ரூ.680 மட்டும் வருமானம்: அபிடவிட்டால் சர்ச்சையில் சிக்கிய மத்திய மந்திரி

திருவனந்தபுரத்தில் பா.ஜ.க. சார்பில் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார்.ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார்.
ரூ.680 மட்டும் வருமானம்: அபிடவிட்டால் சர்ச்சையில் சிக்கிய மத்திய மந்திரி
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சசி தரூர் வேட்பாளராக போட்டியிடுகிறார். பா.ஜ.க. சார்பில் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். இதனால் அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இதற்கிடையே, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். அதில், 2021-22-ம் ஆண்டிற்கான தனது வரிக்குட்பட்ட வருமானமாக வெறும் ரூ.680 மட்டுமே என குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் அவரது வருமானம் தொடர்ந்து குறைந்து வருவதாக கணக்கு காட்டியுள்ளார்.

அப்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராக சம்பளம் வாங்கி கொண்டிருந்தார்.

இந்நிலையில், ராஜீவ் சந்திர சேகர் தனது வேட்பு மனுவில் உண்மையான சொத்து மதிப்பை காட்டாமல் பல மடங்கு குறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பா.ஜ.க. மந்திரிகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் செல்லாது. அவை எதிர்க்கட்சிகளுக்கு மட்டும் தான். பாஜகவிற்காகவும், மோடிக்காகவும் இப்படித்தான் இந்திய ஏஜென்சிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com