என் மலர்
உலகம்
- போலீஸ் அதிகாரிகளின் மரணங்களுக்குப் பழிவாங்குவேன்.
- முகமது யூனுசுக்கு அரசாங்கத்தை நடத்துவதில் எந்த அனுபவமும் இல்லை.
டாக்கா:
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர்கள் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என வங்காளதேச அரசு கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்தநிலையில் அவாமி லீக் கட்சியின் (ஷேக் ஹசீனா கட்சி) ஐரோப்பா பிரிவு ஏற்பாடு செய்த காணொலி நிகழ்ச்சியில் ஷேக் ஹசீனா பங்கேற்று பேசினார். இதில் வன்முறையில் கொல்லப்பட்ட போலீஸ்காரர்களின் குடும்பத்தினருடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் வங்காளதேசத்துக்கு நிச்சயம் திரும்பி வருவேன். நீங்கள் அனைவரும் பொறுமை காத்து ஒற்றுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். போலீஸ் அதிகாரிகளின் மரணங்களுக்குப் பழிவாங்குவேன். அவர்கள் அரசியல் வன்முறைக்கு பலியான தியாகிகள். நான் முன்பு செய்தது போல் நீதி வழங்குவேன்.
என்னை கொலை செய்ய முயன்றனர். ஆனால் நான் உயிர் பிழைத்தேன். கடவுள் எனக்கு 2-வது வாழ்க்கையை அளித்துள்ளார். இது ஒரு காரணத்திற்காக நடந்தது என்று நான் நம்புகிறேன்.

முகமது யூனுசுக்கு அரசாங்கத்தை நடத்துவதில் எந்த அனுபவமும் இல்லை. அவர் அனைத்து விசாரணை குழுக்களையும் கலைத்து, மக்களைக் கொல்ல பயங்கரவாதிகளை கட்டவிழ்த்து விட்டார். அவர்கள் வங்காளதேசத்தை அழிக்கிறார்கள். பயங்கர வாதிகளின் இந்த அரசாங்கத்தை அகற்றுவோம்.
உயிரிழந்த அவாமி லீக் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு உதவ ஒரு அறக்கட்டளையை அமைத்திருந்தேன். ஆனால் அதன் வங்கி கணக்குகள், அறக்கட்டளை மற்றும் எங்கள் சொத்துக்கள் அனைத்தும் இந்த அரசாங்கத்தால் முடக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த சுற்றுலா ரெயில் வருகிற 11-ந்தேதி தொடங்கப்பட உள்ளது.
- சீனாவில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்றவர்கள் பணத்தை செலவிட தயாராக உள்ளனர்.
சீனா உலகிலேயே முதியவர்கள் அதிகம் உள்ள முதல் நாடாக உள்ளது.
தற்போது சீனாவில் உள்ள 14 மில்லியன் மக்கள் தொகையில் 5-ல் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார். வருகிற 2035-ம் ஆண்டு சீனாவில் முதியவர்களின் எண்ணிக்கை 400 மில்லியனாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் வளர்ந்து வரும் முதியோர்களுக்கு மகிழ்ச்சி தருவது மட்டும் இல்லாமல் நாட்டை பொருளாதார வளர்ச்சிக்கு கொண்டு செல்ல சில்வர் ரெயில் என்ற பிரத்யேக சுற்றுலா ரெயிலை இயக்க சீனா முடிவு செய்துள்ளது.
இந்த சுற்றுலா ரெயில் வருகிற 11-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த ரெயிலில் ஆக்சிஜன் சிலிண்டர், முதலுதவி பெட்டி, அவசர அலாரம் பட்டன்கள் இருக்கை ஏற்பாடுகள் மருத்துவ வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவை என பாதுகாப்பான பயணத்தை வழங்க உள்ளது.
சீனாவில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்றவர்கள் பணத்தை செலவிட தயாராக உள்ளனர். அவர்களுக்காக இந்த புதிய ரெயில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த 10 ஆண்டுகளில் முதியவர்கள் மூலம் 30 ட்ரில்லியன் யுவான் வளர்ச்சி இலக்கை அடைய நிர்ணயித்து உள்ளனர்.
- உத்தரவை செயல்படுத்துவதில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.
- இந்த நிறுவனம் அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு UNRWA சட்டத்தை உடனடியாக அமல்படுத்த அறிவுறுத்தி உள்ளார். இது இஸ்ரேல் பாராளுமன்றத்தில் (நெசெட்) பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
கிழக்கில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணிகள் நிறுவனம் (UNRWA) ஒரு நிவாரண மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் ஆகும்.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "நெசெட் பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட UNRWA சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உத்தரவிட்டுள்ளார். பிரதமரின் உத்தரவை செயல்படுத்துவதில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை," என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 2024-இல் இஸ்ரேல் பாராளுமன்றம், அதன் பிரதேசத்தில் UNRWA-இன் செயல்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் இஸ்ரேலிய அதிகாரிகள் அந்த நிறுவனத்துடன் எந்த தொடர்பும் வைத்திருப்பதை தடை செய்வதற்கும் அழைப்பு விடுத்து இரண்டு சட்டங்களை இயற்றியது.
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள அனைத்து வளாகங்களையும் காலி செய்து, இந்த ஆண்டு ஜனவரி 30-ம் தேதிக்குள் அவற்றின் செயல்பாடுகளை நிறுத்துமாறு இஸ்ரேல் UNRWA-க்கு உத்தரவிட்டு இருந்தது.
இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் UNRWA-க்கான நிதியைக் குறைப்பதற்கான நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 1948 அரபு-இஸ்ரேலிய போரை அடுத்து, பொது சபைத் தீர்மானம் 302 (IV) மூலம் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, UNRWA நிறுவப்பட்டது. இதில் பதிவு செய்யப்பட்ட பாலஸ்தீனிய அகதிகளுக்கு "நேரடி நிவாரணம் மற்றும் பணித் திட்டங்களை" வழங்க, "1946 ஜூன் 1 முதல் 1948 மே 15 வரையிலான காலகட்டத்தில் பாலஸ்தீனமாக இருந்தவர்கள் மற்றும் 1948 போரின் விளைவாக வீடு மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள்" என்று வரையறுக்கப்படுகிறது.
பல தசாப்தங்களாக, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், குறிப்பாக மேற்குக் கரை மற்றும் காசா பகுதி உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கு இந்த நிறுவனம் அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. இதில் சுகாதார வசதிகள், பள்ளிகள் மற்றும் தொழில் பயிற்சி மையங்கள் அடங்கும்.
இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் மசோதா அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், உதவி வழங்குவதில் UNRWA வகிக்கும் முக்கிய பங்கை வலியுறுத்தினார். மேலும் இந்த தடை "பேரழிவு விளைவுகளை" ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
இது குறித்து ஐ.நா. உதவி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் செயல் தலைவர் ஜாய்ஸ் சுயா, "இந்த முடிவு ஆபத்தானது மற்றும் மூர்க்கத்தனமானது" என்று தெரிவித்தார். UNRWA ஆணையர் ஜெனரல் பிலிப் லாசரினி, இந்த மசோதாக்கள் "பாலஸ்தீனியர்களின் துன்பத்தை அதிகரிக்கும். மேலும் இது தண்டனைக்குக் குறைவானது அல்ல" என்று கூறியுள்ளார்.
- விசாரணை முடியும் வரை இரண்டு ஓடுபாதைகள் மூடியே இருக்கும்.
- காயமுற்றவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டொரண்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் தலைகீழாக விழுந்து விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 17 பேர் காயமுற்றனர்.
இது குறித்து விமான நிலையம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "மினியாபொலிஸ்-இல் இருந்து வந்த டெல்டா விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. விபத்தில் சிக்கிய விமானத்தில் 76 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்தனர். விபத்து காரணமாக விமான நிலையத்தில் மற்ற விமான சேவைகள் கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் வரை பாதிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணை முடியும் வரை இரண்டு ஓடுபாதைகள் மூடியே இருக்கும்."
விபத்தில் சிக்கிய விமானம் மிட்சுபிஷி CRJ-900LR மாடல் ஆகும். பனிப்படர்ந்த ஓடுபாதையில் விமானம் தலைக்கீழாக விழுந்து இருப்பதை காட்டும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. விபத்தைத் தொடர்ந்து அவசரகால மீட்பு படையினர் பயணிகளை மீட்டனர். காயமுற்றவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து ஏற்பட என்ன காரணம் என்பது பற்றி இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், கனடா நாட்டு வானியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, விமான நிலையம் உள்ள பகுதியில் பனிப்பொழிவு இருந்தது என்றும் மணிக்கு 51 முதல் 65 கிலோமீட்டர்கள் வேகத்தில் காற்று வீசியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைகீழாக விழுந்து விபத்தில் சிக்கிய CRJ-900 ஒரு ஜெட் விமானம் ஆகும். இதனை கனடா ஏரோஸ்பேஸ் நிறுவனமான பாம்பார்டியர் தயாரித்தது. கடந்த ஜனவரி 29-ம் தேதி இதே ரக மாடல் ஒன்று நடுவானில் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
- அயல்நாட்டு நிறுவனங்களும் அந்த திட்டத்தில் முதலீடு செய்து வீடுகளை வாங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.
- சீனா, நெதர்லாந்து, அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் வீடுகளை வாங்கி குவித்து வந்தனர்.
கான்பெரா:
தனி கண்டமாகவும், தீவு நாடாக விளங்கும் ஆஸ்திரேலியாவில் அரசு சார்பில் வீடு கட்டி தரப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனைக்காக வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்களும், அயல்நாட்டு நிறுவனங்களும் அந்த திட்டத்தில் முதலீடு செய்து வீடுகளை வாங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.
சீனா, நெதர்லாந்து, அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் வீடுகளை வாங்கி குவித்து வந்தனர். இந்தநிலையில் ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் வீடு வாங்குவதற்கு அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளது.
உள்நாட்டு மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கத்தில் வருகிற 2027-ம் ஆண்டு வரை 2 ஆண்டுகளுக்கு இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மொரிசியசில் இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள்.
- அவர் பதவியில் இருந்தபோது தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தது.
போர்ட் லூயிஸ்:
இந்திய பெருங்கடலில் ஆப்பிரிக்கா அருகே உள்ள தீவு நாடாக மொரிசியஸ் உள்ளது. குட்டித்தீவு நாடான மொரிசியசில் இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். அந்த நாட்டின் பிரதமராக பிரவிந்த் ஜக்நாத் பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு நடந்த பொது தேர்தலில் அவர் தலைமையிலான கட்சி தோல்வி அடைந்தது.
முன்னதாக பாதுகாப்பு, நிதித்துறை, உள்துறை மற்றும் வெளியுறவு மந்திரியாகவும் பிரவிந்த் ஜக்நாத் பொறுப்பு வகித்தார். இந்தநிலையில் அவர் பதவியில் இருந்தபோது தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.20 ¾ ஆயிரம் கோடி (2.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை அந்த நாட்டின் ஊழல்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
- 2023 அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் தெற்குப் பகுதிக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
- 1200 பேர் கொன்று குவித்ததுடன், 251 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் நாட்டின் தெற்குப் பகுதிக்குள் நுழைந்து கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். அதோடு 251 பேர் பயணக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா முனை மீது கொடூர தாக்குதல் நடத்தியது. பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக 2023 நவம்பர் மாதம் போர் இடைநிறுத்தம் ஏற்பட்டது. அப்போது 100-க்கும் முற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். பின்னர் ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினர் முறியதாக குற்றம்சாட்டிய இஸ்ரேல், காசா மீது மீண்டும் தாக்குதல் நடத்தியது.
அதன்பின் தற்போது கடந்த மாதம் 19-ந்தேதி 2-வது கட்டமாக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் மார்ச் முதல் வாரத்தோடு முடிவடைகிறது. அதன்பின் நீடிக்குமா? அல்லது மீண்டும் போர் தொடங்குமா? என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 500 நாட்கள் ஆகிறது. ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு காசா சந்தித்த இழப்புகள் ஏராளம். காசா முனையில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் எலைக்குள் ஹமாஸ் புகுந்து தாக்குதல் நடத்தியது முதல் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது வரையிலான இந்த 500 போரின் சுருக்கம் பின்வருமாறு:-
* 2023 அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலால் இஸ்ரேலில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
* காசாவில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர்.
* காசாவில் இன்னும் 73 பேர் பணயக் கைதிகளாக உள்ளனர். இதில் அக்டோபர் 7-ந்தேதிக்கு முன்னதாக பிடித்துச் செல்லப்பட்ட 3 பேரும் அடங்குவர்.
* இவர்களில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேலால் நம்பப்படுகிறது. அதில் ஒருவர் அக்டோபர் 7-ந்தேதிக்கு முன்னதாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
* காகாவில் 48,200-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஹமாஸ் அமைப்பினர் எத்தனை போர்? பொதுமக்கள் எத்தனை பேர் என காசா சுகாதார அமைச்சகம் வேறுபடுத்தி காட்டவில்லை. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
* பாலஸ்தீனத்தில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
* அக்டோபர் 7-ந்தேதியில் இருந்து 846 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

* அக்டோபர் 7-ந்தேதியில் இருந்து இஸ்ரேல் காசா மீது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியுள்ளது.
* பாலஸ்தீனத்தின் 90 சதவீத மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
* வடக்கு காசாவில் இருந்து 5 லட்சத்து 86 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர்.
* காசா மற்றும் லெபனானில் (ஹிஸ்புல்லா) இருந்து நடத்தப்பட்ட தாக்குதலால் இஸ்ரேலில் 75 ஆயிரத்து 500 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
* காசாவில் 2 லட்சத்து, 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்படைந்துள்ளன அல்லது தரைமட்டமாகியுள்ளன.
* 92 சதவீத முக்கியமான சாலைகள் சேதம் அடைந்துள்ளன அல்லது முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன.
* 84 சதவீத சுகாதாரம் தொடர்பான இடங்கள் சேதம் அடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன.
- கடல் மட்டத்திலிருந்து 1,300-1,700 மீட்டர் உயரத்தில் வாழ்கிறது
- இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய பாம்பு இனத்துக்கு லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டிருந்தது
ஈக்வடாரில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய தவளை இனதிற்கு பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தி டெலிகிராஃப் இதழ் கூற்றுப்படி, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தவளைக்கு 'ஃபிலோனாஸ்டஸ் டிகாப்ரியோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
சான் பிரான்சிஸ்கோ குய்டோ பல்கலைக்கழகம், ஈக்வடாரின் தேசிய பல்லுயிர் நிறுவனம் மற்றும் ஈக்வடார் கத்தோலிக்க பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஏழு புதிய இனங்களை கண்டறிந்துள்ளனர். அதில் ஒன்றுக்கு தான் தற்போது நடிகரின் பெயர் சூட்டப்பட்டது
புதிதாகக் கண்டறியப்பட்ட இந்த தவளை இனம் ஈக்வடாரின் எல் ஓரோ மாகாணத்தில் மேற்கு பகுதியில் உள்ள மலைப்பாங்கான வனப்பகுதியில் காணப்படுகின்றன.
இவை கருமையான புள்ளிகளால் மூடப்பட்ட பழுப்பு நிற தோல் கொண்டவை. நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை உள்ளவை . இந்தத் தவளை கடல் மட்டத்திலிருந்து 1,300-1,700 மீட்டர் உயரத்தில் வாழ்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

டைட்டானிக் படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்ற ஆஸ்கார் நாயகனும் ஹாலிவுட்டின் முன்னணி நடிகராக வளம் வருபவருமான லியோனார்டோ டிகாப்ரியோ, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபாடு கொண்டவர்.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1998 ஆம் ஆண்டு 'லியோனார்டோ டிகாப்ரியோ அறக்கட்டளை'யை நிறுவினார்.
ஈக்வடாரின் யசுனி தேசிய பூங்காவில் எண்ணெய் தோண்டும் திட்டத்தை நிறுத்த இவரது அறக்கட்டளை குரல் கொடுத்தது. எனவே அவரது முயற்சிகளை கவுரவிக்கும் வகையில் தவளைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, 2024 ஆம் ஆண்டில், இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய பாம்பு இனத்துக்கு லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.
'ஆங்குகுலஸ் டிகாப்ரியோய்' என்று பெயர் சூட்டப்பட்ட இந்த பாம்பு இனம் மத்திய நேபாளத்திலிருந்து இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்திற்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்டது.
- டவுன்லோட் செய்ய முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- ஏ.ஐ. சாட்பாட் இன்னும் பயன்பாட்டில் உள்ளது.
சீனாவை சேர்ந்த செற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலியான டீப்சீக்-ஐ டவுன்லோட் செய்ய தென் கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. டீப்சீக் செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் வரை இந்த செயலியை டவுன்லோட் செய்ய முடியாது என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டீப்சீக்-இன் ஆர்1 சாட்பாட் அதன் அசாத்திய செயல்திறன் காரணமாக உலகளவில் அதிக பயனர்களை மிகக் குறுகிய காலக்கட்டத்தில் ஈட்டியதோடு முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
எனினும், டீப்சீக் பயனர் தரவுகளை சேமிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த சேவைக்கு எதிர்ப்புக்குரல் வலுத்தது. மேலும், பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
டீப்சீக் அதன் பயனர் தரவுகளை எப்படி கையாள்கிறது என்பதை மதிப்பாய்வு செய்யும் வரை இதனை பதிவிறக்கம் செய்ய முடியாது என சியோல் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து பதில் அளித்த சீன ஏ.ஐ. நிறுவனமான டீப்சீக், "உள்நாட்டு தனியுரிமை சட்டங்கள் குறைந்தளவில் தான் பரிசீலனை செய்யப்பட்டன என்பதை ஒப்புக்கொண்டுள்ளது," என்று தரவு பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் தனியுரிமைச் சட்டங்களுடன் இணைந்து செயலியைக் கொண்டுவருவது "தவிர்க்க முடியாமல் கணிசமான அளவு நேரம் எடுக்கும்" என்று மதிப்பிட்டுள்ளது, சியோல் தரவு பாதுகாப்பு நிறுவனம் மேலும் கூறியது.
டவுன்லோட் செய்ய தடை செய்யப்பட்டதை தொடர்ந்து டீப்சீக் செயலி தென் கொரியாவின் உள்ளூர் ஆப் ஸ்டோர்களில் கிடைக்காமல் போனது. எனினும், செயலியை ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கு ஏ.ஐ. சாட்பாட் இன்னும் பயன்பாட்டில் உள்ளது.
- மும்முனை தாக்குதலுக்கு 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து பேசினார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் இடை யே கடும் போர் நடந்தது. காசாவில் இஸ்ரேல் நடத்திய மும்முனை தாக்குதலுக்கு 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காசா நகரங்கள் குண்டு வீச்சுக்கு சின்னாபின்னமாகின.
அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்ததால் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 42 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக பிடித்து சென்றவர்களை விடுவித்து வருகின்றனர். இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
ஹமாஸ் பிடியில் இன்னும் பிணைக்கைதிகள் உள்ளனர். அனைவரையும் உடனே விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார்.
ஜெருசலேமில் அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, "ஹமாஸ் அதிகாரத்தில் இருக்கும் வரை சமாதானம் சாத்தியமற்றது. இதனால் ஹமாஸ் அமைப்பு அழிக்கப்பட வேண்டும்," என்று தெரிவித்தார்.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறும் போது, "காசா போர் தொடர்பாக இஸ்ரேலும், அமெரிக்காவும் ஒரு பொதுவான உத்தியை கொண்டுள்ளன. அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்காவிட்டால் நரக வேதனையை அனுபவிக்க நேரிடும்."
"காசாவில் ஹமாஸ் ராணுவ திறனையும், அதன் அரசியல் ஆட்சியையும் ஒழிக்க அரசு உறுதியாக இருக்கிறது. நாங்கள் அனைத்து பிணைக் கைதிகளையும் மீட்டு வீட்டுக்கு அழைத்து வருவோம். காசா ஒருபோதும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வோம்."
"இஸ்ரேலுக்கும், ஹமாசுக்கும் இடையே போர் நிறுத்தம் பலவீனமாக உள்ளது. கைதிகள் மற்றும் பிணைக் கைதிகள் பரிமாற்றத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்னும் நடத்தப்படவில்லை," என்று அவர் கூறினார்.
- அமெரிக்காவும், ரஷியாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.
- நேரம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.
வாஷிங்டன்:
உக்ரைன்-ரஷியா இடையே போர் தொடங்கி 3 ஆண்டுகளை தாண்டி விட்டது. ஆனாலும் இன்னும் இந்த சண்டை முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் தொலைபேசியில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதனுடன் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பேசினார். அப்போது அவர்கள் உக்ரைன் போரில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்து வருவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதன் தொடர்ச்சியாக ரஷிய அதிபர் புதினை விரைவில் சந்தித்து பேச இருப்பதாக டிரம்ப் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
உக்ரைனில் சண்டையை நிறுத்த உண்மையிலேயே புதின் விரும்புகிறார் என நான் நம்புகிறேன். இதை விரைவாக முடிக்க விரும்புகிறார்கள். புதினை விரைவில் சந்திக்க இருக்கிறேன். இதற்கான நேரம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. அது விரைவில் நடக்கலாம்.
இது தொடர்பாக ரஷிய அதிகாரிகளுடன் அமெரிக்க குழுவினர் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார். இந்த சந்திப்பில் அவரும் கலந்து கொள்வார் என நம்புகிறேன்.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
இந்த சூழ்நிலையில் ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சவூதி அரேபியாவில் அமெரிக்காவும், ரஷியாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது. இதனால் போர் விரைவில் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அமீரக அதிகாரி மற்றும் காவலர்கள் ஜெலென்ஸ்கியை வரவேற்றனர்.
- அமைதி பேச்சுவார்த்தைக்கு உகந்த இடமாக ஐக்கிய அரபு அமீரகம் விளங்குகிறது.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டார். மாஸ்கோ போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி பேச்சுவார்த்தைகளுக்கான உத்வேகம் அதிகரித்து வரும் நிலையில், ஜெலன்ஸ்கியின் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த வாரம் சவுதி அரேபியாவில் வைத்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்திப்பதாக தெரிவித்து இருந்தார். போர் தொடங்கியதில் இருந்து அதிக எண்ணிக்கையிலான ரஷிய மற்றும் உக்ரேனியர்கள் அபு தாபி மற்றும் துபாய்க்கு தாயகமாக இருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். இதுதவிர கடந்த காலங்களில் குற்றவாளிகளை பரிமாறிக் கொள்வதிலும் அமீரகம் உதவியுள்ளது.
இதன் காரணமாக போர் நிறுத்த பேச்சுவார்த்தையை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் உகந்த இடமாக விளங்குகிறது. ஜெர்மனியில் நடந்த முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு ஜெலென்ஸ்கி அபு தாபிக்கு வந்தார். விமான நிலையத்தில் அமீரக அதிகாரி மற்றும் காவலர்கள் ஜெலென்ஸ்கியை வரவேற்றனர்.
போர் தொடங்கியதில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஜெலன்ஸ்கி பயணம் செய்தது இதுவே முதல் முறை ஆகும்.






