search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்: ஏ.சி.சண்முகம்
    X

    ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்: ஏ.சி.சண்முகம்

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என ஆரணியில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
    ஆரணி:

    ஆரணியில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இறைச்சிக்காக சந்தையில் மாடுகளை விற்கக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தத்தடை உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புக்கான, ‘நீட்’ தேர்வுக்கு இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டமாக இருக்க வேண்டும். அது, மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.

    ஆனால், தமிழகத்தில் நீட் தேர்வு அவசியம் இல்லை. அதனை திரும்ப பெற வேண்டும். இதனால் கிராமப்புற மாணவர்கள் மருத்துவ படிப்பை தொடர முடியாது.

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தினார். அந்த கருத்தை நானும் வரவேற்றேன். குடும்ப நண்பர் என்ற முறையில், நான் ரஜினிகாந்தை சந்தித்தேன். பா.ஜ.க. ஆட்சி பல மாநிலங்களில் நடக்கிறது. கர்நாடக மாநிலத்துக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து தமிழகத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும். அப்போது தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×