search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    பிரதமர் மோடி உத்தரவை நாம் கடைப்பிடிக்க வேண்டும்- திருமாவளவன்

    பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளுக்கு முழு ஒத்துழைப்பை நல்குவோம்! நாட்டு நலன்களுக்காக; நமது நலன்களுக்காக; நம்முடைய குடும்பத்தினரின் நலன்களுக்காக! என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி, “கையெடுத்து கும்பிடுகிறேன்; ஒவ்வொருவரும் அவரவர் வீட்டிலேயே இருங்கள்; வீட்டை விட்டு வெளியே வந்தால் உங்கள் வீட்டுக்குள் கொரோனா அடியெடுத்து வைக்கும்” என்று மிகுந்த உருக்கத்தோடு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதனை நாம் ஒவ்வொருவரும் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

    நம்மை நாம் தற்காத்துக் கொள்வதற்கும் நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கும் இதை விட்டால் வேறு வழியில்லை என்பது தான் இந்த 21நாள் ஊரடங்கு உத்தரவுக்கு அடிப்படையான காரணம்.

    ஏராளமான பொருளாதார சிக்கல்களை, வேறுபல நெருக்கடிகளை சந்திக்க நேரலாம். ஆனால், வேறு வழியில்லை பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளுக்கு முழு ஒத்துழைப்பை நல்குவோம்! நாட்டு நலன்களுக்காக; நமது நலன்களுக்காக; நம்முடைய குடும்பத்தினரின் நலன்களுக்காக! எனவே, இந்த வேண்டுகோளை அனைவருக்கும் நான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக விடுக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×