search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமலாக்கத்துறை-வருமானவரித்துறை அலுவலகங்களில் செந்தில் பாலாஜியின் சகோதரர் இன்று ஆஜராகவில்லை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அமலாக்கத்துறை-வருமானவரித்துறை அலுவலகங்களில் செந்தில் பாலாஜியின் சகோதரர் இன்று ஆஜராகவில்லை

    • அசோக் நேரில் ஆஜராகுமாறு இந்த 2 துறைகளின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
    • அமலாக்கத்துறை சார்பில் அசோக்குக்கு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் உள்ளிட்டோரின் வீடுகளில் முதலில் வருமான வரி சோதனையும், பின்னர் அமலாக்கத்துறை சோதனையும் நடைபெற்றது.

    இது தொடர்பாக அசோக் நேரில் ஆஜராகுமாறு இந்த 2 துறைகளின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. கடந்த வாரமே அசோக்குக்கு சம்மன் அனுப்பப்பட்டு நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அலுவலகங்களில் அசோக் இன்று ஆஜராகவில்லை. இது தொடர்பாக அவரது தரப்பில் 2 அலுவலகங்களிலும் விளக்கம் மட்டும் அளிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக தேவையான ஆவணங்களை திரட்டவேண்டி இருப்பதால் வேறு ஒரு நாளில் ஆஜராகிறேன் என அசோக் தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது.

    அமலாக்கத்துறை சார்பில் அசோக்குக்கு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனால் மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் வருமானவரித் துறை சார்பிலும் மீண்டும் சம்மன் அனுப்புவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×