என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்காமல் மத்திய அரசு ஓயாது: அமித்ஷா
Byமாலை மலர்13 Jan 2020 1:50 AM GMT (Updated: 13 Jan 2020 1:50 AM GMT)
பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்காமல் மத்திய அரசு ஓயாது. யாரும் எங்களை தடுக்க முடியாது என்று அமித்ஷா கூறினார்.
ஜபல்பூர் :
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா தலைவருமான அமித்ஷா பங்கேற்றார். அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் தலைவர்களுக்கு நான் சத்தமாக சொல்லிக்கொள்கிறேன். நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள். குடியுரிமை திருத்த சட்டத்தை உங்களால் முடிந்த அளவுக்கு எதிர்த்துக் கொள்ளுங்கள்.
ஆனால், பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்காமல் மத்திய அரசு ஓயாது. யாரும் எங்களை தடுக்க முடியாது.
நான் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு சவால் விடுகிறேன். யாருடைய குடியுரிமையாவது பறிக்கப்படும் என்று குடியுரிமை சட்டத்தில் எந்த ஒரு சட்டப்பிரிவாவது இருக்கிறதா என்று காட்டுங்கள் பார்க்கலாம். இது, குடியுரிமை அளிக்கும் மசோதா. குடியுரிமையை பறிக்கும் மசோதா அல்ல.
கடந்த ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலின்போது, பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து, சீக்கிய அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால், அதே செயலை செய்யும் பா.ஜனதாவை இப்போது எதிர்க்கிறது. ராஜஸ்தான் முதல்வர், தனது தேர்தல் அறிக்கையை சரி பார்க்கட்டும்.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், சில மாணவர்கள் தேசவிரோத கோஷங்களை எழுப்பினார்கள். அவர்களை பாதுகாக்குமாறு ராகுல் காந்தியும், கெஜ்ரிவாலும் கூறுகிறார்கள்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா தலைவருமான அமித்ஷா பங்கேற்றார். அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் தலைவர்களுக்கு நான் சத்தமாக சொல்லிக்கொள்கிறேன். நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள். குடியுரிமை திருத்த சட்டத்தை உங்களால் முடிந்த அளவுக்கு எதிர்த்துக் கொள்ளுங்கள்.
ஆனால், பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்காமல் மத்திய அரசு ஓயாது. யாரும் எங்களை தடுக்க முடியாது.
நான் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு சவால் விடுகிறேன். யாருடைய குடியுரிமையாவது பறிக்கப்படும் என்று குடியுரிமை சட்டத்தில் எந்த ஒரு சட்டப்பிரிவாவது இருக்கிறதா என்று காட்டுங்கள் பார்க்கலாம். இது, குடியுரிமை அளிக்கும் மசோதா. குடியுரிமையை பறிக்கும் மசோதா அல்ல.
கடந்த ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலின்போது, பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து, சீக்கிய அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால், அதே செயலை செய்யும் பா.ஜனதாவை இப்போது எதிர்க்கிறது. ராஜஸ்தான் முதல்வர், தனது தேர்தல் அறிக்கையை சரி பார்க்கட்டும்.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், சில மாணவர்கள் தேசவிரோத கோஷங்களை எழுப்பினார்கள். அவர்களை பாதுகாக்குமாறு ராகுல் காந்தியும், கெஜ்ரிவாலும் கூறுகிறார்கள்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X