என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக சட்டசபை"
- கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர்.
- ஆளும் கட்சியான தி.மு.க. இந்த இடைக்கால பட்ஜெட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மக்களை கவரும் அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளது.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. முதல் நாளான 20-ந்தேதி கவர்னர் உரை நிகழ்ச்சி நடைபெற்றது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர்.
அவர்களுக்கு கடந்த 24-ந்தேதி பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதைத்தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் சட்டசபை அலுவல்கள் தள்ளிவைக்கப்பட்டன.
தி.மு.க. அரசின் பதவிக்காலம் முடிந்து சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. எனவே, இந்த பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும்.
தேர்தலை கருத்தில் கொண்டு ஆளும் கட்சியான தி.மு.க. இந்த இடைக்கால பட்ஜெட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மக்களை கவரும் அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளது.
எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 13 அல்லது 14-ந்தேதியன்று தாக்கல் செய்யலாமா? என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இல்லாதபட்சத்தில் பிப்ரவரி 3-ம் வாரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து 4 நாட்கள் அவையை நடத்தி முடிக்கலாமா? என்றும் ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- ஆளுநர் உரையாற்ற வந்தபோது மைக்கை யாரும் ஆப் செய்யவில்லை.
- ஆளும் கட்சி தயார் செய்து அளிக்கும் அறிக்கையை ஆளுநர் வாசிப்பது தான் மரபு.
சென்னை:
கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகத்தைச் சீரமைக்கவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும், பதிவாளருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வழிவகை செய்யும் சட்டமசோதா கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் திருப்பி அனுப்பினார். இந்த மசோதா இன்று சட்டசபையில் மறு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை ஆளுநருக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்து பேசினார்.
இதை தொடர்ந்து பா.ம.க. எம்.எல்.ஏ. ஜி.கே.மணி, வி.சி.க. எம்.எல்.ஏ. பாலாஜி, மார்க்சிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. நாகை மாலி, ம.தி.மு.க. சதன் திருமலைக் குமார், ம.ம.க. ஜவாஹிருல்லா ஆகியோர் பேசினார்கள்.
அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையாற்ற வந்தபோது மைக்கை யாரும் ஆப் செய்யவில்லை. பேரவைத் தலைவர் பேசத் தொடங்கியதும் மற்ற மைக்குகள் தானாக ஆப் ஆகி விடும் வகையில் உள்ளது.
எனவே யாரும் ஆளுநர் மைக்கை ஆப் செய்யவில்லை. அவர் உரையை வாசித்து இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆளுநர் உரையை வாசிக்காமல் பேச முயன்ற காரணத்தால் பேரவைத் தலைவராக பேசினேன். அப்போது அனைத்து மைக்குகளும் ஆப் ஆகிவிடும் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய கொங்கு ஈஸ்வரன் எம்.எல்.ஏ. நாம் எவ்வளவு கண்ணியமாக, நாகரிகமாக நடந்து கொண்டாலும் ஆளுநர் மாறுவதாக இல்லை. சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை கண்டிக்கிறேன் என்று தெரிவித்தார்.
இறுதியாக பேசிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. (ஓ.பி.எஸ்.ஆதரவாளர்) ஐயப்பன் பேசுகையில், ஆளும் கட்சி தயார் செய்து அளிக்கும் அறிக்கையை ஆளுநர் வாசிப்பது தான் மரபு. ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்றது கண்டத்திற்குரியது. எனவே ஆளுநரை திரும்பபெற வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களின் சட்ட மசோதா மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
- கடந்த 2 நாட்களாக கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.
- சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை:
நடப்பாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரையை வாசிக்காமலேயே சட்டசபையில் இருந்து வெளியேறினார்.
அதனை தொடர்ந்து ஆளுநர் வாசிக்க இருந்த தமிழ்நாடு அரசு உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார்.
கூட்டத்தொடரின் 2-ம் நாளான 21-ந்தேதி மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். அதற்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
இந்த நிலையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதில் உரை அளித்த நிலையில் சட்டசபைக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வருகை தராமல் முழுவதுமாக புறக்கணித்தனர்.
அதே சமயத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர் ஐயப்பன் எம்.எல்.ஏ. ஆகிய இருவரும் சட்டசபைக்கு வந்திருந்தனர். சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
- அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் எதிர்கொள்ளாத நெருக்கடியை நான் எதிர்கொண்டுள்ளேன்.
- தேவையற்ற விமர்சனங்களை செய்தாலும் சட்டசபையில் சில ஆலோசனைகளை கூறிய எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நன்றி.
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
* சோதனை எனக்கு புதிதல்ல சோதனையை வென்று வளர்ந்த என்னை எதிர்ப்போர் மனதுக்குள் மகிழ்ச்சி அடைந்து கொள்ளலாம்.
* அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் எதிர்கொள்ளாத நெருக்கடியை நான் எதிர்கொண்டுள்ளேன்.
* என்னை சீண்டி பார்ப்பவர்கள் மனதுக்குள் மகிழ்ச்சி அடையலாமே தவிர என்னை ஒன்றும் செய்ய முடியாது.
* தேவையற்ற விமர்சனங்களை செய்தாலும் சட்டசபையில் சில ஆலோசனைகளை கூறிய எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நன்றி.
* 5 ஆண்டுகளாக மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு திட்டம் தீட்டி உழைத்திருக்கிறேன். உழைக்க காத்திருக்கிறேன்.
* தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சிதான். தமிழ்நாட்டு மக்கள் மீது கூடுதலாக நம்பிக்கை உள்ளது. இது தமிழ்நாட்டு மக்களின் முடிவு.
* உறுதியாக சொல்கிறேன்... தமிழ்நாட்டில் மீண்டும் மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் அமையும்.
* நாங்கள் தான் மீண்டும் வருவோம். மீண்டும் வருவோம். மீண்டும் மீண்டும் வெல்வோம் என்று கூறினார்.
இதையடுத்து சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியது.
- கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
- குடும்ப ஓய்வூதியமாக ரூ.1,200 சிறப்பு ஓய்வூதியம் பெறும் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.1,100 ஓய்வூதியம் வழங்கப்படும்.
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
* கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும்.
* ரூ.1088 கோடி மதிப்பீட்டில் கிராம சாலைகள் மேம்படுத்தப்படும்.
* அங்கன்வாடி உதவியாளர், சமையலர், உதவியாளர், தூய்மை பணியாளருக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ.3000 ஆக உயர்த்தப்படும்.
* அங்கன்வாடி ஊழியர், ஊராட்சி செயலாளர்கள் ஓய்வூதியத்தொகை ரூ.2,000-ல் இருந்து ரூ.3,400 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* பணி நிறைவு பெறும் நாளில் தரப்படும் ஒட்டுமொத்தத்தொகை ரூ.50,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
* குடும்ப ஓய்வூதியமாக ரூ.1,200 சிறப்பு ஓய்வூதியம் பெறும் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.1,100 ஓய்வூதியம் வழங்கப்படும்.
* முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்டவை கோரி விண்ணப்பிதித 80,000 பேருக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்படும்.
* உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பம் அளித்தவர்களில் தேர்வு செய்யப்பட்ட 80,000 நபர்களுக்கு மாதாந்திர ஓய்வுத்தொகை வழங்கப்படும் என்று கூறினார்.
- பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி போராடி வருகின்றனர்.
- அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார்.
அப்போது பகுதிநேர ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டார்.
* பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி போராடி வருகின்றனர்.
* அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்.
* பணிக்காலத்தின் அடிப்படையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்று கூறினார்.
- தேசபக்தி குறித்து பாடமெடுக்கும் அளவிற்கு அவர்கள் போராடியவர்கள் அல்ல.
- ஆளுநரின் பார்வைதான் பழுதுபட்ட பார்வையாக உள்ளது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 5-வது நாள் அமர்வு தொடங்கியது. ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது:
* நாட்டின் மீதும், நாட்டுப்பண் மீது அளவற்ற மரியாதை கொண்டவர்கள் நாங்கள்.
* அரசு தயாரித்த உரையை படிக்காத ஆளுநரின் செயல் மக்களாட்சிக்கு விடப்பட்ட சவால்.
* தேசபக்தி குறித்து பாடமெடுக்கும் அளவிற்கு அவர்கள் போராடியவர்கள் அல்ல.
* கடந்த 3 ஆண்டுகளாக ஒரே காரணத்தை சொல்லி உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளிநடப்பு செய்து வருகிறார்.
* தமிழ்நாட்டு நலனுக்காக செயல்பட வேண்டிய ஆளுநர் மக்கள் தேர்ந்தெடுத்த அரசு, மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்.
* ஆளுநர் தான் வகிக்கும் பதவியை அவரே அவமானப்படுத்துகிறார்.
* ஆளுநரின் பார்வைதான் பழுதுபட்ட பார்வையாக உள்ளது.
* 5 ஆண்டுகளாக மக்களுக்காக வாழ்ந்தார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
* தி.மு.க. ஆட்சியில் 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு, கீழடி, பொருநை அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
* முக்கிய தலைவர்களுக்கு மணிமண்டபங்கள், சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
* நாட்டிலேயே உயரிய பொருளாதார வளர்ச்சியை தமிழகம் எட்டி உள்ளது.
* அ.தி.மு.க. ஆட்சியை ஒப்பிடும்போது குற்றச்செயல்கள் குறைந்துள்ளதை புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
* அதிக சுற்றுலா பயணிகள் வந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது.
* தமிழகத்தில் மதச்சண்டை, சாதி சண்டை, கும்பல் வன்முறை இல்லை என்று பேசினார்.
- மகளிர் விடியல் பயணத்தில் பெண்கள் தோராயமாக ரூ.60,000 சேமித்துள்ளனர்.
- உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்கள் பயில்கின்றனர்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 5-வது நாள் அமர்வு தொடங்கியது. ஆளுநர் உரை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் உரை வழங்க உள்ள நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை.
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது:
* 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் சீரழிந்து இருந்தது.
* 5 ஆண்டு கால ஆட்சி முடிவுறும் நிலையில் மிகமிக மகிழ்ச்சியாக உள்ளேன்.
* மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதே எனது மகிழ்ச்சிக்கு காரணம்.
* இந்தியாவில் மற்ற மாநிலங்கள் தமிழகத்தை அண்ணாந்து பார்க்கின்றன.
* என்னுடைய இலக்கில் நான் வென்று விட்டேன்.
* தி.மு.க. ஆட்சி மீண்டும் அமையும்போது எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவில் இருக்கும்.
* மகளிர் விடியல் பயணத்தில் பெண்கள் தோராயமாக ரூ.60,000 சேமித்துள்ளனர்.
* மகளிர் உரிமை தொகை திட்டத்தில ஒவ்வொரு பெண்களுக்கும் ரூ.29,000 வழங்கி உள்ளோம்.
* உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்கள் பயில்கின்றனர்.
* அரசியல் ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளோம்.
* 2 லட்சம் பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
* ஆட்சி பொறுப்பேற்று 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன்.
* சென்னை தவிர மற்ற மாவட்டங்களுக்கு 173 முறை பயணம் மேற்கொண்டுள்ளேன் என்று பேசினார்.
- தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் வாழக்கூடிய எளிய மக்கள் மற்றும் விவசாயிகள்தான்.
- சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் 65 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 74 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் உடலுழைப்பைத் தந்து பயன்பெற்று வந்தனர்.
சென்னை:
சட்டசபையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தினை முன்மொழிந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
தமிழ்நாட்டில், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டமாக இருந்தாலும், நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டமாக இருந்தாலும், அனைத்து திட்டங்களும் இது மாநில அரசின் திட்டம், ஒன்றிய அரசின் திட்டம் என்ற பாகுபாடு இல்லாமல் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் பல முன்னோடித் திட்டங்களில் இந்திய அளவில், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் முதன்மையாக இருப்பதோடு, பல்வேறு ஒன்றிய அமைச்சகங்களின் பாராட்டுகளையும் தொடர்ந்து பெற்று வருகின்றது. இருப்பினும், ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளது என்பதை நாம் தொடர்ச்சியாகக் கண்டு வருகிறோம்.
எந்தவொரு ஒன்றிய அரசின் திட்டமானாலும், பணி முன்னேற்றத்திற்கேற்ப நிதி விடுவிப்பதை செய்யாமல் உடனடியாக நிதி விடுவிப்பதை வேண்டுமென்றே தவிர்த்து, காலதாமதத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திலும், கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், 2025-2026-ம் ஆண்டில் தொழிலாளர் மதிப்பீடு மற்றும் நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே வழங்கப்பட்டு உள்ளது. எடுத்துக்காட்டாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.1,026 கோடி ஊதியத்திற்கான தொகையும், ரூ.1,087 கோடி பொருட்கூறுக்கான தொகையும் இன்றுவரை விடுவிக்கப்படாமலேயே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் உயிர் நீர்த் திட்டத்திலும் இதுவரை ரூ.3,112 கோடி நிதி விடுவிக்கப்படாமல் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது. பிரதம மந்திரி கிராமச் சாலை திட்டத்தில் ரூ.516 கோடி இன்னும் நிதி விடுவிக்கப்படாமல் உள்ளது.
இப்படி இவர்கள் தாமதிப்பதால் பாதிக்கப்படுவது யார்? தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் வாழக்கூடிய எளிய மக்கள் மற்றும் விவசாயிகள்தான். நம் மாநிலத் தின் மீது ஏன் இந்த ஓரவஞ்சனை என்றுதான் நாம் கேட்கிறோம். இந்த வஞ்சனையை எல்லாம் விஞ்சக்கூடிய அளவிற்கு, தற்போது ஒன்றிய அரசு, கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு வேரறுக்கக்கூடிய வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை மாற்றி, அதற்குப் பதிலாக "வளர்ச்சியடைந்த இந்தியா ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்" என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஏற்கனவே இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, ஊரகப் பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாட்கள் வேலையை உறுதி செய்தும், சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் 65 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 74 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் உடலுழைப்பைத் தந்து பயன்பெற்று வந்தனர். இதில் 85 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் திட்டத்தை, அறிமுக நிலையிலேயே நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாகக் குரல் எழுப்பி இருக்கிறது. எனினும் மக்கள் குரலை மதிக்காத ஒன்றிய அரசு, அந்தத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டது. இந்தப் புதிய திட்டமானது, மக்களின் தேவையின் அடிப்படையிலே அமைக்கப்படவில்லை. இதுகுறித்து நான் ஏற்கனவே பிரதமருக்கு கடந்த 18.12.2025 அன்று கடிதம் எழுதி இருக்கிறேன்.
இந்த புதிய வளர்ச்சியடைந்த இந்தியா ஊரக வேலை உறுதி மற்றும் வாழ் வாதார திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புக்கான உரிமை என்ற அடிப்படையில் இல்லாமல், ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட உள்ள உத்தேச ஒதுக்கீட்டின்படி வேலை வழங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இப்பேரவையில் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறு கேட்டு நான் முன்மொழிகிறேன்.
"மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம், 2005-ன்படி, கிராமப்புற மக்களின் வேலைக்கான உரிமை நிலைநாட்டப்பட வேண்டுமென்றும், மக்களின் வேலைக்கான தேவைக்கேற்பவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மாநில செயல்திறன் அடிப்படையிலும் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்வது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும்;
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பெரும்பான்மையாக பலனடைந்து வந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதுகாக்கப்பட, சமூகப் பாதுகாப்பினை உறுதி செய்திட முந்தைய ஆண்டு களின் ஒதுக்கீட்டிற்குக் குறையாமல் ஒதுக்கீடு செய்யப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும்;
உத்தேச மதிப்பீட்டின் அடிப்படையில் தன்னிச்சையாக ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் எனவுள்ள தற்போதைய புதிய நடைமுறையைக் கைவிட்டு, ஏற்கனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பின்பற்றப்பட்ட வேலைக்கான தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யும் நடைமுறையைத் தொடர வேண்டுமென்றும், மேலும், கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பளித்து, மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டினை, வேலைக்கான தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் வழிமுறையை மாநில அரசே வகுத்துக் கொள்ள அனுமதியளிக்க வேண்டுமென்றும்;
இப்புதிய திட்டத்தில் மாநில அரசின் நிதிப்பங்களிப்பு 40 சதவீதமாக உயர்த்தப்படுகையில் மாநில அரசின் நிதிச்சுமையை கணிசமாக அதிகரிப்பதாக உள்ளது. எனவே, புதிய திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பினைப் போலவே திருத்தி அமைக்கப்பட வேண்டுமென்றும்;
தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பெயரை நீக்கி, பல்வேறு உள்நோக்கங்களைக் கொண்டு இத்திட்டத்திற்கு 'வளர்ச்சியடைந்த இந்தியா-ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம்-ஊரகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி இந்த தேசத்திற்கு வகுத்துத் தந்த கொள்கைகளையும், வழிகாட்டிய பாதையையும் எப்போதும் நினைவுகூரும் வகையில் இத்திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டுமென்றும் ஒன்றிய அரசை இப்பேரவை ஒரு மனதாக வலியுறுத்துகிறது."
இந்திய நாட்டின் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் 2005-ன் விதிமுறைகளின்படியே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்ற வகையில் மேற்படி தீர்மானத்தை இந்தச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றித் தர வேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களையும் கேட்டு அமைகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். அதன் பிறகு தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
- பிரதமரின் கிராம சாலை திட்டத்தில் ரூ.500 கோடி நிதி விடுவிக்கப்படாமல் உள்ளது.
- 100 நாள் வேலை திட்டமானது மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும்.
சட்டசபை கூட்டத்தொடரின் 4-வது நாள் அமர்வு இன்று காலை தொடங்கியது. வினாக்கள்-விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக இன்று சட்டசபையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்து இருந்தார்.
இந்நிலையில் மத்திய அரசின் விபி-ஜி ராம் ஜி திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது அவர் கூறுகையில்,
* மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாடு அரசு பாகுபாடின்றி திறம்பட செயல்படுத்தி வருகிறது.
* தமிழகத்தின் மீது பாரபட்சத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
* பிரதமரின் கிராம சாலை திட்டத்தில் ரூ.500 கோடி நிதி விடுவிக்கப்படாமல் உள்ளது.
* கிராம மக்களின் வாழ்வாதாரத்தை வேரறுக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
* திட்டங்களை செயல்படுத்தும்போது மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதை கொள்கையாக கொண்டிருக்கிறது.
* விபி-ஜி ராம் ஜி திட்டத்தின்படி 40 சதவீதம் பங்களிப்பு என்ற அறிவிப்பால் மாநிலத்தின் நிதி சுமை மேலும் அதிகரிக்கும்.
* மக்களின் தேவை அடிப்படையில் மத்திய பா.ஜ.க. அரசின் புதிய சட்டம் கொண்டு வரப்படவில்லை.
* 100 நாள் வேலை திட்டமானது மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும்.
* 100 நாட்கள் வேலை திட்டத்தில புதிய நடைமுறையை கைவிட வேண்டும். பழைய நடைமுறையே தொடர வேண்டும்
* 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு நிலை நாட்டப்பட வேண்டும் என்று கூறினார்.
- போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை சிறையில் அடைக்கவில்லை.
- 23 ஆண்டு கால பிரச்சனையை நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம்.
சட்டசபையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை சிறையில் அடைக்கவில்லை.
* அ.தி.மு.க. ஆட்சியை போல் இரவோடு இரவாக அரசு ஊழியர்களை நாங்கள் கைது செய்யவில்லை.
* நாங்கள் அரசு ஊழியர்கள் பிரச்சனையில் 95 சதவீதம் நிறைவேற்றி விட்டோம்.
* அரசு ஊழியர்களின் கோரிக்கை கட்டாயம் நிறைவேற்றப்படும்.
* 23 ஆண்டு கால பிரச்சனையை நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம்.
* அரசு ஊழியர்களின் போராட்டத்தை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கறிக்கோழி வாங்கும் நிறுவனங்களுக்கு சாதகமாக தமிழக அரசு செயல்படுகிறது.
- மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தி.மு.க. அரசு நிறுத்தி வைத்தது.
சட்டசபையில் விவசாயிகள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* விவசாயிகளின் முக்கிய பிரச்சனை குறித்து சட்டசபையில் பேச முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டது.
* 5 லட்சம் கறிக்கோழி விவசாயிகள் தற்போது பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
* ஒரு கிலோவுக்கு ரூ.6.50 கூலியாக வளர்ப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
* கோழி வளர்ப்புக்கான கூலியை உயர்த்தி கொடுக்க வேண்டும்.
* கறிக்கோழி வாங்கும் நிறுவனங்களுக்கு சாதகமாக தமிழக அரசு செயல்படுகிறது.
* ஜீரோ ஹவரில் எதிர்க்கட்சித் தலைவர் பேச முடியும். முந்தைய காலங்களிலும் இது நடந்துள்ளது.
* 6 மாதமாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சனை.
* பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி விட்டு அரசு பின்வாங்குவது ஏன்?
* மகளிருக்கு ரூ.1500 வழங்கப்படும் என்ற குலவிளக்கு திட்டத்தை 2021-ல் ஏற்கனவே அறிவித்தோம்.
* ஒவ்வொரு முறையும் அ.தி.மு.க. தான் தேர்தல் அறிக்கையை முதலில் வெளியிடும்.
* மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தி.மு.க. அரசு நிறுத்தி வைத்தது.
* மாணவர்களின் வாக்குகளை கவரவே இலவச மடிக்கணினிகளை அரசு வழங்குகிறது.
* மாணவர்கள் மத்தியில் தி.மு.க. மீது வெறுப்பு, அதை சமாளிக்கவே மடிக்கணினி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






