search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Digvijay Singh"

    • வாரணாசி காங்கிரஸ் தலைவர் அஜய் ராயும், தனது வீட்டை ராகுல் காந்திக்கு வழங்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.
    • திக்விஜய் சிங்குக்கு டெல்லியில் அரசு இல்லம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    போபால்

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து டெல்லியில் அவர் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதை ராகுல் காந்தியும் ஏற்றுக்கொண்டுள்ளார். ராகுல் காந்தி பல ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பது, காங்கிரசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே அவருக்கு தங்கள் வீட்டை வழங்க பல தலைவர்கள் முன்வந்துள்ளனர்.

    அந்த வகையில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான தக்விஜய் சிங், தனது வீட்டை ராகுல் காந்திக்கு வழங்க முன்வந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'எனது வீட்டில் நீங்கள் தங்கினால் அதிர்ஷ்டமாக கருதுவேன்' என குறிப்பிட்டு இருந்தார்.மாநிலங்களவை உறுப்பினரான திக்விஜய் சிங்குக்கு டெல்லியில் அரசு இல்லம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போல வாரணாசி காங்கிரஸ் தலைவர் அஜய் ராயும், தனது வீட்டை ராகுல் காந்திக்கு வழங்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.

    மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சாத்வி பிராக்யா சிங் போபால் பாராளுமன்ற தொகுதியில் திக்விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். #BJPfields #SadhviPragyaSingh #BhopalLSseat #DigvijaySingh
    போபால்:

    மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் இருந்து சுமார் 270 கி.மீட்டர் தொலைவில் உள்ள மலேகானில் கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி ரம்ஜான் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள் மீது இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த வழக்கை முதலில் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரித்தது. ராணுவ லெப்டினண்ட் கலோனல் ஸ்ரீகாந்த் புரோஹித் மற்றும் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்டோர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றனர். 2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சாத்வி பிரக்யா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 2009-ம் ஆண்டு மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இவர்களை குற்றவாளிகளாகச் சேர்த்தனர்.

    அதன்பிறகு தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த வழக்கு 2011-ல் மாற்றப்பட்டது. பின்னர், பிரசாத் புரோஹித், மேஜர் ரமேஷ் உபாத்யாயா உள்ளிட்ட 10 நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.



    மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் சுமார் 7 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஷியாம் சாஹு, ஷிவ்நாராயண் கல்சங்ரா மற்றும் பிரவீன் தகல்கி ஆகியோர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    சாத்வி பிரக்யா, லெப்டினண்ட் கலோனல் ஸ்ரீகாந்த் புரோஹித், சுதாகர் திவேதி, ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யா, சமீர் குல்கர்னி, சுதாகர் சதுர்வேதி, அஜய் ரஹிர்கர் ஆகியோருக்கு எதிராக தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.

    இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மேலும் இருவரான ஜகதிஷ் மாத்ரே, ராகேஷ் டாவ்டே ஆகியோர் மீது ஆயுத தடை சட்டத்தின்கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ஜாமினில் வெளியே வந்த சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் தற்போது முறைப்படி பாஜகவில் இணைந்துள்ளார்.

    இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிடும்  பாஜக வேட்பாளராக சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் அறிவிக்கப்பட்டுள்ளார். #BJPfields #SadhviPragyaSingh #BhopalLSseat  #DigvijaySingh  
    மத்திய பிரதேச அரசை கவிழ்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு பா.ஜனதா ரூ.100 கோடி தருவதாக பேரம் பேசியுள்ளனர் என்று திக்விஜய்சிங் குற்றம் சாட்டியுள்ளார். #congress #mpgovt #digvijaysingh #bjp

    போபால்:

    காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திக்விஜய்சிங் போபாலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய பிரதேச காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்கு பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. இதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ. பைஜ்நாத் குஷ்வாகாவை பா.ஜனதா எம்.எல்.ஏ. நாராயன் திரிபாதி உணவகத்துக்கு அழைத்து சென்று பேசினார். இந்த சந்திப்பின் போது பா.ஜனதா முன்னாள் மந்திரிகள் நரோத்தம் மிஸ்ரா, விஸ்வாஸ் சாரங் ஆகியோரும் இருந்தனர்.

    மத்திய பிரதேச காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்கு ரூ.100 கோடி தருவதாக குஷ்வாகாவிடம் அவர்கள் பேரம் பேசியுள்ளனர். மேலும் புதிதாக பா.ஜனதா அரசு அமைந்தால் மந்திரி பதவி தருவதாகவும் கூறியுள்ளனர். குஷ்வாகா அதற்கு மறுத்துவிட்டார். மத்திய பிரதேச தேர்தலில் பா.ஜனதா கட்சியின் தோல்வியை சிவராஜ்சிங் சவுகானால் ஜீரணிக்க முடியவில்லை.


    இவ்வாறு அவர் கூறினார்.

    திக்விஜய் சிங்கின் இந்த குற்றச்சாட்டை பா.ஜனதா மறுத்துள்ளது. இது தொடர்பாக பா.ஜனதா தலைவர் நரோத்தம் மிஸ்ரா கூறியதாவது:-

    திக்விஜய் சிங் இது போன்ற குற்றச்சாட்டுகளை நீண்ட காலமாக தெரிவித்து வருகிறார். சுய விளம்பரத்துக்காக அவர் நாடகமாடுகிறார். குற்றச் சாட்டுக்கான ஆதாரம் அவரிடம் இருந்தால் அவர் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #congress #mpgovt #digvijaysingh #bjp

    கேரள மாநில முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டி, ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். #OommenChandy #inchargeofAP
    புதுடெல்லி:

    சமீபத்தில் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக இருந்த திக்விஜயா சிங் அவரது பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநில முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டியை ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக நியமனம் செய்து அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டார்.



    இதேபோல், அந்தமான் நிக்கோபார் மற்றும் மேற்கு வங்காளம் மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக கவுரவ் கோகாய் நியமிக்கப்பட்டுள்ளார். #OommenChandy #inchargeofAP
    மத்தியப்பிரதேசம் மாநில காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். Congress #DigvijaySingh
    போபால்:

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின்னர் பல மாநிலங்களில் உள்ள முக்கிய பொறுப்பாளர்களை மாற்றி அமைத்து வருகிறார்.

    அவ்வகையில், மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை மத்தியப்பிரதேசம் மாநில காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை இன்று அறிவித்துள்ளது.

    இதேபோல், தேர்தல் பிரசாரக்குழு தலைவராக ஜோதிராதித்யா சிங் மற்றும் தேர்தல் திட்டக்குழு தலைவராக சுரேஷ் பச்சவுரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    230 இடங்களை கொண்ட மத்தியப்பிரதேசம் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் நிலையில் இன்று இந்த நியமனங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #MadhyaPradeshCongress #DigvijaySingh
    ×