search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petrol bombing"

    • இந்திய அரசு அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • வீட்டில் கடந்த 25-ந்தேதி மண்எண்ணை- பெட்ரோல் பாட்டில் குண்டை வீசி விட்டு தப்பி ஓடினர்.

    சேலம்:

    தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி அலுவலகங்களில் இந்திய அரசு அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இதனை தொடர்ந்து பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் வீடு அலுவலகங்கள் குறி வைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகள், பாட்டில்கள் வீசி தாக்குதல் நடத்தினர்.

    சேலம்...

    கோவை, மதுரை, திண்டுக்கல்லை தொடர்ந்து ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் சேலம் அம்மாப்பேட்டை பரமக்குடி நல்லுசாமி தெருவை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ராஜன் (வயது 56) என்பவருடைய வீட்டில் கடந்த 25-ந்தேதி மண்எண்ணை- பெட்ரோல் பாட்டில் குண்டை வீசி விட்டு தப்பி ஓடினர். அதுபோல் கன்னியாகுமரி, தூத்துக்குடியிலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தன.

    இதையடுத்து சேலம் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல், டீசல் பங்குகளில் யாருக்கும் கேன்களில் பெட்ேரால், டீசல் வழங்க வேண்டாம் என காவல் துறை கேட்டுக்கொண்டது. அதன்படி பங்க் உரிமையா ளர்கள் தங்களுடைய ஊழியர்களிடம் யாராவது பெட்ரோல் கேன்களை கொண்டு வந்து கேட்டால் அவர்களுக்கு கேன்களில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டாம். அவர்கள் நேரில் வாகனங்களை கொண்டு வந்து நிரப்புமாறு சொல்லுங்கள் என அறிவுறுத்தியுள்ளனர்.

    இதையடுத்து கேன்களை கொண்டு வந்து பெட்ரோல், டீசல் கேட்டவர்களுக்கு வழங்க முடியாது. வாகனங்களை கொண்டு வந்து நிரப்பி கொள்ளுங்கள் என கூறி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் கேன்களில் வழங்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். பொதுமக்கள் நலன் கருதி, தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    வேலூரில் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #petrolbombing

    வேலூர்:

    வேலூரில் தோட்டப்பாளையத்தில் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் தப்பிய கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    வேலூர் பாபுராவ் தெருவை சேர்ந்தவர் ஜி.ஜி.ரவி. இவருடைய மகன்கள் கோகுல் (வயது 30), தமிழ்மணி (28) ஆகியோர் நேற்று முன்தினம் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோவில் அருகே காரை நிறுத்தி, அதில் அமர்ந்தபடி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென காரின் மீது பெட்ரோல் குண்டை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதையடுத்து கார் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் தோட்டப்பாளையம் பகுதியில் நின்று கொண்டிருப்பதாக கோகுல் தரப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோகுல் தரப்பினர் அங்கு சென்றனர்.

    அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் உருவானது. ஒருவருக்கொருவர் பீர் பாட்டில், கற்களை எடுத்து வீசி தாக்கிக் கொண்டனர்.

    இதையடுத்து எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் அந்த பகுதியில் இருந்த ஒரு விடுதியின் கதவு, ஜன்னல் கண்ணாடிகளையும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள்களையும் அடித்துதுவம்சம் செய்தனர்.

    இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக பிரதாப், சசி, சின்னஅப்பு, ராஜி உள்பட 7 பேர் மீது வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை விசாரிக்க வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழக்கை வெவ்வேறு கோணங்களில் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே தோட்டப்பாளையம் அருகே உள்ள காட்பாடி சாலையில் வடக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மடக்கினர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்தவரை அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    அவரை சோதனை செய்தபோது அவரிடம் 1½ அடி நீளமுள்ள 2 கத்திகள் இருந்தன. இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

    அவர் நாகர்கோவிலை சேர்ந்த செல்வம் (33) என்பது தெரியவந்தது. இவருக்கு இந்த மோதல் சம்பவத்தில் தொடர்பு உள்ளது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். #petrolbombing

    வேலூரில் கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #petrolbombing

    வேலூர்:

    வேலூர் பாபுராவ்தெருவை சேர்ந்தவர் ஜி.ஜி.ரவி. இவருடைய மகன்கள் கோகுல் (வயது 30), தமிழ்மணி (28). இவர்கள் இருவரும் நேற்று இரவு 7.30 மணியளவில் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் காரை நிறுத்தி, அதில் அமர்ந்தபடி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென காரின் மீது பெட்ரோல் குண்டை வீசினர். இதில் காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து கோகுல், தமிழ்மணி மற்றும் அவரது நண்பர்கள் உடனடியாக காரை விட்டு வெளியேறினர்.

    இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.

    இதற்கிடையே காரில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் தோட்டப்பாளையம் பகுதியில் நின்று கொண்டிருப்பதாக கோகுலுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோகுல், தமிழ்மணி மற்றும் நண்பர்கள், ஆதரவாளர்கள் என 10க்கும் மேற்பட்டவர்களுடன் அப்பகுதிக்கு நடந்து சென்றனர்.

    தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி தெருவில் சென்றபோது திடீரென 20-க்கும் மேற்பட்டோர் எதிரே வந்து மதுபாட்டில், பீர்பாட்டில், கற்கள் உள்ளிட்டவற்றை கோகுல் தரப்பினர் மீது வீசினர்.


    கோகுல் தரப்பினர் பதிலடியாக அவர்கள் மீது கற்களை வீசி தாக்கினர். தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட எதிர்தரப்பினர் உருட்டுக்கட்டையுடன் கோகுல் தரப்பினரை நோக்கி வேகமாக ஓடி வந்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த கோகுல், தமிழ்மணி தரப்பினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அப்போது கோகுல் மற்றும் சிலர் அப்பகுதியில் உள்ள ஜி.ஜி.ரவியின் தம்பி ஜி.ஜி.செல்வத்துக்கு சொந்தமானதும், தற்போது தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கும் விடுதிக்குள் நுழைந்தனர்.

    விடுதி காவலாளி நுழைவு வாயில் இரும்பு கேட்டை பூட்டினார். பின்னர் அவர் டாக்டர்கள் அனைவரையும் அறைக்குள் செல்லும்படி கூறிவிட்டு விடுதியின் நுழைவு கதவிற்கும் பூட்டு போட்டார்.

    கோகுலை துரத்தி வந்த கும்பல் இரும்பு கேட்டின் மீது ஏறி குதித்து உள்ளே வந்தனர். பின்னர் கதவை திறக்கும்படி காவலாளியிடம் கூறினர். ஆனால் அவர் திறக்காததால் விடுதியின் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை கற்கள், கட்டைகளால் அடித்து நொறுக்கினர். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களையும் அடித்து துவம்சம் செய்தனர்.

    விடுதி காவலாளி இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் விடுதியை அடித்து நொறுக்கிய கும்பல் அங்கிருந்து தப்பியோடினர்.

    சம்பவம் தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், விடுதி காவலாளி, அங்கு தங்கியிருந்த டாக்டர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினார்.

    தொடர்ந்து தங்கும் விடுதி அறையில் பதுங்கியிருந்த கோகுல் உள்பட 4 பேரை போலீசார் வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    ஜி.ஜி.ரவியின் மகன்களுடன் நாகர்கோவிலை சேர்ந்த 4 பேர் வந்துள்ளனர். அவர்களை பாதுகாவலராக வைத்திருப்பதாக ஜி.ஜி.ரவின் மகன்கள் கூறியுள்ளனர்.

    நாகர்கோவிலை சேர்ந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மீது தென் மாவட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர்கள் வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களுடன் தோட்டப்பாளையத்துக்குள் புகுந்துள்ளனர்.

    காரில் குண்டுகளை வீசி, விடுதியை சூறையாடியது ரவுடி குப்பனின் கும்பல் என தெரியவந்துள்ளது. அவர்கள் தரப்பில் யாரையும் போலீசார் பிடிக்கவில்லை. அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.

    முதலில் தாக்குதல் தொடங்கியது யார்? தோட்டப்பாளையத்தில் மது காலி பாட்டில்களுடன் கும்பல் தயாராக இருந்தது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #petrolbombing

    விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூர் போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.
    விளாத்திகுளம்:

    தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் கொல்லப்பட்டார்கள்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்டத்தில் பல பகுதில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் சூறையாடப்பட்டன. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு பஸ்சுக்கு தீவைக்கப்பட்டது.

    இதேபோல விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 26-ந்தேதி மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி சென்றனர். இதில் போலீஸ் நிலைய தகவல் பலகை சேதமானது.

    இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி மற்றும் போலீசார் குளத்தூர் அண்ணாநகர் காலனி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படி நின்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அப்பகுதியை சேர்ந்த ராஜ்(19), கீழதெருவை சேர்ந்த சிவக்குமார்(25) ஆகியோர் என்பதும், குளத்தூர் போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியது அவர்கள்தான் என்றும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், ’குளத்தூர் போலீசார் அடிக்கடி வாகன சோதனை என்ற பெயரில் எங்களை வழிமறித்ததால் போலீசாரை பழிவாங்கும் நோக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசினோம்’ என்று தெரிவித்தனர்.

    எனினும் தூத்துக்குடி போராட்டத்துக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கைதான 2 பேரும் விளாத்திகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். #tamilnews
    ×