என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எஸ்.வி.சேகர் வீட்டின் மீது தாக்குதல்- சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கு தள்ளுபடி
Byமாலை மலர்16 May 2018 8:09 AM GMT (Updated: 16 May 2018 8:09 AM GMT)
எஸ்.வி.சேகர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.#SVeShekher
சென்னை:
பெண் பத்திரிக்கையாளர்களை பற்றி அவதூறு கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகருக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்கள், அவரது வீட்டின் மீது கல்வீசி தாக்கினர்.
இந்த சம்பவம் தொடர்பாக 30 பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வழக்கை சி.பி.ஐ. அல்லது சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற கோரி வழக்கறிஞர் பிரேமானந்த் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், நீதிபதி எம். தண்டபாணி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது பாதிக்கப்பட்ட எஸ்.வி.சேகர் நீதி மன்றத்தை நாடாத போது,என்ன நோக்குடன் பொது நல வழக்கு தாக்கல் செயயப்பட்டுள்ளது? அவர் நீதி மன்றத்தை நாட முடியாத அளவுக்கு ஒடுக்கப்பட்டவரா? மூன்றாவது நபருக்காக பொது நல வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனக்கூறி, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். #SVeShekher
பெண் பத்திரிக்கையாளர்களை பற்றி அவதூறு கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகருக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்கள், அவரது வீட்டின் மீது கல்வீசி தாக்கினர்.
இந்த சம்பவம் தொடர்பாக 30 பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வழக்கை சி.பி.ஐ. அல்லது சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற கோரி வழக்கறிஞர் பிரேமானந்த் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், நீதிபதி எம். தண்டபாணி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது பாதிக்கப்பட்ட எஸ்.வி.சேகர் நீதி மன்றத்தை நாடாத போது,என்ன நோக்குடன் பொது நல வழக்கு தாக்கல் செயயப்பட்டுள்ளது? அவர் நீதி மன்றத்தை நாட முடியாத அளவுக்கு ஒடுக்கப்பட்டவரா? மூன்றாவது நபருக்காக பொது நல வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனக்கூறி, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். #SVeShekher
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X