search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2nd marriage"

    வேதாரண்யம் அருகே முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம் போலீஸ் சரகம் தென்னம்புலம் மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வராசு (வயது56). விவசாயி. இவருடைய மனைவி சித்ரா(53). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

    வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூர் பொன்னங்காடு பகுதியை சேர்ந்த மாரியப்பன் மனைவி சாந்தி. இவருக்கு ஒரு மகன் உள்ளார். சாந்திக்கும், மாரியப்பனுக்கும் விவகாரத்து ஆகி விட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் முதல் மனைவிக்கு தெரியாமல் சாந்தியை செல்வராசு 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த முதல் மனைவி சித்ரா, கணவர் செல்வராசுவிடம் கேட்டுள்ளார். அதற்கு சித்ராவை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுபற்றி சித்ரா வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாஸ்கோவில் நடந்த செய்தியாளர்கள் மாநாட்டில் பேசிய 66 வயதான ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், 2-வது திருமணம் செய்யப்போவதாக கூறியுள்ளார். #VladimirPutin #LyudmilaPutina
    மாஸ்கோ:

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் (66). இவர் 1983-ம் ஆண்டு லியுத்மிலா புதினா என்பவரை திருமணம் செய்தார். அப்போது அவர் விமான பணிப்பெண்ணாக இருந்தார்.

    இவர்களுக்கு மரியா (32). கத்ரீனா (35) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமணம் முடிந்து 31 ஆண்டுகளுக்கு பிறகு புதின் கடந்த 2014-ம் ஆண்டு தனது மனைவி லியுத்மிலாவை விவாகரத்து செய்தார்.

    இதற்கிடையே புதினுக்கும், ரஷிய முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா (34) என்பவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை புதின் மறுத்தார்.

    அலினா 3 வயதில் இருந்தே ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்றவர் ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்க பதக்கங்களை வென்று இருக்கிறார். 2 தடவை உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

    சமீபத்தில் மாஸ்கோவில் செய்தியாளர்கள் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட புதினிடம் நிருபர் ஒருவர் அவரது 2-வது திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார்.

    அதற்கு ‘‘நான் ஒரு மதிப்பிற்குரிய நபரை திருமணம் செய்ய இருக்கிறேன்’’ என புதின் சிரித்துக் கொண்டே பதில் அளித்தார். ஆனால் அவரது பெயரை வெளியிட மறுத்துவிட்டார். #VladimirPutin #LyudmilaPutina
    திருமங்கலம் அருகே மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் மதிவாணன். இவரது மகள் செல்விமீனா (வயது 26). இவருக்கும், பரவை எஸ்.எம்.பி. நகரைச் சேர்ந்த சந்திரன் மகன் பாண்டி முருகன் (34) என்பவருக்கும் 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக செல்விமீனா தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இந்த நிலையில் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தியபின்கடந்த ஆண்டு மீண்டும் சேர்ந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் மனைவியை பிரிந்திருந்த காலத்தில் பாண்டிமுருகன் விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் குருலட்சுமி (21) என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது.

    இதை அறிந்த செல்வி மீனா திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த பாண்டிமுருகனை கைது செய்தனர். அவரது தாய் வசந்தி, குருலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    காதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்ததாக வாலிபர் மீது போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக 9 பேர் மீது வழக்குபதிவும் செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் ரம்ஜத்பேகம் (வயது 27). இவரும் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் ஓட்டல் நடத்திவரும் பெரோஸ்கான் (29) என்பவரும் கடந்த 2010-ம் ஆண்டு மதுரையில் காதல் பதிவு திருமணம் செய்தனர். இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளான்.

    இந்தநிலையில் பெரோஸ்கான் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு ரம்ஜத்பேகத்தை துன்புறுத்தியதாக தெரிகிறது.

    இதனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரம்ஜத் பேகம் தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் அவருக்கு தெரியாமல் பெரோஸ்கான் 2-வது திருமணம் செய்துள்ளார்.

    இதற்கு அவரது குடும்பத் தினரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

    இது தெரியவந்ததும் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் ரம்ஜத் பேகம் புகார் செய்தார். அதில் 25 பவுன் நகை மற்றும் ரூ.25 லட்சம் கேட்டு கணவர் மற்றும் குடும்பத்தினர் சித்ரவதை செய்ததாகவும் தனக்கு தெரியாமல் கணவர் 2-வது திருமணம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி பெரோஸ்கான், அவரது தந்தை ரகுபுதீன், தாய் செய்யது அலி பாத்திமா, உறவினர்கள் ஜெப்ரி, தாவீத், அனீபா, பபீதா, யூசுப்,பாத்திமா ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×