என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மரக்காணம் அருகே விபத்து: கார்கள் மோதி சென்னை டாக்டர் பலி
Byமாலை மலர்26 Jun 2017 10:21 AM GMT (Updated: 26 Jun 2017 10:21 AM GMT)
மரக்காணம் அருகே இன்று காலை கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் சென்னை டாக்டர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மரக்காணம்:
தர்மபுரியை சேர்ந்தவர்கள் அக்கியபிரகாஷ் (வயது 24), பிரதீப், சூரிய பிரகாஷ். இவர்கள் 3 பேரும் சென்னையில் டாக்டர்களாக பணியாற்றி வந்தனர்.
இன்று காலை அவர்கள் ஒரு காரில் புதுவையில் இருந்து சென்னைக்கு சென்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கீழ்ப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது எதிரே மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்தது.
அதன் மீது மோதாமல் இருக்க காரை திருப்பிய போது அந்த வழியாக வந்த மற்றொரு கார் மீது இந்த கார் மோதியது.
இதில் அக்கியபிரகாஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். பிரதீப், சூரியபிரகாஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மரக்காணம் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தர்மபுரியை சேர்ந்தவர்கள் அக்கியபிரகாஷ் (வயது 24), பிரதீப், சூரிய பிரகாஷ். இவர்கள் 3 பேரும் சென்னையில் டாக்டர்களாக பணியாற்றி வந்தனர்.
இன்று காலை அவர்கள் ஒரு காரில் புதுவையில் இருந்து சென்னைக்கு சென்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கீழ்ப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது எதிரே மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்தது.
அதன் மீது மோதாமல் இருக்க காரை திருப்பிய போது அந்த வழியாக வந்த மற்றொரு கார் மீது இந்த கார் மோதியது.
இதில் அக்கியபிரகாஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். பிரதீப், சூரியபிரகாஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மரக்காணம் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X