என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முத்தரப்பு டி20 தொடரில் கோலி, தோனிக்கு ரெஸ்ட் - களமிறங்கும் இளம்படை
Byமாலை மலர்25 Feb 2018 7:37 AM GMT (Updated: 25 Feb 2018 9:24 AM GMT)
இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடரில் கேப்டன் கோலி, விக்கெட் கீப்பர் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை:
இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் வரும் மார்ச் 6-ம் தேதி தொடங்குகிறது. ஒவ்வொரு அணியிம் மற்றொரு அணியுடன் இரண்டு முறை மோத வேண்டும். புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா அணியை வழிநடத்த உள்ளார். தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், சர்துல் தாகுர் ஆகிய இளம் வீரர்கள் அதிகமானோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அணி விபரம்:
ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹுடா, வாஷிங்டன் சுந்தர், யுஷ்வெந்திர சாஹல், அக்ஸர் படேல், விஜய் சங்கர், சர்துல் தாகுர், ஜெய்தேவ் உனத்கட், முகம்மது சிராஜ், ரிஷாப் பாந்த் #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X