என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கோவில்களுக்கு 10 சதவீத வரிவிதிப்பு மசோதா தோல்வி- சித்தராமையா அதிர்ச்சி
- இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
- பா.ஜ.க. வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெங்களூர்:
கர்நாடகாவில் கடந்த 12-ந் தேதி முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 16-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதன் மீதான விவாதம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 1 கோடி வரையிலான கோவில் வருமானத்தில் 5 சதவீதமும், 1 கோடிக்கு மேல் வருவாய் வரும் கோவில்களில் 10 சதவீதத்தையும் வரியாக வழங்க வேண்டும் என்ற அம்சம் இடம் பெற்று இருந்தது.
இதற்கு பா.ஜ.க. வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவில் வருவாயை அரசு வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் மேல்சபையில் அமைச்சர் ராமலிங்க ரெட்டி, இந்து வழிபாட்டு நிறுவனங்கள் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு ஆதரவாக 7 பேரும், எதிராக 18 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து அந்த மசோதா தோல்வி அடைந்தது.
மேல்சபையில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மசோதா தோல்வி அடைந்ததால் முதல்-மந்திரி சித்தராமையா அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்