என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆளுநரின் செயல் மக்களாட்சிக்கு விடப்பட்ட சவால் - மு.க.ஸ்டாலின்
- தேசபக்தி குறித்து பாடமெடுக்கும் அளவிற்கு அவர்கள் போராடியவர்கள் அல்ல.
- ஆளுநரின் பார்வைதான் பழுதுபட்ட பார்வையாக உள்ளது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 5-வது நாள் அமர்வு தொடங்கியது. ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது:
* நாட்டின் மீதும், நாட்டுப்பண் மீது அளவற்ற மரியாதை கொண்டவர்கள் நாங்கள்.
* அரசு தயாரித்த உரையை படிக்காத ஆளுநரின் செயல் மக்களாட்சிக்கு விடப்பட்ட சவால்.
* தேசபக்தி குறித்து பாடமெடுக்கும் அளவிற்கு அவர்கள் போராடியவர்கள் அல்ல.
* கடந்த 3 ஆண்டுகளாக ஒரே காரணத்தை சொல்லி உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளிநடப்பு செய்து வருகிறார்.
* தமிழ்நாட்டு நலனுக்காக செயல்பட வேண்டிய ஆளுநர் மக்கள் தேர்ந்தெடுத்த அரசு, மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்.
* ஆளுநர் தான் வகிக்கும் பதவியை அவரே அவமானப்படுத்துகிறார்.
* ஆளுநரின் பார்வைதான் பழுதுபட்ட பார்வையாக உள்ளது.
* 5 ஆண்டுகளாக மக்களுக்காக வாழ்ந்தார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
* தி.மு.க. ஆட்சியில் 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு, கீழடி, பொருநை அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
* முக்கிய தலைவர்களுக்கு மணிமண்டபங்கள், சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
* நாட்டிலேயே உயரிய பொருளாதார வளர்ச்சியை தமிழகம் எட்டி உள்ளது.
* அ.தி.மு.க. ஆட்சியை ஒப்பிடும்போது குற்றச்செயல்கள் குறைந்துள்ளதை புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
* அதிக சுற்றுலா பயணிகள் வந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது.
* தமிழகத்தில் மதச்சண்டை, சாதி சண்டை, கும்பல் வன்முறை இல்லை என்று பேசினார்.






