என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • வாக்களிக்து தேர்ந்தெடுத்த ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களை குறித்து தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார்.
    • இவர்கள்தான் ஜனநாயகம் குறித்து தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து பேசுகின்றனர்.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கிய உடனேயே, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "பாஜக ஆளாத மாநிலங்களான கர்நாடகா, இமாச்சல பிரதேசத்திலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை, திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது.

    தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்.

    பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யு-டர்ன் போட்டது. கடந்தாண்டு மார்ச் 15இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது. திட்டத்தை ஏற்க ஒப்புக்கொண்டு சூப்பர் முதலமைச்சரின் ஆலோசனையில் அரசு பின்வாங்கியது. சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர். யார் அந்த சூப்பர் முதலமைச்சர் என கனிமொழி பதிலளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இதனையடுத்து, தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்.பி. கனிமொழியிடம் தெரிவித்தார்.

    இந்நிலையில், தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "இன்று நாடாளுமன்றத்தில், தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடளுமன்ற உறுபினர்களை அநாகரீகமாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. வாக்களிக்து தேர்ந்தெடுத்த ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களை குறித்து தான் இவ்வகையில் பேசியுள்ளார்.

    நாடாளுமன்ற மாண்பை பற்றி சிறிதும் தெரியாதவர்கள் பாஜகவினர், சிறுபான்மையின நாடாளுமன்ற உறுப்பினரை அவர் சார்ந்த மதம் குறித்து பாஜக உறுப்பினர் அவதூறாக பேசும்போது, பாஜகவின் மூத்த அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் அதை ரசித்து, சிரித்து கொண்டிருந்தார்கள், இவர்கள்தான் ஜனநாயகம் குறித்து தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து பேசுகின்றனர்.

    பாஜகவினர் கொண்டுவரும் அனைத்து மக்கள் விரோத திட்டங்களை, தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்பதால் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வாய்க்கு வந்தததை பேசுகின்றனர். இவற்றையெல்லாம் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள், உரிய நேரத்தில் தகுந்த பதிலடியை கொடுப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • தனுஷ் தயாரித்து வெளியான "நானும் ரவுடி தான்" படத்தின் காட்சி சில நொடிகள் வரை இடம் பெற்று இருந்தது.
    • நயன்தாராவுக்கு எதிராக தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.

    நடிகை நயன்தாராவின் வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து உருவாக்கப்பட்ட இணைய தொடர் 'நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்' என்ற பெயரில் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்-இல் வெளியானது.

    இந்த ஆவணத் தொடரின் டிரெய்லரில் தனுஷ் தயாரித்து வெளியான "நானும் ரவுடி தான்" படத்தின் காட்சி சில நொடிகள் வரை இடம் பெற்று இருந்தது.

    இந்தக் காட்சியை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் சார்பில் அவரது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். மேலும், நயன்தாராவுக்கு எதிராக தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த காட்சியை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் வொண்டர் பார்ஸ் நிறுவனம் சார்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனிடையே தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நெட்பிளிக்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 22-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது.

    நெட்பிளிக்ஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆவணப்படம் வெளியான ஒரு வாரம் கழித்து தான் தனுஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

    இதற்கு தனுஷின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நானும் ரவுடிதான் படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சியில் அனைத்தும் தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம். இந்தப் படத்துக்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்யும்போது அவர் செய்துள்ள சிகை அலங்காரம், உடை அலங்காரத்தில் இருந்து அனைத்தும் நிறுவனத்திற்கே சொந்தமானது என ஒப்பந்தமிடப்பட்டு, அதில் அவரும் கையெழுத்திட்டுள்ளார், படம் தொடர்பாக அனைத்து காட்சிகளும் வொண்டர்பாருக்கு சொந்தமானது என்று வாதிட்டார்.

    இந்த வழக்கு தொடர்பாக, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர் தனுஷுக்கு எதிராக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஏற்க மறுப்பு தெரிவித்தனர். தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக்கோரிய நெட்பிளிக்சின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

    மேலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாது எனக்கூறி நெட்பிளிக்ஸ் மனுவை நிராகரித்தனர்.

    இதைத்தொடர்ந்து வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த பிரதான உரிமையியல் வழக்கின் இறுதி விசாரணையை வரும் ஏப்ரல் 9ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

    • சுனிதாவும், வில்மோரும் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ -9 மிஷன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவார்கள்.
    • ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ்-இன் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் செல்கிறார்.

    விண்வெளியில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்பும் தேதியை நாசா அறிவித்துள்ளது.

    ஆய்வு பணிக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் 9 மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர்.

    அவர்களை பூமிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அவர் இருவரும் மார்ச் 16 ஆம் தேதி பூமி திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது. சுனிதாவும், வில்மோரும் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-9 மிஷன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவார்கள்.

    ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ -9 மிஷன்:

    நாசா விண்வெளி வீரர் நிக் ஹேக் மற்றும் ரஷிய விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ்-இன் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-9 விண்கலம் வழியாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.

    அந்த விண்கலத்தில் இரண்டு இருக்கைகள் சுனிதா மற்றும் வில்மோருக்காக காலியாக விடப்படும். அந்த விண்கலத்தில் அவர்கள் நால்வரும் மீண்டும் பூமிக்கு தியூரம்புவதாக திட்டம். அதன்படி அவர்கள் நான்கு பேரும் மார்ச் 16 அன்று ஒன்றாகத் திரும்புவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • வாக்காளர்கள் பட்டியலில் ஒரே EPIC எண் பலருக்கு உள்ளதாக மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு.
    • மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சிகளும் வாக்காளர் பட்டியல் குறித்து கேள்வி எழுப்பின.

    பாராளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஏராளமான கட்சிகள் வாக்காளர்கள் பட்டியல் குறித்து கேள்வி எழுப்புவதால் இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    இது தொடர்பாக கேள்வி நேரத்தையடுத்து பூஜ்ஜிய நேரத்தின்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-

    வாக்காளர் பட்டியல்கள் அரசு தயாரிக்கவில்லை என்ற உங்களுடைய கருத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், இது விசயம் தொடர்பாக விவாதம் நடத்த பேண்டும் என நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.

    நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்கள் குறுித்து கேள்வி எழுப்பப்படுகிறது. மகாராஷ்டிரா உள்பட நாட்டின் எல்லா மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலில் கேள்வி எழுப்புகின்றன.

    இவ்வாறு ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

    மேற்கு வங்கத்தில் உள்ள முர்ஷிதாபாத், பரத்வான் பாராளுமன்ற தொகுதிகளிலும் அரியானாவில் உள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளும் (Electoral Photo Identity Card) ஒரே மாதிரியாக இருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார்.

    இந்த குறைபாடுகள் கடந்த 20 வருடத்திற்கு மேலாக உள்ளது. இன்னும் 3 மாதங்களில் சரி செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதற்கு திரிணாமுல் காங்கிரஸ், தேர்தல் ஆணையம் இறுதியாக குற்றத்தை ஏற்றுக் கொண்டு ஒப்புக் கொண்டுள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது.

    அதேவேளையில் ஒரே எபிக் நம்பர் பிரச்சனை இல்லை. இந்த எண்ணை பொருட்படுத்தாமல் அதில் உள்ள தொகுதி, வார்டு ஆகியவற்றை கொண்டு மக்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    • தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தர்மேந்திரா பிரதான தெரிவித்தார்
    • தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது என்று தர்மேந்திரா பிரதான தெரிவித்தார்

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கிய உடனேயே, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "பாஜக ஆளாத மாநிலங்களான கர்நாடகா, இமாச்சல பிரதேசத்திலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை, திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது.

    தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்.

    பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யு-டர்ன் போட்டது. கடந்தாண்டு மார்ச் 15இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது. திட்டத்தை ஏற்க ஒப்புக்கொண்டு சூப்பர் முதலமைச்சரின் ஆலோசனையில் அரசு பின்வாங்கியது. சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர். யார் அந்த சூப்பர் முதலமைச்சர் என கனிமொழி பதிலளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இதனையடுத்து, தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்.பி. கனிமொழியிடம் தெரிவித்தார்.

    இந்நிலையில், மும்மொழி கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்துக்கு எதிராக சென்னையில் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

    • மாஃபா பாண்டியராஜன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடந்த 2 நாட்களுக்கு முன்பு சந்தித்தார்.
    • மாஃபா பாண்டியராஜனை, ராஜேந்திரபாலாஜி விமர்சித்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

    விருதுநகரில் கடந்த 5-ந்தேதி இரவு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வெள்ளி வாள் வழங்கினர். பலரும் பொன்னாடை அணிவிக்க வந்தனர்.

    இதே போல் விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் நந்தகுமாரும் பொன்னாடை அணிவிக்க வந்துள்ளார். வரிசையில் வராமல் முந்திக்கொண்டு அவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை ராஜேந்திரபாலாஜி கண்டித்ததாகவும், பின்னர் அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் அவரிடம் எதற்காக இப்படி முந்தி கொண்டு வருகிறாய்? என சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது.

    கூட்டத்தில் பேசிய கே.டி.ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன் கூறுவது போல் நான் குறுநில மன்னன்தான். வெவ்வேறு கட்சியில் இருந்து வந்தவர் பாண்டியராஜன். நான் தெய்வமாக நினைக்கும் ஜெயலலிதா குறித்து பாண்டியராஜன் அவதூறாக பேசிய வீடியோ என்னிடம் உள்ளது என்று மிரட்டும் தொனியில் பேசினார்.

    இந்த சம்பவம் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் இரவு சந்தித்தார்.

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்ற மாஃபா. பாண்டியராஜன் அவரை சந்தித்து பேசி உள்ளார்.

    இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை பசுமை வழிச்சாலையிலுள்ள அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று (10.03.2025) மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.

    மாஃபா பாண்டியராஜனை, ராஜேந்திரபாலாஜி விமர்சித்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஊர்வலம் ஜமா மசூதி பகுதியை அடைந்தவுடன், அவர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷங்களை எழுப்பி பட்டாசுகளை வெடித்தனர்.
    • 3 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன, 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன.

    நேற்று நியூசிலாந்து உடனான சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனை நாடு முழுவதும் பலர் வீதிகளில் திரண்டு கொண்டாடினர்.

    இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள மோவ் பகுதியில் நேற்று இரவு சாம்பியன்ஸ் டிராபி வெற்றியின் கொண்டாட்டம் வன்முறையாக மாறியது.

    இந்தூர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகர்- மோவ் நகரில் இரு குழுக்களிடையே வகுப்புவாத மோதல் வெடித்துள்ளது. நேற்று இரவு 10 மணி அளவில் 100 ரசிகர்கள் மோட்டார் சைக்கிள்களில் வெற்றி ஊர்வலம் நடத்தினர்.

    ஊர்வலம் ஜமா மசூதி பகுதியை அடைந்தவுடன், அவர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷங்களை எழுப்பினர் என்று கூறப்படுகிறது. ஜாமா மசூதி அருகே அவர்கள் பட்டாசுகளை வெடித்தனர். அங்கு மக்கள் இரவு நேர பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.

    எனவே இரு குழுக்களுக்கும் இடையிலான ஏற்பட்ட வாக்குவாதம் விரைவில் வன்முறையாக மாறியது. இரு தரப்பிலிருந்தும் கல்வீச்சுக்கு சம்பவங்கள் அரங்கேறின.

    பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. சுமார் 3 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன, 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. இந்த மோதலில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர். சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களைக் கலைத்தனர். கடைகள் மற்றும் வாகனங்களில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படையினர் அணைத்தனர். நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் மோவ் கூடுதல் எஸ்பி ரூபேஷ் திவேதி தெரிவித்தார். 

    • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'.
    • மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

    அஜித்தை இதுவரை நாம் பார்த்திராத லுக்கில் நடித்துள்ளார். படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. படத்தின் முன்பதிவு பணிகள் இம்மாத இறுதியில் தொடங்கப்படவுள்ள நிலையில்

    படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த பாடலுக்கு OG Sambavam என தலைப்பு வைத்துள்ளனர். OG என்றால் ஒர்ஜினல் கேங்ஸ்டர் என அர்த்தம். இப்பாடல் மிகவும் மாஸாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் பாஜக-வுக்கு வேலைப்பார்ப்பதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு.
    • அவ்வாறு பணியாற்றும் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை களையெடுக்க வேண்டியது அவசியம்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றிருந்தார். அப்போது காங்கிரஸ் தொண்டர்களிடையே ராகுல் காந்தி பேசினார். அப்போது, குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜக-வுக்காக பணியாற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை களையெடுக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவித்திருந்தார்.

    ராகுல் காந்தி இவ்வாறு பேசியதற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    மேலும் தான் மத்திய பிரதேச மாநில முதல்வராக இருக்கும்போது, குஜராத் மாநில தேர்தல் பிரசாரத்திற்காக சென்றேன். அப்போது ஆர்.எஸ்.எஸ். பற்றி பேச வேண்டாம். இந்துக்கள் கோப்படுவார்கள் என என்னிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது என பழைய சம்பவத்தை திக்விஜய் சிங் நினைவு கூர்ந்துார்.

    ஆர்.எஸ்.எஸ். இந்துக்களை பிரதிநிதித்துவம் படுத்துவதில்லை என திக்விஜய் சிங் கூறினார்.

    இது தொடர்பாக திக்விஜய் கூறுகையில் "இந்து மத குரு சங்கராச்சாரியார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிறுவப்பட்ட ஒரு பாரம்பரியத்தைக் கொண்டுள்ளார். அது இன்னும் நடைமுறையில் உள்ளது.

    அவர்களில் எந்த சங்கராச்சாரியார் இன்று பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவாளராக உள்ளார்?. பாஜக என்பது மதத்தின் பெயரால் மக்களை கொள்ளையடித்து அதிகாரத்தைப் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட சுரண்டல் சக்திகளின் ஒரு குழு ஆகும்" என்றார்.

    • பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக முதலமைச்சருக்கு மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.
    • மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்?

    தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் தமிழக முதலமைச்சருக்கு மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து பதிவில் கூறியிருப்பதாவது:-

    பதட்டத்தில் பிதற்றும் தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள்.

    முதல் கேள்வி:

    திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார்.

    இரண்டாவது கேள்வி:

    மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்?

    உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் CBSE மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா?

    மூன்றாவது கேள்வி:

    யார் அந்த சூப்பர் முதல்வர்?

    ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்துவிட்டது, மு.க.ஸ்டாலின் அவர்களே. இனியும் தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மும்பையில் இருந்து 322 பேருடன் ஏர் இந்தியா விமானம் நியூயார்க் புறப்பட்டுச் சென்றது.
    • நடுவானில் சென்றபோது வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக கடிதம் கண்டெடுக்கப்பட்டதால் மும்பை திருப்பி விடப்பட்டது.

    மும்பையில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்டுச் சென்ற ஏர்இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், விமானம் மீண்டும் மும்பை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. விமானம் தரையிறங்கியதும், அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    இன்று காலை 19 விமான ஊழியர்கள் உள்பட 322 பேருடன் போயிங் 777-300 ER விமானம் மும்பை சத்ரபதி சிவாஜ் மகாராஜா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்டுச் சென்றது.

    விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் கழிப்பறையில், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஒரு துண்டு நோட்டீஸ் கண்டெடுக்கப்பட்டது.

    இது தொடர்பாக விமானிக்கு தகவல் தெரிவிக்க, அவர் உடனே விமானத்தில் மும்பை விமான நிலையத்திற்கு திருப்பினார்.

    விமானம் மும்பைக்கு திரும்பிய நிலையில், அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார். இதுவரை சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை. விசாரணை நடத்து வருகிறோம் என அதிரிகாரிகள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது, பாதுகாப்பு மிரட்டல் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விமானம் மும்பைக்கு மீண்டும் திருப்பப்பட்டது. விமானத்தில் உள்ள அனைவரிடன் பாதுகாப்பு நலனிற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது. விமானம் பாதுகாப்பு அமைப்புகளில் கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு ஏர்இந்தியா முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த விமானம் நாளை காலை 5 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் ஓட்டலில் தங்கவும், உணவுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • 20 சதவீதம் பேர் 4 மணி நேரம் மட்டுமே தூங்குவதாக கூறி உள்ளார்கள்.
    • 9 சதவீதம் பேர் தங்களுக்கு ஸ்லீப் அப்னியா என்ற மருத்துவ பிரச்சனை இருப்பதாக கூறினார்கள்.

    ஓடி... ஆடி.... எவ்வளவுதான் உழைத்தாலும் ஒருநாளில் 8 மணி நேரமாவது நிம்மதியாக தூங்க வேண்டும். அதுவே உடலுக்கு ஆரோக்கியத்தையும், உற்சாகத்தையும் தரும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    ஆனால் எல்லோராலும் அப்படி தூங்க முடிகிறதா? ஒருவேளை தூங்கினாலும் இடையூறு இல்லாமல் நிம்மதியாக தூங்குகிறார்களா? என்பது பற்றி ஒரு சர்வே நடத்தி இருக்கிறார்கள்.

    மொத்தம் 40 ஆயிரம் பேரிடம் இந்த சர்வே நடந்திருக்கிறது. இதில் 61 சதவீதம் பேர் ஆண்கள். 39 சதவீதம் பேர் பெண்கள். அவர்களில் 39 சதவீதம் பேர் மட்டுமே 6 முதல் 8 மணி நேரம் தூங்குவதாக தெரிவித்துள்ளார்கள். அதே நேரம் 39 சதவீதம் பேர் 4 முதல் 6 மணி நேரம் தூங்குவதாக கூறி இருக்கிறார்கள்.



    20 சதவீதம் பேர் 4 மணி நேரம் மட்டுமே தூங்குவதாக கூறி உள்ளார்கள். மொத்தம் 2 சதவீதம் பேர் மட்டுமே 8 முதல் 10 மணி நேரம் நிம்மதியாக தூங்குவதாக கூறி இருக்கிறார்கள். வருகிற 25-ந்தேதி உலக தூக்க தினம். இதையொட்டிதான் இந்த ஆய்வை நாடு முழுவதும் 348 மாவட்டங்களில் நடத்தி இருக்கிறார்கள்.

    அப்போது இந்த கொசுத் தொல்லையை தாங்க முடியவில்லையே என்று தினமும் கொசுக்களால் தூக்கத்தை தொலைப்பவர்கள் 22 சதவீதம் பேர்.

    நன்றாக அயர்ந்து தூங்கும் போது ஒன்றிரண்டு முறை கழிவறைக்கு செல்ல எழுந்து செல்வதால் தூக்கம் கெடுவதாக சிலர் ஆதங்கப்பட்டனர். மேலும் சிலர் அதிகாலையிலேயே எழுந்து வேலைக்கு செல்வதாகவும், பெண்களை பொறுத்தவரை வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய வேண்டியிருப்பதால் இரவில் தாமதமாக தூங்க செல்வதாகவும், அதிகாலையிலேயே எழுந்து விடுவதாகவும் கூறினார்கள்.

    9 சதவீதம் பேர் தங்களுக்கு ஸ்லீப் அப்னியா என்ற மருத்துவ பிரச்சனை இருப்பதாக கூறினார்கள். மிக முக்கிய தகவல் தொடர்பு சாதனமாக இருக்கும் மொபைல் போன்கள் பலரது தூக்கத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். மொபைல் போன்களில் வரும் தகவல்கள், நீண்ட நேரம் கண்விழித்து மொபைல் பார்ப்பது போன்றவைகள் நிம்மதியான தூக்கத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறினார்கள்.

    வாரத்தில் பல நாள் நீண்ட நேரம் தூங்க முடியாத ஏக்கத்தை போக்க விடுமுறை நாட்களில் அதிக நேரம் தூங்குவதாகவும், சிலர் மதிய நேரங்களில் தூங்குவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

    இந்த கணக்கெடுப்பின் மூலம் 59 சதவீதம் இந்தியர்கள் 6 மணி நேரத்துக்கும் குறைவாகவே இடையூறு இல்லாமல் நிம்மதியாக தூங்க முடிவதாக கூறினார்கள் என்று கணக்கெடுப்பு நடத்திய லோக்கல் சர்க்கிள் நிறுவனத்தின் தலைவர் சச்சின் தபாரியா கூறி இருக்கிறார். இது கவலைக்குரிய விசயமாகவே இருப்பதாக கூறினார்.

    இது குறைந்தபட்சம் மற்றும் உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை ஏற்படுத்தி விடுவதாகவும் அவர் எச்சரித்தார்.

    ×