என் மலர்
அமெரிக்கா
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஜெர்மனியின் டேனியல் ஆல்ட்மயர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜெர்மனி வீரர் முதல் செட்டை 7-6 (7-5) என கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக சிட்சிபாஸ் அடுத்த இரு செட்களை 6-1, 6-4 என வென்றார்.
இதில் சுதாரித்துக் கொண்ட டேனியல் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-3, 7-5 என வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் சிட்சிபாஸ் 2வது சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.
- அமெரிக்காவின் துணை அதிபராக டிஜே வான்ஸ் இருந்து வருகிறார்.
- கடைசி 200 நாட்களில் தலைமை பதவிக்கான பயிற்சிக்கு தயாராகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் ஜே.டி. வான்ஸ், தன்னுடைய தற்போதைய பணி, அமெரிக்காவில் பயங்கரமான சோகம் நடைபெற்றால், தன்னை தலைமை பதவியை ஏற்பதற்கு தயார்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பமுடியாத வகையில் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்த வான்ஸ், டிரம்ப் தனது பதவிக்காலம் வரை பணியாற்றுவார் எனத் தெரிவித்தள்ளார்.
USA Today பத்திரிகைக்கு பேட்டியளித்த அவி ஜே.டி. வான்ஸ், டொனால்டு டிரம்பின் உடல் நலம் குறித்து கேள்வியை புறந்தள்ளினார்.
பயங்கரமான சோகம் நடைபெற்றால், தற்போது கடந்த 200 நாட்களுக்கு மேலான நான் என்ன செய்தனோ, அதைவிட சிறந்த பயிற்சி வேலை இருப்பதாக நினைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஜே.டி. வான்ஸ் இந்திய வம்சாவளி பெண்ணை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தானும், தன்னுடைய மனைவி உஷாவும் தற்போதுள்ள வேலையில் கவனம் செலுத்தி வருவதாகவும், ஒருவேளை கூடுதல் பதவிக்கான (அமெரிக்க ஜனாதிபதி) கதவு திறக்கப்பட்டார், அப்போது அதுகுறித்து சிந்திப்போம் எனவும் வான்ஸ் தெரிவித்துள்ளார்.
79 வயதாகும் டொனால்டு டிரம்பின் உடல்நிலை மோசமாக உள்ளதாக அவ்வப்போது யூகச் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- செர்பியாவின் ஜோகோவிச் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் சஜாரி ஸ்வஜ்டாவை 6-7 (5-7), 6-3, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில், ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஜோகோவிச் 3-வது சுற்றை எட்டுவது இது 75-வது முறையாகும். இது புதிய சாதனை ஆகும். இதற்கு முன்பு சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 74 தடவை 3-வது சுற்றுக்கு வந்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் மேட்டியா பெலூசி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-1, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரின்னை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- பெலாரசின் சபலென்கா 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் பெலாரசின் சபலென்கா, ரஷியாவின் பொலினா குடர்மெடோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6-3, 6-1 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் அன்னா போந்தாரை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் சஜாரி ஸ்வஜ்டா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 6-7 (5-7), 6-3, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 4-6, 7-6 (7-3), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் தென் ஆப்பிரிக்காவின் லாய்டு ஹாரிசை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் தொடங்குகிறது.
- பெலாரஸ் வீராங்கனை அசரென்கா 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் பெலாரசின் விக்டோரியா அசரென்கா, ரஷியாவின் அனஸ்தஷியா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அசரென்கா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பிரிட்டனின் எம்மா ராடுகானு 6-2, 6-1 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் ஜானிஸ் டென்னை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- செக் குடியரசின் கரோலினா மசோவா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், செக் குடியரசின் கரோலினா மசோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கரோலினா 6-3 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக வீனஸ் 2வது செட்டை 6-2 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை கரோலினா 6-1 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சிறப்பு அனுமதி பெற்ற நிலையில் வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றிலேயே அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- போலந்தின் ஸ்வியாடெக் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் போலந்தைச் சேர்ந்த இகா ஸ்வியாடெக், கொலம்பியாவின் எமிலியானா அரங்கோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்யாடெக் 6-1 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் தத்ஜனா மரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்கா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-4, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- சீனா மீது 200 சதவீதம் வரை வரிகளை விதிக்கத் தயங்கமாட்டேன்.
- இந்த ஆண்டு இறுதியில் அல்லது அதற்குப் பிறகு விரைவில் நான் சீனாவுக்குச் செல்வேன்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் உட்பட பல்வேறு உலக நாடுகள் மீது வரிகளை உயர்த்தி வருகிறார்.
குறிப்பாக அமெரிக்காவின் பிரதான போட்டியாளராக கருதப்படும் சீனா இந்த வரி உயர்வுகளுக்கு கடுமையான எதிர்வினை ஆற்றி வருகிறது.
இந்நிலையில் சீனாவுக்கு சீட்டாட்டத்தின் பாணியில் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகளையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் "அவர்களிடம் சில கார்டுகள் உள்ளன. ஆனால் எங்களிடம் மிகச் சிறந்த கார்டுகள் உள்ளன.
நான் அவற்றை கொண்டு விளையாட விரும்பவில்லை. நான் அந்த கார்டுகளை வைத்து விளையாடினால், சீனா அழிந்துபோதும். அதனால்தான் நான் இப்போது அதைச் செய்யவில்லை" என்று தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு அரிய மண் தாதுக்களின் விநியோகத்தை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளை சீனா எடுத்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று டிரம்ப் எச்சரித்தார்.
அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் சீனா மீது 200 சதவீதம் வரை வரிகளை விதிக்கத் தயங்கமாட்டேன் என்று அவர் கூறினார்.
அதேநேரம், "இந்த ஆண்டு இறுதியில் அல்லது அதற்குப் பிறகு விரைவில் நான் சீனாவுக்குச் செல்வேன். இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த உறவுகள் இருக்கும்" என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
- ஏற்கனவே உள்ள 25% வரியுடன் சேர்த்து இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது.
- ரத்தினம், நகைகள், ஜவுளி, ஆடைகள், இறால் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகளை கடுமையாகப் பாதிக்கும்
ரஷியாவிடம் எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டி ஆகஸ்ட் 6 அன்று இந்திய பொருட்கள் மீது அபராதமாக 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்திருந்தார்.
இந்நிலையில் டிரம்ப் ஏற்கெனவே அறிவித்தபடி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால், ஏற்கனவே உள்ள 25% வரியுடன் சேர்த்து இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை மூலமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய வரிவிதிப்பு, நாளை(ஆகஸ்ட் 27) அதிகாலை 12:01 மணி முதல் அமலுக்கு வரும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ரத்தினம், நகைகள், ஜவுளி, ஆடைகள், இறால் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதித் துறைகளை கடுமையாகப் பாதிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.






