search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "55 பேர் பலி"

    நைஜீரியாவில் இரு தரப்பு மத ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் பலியாகினர். #Nigeria #CommunalViolence
    அபுஜா:

    நைஜீரியா நாட்டின் வட பகுதியில் உள்ள கடுனா மாகாணத்தில் கசுவான் மாகாணி நகரில் ஒரு சந்தை உள்ளது. இந்த சந்தையில் இரு வெவ்வேறு மதங்களை சேர்ந்த சுமை தூக்குகிறவர்கள் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த பிரச்சினை தொடர்பாக, இரு தரப்பு மத ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 55 பேர் பலியாகினர்.

    இந்த மோதல் தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாகாண போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். மேலும் அந்த நகரத்தில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த மத மோதல்கள் குறித்து அந்த நாட்டின் அதிபர் முகமது புகாரி கவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “எந்த மதமும் அல்லது கலாசாரமும் வன்முறையை ஆதரிப்பது இல்லை. சமூகத்தின் முன்னேற்றத்துக்கு அமைதியும், நல்லிணக்கமும் நிலவுவது அவசியம்” என்று கூறினார்.

    மேலும், “வெவ்வேறு மத நம்பிக்கை உள்ள மக்களிடம் நல்லிணக்கம் இல்லாதவரையில், நமது அன்றாட பணிகளை நாம் செய்து முடிப்பது சாத்தியம் இல்லாமல் போய் விடும். இந்த பிரச்சினையில், மத தலைவர்கள் சகிப்புத்தன்மையை ஊக்குவிக்க வேண்டும்; வேற்றுமையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். #Nigeria #CommunalViolence 
    பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பனிமலைகளும், எரிமலைகளும் நிறைந்த நியூசிலாந்து நாட்டின் கெர்மாடெக் தீவில் சுமார் 5.5 ரிக்டர் அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. #Earthquake
    வெலிங்டன்:

    தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பனிமலைகளும், எரிமலைகளும் நிறைந்த நியூசிலாந்து நாட்டின் கெர்மாடெக் தீவில் 5.5 ரிக்டர் அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. 

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்ட அதிர்வை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.  #Earthquake
    அந்தமான் தீவுகளில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Earthquake
    அந்தமான்:

    வங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார் 300 தீவுகளை கொண்ட அந்தமான் தீவுகளில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவானது. 

    பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையமாக நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் லேசான அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மாதம் அந்தமான் தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
     
    முன்னதாக, பெரு - பிரேசில் நாட்டு எல்லையில் சுமார் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. #Earthquake
    ராணுவத்தின் வலிமையை அதிகரிக்கும் விதமாக ராணுவத்துக்கு 55 ஆயிரம் பேரை தேர்ந்தெடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    புதுடெல்லி:

    ராணுவத்தின் வலிமையை அதிகரிக்கும் விதமாக ஆள் எடுப்பது அவ்வப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ராணுவத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஒரே நேரத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையம் 55 ஆயிரம் பேரை தேர்வு செய்து ராணுவத்தில் இணைக்க அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

    சமீப காலமாக ஒரே நேரத்தில் ராணுவத்துக்கு இவ்வளவு பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும்.

    மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை, இந்திய-திபெத்திய எல்லை போலீஸ், மத்திய தொழிலக பாதுகாப்பு படை, சகஸ்திரா சீமா பால், அசாம் ரைபிள்ஸ், தேசிய விசாரணை முகமை ஆகியவற்றில் மொத்தம் 54,953 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய மத்திய பணியாளர் தேர்வாணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

    இதில் ஆண்களுக்கான மொத்த காலி இடங்கள் 47,307 ஆகும். பெண்களுக்கு 7,656 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

    இதில் அதிகபட்சமாக மத்திய ரிசர்வ் படைக்கு 21,566 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு கம்ப்யூட்டர் முறையிலும் தேர்வு நடத்தப்படும்.

    இதுபற்றி ராணுவ இலாகாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “புதிய படைப்பிரிவுகளை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்த புதிய காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது” என்றார். 
    ×