என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dig Vijay Singh"

    • ஆர்எஸ்எஸ் மற்றும் மோடியை எதிர்க்கிறேன். ஆனால், அதன் கட்டமைப்பை ஆதரிக்கிறேன்.
    • ஒரு அமைப்பின் வலிமையைப் பாராட்டுவது தவறா? என கேள்வி எழுப்பினார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ளும் முன் மத்தியப் பிரதேச முன்னாள் முதல் மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திக்விஜய் சிங் எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

    அதில், இணையத்தில் தான் பார்த்த ஒரு புகைப்படம் தன்னை வெகுவாக ஈர்த்ததாகவும் அமைப்பின் சக்தி என்றால் இதுதான் என குறிப்பிட்டிருந்தார்.

    அந்த பதிவில், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கலந்துகொண்ட ஒரு பொது நிகழ்ச்சியில் அவரது காலடியில் தரையில் நரேந்திர மோடி அமர்ந்திருந்த பழைய புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். தனது பதிவை, அகில இந்திய காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஜெயராம் ரமேஷ் ஆகியோருக்கும் பகிர்ந்துள்ளார். பிரதமர் மோடிக்கும் இதை அவர் பகிர்ந்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங், 'நான் ஆர்எஸ்எஸ் மற்றும் மோடியை எதிர்க்கிறேன். ஆனால், அதன் கட்டமைப்பை ஆதரிக்கிறேன். அமைப்பைத்தான் பாராட்டி உள்ளேன். ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடியின் தீவிர எதிர்ப்பாளராக இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன். ஒரு அமைப்பின் வலிமையைப் பாராட்டுவது தவறா? என கேள்வி எழுப்பினார்.

    • காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் சென்ற கார் பைக்கின் மீது மோதியது.
    • இதில் காயமடைந்த நபருக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம் என்றார்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் பகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் எதிர்திசையில் வந்து கொண்டிருந்த நபர், திடீரென யூ டர்ன் எடுத்துள்ளார். இதனால் திக்விஜய் சிங் சென்ற கார் அந்த பைக்கின் மீது மோதியது.

    இந்த விபத்தில் பைக்கில் வந்த 20 வயது இளைஞர் காயமடைந்தார். இதையடுத்து உடனடியாக அந்த நபர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங், காயமடைந்த நபருக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். தங்கள் கார் மெதுவான வேகத்தில் சென்றதால் பைக்கில் வந்தவருக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறுகையில், காந்தியின் சித்தாந்தம் தோற்று, அவரை கொன்றவர்கள் சித்தாந்தம் வென்றது வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் போபால் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் சாத்வி பிரக்யா சிங் தாக்குரும், காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கும் போட்டியிட்டனர்.

    இதில் சாத்வி பிரக்யா சிங் 8,66,482 வாக்குகளும், திக்விஜய் சிங் 5,01,660 வாக்குகளும் பெற்றனர். சாத்வி பிரக்யா சிங் 3,64,822 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.



    இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறுகையில், காந்தியின் சித்தாந்தம் தோற்று, அவரை கொன்றவர்கள் சித்தாந்தம் வென்றது வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், நாட்டின் தற்போதைய நிலையில் காந்தியின் சித்தாந்தம் தோற்று, அவரை கொன்றவர்கள் சித்தாந்தம் வெல்வதா? இது எனக்கு வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
    வாக்களிக்காததன் மூலம் பெரிய பாவம் செய்துவிட்டீர்கள் என திக்விஜய் சிங்கை பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
    மத்திய பிரதேச மாநிலம், போபால் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், வழக்கமாக தனது சொந்த தொகுதியான ராஜ்காரில் ஓட்டு போடுவது வழக்கம். போபாலில் நேற்று அவர் வாக்குப்பதிவை பார்வையிட வேண்டி இருந்ததால், அங்கிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள ராஜ்காருக்கு ஓட்டு போட போகவில்லை. இதை அவரே ஒப்புக்கொண்டு, வருத்தம் தெரிவித்தார். அவர் ஓட்டு போடாதது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    திக்விஜய் சிங் நேற்று நடைபெற்ற தேர்தலில் ஓட்டுபோடாதது தொடர்பாக பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். மத்திய பிரதேசத்தில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, திக்விஜய் சிங் ஜனநாயக திருவிழாவில் நீங்கள் பெரிய பாவம் செய்துவிட்டீர்கள். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோர் கூட வரிசையில் நின்று வாக்களித்தனர். ஆனால் நீங்கள் ஓட்டுபோடவில்லை. அவரது கர்வம் போபாலில் வெளிப்பட்டது. மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். ஏன் நான் கூட ஆமதாபாத்தில் எனது கடமையை செய்தேன். திக்விஜய் சிங்குக்கு ஜனநாயகம் பற்றியும் கவலையில்லை, மக்களை பற்றியும் கவலையில்லை.

    நீங்கள் உங்களை காப்பாற்றுவதற்காக மக்களை ஓட்டுபோட சொல்வதிலேயே தீவிரமாக இருந்தீர்கள். உங்கள் வேலையை செய்ய தவறும் அளவுக்கு அவ்வளவு பயம் ஏன்? நீங்கள் கடந்த வருடம் மேற்கொண்ட நர்மதா ஆன்மிக யாத்திரைகூட இந்த தேர்தலில் உங்களை காப்பாற்றாது எனக் கூறினார். 
    ×