என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![நீட் தேர்வு நீட் தேர்வு](https://img.maalaimalar.com/Articles/2021/Sep/202109021533079439_Tamil_News_Tamil-News-ADMK-and-Congress-arguments-for-NEET-Exam_SECVPF.gif)
X
நீட் தேர்வு
நீட் தேர்வு விவகாரம்: சட்டசபையில் அ.தி.மு.க.-காங்கிரஸ் இடையே கடும் வாக்குவாதம்
By
மாலை மலர்2 Sep 2021 9:14 AM GMT (Updated: 2 Sep 2021 10:03 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
அ.தி.மு.க. உறுப்பினர் கோவிந்தசாமி, நீட் தேர்வுக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்டு தேர்வு நடத்தப்படாது என்று திமுக கூறியிருந்த வாக்குறுதி என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பினார்.
சென்னை:
மக்கள் நல்வாழ்வுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அ.திமு.க. ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதி வாங்கப்பட்டதாகவும் கூறினார்.
அதற்கு பதிலளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டது. அனுமதி கிடைக்கப்பட்ட மாநிலங்களில் மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிவுற்று உள்ளது.
ஆனால் தமிழகத்தில் ஒரே ஒரு செங்கல் மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வைக்கப்பட்டதாகவும் அந்த செங்கலை உதயநிதி எடுத்து வந்துவிட்டதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் கோவிந்தசாமி, நீட் தேர்வுக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்டு தேர்வு நடத்தப்படாது என்று திமுக கூறியிருந்த வாக்குறுதி என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியம், காங்கிரஸ் ஆட்சியில் நீட் கொண்டு வரப்பட்ட போது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி நீட்டுக்கு விலக்கு பெற்றார். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதல்வராக இருக்கும் வரை நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாக கூறினார்.
அப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி எழுந்து பேச முயற்சித்தார். இதனால் காங்கிரஸ், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சபாநாயகர் குறுக்கிட்டு சமரசப்படுத்தினார்.
அப்போது பேசிய விஜயதாரணி காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது நீட் கொண்டு வரப்பட்டாலும் விரும்புகின்ற மாநிலங்கள் தேர்வை நடத்தலாம் என்று கூறியதாக குறிப்பிட்டார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அ.திமு.க. ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதி வாங்கப்பட்டதாகவும் கூறினார்.
அதற்கு பதிலளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டது. அனுமதி கிடைக்கப்பட்ட மாநிலங்களில் மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிவுற்று உள்ளது.
ஆனால் தமிழகத்தில் ஒரே ஒரு செங்கல் மட்டுமே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வைக்கப்பட்டதாகவும் அந்த செங்கலை உதயநிதி எடுத்து வந்துவிட்டதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் கோவிந்தசாமி, நீட் தேர்வுக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்டு தேர்வு நடத்தப்படாது என்று திமுக கூறியிருந்த வாக்குறுதி என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியம், காங்கிரஸ் ஆட்சியில் நீட் கொண்டு வரப்பட்ட போது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி நீட்டுக்கு விலக்கு பெற்றார். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதல்வராக இருக்கும் வரை நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாக கூறினார்.
அப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி எழுந்து பேச முயற்சித்தார். இதனால் காங்கிரஸ், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சபாநாயகர் குறுக்கிட்டு சமரசப்படுத்தினார்.
அப்போது பேசிய விஜயதாரணி காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது நீட் கொண்டு வரப்பட்டாலும் விரும்புகின்ற மாநிலங்கள் தேர்வை நடத்தலாம் என்று கூறியதாக குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)