என் மலர்
தலைப்புச்செய்திகள்
தமிழ் திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் தியாகராஜன் குமாரராஜா. ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் மற்றும் மாடர்ன் லவ் சென்னை (நினைவோ ஒரு பறவை) உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா "பாக்கெட் நாவல்" படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தின மூலம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் விஜய் சேதுபதி மீண்டும் இணைகின்றனர். சூப்பர் டீலர்க்ஸ் திரைப்படத்திற்கு பிறகு இருவரும் இந்தப் படத்தில் இணைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில் உருவாகி வரும் இப்படத்தை இந்தாண்டு இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
- பிரபஞ்சம் மிகப் பெரியது. மற்ற கிரகங்களில் உயிர் இருக்க வாய்ப்புள்ளது.
- ஒபாமாவின் சந்தேகங்களை நீக்குவேன் என்றார்.
வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா, இல்லையா என்று உலகம் முழுவதும் கடந்த நூற்றாண்டில் இருந்தே பல விவாதங்கள் இருந்து வருகிறது.
அவற்றுக்கு வலு சேர்க்கும் வானில் ஏற்படும் வினோதமான நிகழ்வுகள், விண்கலம் போல் தென்படும் வினோத வாகனங்கள் குறித்த புகைப்படங்கள் கசிவது உண்டு.
அமெரிக்க ஆய்வாளா்கள் வேற்றுக்கிரகவாசிகளை பிடித்து வந்து, அந்நாட்டின் நெவாடா பகுதியில் உள்ள ரகசியமான இடமான 'ஏரியா 51'-இல் வைத்து ஆய்வு செய்து வருவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
இதற்கிடையே அண்மையில் பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, "பிரபஞ்சம் மிகப் பெரியது. மற்ற கிரகங்களில் உயிர் இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்ததற்கான எந்த ஆதாரமும் தனக்குக் கிடைக்கவில்லை" என்றார்.
ஒரு முன்னாள் அதிபரே வேற்றுகிரக வாசிகள் இருக்கலாம் என்று கூறியது அமெரிக்காவில் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் வேற்றுகிரகவாசிகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் விமானங்கள் பற்றிய கோப்புகளை ரகசிய பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் அமெரிக்க ராணுவ தலைமையமாக பென்டகன், மற்றும் தொடர்புடைய துறைகள் தங்கள் வசம் உள்ள வேற்றுகிரகவாசிகள் தொடர்புடைய ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், "வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.
அதைப் பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. நான் அதைப் பற்றி ஒருபோதும் பேசுவதில்லை. நிறைய பேர் அதை நம்புகிறார்கள். நான் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு ஒபாமாவின் சந்தேகங்களை நீக்குவேன்" என்று தெரிவித்தார்.
வி.ஜே. பப்பு மற்றும் அனுபமா இணைந்து நடித்துள்ள திரைப்படம் "மை டியர் டாலி". அரவிந்த் ராஜ் எழுதி, இயக்கி இருக்கும் இந்தத் திரைப்படத்தை சிம்ம மூர்த்தி சினிமாஸ் சார்பில் ஜெயராமசந்திரன் மற்றும் சிவராமகிருஷ்ணா தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் கே.பி.ஒய். ராஜவேலு, சுதா, தாரா, கீர்த்தனா, ஆஷா, ராஜாமணி, பேபி தீக்ஷிதா, டொமினிக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
காதல் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் மை டியர் டாலி திரைப்படம் உலகளவில் இன்று வெளியானது. இந்தப் படத்தில் இரத்த புற்றுநோய் பாதிப்பு குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் சிவராமகிருஷ்ணா படத்தின் வெளியீட்டை ஒட்டி புது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி மை டியர் டாலி திரைப்படத்தின் மொத்த வசூலில் ஒரு பகுதி இரத்த புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு வழங்குவதாக சிவராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்புக்கு திரைத்துறை கடந்து வரவேற்பும், பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. திரையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, படத்தின் வருவாயில் ஒருபங்கை புற்றுநோயை எதிர்த்து போராடும் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்வதாக தயாரிப்பாளர் சிவராமகிருஷ்ணா அறிவித்து இருப்பது மனிதம் மீதுள்ள நம்பிக்கையை பிரதிபலிப்பதோடு, மேலும் பலரை இப்படி செய்யவும் ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மை டியர் டாலி திரைப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை பாலாஜி கே சேகர் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சித்தார்த் மேற்கொண்டுள்ளார். எம். ஃபாஸில் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு நிர்வாக தயாரிப்பு பணிகளை ஆர்.திருமலை மேற்கொண்டுள்ளார்.
- ஒரு வருடத்திற்கு முன்பு தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி உதயகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
- கௌரவக் கொலைகளைத் தடுப்பதற்காகவே, கர்நாடக அரசு அண்மையில் "ஈவா நம்மவ ஈவா நம்மவ" என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது
கர்நாடக மாநிலத்தில் மதம் மற்றும் சாதி மாறித் திருமணம் செய்துகொண்டதற்காக, நான்கு மாதக் கர்ப்பிணித் தங்கையை அவரது அண்ணன் கோடாரியால் வெட்டிய கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சித்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதான மீனாட்சி. இவர் ஒரு வருடத்திற்கு முன்பு தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி உதயகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். திருமணத்திற்குப் பிறகு இவர்கள் பெங்களூருவில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கணவருடன் புதன்கிழமையன்று (பிப்.18) மீனாட்சி, கொப்பல் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றிற்கு வந்துள்ளார். இதையறிந்த அவரது அண்ணன் மஞ்சுநாத்(35) விழா நடக்கும் இடத்திற்கு வந்து மீனாட்சியை கோடாரியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
நிகழ்வில் இருந்த விருந்தினர்கள் தலையிட்டு அந்தப் பெண்ணை மீட்டனர். இதனால் மேலும் காயங்கள் தவிர்க்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து மீனாட்சியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து புகாரின் அடிப்படையில் அலவண்டி போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியான மஞ்சுநாத்தை கைது செய்துள்ளனர்.
இது போன்ற கௌரவக் கொலைகளைத் தடுப்பதற்காகவே, கர்நாடக அரசு அண்மையில் "ஈவா நம்மவ ஈவா நம்மவ" என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- மார்ச் 1-ந்தேதி மதுரையில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.
தமிழக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சந்திக்க உள்ளது. மேலும், இந்த மெகா கூட்டணியில் பா.ம.க., அ.ம.மு.க., ஐ.ஜே.கே., புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கடந்த மாதம் 23ந்தேதி முதலாவது பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் பிரதமர் மோடி பங்கேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாசன், டாக்டர் அன்புமணி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, அடுத்தகட்டமாக பிரதமர் மோடி தமிழகத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்து, மார்ச் 1-ந்தேதி மதுரையில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.
அப்போது, திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, மார்ச் 7-ந்தேதி வேலூரில் நடக்கும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளில் பா.ஜ.க., அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடியின் மதுரை மற்றும் வேலுார் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மார்ச் 11-ந்தேதி திருச்சியில் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனை ஒருங்கிணைக்க பா.ஜ.க. சார்பில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டத்திற்கான இடம் குறித்து தேர்வு நடைபெற்றது. திருச்சியை அடுத்த மாத்தூர் சுற்றுச் சாலை பகுதி, திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலைய பகுதியில் உள்ள காலி மனை மற்றும் ஜி கார்னர் ரெயில்வே மைதானம் ஆகிய 3 இடங்கள் தேர்வாகியுள்ளது.
இடம் தேர்வு தொடர்பாக மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில், மூன்று இடங்களையும் பார்வையிட்டு மேல் இடத்திற்கு தெரிவித்துள்ளோம். அனேகமாக ஜி கார்னர் மைதானம் தேர்வு செய்யப்படலாம்.
நாளை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சி வருகிறார். அதன் பின்னர் இடம் தேர்வு தொடர்பான ஆலோசனைக்கு பின்னர் எந்த இடம் என்பது இறுதி செய்யப்படும் என்றனர்.
பிரதமர் மோடி, 10 நாட்களில் 3 முறை தமிழகம் வருவது, பா.ஜ.க. மட்டுமின்றி, கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தி உள்ளது. இதனால், தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
- இவ்வளவு பெரிய அளவிலான சர்வதேச நிகழ்வுகளில் சிறிய குறைபாடுகள் ஏற்படுவது சகஜம்தான்
- சீன ரோபோ நாயை இந்திய தயாரிப்பாக ஏமாற்றி காட்சிப்படுத்தியதை ராகுல் காந்தி கண்டித்தார்.
டெல்லியில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய ஏஐ மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது. இதில் நேற்று உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரான்ஸ் அதிபர் மேக்ரோனும் இதில் கலந்து கொண்டார்.
மேலும் இன்றைய நிகழ்வில் ஸ்பெயின் பிரதமர், இலங்கை பிரதமர் உள்ளிட்ட பலநாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் மாநாட்டைப் பாராட்டிய காங்கிரஸ் எம்.பி சசி தரூர் "முதல் சில நாட்கள் மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நடந்துள்ளன. செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டிற்காக உலகத் தலைவர்கள் ஒன்றுகூடியிருப்பது பாராட்டுக்குரியது" என்று தெரிவித்தார்.
மாநாட்டின் ஏற்பாடுகளில் நிலவிய சில குழப்பங்கள் குறித்துக் கேட்டபோது, "இவ்வளவு பெரிய அளவிலான சர்வதேச நிகழ்வுகளில் சிறிய குறைபாடுகள் ஏற்படுவது சகஜம்தான்" என்று தெரிவித்தார்.
சசி தரூரின் கருத்துக்கு மாறாக, ராகுல் காந்தி இந்த மாநாட்டை ஒழுங்கற்ற முறையில் நடத்தப்படும் விளம்பர கூத்து என்று சாடியுள்ளார்.
மாநாட்டில் கால்கோடியாஸ் பல்கலைக்கழகம், சீன ரோபோ நாயை இந்திய தயாரிப்பாக ஏமாற்றி காட்சிப்படுத்தியதை கண்டித்து அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் மாநாட்டில் நடக்கும் கண்காட்சியில் முதல் சில நாட்களில் லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் பல திருடுபோனது மற்றும் பங்கேற்றவர்களுக்கு தண்ணீர், உணவு மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்காதது உள்ளிட்ட சில குளறுபடிகள் ஏற்பட்டன.
காங்கிரஸ் தலைவர் கார்கே, மாநாட்டின் நிர்வாகச் சீர்கேடுகள் நாட்டுக்குப் பெரும் அவமானத்தைத் தேடித்தந்துள்ளதாக கூறினார்.
பார்வையாளர்களுக்கு உணவு, தண்ணீர் வசதி கூட முறையாக இல்லை என்றும், மோடியின் விளம்பர ஆசையால் மாநாடு சீர்குலைந்துள்ளதாக விமர்சித்தார்.
இதற்கிடையே இளைஞர் காங்கிரசார் இன்று மாநாடு திடலில் புகுந்து சட்டையை கழற்றி அமெரிக்க- இந்திய வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்த்தனர்.
- பாபர் ஒரு 'படையெடுப்பாளர்'
- ஒரு மசூதியைக் கட்டப்போவதாகத் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹுமாயூன் கபீர் அறிவித்ததை எதிர்த்து இந்த மனு தாக்கல்
முகலாயப் பேரரசரான பாபரின் பெயரிலோ அல்லது பாபர் மசூதி என்ற பெயரிலோ மசூதிகள் கட்டுவதற்கு அல்லது மசூதிகளுக்கு பெயரிடுவதற்கு நாடு முழுவதும் தடைவிதிக்கக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பாபர் ஒரு 'படையெடுப்பாளர்' என்றும், அவர் இந்துக்களை அடிமைகள் என்றும் குறிப்பிட்டதாகவும், அவர் பெயரில் மசூதிகள் கட்டுவது இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பாபர் மசூதி போன்ற ஒரு மசூதியைக் கட்டப்போவதாகத் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹுமாயூன் கபீர் அறிவித்ததை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது. விசாரணைக்கு நீதிபதிகள் மறுத்ததைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இதனால் இந்த மனு 'திரும்பப் பெறப்பட்டதாகக் கருதி தள்ளுபடி' செய்யப்பட்டது.
- தாய்லாந்து பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
- பல அமெரிக்க, ஐரோப்பிய பிரபலங்கள் இந்த நிறுவனத்தின் தயரிப்புகளை பயனப்டுத்தி வருகின்றனர்.
பிரிட்டனின் பிரபல ஆன்லைன் பேஷன் மற்றும் அழகுசாதன பொருட்கள் நிறுவனமான ASOS உடைய இணை நிறுவனர் குவென்டின் கிரிஃபித்ஸ்.
58 வயதான இவர் தாய்லாந்தின் பட்டாயா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று குடியிருப்பு கட்டிடத்தில் அவர் வசித்து வந்த 17-வது மாடியில் இருந்து விழுந்து மர்மமான உயிரிழநதார்.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இதில் சதி இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூறாய்வு அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான துல்லியமான காரணம் தெரியவரும்.
2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ASOS நிறுவனம், இன்று முன்னணி பேஷன் நிறுவனமாக வளர்ந்துள்ளது. பல அமெரிக்க, ஐரோப்பிய பிரபலங்கள் இந்த நிறுவனத்தின் தயரிப்புகளை பயனப்டுத்தி வருகின்றனர்.
பிரிட்டனை சேர்ந்த குவென்டின், தனது முதல் மனைவியிடம் விவாகரத்து பெற்ற பிறகு, 2007ல் தாய்லாந்திற்கு குடிபெயர்ந்தார்.
அங்கு ஒரு தாய்லாந்து பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, பின்னர் அவரிடமிருந்தும் பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
- ராதிகா 75 வயது மூதாட்டியாக 'பவுனுத்தாயி' என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- லூட்டஸ் புரொடக்ஷன்ஸ்" (Lootus Productions), ஓடுங்க அது நம்மள நோக்கிதான் வருகின்றது போன்ற கிண்டலான வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஸன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகை ராதிகா நடித்துள்ளப் படம் தாய் கிழவி.
இப்படத்தில் ராதிகா 75 வயது மூதாட்டியாக 'பவுனுத்தாயி' என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராதிகாவுடன் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு மற்றும் ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் இப்படத்தில் 'தாய் கிழவி வாரா' என்ற பாடலைப் பாடியுள்ளார்.
இப்படம் பிப்.27ஆம் தேதி வெளியாக உள்ளது. கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இப்படத்தைப் பார்த்து ராதிகாவின் நடிப்பைப் பாராட்டியுள்ளனர். இப்படத்தில் ராதிகாவின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டிருக்கும். அப்போஸ்டரை ரீகிரியேட் செய்து தமிழ்நாடு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளன. இது தற்போது இணையத்தில் பெரும் கவனம் ஈர்த்து வருகிறது.
தேர்தல் நேரங்களில் கட்சிகள், எதிர்க்கட்சிகளை விமர்சிக்க சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தாய் கிழவி ராதிகாபோல சித்தரித்து, இயக்கம் ஆர்.எஸ்.எஸ். எனக் குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. லூட்டஸ் புரொடக்ஷன்ஸ்" (Lootus Productions), ஓடுங்க அது நம்மள நோக்கிதான் வருகின்றது போன்ற கிண்டலான வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.
இதற்குப் பதிலடியாக, பாஜக தரப்பில் சோனியா காந்தியை சித்தரித்து மற்றொரு போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் அவர் கையில் துடைப்பம் வைத்திருப்பது போன்றும், 2ஜி ஊழல், போஃபர்ஸ் போன்ற விவகாரங்களைக் குறிப்பிட்டுக் கிண்டல் செய்யும் வாசகங்களும் இடம்பெற்றன. பாஜக தலைவர் எஸ்.ஜி. சூர்யா, சோனியா காந்தியை "அசல் தாய் கிழவி" (Original Thai Kelavi) என்று விமர்சித்துப் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த போஸ்டர்கள் இணையத்தில் பெரும் கவனம் ஈர்த்து வருகின்றன. இதில் யார் OG என பலரும் கமெண்ட் செய்துவருகின்றனர்.
கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார். இதையடுற்றது ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.
இந்தப் படத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினி மற்றம் கமல் இணையும் படத்தின் ப்ரோமோ வீடியோ நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக படக்குழு சார்பில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், ரஜினி-கமல் 47 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் இணையும் படத்திற்கான ப்ரோமோ வீடியோ நாளை திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கியுள்ளது.
- அதிக ரத்தப்போக்கு காரணமாக கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை மோசமடைந்தது.
- மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உத்தரபிரதேச மாநிலம், பஹ்ரைச்சிரியை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். நிறைமாத கர்ப்பமாக இருந்தார். இவரது கணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.
கணவர் இறந்துவிட்டதால் கர்ப்பிணி பெண் மட்டும் தனியாக வசித்து வந்தார். கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேற்று கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது.
வலி தாங்க முடியாத அவர் சமையல் அறைக்கு சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து வயிற்றை கிழித்துக்கொண்டார். அவரது வயிற்றில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.
அக்கம்பக்கத்தினர் வந்து அவரை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. கத்தியால் ஆழமாக கிழித்து கொண்டதால் அதிக ரத்தப்போக்கு காரணமாக கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை மோசமடைந்தது.
மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
- இந்த ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கிறது.
ரியல்மி நிறுவனத்தின் P சீரிஸ் ஸ்மார்ட்போன் "ரியல்மி P4 லைட்" இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 6.74 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் T7250 சிப்செட், மாலி G57 MP1 கிராஃபிக்ஸ் யூனிட், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, IP54 தர டஸ்ட், வாட்டர் ரெசிஸ்டண்ட் கொண்டுள்ளது.
இத்துடன் புகைப்படங்கள் எடுக்க 13MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை 4ஜி எல்.டி.இ., ப்ளூடூத் 5.2, வைபை, ஜி.பி.எஸ். வழங்கப்பட்டுள்ளது. சென்சார்களை பொருத்தவரை பிராக்ஸிமிட்டி, ஆம்பியன்ட் லைட் சென்சார் இடம்பெற்றுள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், கைரோஸ்கோப் மற்றும் அக்செல்லோமீட்டர் உள்ளது.

டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ரியல்மி P4 லைட் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ரியல்மி யுஐ கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6300mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 15 வாட் வயர்டு சார்ஜிங் வசதி உள்ளது.
விலையை பொருத்தவரை ரியல்மி P4 லைட் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999 என்றும் டாப் எண்ட் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ. 1000 வங்கி தள்ளுபடி அல்லது ரூ. 1000 கூப்பன் வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை பிப்ரவரி 24ஆம் தேதி ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி ஆன்லைன் ஸ்டோரில் தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் பீச் கோல்டு, அப்சிடியன் பிளாக் மற்றும் சீ புளூ நிறங்களில் கிடைக்கிறது.






