search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. மீதான வெறுப்பும் ஆத்திரமும் மக்களை பா.ஜனதா பக்கம் ஈர்த்துள்ளது- பிரதமர் மோடி
    X

    தி.மு.க. மீதான வெறுப்பும் ஆத்திரமும் மக்களை பா.ஜனதா பக்கம் ஈர்த்துள்ளது- பிரதமர் மோடி

    • அண்ணாமலை ஒரு நல்ல தலைவர். சுறுசுறுப்பான இளைஞர்.
    • இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் ராமரின் பெயரோடு தொடர்பு இருக்கிறது. தமிழகத்திலும் அப்படி இருக்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் வருகிற வெள்ளிக்கிழமை பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், தி.மு.க.வை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்திய போது தி.மு.க.வினர் அதனை கடுமையாக கேலி செய்து விமர்சனம் செய்தனர். எங்களை பானிபூரி வாலாக்கள் என்றனர். ஆனால் தமிழக மக்கள் காசிக்கு வந்து தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் தி.மு.க.வினர் விமர்சனங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை உணர்ந்தார்கள்.

    காசி உண்மையிலேயே வளர்ச்சியடைந்து விட்டதாக பெருமிதத்துடன் பேச தொடங்கினார்கள். இதனால் தி.மு.க. மீது தமிழக மக்களுக்கு அளவுக்கு அதிகமான வெறுப்பு வளர்ந்து இருக்கிறது.

    அந்த ஆத்திரமும் வெறுப்பும் தான் மக்களை பாரதிய ஜனதா கட்சியின் பக்கம் ஈர்த்துள்ளது.

    அண்ணாமலை ஒரு நல்ல தலைவர். சுறுசுறுப்பான இளைஞர். தனது ஐ.பி.எஸ். பணியை ராஜினாமா செய்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் அவர் இணைந்தார்.

    அவர் நினைத்திருந்தால் தி.மு.க.வில் போய் ஐக்கியமாகி இருக்கலாம். அங்கு அண்ணாமலைக்கு பெயரும், பதவியும் கிடைத்திருக்கும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. பாரதிய ஜனதா கட்சிக்காகத்தான் வந்தார். பா.ஜனதா கட்சியை நம்பினார்.

    சனாதன எதிர்ப்பு பற்றிய கேள்வியை தான் வேறு விதமாக அணுக நினைக்கிறேன். இந்த கேள்வியை காங்கிரசிடம் தான் கேட்க வேண்டும். காங்கிரஸ் ஏன் கையறு நிலையில் உள்ளது.

    சனாதனத்துக்கு எதிரான கட்சியுடன் கை கோர்க்க வேண்டிய அவசியம். காங்கிரசுக்கு ஏன் வந்தது. சனாதன வெறுப்புணர்வில் தான் தி.மு.க. உருவெடுத்தது.

    அதனால் அவர்களிடம் இந்த கேள்வியை கேட்க தான் பொறுத்தமானதாக இருக்கும். காங்கிரஸ் தனது பூர்வீக குணத்தை இழந்து விட்டதோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

    இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் ராமரின் பெயரோடு தொடர்பு இருக்கிறது. தமிழகத்திலும் அப்படி இருக்கிறது. கிராமத்துக்கும், தனி நபர்களுக்கும் ராமரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது எப்படி தேசத்தை பிரித்து பார்க்க முடியும். இருந்தாலும் சில வேற்றுமைகள் தமிழகத்தில் இருக்கின்றன.

    பஞ்சாப்பை போல நாகலாந்து கிடையாது. காஷ்மீரை போல குஜராத் கிடையாது. அந்த வேற்றுமைதான் நமது பலம். அதனை நாம் கொண்டாட வேண்டும்.

    உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. அந்தந்த மாநிலங்களுக்கே உரித்தான உடையை தான் உடுத்தினாலும் அவர்கள் என்னை குறை கூறுகிறார்கள்.

    தமிழ் மொழியை நாங்கள் போற்றுகிறோம். வணங்குகிறோம். அவரவர் தாய் மொழியை நிச்சயம் போற்ற வேண்டும். ஒவ்வொரு வரும் மருத்துவராகவோ, பொறியாளராகவோ உருவெடுக்க விரும்புகிறார்கள்.

    கடிதம் எழுதும்போதும், கையெழுத்திடும் போதும் தாய் மொழியிலேயே எழுதுங்கள். அதனை பெருமையாக நினையுங்கள். அதுதான் உண்மையான மொழிபற்றாகும். உலகிலேயே மிகப்பழமையான மொழி தமிழ் மொழியாகும்.

    எனவேதான் அதன் சிறப்பை உலகறிய செய்து வருகிறோம்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்

    Next Story
    ×