என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவாமி லீக் கட்சி"

    • மக்களையும், அவாமி லீக் கட்சியையும் கைவிட மாட்டோம்.
    • எனது குடும்பமும் அவாமி லீக் கட்சியும் வங்காளதேச அரசியலில் தொடர்ந்து ஈடுபடும்.

    ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாசேத் ஜாய் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வங்காளதேசத்தில் ஜன நாயகம் திரும்பியவுடன் எனது தாய் நாடு திரும்புவார். அவர் வங்கதேசத்திற்கு நிச்சயமாகத் திரும்புவார். ஆனால் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றவரா அல்லது அரசியல்வாதியாகத் திரும்புவாரா என்பது இன்னும் முடிவு செய்யப்பட வில்லை.

    முன்பு எனது தாய் வங்கதேசத்துக்குத் திரும்ப மாட்டாள் என்று நான் சொன்னது உண்மைதான். ஆனால் நாடு முழுவதும் உள்ள எங்கள் தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து முடிவை மாற்றி உள்ளோம்.

    மக்களையும், அவாமி லீக் கட்சியையும் கைவிட மாட்டோம். அவாமி லீக் வங்காளதேசத்தின் மிகப்பெரிய மற்றும் பழமையான அரசியல் கட்சி. எனவே நாங்கள் எங்கள் மக்களை விட்டு விலகிச் செல்ல முடியாது.

    ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட்டவுடன் ஷேக் ஹசீனா நிச்சயமாக வங்க தேசத்திற்குத் திரும்புவார். ஒரு புதிய வங்காளதேசத்தை உருவாக்க விரும்பினால், அவாமி லீக் இல்லாமல் அது சாத்தியமில்லை. எனது குடும்பமும் அவாமி லீக் கட்சியும் வங்காளதேச அரசியலில் தொடர்ந்து ஈடுபடும்.

    முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் சட்டம்-ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும். முகமது யூனுசின் தனிப்பட்ட கருத்துக்கள் எதுவாக இருந்தாலும், அவர் ஒரு ஒற்றுமை அரசாங்கத்தை விரும்புவதாக தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அவர் தனது வார்த்தைக்கு உண்மையாக இருப்பார் என்று நம்புகிறேன் என்றார்.

    • போலீஸ் அதிகாரிகளின் மரணங்களுக்குப் பழிவாங்குவேன்.
    • முகமது யூனுசுக்கு அரசாங்கத்தை நடத்துவதில் எந்த அனுபவமும் இல்லை.

    டாக்கா:

    வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர்கள் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என வங்காளதேச அரசு கோரிக்கை விடுத்து வருகிறது.

    இந்தநிலையில் அவாமி லீக் கட்சியின் (ஷேக் ஹசீனா கட்சி) ஐரோப்பா பிரிவு ஏற்பாடு செய்த காணொலி நிகழ்ச்சியில் ஷேக் ஹசீனா பங்கேற்று பேசினார். இதில் வன்முறையில் கொல்லப்பட்ட போலீஸ்காரர்களின் குடும்பத்தினருடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் வங்காளதேசத்துக்கு நிச்சயம் திரும்பி வருவேன். நீங்கள் அனைவரும் பொறுமை காத்து ஒற்றுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். போலீஸ் அதிகாரிகளின் மரணங்களுக்குப் பழிவாங்குவேன். அவர்கள் அரசியல் வன்முறைக்கு பலியான தியாகிகள். நான் முன்பு செய்தது போல் நீதி வழங்குவேன்.

    என்னை கொலை செய்ய முயன்றனர். ஆனால் நான் உயிர் பிழைத்தேன். கடவுள் எனக்கு 2-வது வாழ்க்கையை அளித்துள்ளார். இது ஒரு காரணத்திற்காக நடந்தது என்று நான் நம்புகிறேன்.


    முகமது யூனுசுக்கு அரசாங்கத்தை நடத்துவதில் எந்த அனுபவமும் இல்லை. அவர் அனைத்து விசாரணை குழுக்களையும் கலைத்து, மக்களைக் கொல்ல பயங்கரவாதிகளை கட்டவிழ்த்து விட்டார். அவர்கள் வங்காளதேசத்தை அழிக்கிறார்கள். பயங்கர வாதிகளின் இந்த அரசாங்கத்தை அகற்றுவோம்.

    உயிரிழந்த அவாமி லீக் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு உதவ ஒரு அறக்கட்டளையை அமைத்திருந்தேன். ஆனால் அதன் வங்கி கணக்குகள், அறக்கட்டளை மற்றும் எங்கள் சொத்துக்கள் அனைத்தும் இந்த அரசாங்கத்தால் முடக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×