என் மலர்
நீங்கள் தேடியது "Dig Vijay Singh"
- ஆர்எஸ்எஸ் மற்றும் மோடியை எதிர்க்கிறேன். ஆனால், அதன் கட்டமைப்பை ஆதரிக்கிறேன்.
- ஒரு அமைப்பின் வலிமையைப் பாராட்டுவது தவறா? என கேள்வி எழுப்பினார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ளும் முன் மத்தியப் பிரதேச முன்னாள் முதல் மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திக்விஜய் சிங் எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அதில், இணையத்தில் தான் பார்த்த ஒரு புகைப்படம் தன்னை வெகுவாக ஈர்த்ததாகவும் அமைப்பின் சக்தி என்றால் இதுதான் என குறிப்பிட்டிருந்தார்.
அந்த பதிவில், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கலந்துகொண்ட ஒரு பொது நிகழ்ச்சியில் அவரது காலடியில் தரையில் நரேந்திர மோடி அமர்ந்திருந்த பழைய புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். தனது பதிவை, அகில இந்திய காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஜெயராம் ரமேஷ் ஆகியோருக்கும் பகிர்ந்துள்ளார். பிரதமர் மோடிக்கும் இதை அவர் பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங், 'நான் ஆர்எஸ்எஸ் மற்றும் மோடியை எதிர்க்கிறேன். ஆனால், அதன் கட்டமைப்பை ஆதரிக்கிறேன். அமைப்பைத்தான் பாராட்டி உள்ளேன். ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடியின் தீவிர எதிர்ப்பாளராக இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன். ஒரு அமைப்பின் வலிமையைப் பாராட்டுவது தவறா? என கேள்வி எழுப்பினார்.
- காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் சென்ற கார் பைக்கின் மீது மோதியது.
- இதில் காயமடைந்த நபருக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம் என்றார்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் பகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் எதிர்திசையில் வந்து கொண்டிருந்த நபர், திடீரென யூ டர்ன் எடுத்துள்ளார். இதனால் திக்விஜய் சிங் சென்ற கார் அந்த பைக்கின் மீது மோதியது.
இந்த விபத்தில் பைக்கில் வந்த 20 வயது இளைஞர் காயமடைந்தார். இதையடுத்து உடனடியாக அந்த நபர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங், காயமடைந்த நபருக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். தங்கள் கார் மெதுவான வேகத்தில் சென்றதால் பைக்கில் வந்தவருக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.








