search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமித்‌ஷா"

    பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கும் என்றும், கடந்த தேர்தலை விட பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் அமித்‌ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி :

    பா.ஜனதா தலைவர் அமித்‌ஷா ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    இந்த தேர்தலில் பா.ஜனதா தனி பெரும்பான்மை பெறும். கடந்த 2014-ம் ஆண்டு வெற்றி பெற்றதை விட அதிக தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும்.

    கடந்த தேர்தலில் வெற்றி பெறாத 120 தொகுதிகளில் இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று கணித்தேன். அவற்றில் 55 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும். பா.ஜனதா பலவீனமாக இருந்த கடலோர மாநிலங்களிலும், கிழக்கு மாநிலங்களிலும் கட்சியை பலப்படுத்தும் பணியில் வெற்றி பெற்றுள்ளேன்.

    அதன்படி, மேற்கு வங்காளத்தில் 33 தொகுதிகளுக்கு மேலும், ஒடிசா மாநிலத்தில் 12 முதல் 15 தொகுதிகளும் கிடைக்கும். உத்தரபிரதேசத்தில் கடந்த முறை பெற்றதை விட அதிகமாக, அதாவது, 73 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கும்.

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால், அதை வரவேற்போம்.



    பிரதமர் மோடி, மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு புறப்பட தயாராக இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். யார் கிளம்ப வேண்டும் என்று 23-ந்தேதி தெரியும்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விமர்சிக்கக்கூடாது என்றால், அவர் இந்திரா குடும்பத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தாலா? கடந்த காலத்தில் செய்த தவறுகளில் இருந்து ராகுலும், பிரியங்காவும் எவ்வளவு முயன்றாலும் தப்ப முடியாது.

    தேசியவாதம்தான் பா.ஜனதா தொடங்கியதில் இருந்தே எங்களது உந்துசக்தி. அதை ஓட்டுக்காக நாங்கள் பயன்படுத்தவில்லை. முப்படைகளை நாங்கள் அரசியலுக்கு பயன்படுத்துவதாக கூறுகிறார்கள். மோடி அரசு முடிவு எடுத்ததன் பேரிலேயே விமானப்படை தாக்குதலில் ஈடுபட்டது.

    மோடி ஆட்சியில், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். கடந்த 30 ஆண்டுகளில், விலைவாசி பற்றி பேசப்படாத ஒரே தேர்தல் இதுவாகும். இந்த பெருமை மோடி அரசையே சாரும்.

    இவ்வாறு அமித்‌ஷா கூறினார்.
    புல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்குவதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு பா.ஜனதா தலைவர் அமித்‌ஷா கண்டனம் தெரிவித்துள்ளார். #RahulGandhi #AmitShah #PulwamaAttack
    ராஜமுந்திரி :

    கா‌ஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்தும் அலட்சியமாக இருந்ததாக பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர்களை காங்கிரசார் விமர்சித்து வருகின்றனர்.

    இந்த தாக்குதலையும், ரபேல் ஒப்பந்தத்தையும் இணைத்து காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார். இதைப்போல புல்வாமா தாக்குதலை பாகிஸ்தான் அரங்கேற்றவில்லை என ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவும் கூறியிருந்தார்.

    இதற்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்‌ஷா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். ஆந்திராவின் ராஜமுந்திரியில் நடந்த கட்சியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-



    நாட்டின் முதல் பிரதமரான நேருவே கா‌ஷ்மீர் பிரச்சினைக்கு காரணம். கா‌ஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்டதால்தான் இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதேநேரம் ஐதராபாத் விவகாரத்தை சர்தார் படேல் கவனித்ததால், அது இன்று நாட்டின் ஒரு பகுதியாக இருக்கிறது. அவரே நாட்டின் முதல் பிரதமராகி இருந்தால், கா‌ஷ்மீர் பிரச்சினை இருந்திருக்காது.

    நாட்டின் பாதுகாப்புக்காகவும், மக்களுக்காகவும் பிரதமர் மோடி நாளொன்றுக்கு 18 மணி நேரம் உழைத்து வருகிறார். ஆனால் அவரது நோக்கம் குறித்து நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்கள். பாகிஸ்தான் பிரதமரை நம்பும் நீங்கள், உங்கள் பிரதமரை நம்பவில்லை. மலிவான அரசியலில் ஈடுபடாதீர்கள். மக்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.

    புல்வாமா சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம். அதனால் எந்த பலனும் உங்களுக்கு கிடைக்காது. ஏனெனில் ஒட்டுமொத்த நாடும் பிரதமர் மோடியுடனும், உயிரிழந்த வீரர்களுடனும் இருக்கிறது.

    இவ்வாறு அமித்‌ஷா கூறினார். #RahulGandhi #AmitShah #PulwamaAttack
    பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களான தேசிய தலைவர் அமித்‌ஷா, நிதி மந்திரி அருண்ஜெட்லி, சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் திடீர் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். #BJP
    புதுடெல்லி :

    நாடாளுமன்ற தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தேர்தலை சந்திக்க பாரதீய ஜனதா கட்சி தலைமை முனைப்பு காட்டி வருகிறது. தேர்தலுக்கும் இன்னும் 100 நாட்களே இருக்கும் நிலையில் தற்போது பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பது கட்சியினருக்கு கவலையை அளித்து உள்ளது.

    கோவா முதல்-மந்திரியும் பாரதீய ஜனதா மூத்த தலைவருமான மனோகர் பாரிக்கர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலக்குறைவை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் கோவாவில் நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டதாக புகார் கூறி வருகிறார்கள்.

    இதற்கிடையே சிறுநீரக நோயால் அவதிப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வந்த மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்று உள்ளார்.

    நாடாளுமன்றத்தில் அவர் பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்று இருப்பது ஆட்சியினருக்கும் கட்சியினருக்கும் இடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. அவர் எப்போது இந்தியா திரும்புவார் என்பது தெரியாத நிலை உள்ளது.

    பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்‌ஷா நாடாளுமன்ற தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். மாநிலம் மாநிலமாக சென்று அவர் தேர்தலை எதிர்கொள்ள கட்சியினரை சந்தித்து வருகிறார்.



    இந்த நிலையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் தற்போது நலமாக இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நுரையீரல் பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நேற்று காலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவர் தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில்‘ தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் குழு மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

    இதற்கிடையே பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர்(அமைப்பு) ராம்லால் காய்ச்சல் காரணமாக நொய்டாவில் உள்ள கைலா‌ஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தகவல் தொடர்பு உறுப்பினர் கெச்சாண்டு சர்மா வழக்கமான உடல் பரிசோதனைக்காக கைலா‌ஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில்‘ வழக்கமான உடல் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் சேர்ந்து உள்ளேன். யாரும் கவலைப்படதேவையில்லை. விரைவில் நான் வீடு திரும்புவேன்‘ என பதிவிட்டுள்ளார்.

    டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தேசிய தலைவர் அமித்‌ஷா உள்ளிட்ட தலைவர்களை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று(வெள்ளிக்கிழமை) பார்வையிடுவார் என தெரிகிறது. #BJP
    ×