொகுதி ஒதுக்கப்பட உள்ளது.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இந்த தேர்தலுடன் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறேன். தி.மு.க. கூட்டணி வெற்றி கூட்டணி ஆகும். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்து உள்ளது. பா.ம.க. வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை கேட்டு வாங்கி உள்ளது. இதனால் அ.தி.மு.க.வுக்கு எந்தவித வெற்றி வாய்ப்பும் கிடையாது. மாறாக அ.தி.மு.க., பா.ஜ.க. ஓட்டுகள் பா.ம.க.வுக்கு விழ வாய்ப்பு உண்டு.

    தேர்தல் நேரத்தில் மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரமும், தமிழக அரசு ரூ.2 ஆயிரமும் வழங்குகிறது. அரசு கஜானாவில் இருந்து ஓட்டுக்காக மக்களிடம் பணம் கொடுப்பது போல் இருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் மக்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள்.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும். இதற்கு கவர்னர் தடை போடுகிறார். மோடி அரசு தேர்தல் நேரத்தில் கூட அவர்களை விடுவிக்க மறுக்கிறது.


    முகிலன் மாயமானது பற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வி‌ஷயத்தில் முதல்-அமைச்சர் கவனம் செலுத்தி காவல்துறைக்கு உரிய வழிகாட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #tngovt #centralgovernment #modi

    அரசுப் பணத்தை எடுத்து ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை மோடி இன்று தொடங்கி வைக்கிறார் என்று ப.சிதம்பரம் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
    விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சரும் ஆன ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இன்று இந்திய ஜனநாயகத்திற்கு கறுப்பு நாள். அரசுப் பணத்தை எடுத்து ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார். மோடி அரசு விவசாயத்தை ஐந்து ஆண்டுகள் சீரழித்து விட்டு இன்று ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் ரூ 2000 தரப்போகிறார்கள்!. இது ஓட்டுக்கு லஞ்சம் என்பதைத் தவிர வேறு என்ன?. ஐந்து பேர் கொண்ட ஒரு விவசாயக் குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு ரூ 17. இது உதவித்தொகையா, பிச்சையா, லஞ்சமா?’’ என்று பதிவிட்டுள்ளார்.
    ×