என் மலர்
நீங்கள் தேடியது "திக்விஜய் சிங்"
- காங்கிரஸ் கட்சி இப்போது ராகுல் குழு மற்றும் பிரியங்கா குழு என இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ளது.
- ராகுல் பிரிவினர் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள், அவர் மீதான நம்பிக்கையின்மையை உணர்த்துகின்றன.
காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங்கின் சமீபத்திய ட்வீட் குறித்து, பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி இப்போது ராகுல் குழு மற்றும் பிரியங்கா குழு என இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ளது. ராகுல் பிரிவினர் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள், அவர் மீதான நம்பிக்கையின்மையை உணர்த்துகின்றன.
அடுத்தடுத்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுலுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைக் கொண்டு வருகின்றனர்.
இப்போது, ராகுல் காந்தியின் வழிகாட்டியான திக்விஜய் சிங், ராகுலை சமாதானப்படுத்த முடியாது என்று பகிரங்கமாக மீண்டும் மீண்டும் ட்வீட் செய்து வருகிறார்.
வாக்கு மோசடியால் அல்ல, மாறாக அமைப்பு ரீதியான பலவீனங்களால்தான் காங்கிரஸின் தோல்வி ஏற்பட்டது என்று அவர் தெளிவாகக் கூறுகிறார். டி.எஸ். சிங் தியோ மற்றும் ரஷீத் ஆல்வி ஆகியோர் இதை ஆதரிக்கின்றனர். ஒட்டுமொத்தத்தில், இது ராகுல் மீதான நம்பிக்கையின்மையைப் பிரதிபலிக்கும் ஒரு ராகுலை அகற்று பிரச்சாரமாகத் தெரிகிறது.
இவ்வாறு ஷேசாத் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக் விஜய் சிங், மோடியின் படத்தை காண்பித்து பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வலிமையை பாராட்டி பேசினார்.
தலைவர்கள் காலடியில் இருந்த ஒரு சாதாரண தொண்டன் முதல்வர் மற்றும் பிரதமராகியுள்ளார் எனக் கூறியதாக தெரிகிறது. அந்த அளவிற்கு அந்த அமைப்பு வலிமையாக இருப்பதாக தெரிவித்தார். இதற்கு மற்ற தலைவர்கள் ஆட்சேபனை தெரிவித்து தற்போதுள்ள விசயங்கள் குறித்து பேசுமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.
பின்னர், எக்ஸ் பக்கத்தில் திக் விஜய் சிங் விளக்கம் அளித்திருந்தார். அதில் நான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளை பாராட்ட வில்லை. அமைப்பின் வலிமையை சுட்டிக்காட்டினேன் எனத் தெரிவித்தார்.
- ஆர்எஸ்எஸ் மற்றும் மோடியை எதிர்க்கிறேன். ஆனால், அதன் கட்டமைப்பை ஆதரிக்கிறேன்.
- ஒரு அமைப்பின் வலிமையைப் பாராட்டுவது தவறா? என கேள்வி எழுப்பினார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ளும் முன் மத்தியப் பிரதேச முன்னாள் முதல் மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திக்விஜய் சிங் எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அதில், இணையத்தில் தான் பார்த்த ஒரு புகைப்படம் தன்னை வெகுவாக ஈர்த்ததாகவும் அமைப்பின் சக்தி என்றால் இதுதான் என குறிப்பிட்டிருந்தார்.
அந்த பதிவில், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கலந்துகொண்ட ஒரு பொது நிகழ்ச்சியில் அவரது காலடியில் தரையில் நரேந்திர மோடி அமர்ந்திருந்த பழைய புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். தனது பதிவை, அகில இந்திய காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஜெயராம் ரமேஷ் ஆகியோருக்கும் பகிர்ந்துள்ளார். பிரதமர் மோடிக்கும் இதை அவர் பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங், 'நான் ஆர்எஸ்எஸ் மற்றும் மோடியை எதிர்க்கிறேன். ஆனால், அதன் கட்டமைப்பை ஆதரிக்கிறேன். அமைப்பைத்தான் பாராட்டி உள்ளேன். ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடியின் தீவிர எதிர்ப்பாளராக இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன். ஒரு அமைப்பின் வலிமையைப் பாராட்டுவது தவறா? என கேள்வி எழுப்பினார்.
- உறுப்பினர் பதவியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- ராகுல் புத்திசாலித்தனமாக பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்ததற்காக, மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திக்விஜய் சிங்கின் சகோதரரும், மத்தியப் பிரதேசத்தின் மூத்த தலைவருமான லட்சுமணன் சிங்கை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஐந்து முறை எம்.எல்.ஏ.வுமான லட்சுமணன் சிங், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக காங்கிரஸின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் ஒழுங்குமுறைக் குழு உறுப்பினர் செயலாளர் தாரிக் அன்வர் அறிவித்தார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ராகுல் காந்தி மற்றும் அவரது மைத்துனர் ராபர்ட் வதேரா அளித்த பதில்களை குறிப்பிட்டு, லட்சுமணன் சிங், அவர்களை முதிர்ச்சியற்றவர்கள் என்று அழைத்தார்.
மேலும், ராகுல் புத்திசாலித்தனமாக பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மாநிலப் பிரிவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் லட்சுமணனின் தொடர்ச்சியான செயல்களுக்கு கட்சிக்குள் அவருக்கு எதிராக எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் மத்திய தலைமை இந்த ஒழுங்கு நடவடிக்கையை எடுத்துள்ளது.
- காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் சென்ற கார் பைக்கின் மீது மோதியது.
- இதில் காயமடைந்த நபருக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம் என்றார்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் பகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் எதிர்திசையில் வந்து கொண்டிருந்த நபர், திடீரென யூ டர்ன் எடுத்துள்ளார். இதனால் திக்விஜய் சிங் சென்ற கார் அந்த பைக்கின் மீது மோதியது.
இந்த விபத்தில் பைக்கில் வந்த 20 வயது இளைஞர் காயமடைந்தார். இதையடுத்து உடனடியாக அந்த நபர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங், காயமடைந்த நபருக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். தங்கள் கார் மெதுவான வேகத்தில் சென்றதால் பைக்கில் வந்தவருக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
- வாரணாசி காங்கிரஸ் தலைவர் அஜய் ராயும், தனது வீட்டை ராகுல் காந்திக்கு வழங்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.
- திக்விஜய் சிங்குக்கு டெல்லியில் அரசு இல்லம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
போபால்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து டெல்லியில் அவர் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதை ராகுல் காந்தியும் ஏற்றுக்கொண்டுள்ளார். ராகுல் காந்தி பல ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பது, காங்கிரசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே அவருக்கு தங்கள் வீட்டை வழங்க பல தலைவர்கள் முன்வந்துள்ளனர்.
அந்த வகையில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான தக்விஜய் சிங், தனது வீட்டை ராகுல் காந்திக்கு வழங்க முன்வந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'எனது வீட்டில் நீங்கள் தங்கினால் அதிர்ஷ்டமாக கருதுவேன்' என குறிப்பிட்டு இருந்தார்.மாநிலங்களவை உறுப்பினரான திக்விஜய் சிங்குக்கு டெல்லியில் அரசு இல்லம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போல வாரணாசி காங்கிரஸ் தலைவர் அஜய் ராயும், தனது வீட்டை ராகுல் காந்திக்கு வழங்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.
- மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் திக்விஜய் சிங்.
- கட்சியை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவது எப்படி என்பது குறித்து பேசினார்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் முன்னாள் முதல் மந்திரியும், மூத்த தலைவருமான திக்விஜய் சிங் கட்சி தொண்டர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
செய்தியை திறம்பட தெரிவிப்பது மற்றும் அமைப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவது எப்படி என்பதை ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்திடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீவிர எதிர்ப்பாளர்களாக இருந்தாலும் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் மன விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். ஒருபோதும் ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டார்கள். ஒருபோதும் அடிக்க மாட்டார்கள். ஒருபோதும் சிறைக்குச் செல்ல மாட்டார்கள், மாறாக எங்களை சிறைக்கு அனுப்புவார்கள்.
ஆர்.எஸ்.எஸ் பொதுவாக 3 விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், விவாதங்கள் நடத்துதல் மற்றும் இறுதியாக இயக்கத்திற்கு ஏற்படும் செலவுகள்.
நீங்கள் அவர்களை எதிர்த்துப் போராட விரும்பினால் அவர்களின் சொந்த விளையாட்டில் அவர்களை வெல்லுங்கள், நிச்சயமாக, உடல் ரீதியாக அல்ல, ஆனால் அறிவுபூர்வமாக என தெரிவித்தார்.
- குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் பாஜக-வுக்கு வேலைப்பார்ப்பதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு.
- அவ்வாறு பணியாற்றும் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை களையெடுக்க வேண்டியது அவசியம்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றிருந்தார். அப்போது காங்கிரஸ் தொண்டர்களிடையே ராகுல் காந்தி பேசினார். அப்போது, குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜக-வுக்காக பணியாற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை களையெடுக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தி இவ்வாறு பேசியதற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் தான் மத்திய பிரதேச மாநில முதல்வராக இருக்கும்போது, குஜராத் மாநில தேர்தல் பிரசாரத்திற்காக சென்றேன். அப்போது ஆர்.எஸ்.எஸ். பற்றி பேச வேண்டாம். இந்துக்கள் கோப்படுவார்கள் என என்னிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது என பழைய சம்பவத்தை திக்விஜய் சிங் நினைவு கூர்ந்துார்.
ஆர்.எஸ்.எஸ். இந்துக்களை பிரதிநிதித்துவம் படுத்துவதில்லை என திக்விஜய் சிங் கூறினார்.
இது தொடர்பாக திக்விஜய் கூறுகையில் "இந்து மத குரு சங்கராச்சாரியார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிறுவப்பட்ட ஒரு பாரம்பரியத்தைக் கொண்டுள்ளார். அது இன்னும் நடைமுறையில் உள்ளது.
அவர்களில் எந்த சங்கராச்சாரியார் இன்று பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவாளராக உள்ளார்?. பாஜக என்பது மதத்தின் பெயரால் மக்களை கொள்ளையடித்து அதிகாரத்தைப் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட சுரண்டல் சக்திகளின் ஒரு குழு ஆகும்" என்றார்.






