என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர்: 9 பேர் மீது புகார்
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் ரம்ஜத்பேகம் (வயது 27). இவரும் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் ஓட்டல் நடத்திவரும் பெரோஸ்கான் (29) என்பவரும் கடந்த 2010-ம் ஆண்டு மதுரையில் காதல் பதிவு திருமணம் செய்தனர். இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளான்.
இந்தநிலையில் பெரோஸ்கான் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு ரம்ஜத்பேகத்தை துன்புறுத்தியதாக தெரிகிறது.
இதனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரம்ஜத் பேகம் தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் அவருக்கு தெரியாமல் பெரோஸ்கான் 2-வது திருமணம் செய்துள்ளார்.
இதற்கு அவரது குடும்பத் தினரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இது தெரியவந்ததும் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் ரம்ஜத் பேகம் புகார் செய்தார். அதில் 25 பவுன் நகை மற்றும் ரூ.25 லட்சம் கேட்டு கணவர் மற்றும் குடும்பத்தினர் சித்ரவதை செய்ததாகவும் தனக்கு தெரியாமல் கணவர் 2-வது திருமணம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி பெரோஸ்கான், அவரது தந்தை ரகுபுதீன், தாய் செய்யது அலி பாத்திமா, உறவினர்கள் ஜெப்ரி, தாவீத், அனீபா, பபீதா, யூசுப்,பாத்திமா ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்