search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீகார்"

    • 5 நாட்களாக எந்த சிகிச்சையும் அளிக்கப்படாமல் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் படுக்கையில் இருந்துள்ளார் நிதிஷ் குமார்.
    • இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சஞ்சீவ் என்பவர் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

    பீகார் மாநிலத்தில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞருக்கு கார்ட்போர்டு அட்டைப்பெட்டியை வைத்து அரசு மருத்துவர்கள் கட்டுப் போட்டுவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் மருத்துவமனை படுக்கையில் உள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    இரு சக்கர வாகன விபத்தில் சிக்கிய நிதிஷ் குமார் என்ற அந்த இளைஞர் முஸாபர்பூர் மாவட்டத்தில் உள்ள மினாபூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அட்டைப்பெட்டிகளை வைத்து கட்டுப் போடப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து அவர் முஸாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக்கல்லூரி அரசு மருத்தவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 5 நாட்களாக எந்த சிகிச்சையும் அளிக்கப்படாமல் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் படுக்கையில் இருந்துள்ளார் நிதிஷ் குமார்.

    இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சஞ்சீவ் என்பவர் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், நிதிஷ் குமாருக்கு விரைவில் உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அரசு மருத்துவர்களின் மெத்தனப் போக்குக்கு கடுமையான கண்டனங்கள் குவிந்து வருகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதில் நிதிஷ்குமார் முக்கிய பங்கு வகிப்பதாக அதிகம் பேசப்படுகிறது.
    • பாஜக ஆதரவுடன் அவர் ஆட்சியில் தொடர்வதை உறுதிப்படுத்தவே மோடியின் கால்களை அவர் தொடுகிறார்.

    நேற்று பீகார் மாநிலம் பாகல்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரசாந்த் கிஷோர் முதல்வர் நிதிஷ்குமாரை தாக்கி பேசினார்.

    அக்கூட்டத்தில் பேசிய அவர், "நிதிஷ்குமாருடன் கடந்த காலத்தில் பணியாற்றிய நான் இப்போது ஏன் அவரை விமர்சிக்கிறேன் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். அப்போது அவர் வித்தியாசமான மனிதர். அவருடைய மனசாட்சி அப்போது விற்கப்படவில்லை.

    ஒரு மாநில முதல்வர் என்பது அம்மாநில மக்களின் பெருமை. ஆனால், மோடியின் பாதங்களைத் தொட்டதால் பீகாருக்கு நிதீஷ் குமார் அவமானத்தை ஏற்படுத்தினார்.

    நிதிஷ்குமாரின் கட்சி மக்களவை தேர்தலில் 12 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் தவித்த பாஜகவின் இரண்டாவது பெரிய கூட்டணி கட்சியாக உருவெடுத்தது.

    மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதில் நிதிஷ்குமார் முக்கிய பங்கு வகிப்பதாக அதிகம் பேசப்படுகிறது. ஆனால் பீகார் முதல்வர் தனது பதவியை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்? பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தனது செல்வாக்கை அவர் பயன்படுத்தவில்லை.

    2025 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும், பாஜக ஆதரவுடன் அவர் ஆட்சியில் தொடர்வதை உறுதிப்படுத்தவே மோடியின் கால்களை அவர் தொடுகிறார்" என்று காட்டமாக தெரிவித்தார்.

    பிரதமர் மோடியின் பதவிப் பிரமாணத்திற்கு முன்னதாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதங்களைத் தொட்டு நிதீஷ் குமார் வணங்கியதைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • பீகாரில் இருந்து குழந்தைகளை கடத்தி வந்து இங்கு விற்பனை செய்ததாக புகார்.
    • குழந்தைகளை கடத்தி விற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    கோவை:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவருடைய மனைவி அஞ்சலி தேவி. இவர்கள் கோவையை அடுத்த சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் ஓட்டல் நடத்தி வந்தனர்.

    இவர்கள் பீகாரில் இருந்து குழந்தைகளை கடத்தி வந்து இங்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் மகேஷ்குமார், அஞ்சலி தேவி ஆகியோரை சூலூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு ஆண் குழந்தை, பெண் குழந்தையை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்தி, மீட்கப்பட்ட பெண் குழந்தையை விலை கொடுத்து வாங்கியதாக திம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஜயன் என்பவரை கைது செய்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாக அஞ்சலி தேவியின் தாயார் பூனம் தேவி(61), தங்கை மேகாகுமாரி(21) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மொத்தம் இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.

    மகேஷ்குமாரும், அஞ்சலி தேவியும், தனது தாய் பூனம் தேவி மற்றும் தங்கை மேகாகுமாரி உதவியுடன், பீகாரில் வறுமையில் தவித்த குடும்பத்திடம் இருந்து அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்குவதாக கூறி ரூ.1500 கொடுத்து வாங்கியுள்ளனர்.

    பின்னர் அந்த குழந்தையை கோவைக்கு கொண்டு வந்து தனது மகள் மற்றும் மருமகனுடன் சேர்ந்து, விஜயனிடம் ரூ.5 லட்சம் வரை பேரம் பேசியுள்ளனர். கடைசியாக இரண்டரை லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விஜயனுக்கு விற்பனை செய்துள்ளனர்.

    இதேபோல மற்றொரு ஆண் குழந்தையையும் குறைந்த விலைக்கு வாங்கி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    இவர்கள் மேலும் சில குழந்தைகளை கடத்தி விற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். 

    • 57 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு.
    • தாய்க்கு இறுதிச் சடங்குகளை மேற்கொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தலின் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமாக வந்து வாக்களித்தனர். இன்று மட்டும் 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

    அந்த வகையில், பீகார் மாநிலத்தின் ஜெகானாபாத்தின் தேவ்குல்லி கிராமத்தை சேர்ந்தவர் மிதிலேஷ் யாதவ். இவரது தாயார் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். எனினும், இவர் முதலில் வாக்களித்து விட்டு அதன்பிறகு தாயாருக்கு இறுதிச் சடங்கு செய்வதென முடிவு செய்துள்ளார். அதன்படி இவரது குடும்பத்தினர், முதலில் வாக்களித்து விட்டு, அதன்பிறகு தான் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டனர்.

    இது குறித்து பேசிய மிதிலேஷ் யாதவ், "உயிரிழந்த தாய் மீண்டும் வரப்போவதில்லை. அவருக்கான இறுதிச் சடங்குகள் காத்திருக்கலாம், ஆனால் தேர்தல் காத்திருக்காது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தான் மீண்டும் தேர்தல் வரும்."

    "இதனால் எங்களது குடும்பத்தினர் முதலில் வாக்களித்துவிட்டு, அதன்பிறகு எங்களது தாயாரின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்," என்று தெரிவித்தார்.

    • 127 டிகிரி பாரன்ஹுட் (52.9 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவானது.
    • 80 சதவீத மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெயில் தொடர்ந்து பதிவாகி வருகிறது.

    டெல்லியில் கடந்த 29-ந்தேதி நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவாக 127 டிகிரி பாரன்ஹுட் (52.9 டிகிரி செல்சியஸ்) வெயில் பதிவானது.

    வெயிலின் தாக்கம் அதிக மாக உள்ளதால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தண்ணீர் தட்டுப்பாடும், மின்வெட்டு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்கு மாறு மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.

    வெப்ப அலை பாதிப்பால் நேற்று மட்டும் உத்தர பிரதேசத்தில் 17 பேரும், பீகாரில் 14 பேரும், ஒடிசா வில் 10 பேரும், ஜார்க்கண் டில் 4 பேரும் உயிரிழந்தனர். இந்த மாநிலங்களில் 1,300-க்கும் மேற்பட்டோர் வெயில் பாதிப்பால் மருத்துவமனை களில் சிகிச்சைப் பெற்று வரு கின்றனர்.

    மத்திய, கிழக்கு மற்றும் வட இந்தியாவில் குறை யாமல் வெப்ப அலை தொடர்ந்து வரும் நிலையில் நேற்று வரை குறைந்தது 54 பேர் வெப்ப வாதத்தால் உயிரிழந்தனர். அதிகபட்ச மாக பீகாரில் 32 பேர் வெப்ப வாதத்தால் உயிரிழந்து விட்டனர்.

    வெப்ப அலை தொடரும் என்பதாலும், வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருவதாலும் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்பட்டது. அதை உறுதிப்படுத்துவது போல வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்து இருக்கிறது.

    இன்று காலை நிலவரப் படி கடந்த 36 மணி நேரத்தில் மட்டும் வெயில் தாக்கத்தால் சுருண்டு விழுந்தவர்களில் 45 பேர் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒடிசா, பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களிலும் வெயில் தாக்கம் மிக மிக அதிகளவு காணப்படுகிறது.

    குறிப்பாக காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வெளியே வர முடியாத அளவுக்கு அனல் காற்று வீசுகிறது. இதனால் வட மாநிலங்களில் 80 சதவீத மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் வெப்ப அலை பாதிப்பால் நேற்று உயிரிழந்த 17 பேரில் 15 பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டி ருந்த ஊழியர்கள் ஆவர்.

    தீவிர காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புக்கு உள்ளான இவர்கள் மிசாபூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    பீகாரில் வெப்ப பாதிப் பால் உயிரிழந்த 14 பேரில் 10 பேர் தேர்தல் பணியாளர்கள் ஆவர்.

    • பீகாரில் பள்ளிக்கூட மாணவிகள் வெப்ப அலையால் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர்.
    • இதனால் பீகாரில் ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    பாட்னா:

    இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் கடும் வெப்பம் நிலவிவருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது.

    டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் வெப்ப காற்று வீசுகிறது.

    பீகாரின் செய்க்புரா என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்துவந்த மாணவிகள் வெப்ப அலையால் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி வழங்கி, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், பெகுசாராய் என்ற இடத்திலும் மாணவிகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இதற்கிடையே, வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகாரில் ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முதல் மந்திரி நிதிஷ் குமார் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், பீகாரில் வெப்ப அலை காரணமாக தேர்தல் அலுவலர் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, வெப்ப அலையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மதிய நேரத்தில் யாரும் அவசியம் இன்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பீகார் அரசு அறிவுறுத்தியுள்ளது.

    • பீகாரில் கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது.
    • வெப்பம் அதிகரித்ததால் மாணவிகள் மயக்கம் அடைந்தனர்.

    பாட்னா:

    இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் கடும் வெப்பம் நிலவிவருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது.

    டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் வெப்ப காற்று வீசுகிறது. அதனால் பகல் நேரங்களில் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, பீகாரின் செய்க்புரா என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்துவந்த மாணவிகள் வெப்ப அலையால் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு தண்ணீர் வழங்கி முதலுதவி வழங்கி, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், பெகுசாராய் என்ற இடத்திலும் மாணவிகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இந்நிலையில், வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகாரில் ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்ட முதல் மந்திரி நிதிஷ் குமார், வெப்ப அலை பாதிப்புகளை எதிர்கொள்வது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் உத்தரவிட்டார்.

    • தேர்தல் பரப்புரையின் போது ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் பங்கேற்றிருந்த மேடை லேசாக கீழே இறங்கியது.
    • இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    பீகார் மாநிலம் பாட்லிபுத்ரா தொகுதியில் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக இன்று ராகுல்காந்தி வாக்கு சேகரித்தார். அவருடன் பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உடன் இருந்தார்.

    இந்நிலையில், தேர்தல் பரப்புரையின் போது ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் பங்கேற்றிருந்த மேடை லேசாக கீழே இறங்கியது.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ராகுல் காந்தி இருக்கும் மேடை திடீரென கீழே சாய்ந்தது. அவரின் பாதுகாவலர்கள் விரைவாகச் செயல்பட்டு ராகுலை பிடித்தனர். எதிர்பாராதவிதமாக இந்த விபத்து நடந்த போதிலும், ராகுலுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த நிகழ்வை பதற்றப்படாமல் ராகுல் காந்தி சமாளித்தார்.

    • முஸ்லீம் வாக்கு வங்கிக்காக இந்தியா கூட்டணி முஜ்ரா நடனம் ஆடுவதாக பீகாரில் நடந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
    • வெயிலில் அலைந்து உரைகளை ஆற்றுவது அவரது மூளையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    முஸ்லீம் வாக்கு வங்கிக்காக இந்தியா கூட்டணி முஜ்ரா நடனம் ஆடுவதாக பீகாரில் நடந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

    பீகாரில் பாடலிபுத்ரா மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற பேரணிகளில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "எஸ்.சி, எஸ்.டி ஓபிசி மக்களின் உரிமைகளைப் பறித்து, அவற்றை முஸ்லிம்களுக்குத் வழங்கும் இந்தியா கூட்டணியில் திட்டங்களை நான் முறியடிப்பேன். அவர்கள் அடிமைகளாக இருந்துகொண்டு தங்கள் வாக்கு வங்கியை தக்கவைக்க 'முஜ்ரா' நடனம் ஆடுகின்றனர் என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பிரதமரின் கருத்துக்கு கட்டணம் தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தனது எக்ஸ் பக்கத்தில், "இன்று, பிரதமரின் வாயிலிருந்து 'முஜ்ரா' என்ற வார்த்தையை நான் கேட்டேன். மோடிஜி, இது என்ன மனநிலை? நீங்கள் ஏன் ஏதாவது மருந்து எடுத்துக்கொள்ளக் கூடாது? அமித் ஷாவும், ஜேபி நட்டாவும் அவருக்கு உடனடியாக மோடிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். வெயிலில் அலைந்து உரைகளை ஆற்றுவது அவரது மூளையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

     

     

    திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலேவும் மோடியின் கருத்துக்கு கண்டம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், அந்த மனிதர் (மோடி) இப்போது 'முஜ்ரா' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் நிலைக்கு வந்துள்ளார். 10 வருட விளம்பரத்தால் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தில் மறைந்திருந்த மோடி தனது உண்மையான சுயரூபத்தை காட்டத் தொடங்கியுள்ளார். அவர் பயன்படுத்தியது மலிவான மொழி குறிப்பிட்டுள்ளார்.

    ஆர்ஜேடி கட்சி எம்.பி மனோஜ் ஜா கூறுகையில், நேற்று வரை அவருடன் (மோடி) கருத்து வேறுபாடு இருந்தபோதிலும் நாங்கள் இப்போது அவரைப் பற்றி கவலைப்படுகிறோம். 'மட்டன், 'மங்களசூத்ரா', 'முஜ்ரா', இதுதான் ஒரு பிரதமர் பேசக்கூடிய மொழியா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

     

    சிவசேனா காட்சியைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, பிரதமரின் உரையின் வீடியோ கிளிப்பைப் பகிரும்போது, "மோடி ஜி விரைவில் குணமடையுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக இஸ்லாமிய பாரம்பரிய நடனமாக இருந்த முஜ்ரா காலப்போக்கில் மாறி, தற்போது கலியாட்டங்களுக்காக மாறுபட்ட வகையில் நடந்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    • இன்று (மே 21)காலை பிகாரி தாக்கூர் சவுக்கிற்கு அருகிலுள்ள படா டெல்மா பகுதியில் நடந்த மோதலின்போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
    • இந்த நிகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பீகார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், தோல்வி பயத்தில் சிலர் இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

    மக்களவைத் தேர்தல் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று (மே 20) மகாராஷ்டிரா, பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கிய தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்திலும் நேற்று வாக்குப்பதிவு நடந்த நிலையில் அங்குள்ள பாஜக மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி ஆதரவாளர்கள் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி மோதலில் ஈடுபட்டு வருகின்றார்.

    இன்று (மே 21)காலை பிகாரி தாக்கூர் சவுக்கிற்கு அருகிலுள்ள படா டெல்மா பகுதியில் நடந்த மோதலின்போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இறந்தவர் சந்தன் யாதவ் (25) என அடையாளம் காணப்பட்டார். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

     

     

    பின்னர், அவர்களில் இருவர் மேல் சிகிச்சைக்காக பாட்னாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் மோதல் வலுவடைவதைத் தடுக்க சரண் மாவட்டத்தில் 48 மணி நேரத்துக்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்வுகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பீகார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், தோல்வி பயத்தில் சிலர் இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார். 

    • வாக்கு வங்கியைக் கண்டு பா.ஜ.க. பயப்படவில்லை.
    • பீகாருக்கு தேவை காட்டாட்சியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் தேவை.

    பாட்னா:

    பீகாரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பா.ஜ.க. வெற்றி பெற்றால் சீதாமர் ஹியில் அன்னை சீதா தேவிக்கு பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவோம் என வாக்குறுதி அளித்தார்.

    வாக்கு வங்கியைக் கண்டு பா.ஜ.க. பயப்படவில்லை. பிரதமர் மோடியால் தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது சாத்தியமானது. அதேபோல் சீதா அன்னை பிறந்த இடமான சீதாமர்ஹியில் அவருக்கு கோவில் கட்ட வேண்டிய கடமை நமக்கு பாக்கி இருக்கிறது. இதனை நிறைவேற்ற பிரதமர் மோடியால் மட்டும்தான் முடியும். நம்மை ஒதுக்கி வைத்தவர்கள் யாரும் இதனை செய்து முடிக்க முடியாது.

    லாலு பிரசாத் யாதவ் அதிகார அரசியலுக்காக தன் மகனை முதல்வராக்குவதற்காக பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரை எதிர்ப்பதையே வாழ்நாள் கடமையாக கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மடியில் போய் அமர்ந்துள்ளார்.

    பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்குவோம் என்று காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளமும் ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அதை மோடி அரசு செய்து முடித்தது. பீகாருக்கு தேவை காட்டாட்சியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் தேவை.

    இவ்வாறு அமித்ஷா பேசினார்.

    இந்து புராணங்களின்படி, ராஜா ஜனகன் சீதாமர்ஹிக்கு அருகில் வயலில் உழுது கொண்டிருந்த போது ஒரு மண்பானையில் இருந்து ராமனின் மனைவியான சீதை உயிர்பெற்றாக கூறப்பட்டுள்ளது.

    பீகாரில் உள்ள சீதாமர்ஹி தொகுதிக்கு மே 20-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2019 பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 39 இடங்களில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • பசுவதை தொடர்பான வழக்குகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • பாஜக ஆட்சிக்கு வந்தால் பசுவதை மற்றும் பசு கடத்தலை அனுமதிக்காது.

    பீகார் மாநிலத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மதுபானி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "அயோத்தியில் ராமர் கோவில் காட்டியது போல பீகார் மாநிலத்தில் சீதா கோவில் கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

    மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வர வேண்டும் என்று இந்திய மக்கள் முடிவு செய்துள்ளனர். இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? மு.க.ஸ்டாலினா மம்தா பேனர்ஜியா லாலு பிரசாத் யாதவா? என்று கேள்வி எழுப்பினார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விடுமுறையை பேங்காக்கில் செலவிடுகிறார். பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை இந்திய ராணுவத்தினருடன் கொண்டாடுகிறார். மஹாபாரதத்தை போலவே இங்கும் 2 முகாம்கள் உள்ளன. ஒன்று பாண்டவர்கள் முகாம், இன்னொன்று கௌரவர்கள் முகாம்.

    இப்பகுதியில் பசுவதை தொடர்பான வழக்குகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாஜக ஆட்சிக்கு வந்தால் பசுவதை மற்றும் பசு கடத்தலை அனுமதிக்காது.

    சீதையின் தேசமான இங்கு, பசுவதையை ஏற்க முடியாது. மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வந்தால், பசுவதை செய்வோரை தலை கீழாக தொங்க விடுவோம் என உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் பசுக்களை கடத்தியதாக பல பேரை பசு பாதுகாப்பு கும்பல் அடித்து கொலை செய்துள்ளது. இந்நிலையில், பசு பாதுகாப்பு கும்பலின் கொலைகளை ஆதரிக்கும் விதமாக, பீகாரில் தேர்தல் பரப்புரையில் அமித்ஷா பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    ×